பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, December 11, 2008

பிட்ச் ரேடிங்ஸ் அறிக்கைக்கு மத்திய வங்கி விளக்கம்


பேரினப் பொருளாதாரம் பலவீனம் அடைந்து செல்வதால் நிதிக் கம்பனிகள் மீது திரவத்தன்மை கோரி அழுத்தம்" என்ற தொனிப்பொருளில் பிட்ச் ரேடிங்ஸ் நிறுவ னத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பதில் அனுப்பி வைத்துள்ளது. பிட்ச் நிறுவனத்தின் இந்த அறிக்கையானது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைப்பதாக தெவித்துள்ள மத்தியவங்கி இதுதொடர்பில் மேலும் விளக்கமளித்திருப்பதாவது கடந்த முன்று ஆண்டுகளாக பொருளாதாரம் 6 சதவீதத்திற்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டின் முதற் கா லாண்டில் 6.2 சதவீதமும்இ இரண்டாம் காலாண்டில் 7.0 சதவீதமும் வளர்ச்சி கண்டிருக்கிறது. பொருளாதாரத்தின் முன்று பெரும் பிரிவுகளும் 2008 இன் முதல் அரையாண்டில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கண்டிருக்கின்றது. விவசாயம் மற்றும் தொழிற்துறை தலா 6.5 சதவீத வளர்ச்சியையும் சேவைகள் பிரிவு 6.7 சதவீத வளர்ச்சியையும் கண்டிருக்கிறது. வெளிநாடுகளுடன் தொடர்புபட்ட துறைகளில் ஏற்றுமதித்துறை 2008 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 4.7 பில்லியன் டொ லர்களுக்கு உயர்ந்து 12 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது. இதே காலப்பகுதியில் இறக்குமதிகள் 35 சதவீதத்தினால் உயர்ந்து 8.3 பில்லியன் டொலர்களாகியுள்ளது. ஏற்பட்டிருந்த வர்த்தகப் பற்றாக்குறை வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனுப்பி வைக்கும் அதிகரித்தளவு பண அனுப்பீடுகள் மற்றும் அர சாங்கத்தினதும்இ தனியார் துறையினதும் முலதனங்கள் என்பவற்றினால் ஈடு செய்யப்படுகிறது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் ஊழியர் பண அனுப்பீடுகள் 22 சதவீதத்தினால் அதிகரித்து 1.5 பில்லி யன் டொலர்கள் வரை உயர்ந்ததுஇ அன்னிய நேரடி முதலீ டுகள் மற்றும் முதலீட்டுப் பட்டியல் மொத்தம் முறையே 360 மில்லியன் டொலர்களாகவும். 355 மில்லியன் டொலர்களாகவும் முதல் அரையாண்டில் உயர்ந்தது. இவற்றைத் தொடர்ந்து மொத்த கொடுப்பனவு மீதி முதல் அரை யாண்டில் 390 மில்லியன் டொலர்களாகவும் மிகையாக இருந்தன. அத்துடன் மொத்த ஒதுக்கங்கள் 3.5 பில்லியன் டொலர்களாக 2008 யூலையில் அதிகரித்தன. அதாவது 2007 இறுதியில் இத்தொகை 3.1 பில்லியனாக இருந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலர் இலங்கை ரூபா நாணய மாற்று வீதம் தளம்பாமல் இருந்தது. வருவாய் துறையை எடுப்போமாயின்இ 2008 முதல் அரையாண்டில் அரச வருமானம் 24.2 சதவீதம் அதிகரித்து ரூபா 312.5 பில்லியன் ஆகியது. 2007 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வரிவருவாய் 22.6 சதவீதத்தினால் அதிகரித்தது. மீண்டுவரும் செலவினம்இ முலதனச் செலவினம் அதிகரிப்பு காரணமாக செலவினமும் 22.5மூ மாக அதிகரித்து ரூபா 476.6 பில்லியனை எட்டியது. உரமானியம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் காரணமாக மீண்டுவரும் செலவினத்தில் பெரும் அதிகரிப்பு காணப்பட்டது. முலதன செலவின அதிகரிப்பு துரித அபிவிருத்தி திட்டங்களால் ஏற்பட்டது. முக்கியமாக வீதி அபிவிருத்திஇ மின்னுற்பத்திஇ நீர்ப்பாசனம் வேறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பனவே இதற்கான காரணமாகும். 2007 இல் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 85.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த உள்நாட்டுக் கடன்கள் தொடர்ந்தும் அதேபோக்கையே காட்டுகின்றன. 2008 இறுதியில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பணக்கொள்கை விடயத்தில் மத்திய வங்கி இறுக்கமான கொள்கைப் போக்கினைக் கொண்டுள்ளது. நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை அது முக்கிய இலக்காக கொண்டுள்ளது. இவ்வாண்டில் இரு தடவைகள் பண ஒதுக்க இலக்குகளை கீழ் நோக்கி நகர்த்தியது. இதனால்இ சேமவைப்பு பணம் மற்றும் மொத்தப் பணம் என்பவற்றின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தனியார் துறைக்கான கடன் வசதிகள் 12 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டன. மேலுயர்ந்து சென்ற பணவீக்க நிலை யூலை மாதம் வரையில் பின்நோக்கி நகரத் தொடங்கியது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த கொழும்பு பாவனையாளர் விலைச்சுட்டெண் 2008 ஓகஸ்ட்டில் 24.9 சதவீதத்திற்கு இறங்கியது. இன்றைய நாணயக் கொள்கையை தொடரும் அதேவேளை பேரினப் பொருளியற் சூழலையும் முன்னேற்றும் போது இவ்வாண்டில் பணவீக்கம் மேலும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. பதிவு செய்யப் பட்ட நிதிக்கம்பனிகள் நிதிமுறைமையின் மொத்தச் சொத்துக்களில் 3 சதவீதத்தை கொண்டிருக்கின்றன. பணவைப்புக்களை ஏற்கும் பெரும் நிறுவனங்களின் மொத்த பணவைப்பு பொறுப்புகளின் 5 வீதத்தினை கொண்டிருக்கின்றன. மேலும் நிதிக்கம்பனிகள் வழங்கிய கடன்கள் மொத்த உள்நாட்டுக் கடனில் 5 வீதமாக இருக்கிறது நிதிக்கம்பனிகள் கொண்டிருக்கும் சொத்துக்கள் மற்றும் வைப்புக்களின் அளவுகளை கருத்தில் கொள்ளும் போது நிதிக்கம்பனிகள் தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள போக்குகள் நிதித்துறையின் உறுதிப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இல்லை எனலாம். அத்துடன் பிரச்சினை தரமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளவாறு இன்றைய பேரினப் பொருளியல் சூழல் திரவத்தன்மைக்கான அழுத்தத்தை அதிகரிக்காது. எனவேஇ இலங்கையின் பேரினப் பொருளியல் நிலை பலவீனமான தன்று. ஆனால்இ இலங்கை அதிகாரிகளின் சரியானதும் பொருத்தமானதுமான நாணய கொள்கைகள் காரணமாக அது முன்னேற்றம் கண்டுவருகிறது. ஆகவே பொருளாதார துறையின் பல பிரிவுகளின் நிறைவேற்றங்கள் மற்றும் பேரினப் பொருளியல் துறையின் முக்கிய முன்னேற்றங்களின் முன்னிலையில் பேரினப் பொருளியற் சூழல் பலனவீனமடைந்துள்ளது என விவரிப்பது தவறாக இட்டுச் செல்வதாகும். எனமத்திய வங்கி தெரிவித்துள்ளது

No comments: