பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, December 11, 2008

நாணய மதிப்பிறக்கத்திற்கு மத்திய வங்கி அனுமதி டொலர் 110 ரூபாவாக வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் மட்டுப்படுத்தப்பட்ட நாணய மதிப்பிறக்க கொள்கை தீர்மானத்தை அடுத்து அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை நாணயப் பெறுமதி [30 October 2008] வியாழக்கிழமை 110 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மைக்காலங்களில் டொலரொன்றுக்கு எதிராக இலங்கை நாணயப் பெறுமதி 108 ரூபாவாக இருந்து வந்தது.
உலகமய பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்றுமதி விலைகளிலும், ஏற்றுமதிக்கான கேள்விகள் குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ஏற்பட்டிருக்கும் சடுதியான வீழ்ச்சி மற்றும் முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அண்மைக்கால சடுதியான பெறுமதி உயர்வு போன்ற விடயங்களே மத்திய வங்கியின் இந்த தீர்மானத்துக்கு வழி வகுத்திருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பிட்ச் ரேடிங்ஸ் அறிக்கைக்கு மத்திய வங்கி விளக்கம்


பேரினப் பொருளாதாரம் பலவீனம் அடைந்து செல்வதால் நிதிக் கம்பனிகள் மீது திரவத்தன்மை கோரி அழுத்தம்" என்ற தொனிப்பொருளில் பிட்ச் ரேடிங்ஸ் நிறுவ னத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பதில் அனுப்பி வைத்துள்ளது. பிட்ச் நிறுவனத்தின் இந்த அறிக்கையானது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைப்பதாக தெவித்துள்ள மத்தியவங்கி இதுதொடர்பில் மேலும் விளக்கமளித்திருப்பதாவது கடந்த முன்று ஆண்டுகளாக பொருளாதாரம் 6 சதவீதத்திற்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டின் முதற் கா லாண்டில் 6.2 சதவீதமும்இ இரண்டாம் காலாண்டில் 7.0 சதவீதமும் வளர்ச்சி கண்டிருக்கிறது. பொருளாதாரத்தின் முன்று பெரும் பிரிவுகளும் 2008 இன் முதல் அரையாண்டில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கண்டிருக்கின்றது. விவசாயம் மற்றும் தொழிற்துறை தலா 6.5 சதவீத வளர்ச்சியையும் சேவைகள் பிரிவு 6.7 சதவீத வளர்ச்சியையும் கண்டிருக்கிறது. வெளிநாடுகளுடன் தொடர்புபட்ட துறைகளில் ஏற்றுமதித்துறை 2008 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 4.7 பில்லியன் டொ லர்களுக்கு உயர்ந்து 12 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது. இதே காலப்பகுதியில் இறக்குமதிகள் 35 சதவீதத்தினால் உயர்ந்து 8.3 பில்லியன் டொலர்களாகியுள்ளது. ஏற்பட்டிருந்த வர்த்தகப் பற்றாக்குறை வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனுப்பி வைக்கும் அதிகரித்தளவு பண அனுப்பீடுகள் மற்றும் அர சாங்கத்தினதும்இ தனியார் துறையினதும் முலதனங்கள் என்பவற்றினால் ஈடு செய்யப்படுகிறது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் ஊழியர் பண அனுப்பீடுகள் 22 சதவீதத்தினால் அதிகரித்து 1.5 பில்லி யன் டொலர்கள் வரை உயர்ந்ததுஇ அன்னிய நேரடி முதலீ டுகள் மற்றும் முதலீட்டுப் பட்டியல் மொத்தம் முறையே 360 மில்லியன் டொலர்களாகவும். 355 மில்லியன் டொலர்களாகவும் முதல் அரையாண்டில் உயர்ந்தது. இவற்றைத் தொடர்ந்து மொத்த கொடுப்பனவு மீதி முதல் அரை யாண்டில் 390 மில்லியன் டொலர்களாகவும் மிகையாக இருந்தன. அத்துடன் மொத்த ஒதுக்கங்கள் 3.5 பில்லியன் டொலர்களாக 2008 யூலையில் அதிகரித்தன. அதாவது 2007 இறுதியில் இத்தொகை 3.1 பில்லியனாக இருந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலர் இலங்கை ரூபா நாணய மாற்று வீதம் தளம்பாமல் இருந்தது. வருவாய் துறையை எடுப்போமாயின்இ 2008 முதல் அரையாண்டில் அரச வருமானம் 24.2 சதவீதம் அதிகரித்து ரூபா 312.5 பில்லியன் ஆகியது. 2007 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வரிவருவாய் 22.6 சதவீதத்தினால் அதிகரித்தது. மீண்டுவரும் செலவினம்இ முலதனச் செலவினம் அதிகரிப்பு காரணமாக செலவினமும் 22.5மூ மாக அதிகரித்து ரூபா 476.6 பில்லியனை எட்டியது. உரமானியம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் காரணமாக மீண்டுவரும் செலவினத்தில் பெரும் அதிகரிப்பு காணப்பட்டது. முலதன செலவின அதிகரிப்பு துரித அபிவிருத்தி திட்டங்களால் ஏற்பட்டது. முக்கியமாக வீதி அபிவிருத்திஇ மின்னுற்பத்திஇ நீர்ப்பாசனம் வேறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பனவே இதற்கான காரணமாகும். 2007 இல் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 85.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த உள்நாட்டுக் கடன்கள் தொடர்ந்தும் அதேபோக்கையே காட்டுகின்றன. 2008 இறுதியில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பணக்கொள்கை விடயத்தில் மத்திய வங்கி இறுக்கமான கொள்கைப் போக்கினைக் கொண்டுள்ளது. நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை அது முக்கிய இலக்காக கொண்டுள்ளது. இவ்வாண்டில் இரு தடவைகள் பண ஒதுக்க இலக்குகளை கீழ் நோக்கி நகர்த்தியது. இதனால்இ சேமவைப்பு பணம் மற்றும் மொத்தப் பணம் என்பவற்றின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தனியார் துறைக்கான கடன் வசதிகள் 12 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டன. மேலுயர்ந்து சென்ற பணவீக்க நிலை யூலை மாதம் வரையில் பின்நோக்கி நகரத் தொடங்கியது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த கொழும்பு பாவனையாளர் விலைச்சுட்டெண் 2008 ஓகஸ்ட்டில் 24.9 சதவீதத்திற்கு இறங்கியது. இன்றைய நாணயக் கொள்கையை தொடரும் அதேவேளை பேரினப் பொருளியற் சூழலையும் முன்னேற்றும் போது இவ்வாண்டில் பணவீக்கம் மேலும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. பதிவு செய்யப் பட்ட நிதிக்கம்பனிகள் நிதிமுறைமையின் மொத்தச் சொத்துக்களில் 3 சதவீதத்தை கொண்டிருக்கின்றன. பணவைப்புக்களை ஏற்கும் பெரும் நிறுவனங்களின் மொத்த பணவைப்பு பொறுப்புகளின் 5 வீதத்தினை கொண்டிருக்கின்றன. மேலும் நிதிக்கம்பனிகள் வழங்கிய கடன்கள் மொத்த உள்நாட்டுக் கடனில் 5 வீதமாக இருக்கிறது நிதிக்கம்பனிகள் கொண்டிருக்கும் சொத்துக்கள் மற்றும் வைப்புக்களின் அளவுகளை கருத்தில் கொள்ளும் போது நிதிக்கம்பனிகள் தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள போக்குகள் நிதித்துறையின் உறுதிப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இல்லை எனலாம். அத்துடன் பிரச்சினை தரமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளவாறு இன்றைய பேரினப் பொருளியல் சூழல் திரவத்தன்மைக்கான அழுத்தத்தை அதிகரிக்காது. எனவேஇ இலங்கையின் பேரினப் பொருளியல் நிலை பலவீனமான தன்று. ஆனால்இ இலங்கை அதிகாரிகளின் சரியானதும் பொருத்தமானதுமான நாணய கொள்கைகள் காரணமாக அது முன்னேற்றம் கண்டுவருகிறது. ஆகவே பொருளாதார துறையின் பல பிரிவுகளின் நிறைவேற்றங்கள் மற்றும் பேரினப் பொருளியல் துறையின் முக்கிய முன்னேற்றங்களின் முன்னிலையில் பேரினப் பொருளியற் சூழல் பலனவீனமடைந்துள்ளது என விவரிப்பது தவறாக இட்டுச் செல்வதாகும். எனமத்திய வங்கி தெரிவித்துள்ளது

Wednesday, December 10, 2008

உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1

உலகின் பொது நாணயமாக (World's reserve currency) அமெரிக்க டாலர் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த வாரம் ஹிந்து நாளிதழில் கூட இது பற்றிய ஒரு தலையங்கம் வெளியாகி இருந்தது.உலகின் பொது நாணயமாக டாலர் இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பில் ஒரு நிலையான தன்மை இருக்க வேண்டும். மாறாக டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாமல் இருக்கிறது. இந் நிலையில் அதற்கு மாற்றாக யூரோ அல்லது சீனாவின் RenMinBi நாணயம் உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனாவின் நாணயம் கட்டுப்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால் டாலருக்கு மாற்றாக யூரோ தான் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.1944 உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பால் அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகிய சூழலில் டாலர் உலகின் பொது நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முறையின் படி மற்ற நாட்டின் நாணயங்கள் அமெரிக்க டாலருடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்தில் நிலையாக பிணைக்கப்பட்டது. உதாரணமாக 1 அமெரிக்க டாலர் = 10 இந்திய ரூபாய். இதில் எப்பொழுதும் எந்த மாற்றமும் இருக்காது. இதனை Fixed Exchange Rate என்று சொல்வார்கள். இது போலவே அமெரிக்க டாலருடன் தங்கமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிணைக்கப்பட்டது.இந்த முறை மூலம் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சனைகளால் 1970க்குப் பிறகு இந்த முறை மாற்றப்பட்டு சந்தை வர்த்தகம் மூலம் ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்கு இருக்கும் தட்டுப்பாடு, தேவை போன்றவை கொண்டு நாணயத்தின் மதிப்பை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தது - Floating. இதுவே தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், சக்தி வாய்ந்த வல்லரசாகவும் அமெரிக்கா இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாகவே கொண்டு வரப்படுவதாக அனைவரும் கருதினர்.உலகின் பொது நாணயத்திற்கு ஏன் இந்தப் போட்டி ?உலகின் பொது நாணயமாக டாலர் இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி/ஏற்றுமதி நிலவரங்களில் கடுமையான பற்றாக்குறை உண்டு. அதன் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்தப் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து நீடிப்பது எப்படி ?அது தான் உலகின் பொது நாணயம் கொடுக்கும் நன்மைஉலகின் பல்வேறு வர்த்தகங்கள் டாலர் மூலமாகவே நடக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவை. கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமெனில் டாலர் வேண்டும். அதனால் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் டாலரை வாங்குகின்றன. இது தவிர ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதன் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். கடும் போட்டியிருக்கும் ஏற்றுமதியில் பல நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முயலுகிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்கு டாலர் வேண்டும். அதற்காக நிறைய டாலரை வாங்குகிறார்கள். அமெரிக்கா வெளியிடும் Treasury Bonds போன்றவற்றையும் பெற்று தங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உலகின் பெரும்பங்கு டாலர் கையிருப்பு ஆசிய நாடுகளிடம் தான் உள்ளது. அமெரிக்க டாலரில் 55% முதல் 70% அமெரிக்காவிற்கு வெளியே தான் இருக்கிறது.பல ஆசிய நாடுகள் ஏராளமான அமெரிக்காவின் பாண்ட்களை வைத்திருக்கிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்க டாலரை தங்கள் கையிருப்பில் இந்த நாடுகள் தேக்கிக் கொள்கின்றன. இதனால் ஆசிய நாடுகளின் நாடுகளின் நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களால் அமெரிக்காவிற்கு குறைந்த விலைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த தேக்கம் அமெரிக்காவிற்கு வட்டியில்லா கடன் போலத் தான். டாலர் உலகின் பொது நாணயமாக இருக்கும் வரையில் இது திருப்பி தரத் தேவையில்லாத கடனாக அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா நிறைய இறக்குமதிகளை செய்தாலும் உலகின் பொது நாணயமாக இருப்பதால் கிடைக்கும் கடனை கொண்டு குறைந்த விலைக்கு ஆசிய நாடுகளின் பொருட்களை பெற்றுக் கொண்டு சுகமாக காலம் கழிக்க முடிகிறது.உதாரணமாக சீனாவின் நாணயத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்க நாணயத்துடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்த விகிதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் சரியும் பொழுதெல்லாம் அதன் நாணயமும் சரிகிறது. நாணயம் சரிவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அதன் பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இவ்வாறான முறையை சீனா கைவிட வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனா கண்டுகொள்வதில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் ஏற்றுமதி/இறக்குமதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். அமெரிக்காவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் கால்வாசி சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.சீனா இம் முறை தனக்கு வசதியாக இருக்கும் வரை இதனையே பின்பற்றும். ஆனால் கூடிய விரைவில் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களுக்கேற்ப இதனை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் பொழுது தனது நாணயத்தின் கட்டுப்பாட்டு தன்மையை நீக்கும். அப்பொழுது சீனாவின் நாணய மதிப்பு உயரும். அமெரிக்காவில் மலிவாக கிடைக்கும் ஏராளமான சீனப் பொருட்கள் விலையும் உயரும். பல சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய சூழலில் அமெரிக்கா இருக்கிறது. பொருட்களின் விலை உயரும் பொழுது பணவீக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரத்திற்கு சவால் எழுகிறது.

Thursday, December 4, 2008

உலக உணவுப் பாதுகாப்பு சில தீர்மானங்கள்

கடந்தஆண்டு ஜீன் முதல் வாரத்தில் ரோம் நகரில், “உலக உணவுப் பொருள் நிலை” பற்றிய உயர்நிலை மாநாடு நடைப்பெற்று சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம் மாநாட்டில் 180 உலக நாடுகள் பங்கேற்று விவாதித் திருப்பது உலக உணவுப் பொருள் நிலைகுறித்த முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் நமக்கு நன்கு உணர்த்துகிறது. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி, உணவுத் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே!
உணவு தானியப் பற்றாக்குறை அல்லது தொடர்ந்து வாட்டும் வறுமையில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் சில நாடுகளைக் கூட (எத்தியோப்பியா, சோமாலியா) மற்றநாடுகளின் அபரிமிதமான தானிய உற்பத்தியைக் கொண்டு காத்து வந்திருக்கின்றோம். 1930களின் இறுதியில் நிலவிய உலகப் பெருமந்தம் (Great Depression of World Economy) அதன்பிறகு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றின் தாக்கம் உலக நாடுகளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. தொழிற்துறை வளர்ச்சி வேகம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்று மிகவும் நம்பப்பட்ட அந்தக் காலகட்டத்தில் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியும், உணவு உற்பத்தியுமே ஒரு நாட்டில் நிலையான வளர்ச்சியை ஊக்கப் படுத்தும் என்ற உண்மை உணரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், அன்றைய ஒருங்கிணைந்த ரஷ்யாவும் 1940 மற்றும் 1950 களில் உணவு உற்பத்தி பெருக்கத்தில் பெரிதும் தனது கவனத்தையும், ஆய்வையும் செலுத்தியது. அவரவர் வசதிக்கும், தேவைக்குகேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. உயர் விளைச்சல் தரும் ரகங்கள், அதிகரிக்கப்பட்ட விளைநிலங்கள், நீர்ப்பாசன வசதி, ரசாயன உரக் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, வேளாண்மையில் இயந்திரங்களின் அறிமுகம் ஆகியவை மேற்கூறிய காலகட்டத்தில் வேளாண்மைப் புரட்சிக்கு உலக அளவில் வித்திட்டது.
இதன் தாக்கம் நம் நாட்டிலும் பெரிதும் உணரப்பட்டது. இதன் விளைவாக 1930 மற்றும் 1940களில் வறுமையிலும், பஞ்சத்திலும் பாதிக்கப்பட்ட நமது நாடு நவீன வேளாண் உற்பத்தியின் அவசியத்தையும், முக்கியத்துவத் தையும் உணர்ந்து ரஷ்யப் பொருளாதார முறையின் ஐந்தாண்டு திட்டங்களைப் போல் வகுத்துச் செயல்பட முனைந்தது. முதல் மற்றும் இரண்டாவது திட்ட காலத்தில் (1951-56 மற்றும் 1956-1961) வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வழிவகை ஏற்பட்டது. அதிவேகமாக வளர்ந்து வந்த மக்கள் தொகையின் அளவிற்கு ஏற்ப உணவளிக்கச் சாத்தியப்பட்டது. இன்றுவரை உலகின் இரண்டாவது மக்கள் தொகையைப் பெற்றிருக்கும் நமது நாட்டில் உணவுப் பற்றாக்குறையும், பட்டினிச்சாவும் இல்லை என்பது நமது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் சமீபத்தில் ரோம் நாட்டில் கூடிய 180 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் “உலக உணவு நிலை” பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியதின் அவசியத்தையும், நம்முன் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வரும், காலநிலை மாற்றம் பற்றியும் உயிரி எரிசக்தி பற்றியும் சில உண்மை நிலைமையையும், எதிர் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்ந்துள்ளனர்.
இன்றைய நிலையில், மிகவும் கவலை அளிக்கக்கூடிய செய்தியாக, நாளும் உலக அளவில் அதிகரித்துவரும் உணவுப் பொருட் களின் விலைதான் என்று இம்மாநாடு சுட்டிக் காட்டியுள்ளது. இதே நிலை தொடருமானால் வரும் ஆண்டுகளில் கிட்டத்திட்ட 100 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் தள்ளப்படுவார்கள் என்கிற கணக்கும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (ஊஅஞ) டைரக்டர் ஜெனரல் ஜேக்ஸ் டயாஃப் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது, உணவுப் பற்றாக்குறை என்பது வருங்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், வளர்ந்துவிடும் மக்கள் தொகை, உணவு உற்பத்தி செய்யும் நாடுகளின் வேளாண்மைத் தேக்கம், உலக வாணிபம் ஆகியவற்றைநாம் கடுமையாக எதிர்கொண்டு சமாளிக்கவில்லை என்றால் 2015க்குள் திட்டமிட்டுள்ள உலக வறுமை ஒழிப்பு எனும் தீர்மானம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்திய ரோம் மாநாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது உலகின் உணவுப் பொருள் உற்பத்தி நிலையை ஆராய்ந்து வேளாண் பொருட்களின் வழங்கலை உலகம் முழுக்க சீர் செய்வதுடன் அவற்றின் விலையை நிலைப்படுத்துவதும் ஆகும். இம்முயற்சி மேற் கொள்ளப்படாவிட்டால், சீரற்றவேளாண் உற்பத்தியும், நிலையற்றவேளாண் பொருட்கள் விலையும் உலக அரங்கில் ஒரு பெரிய பொருளாதார சீர்கேட்டை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் இம்மாநாட்டில் முன்வைக்கப் பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை ஒருபுறம், உயர்தரம் வாய்ந்த வாழ்க்கை நிலையில் உள்ள நாடுகள் மறுபுறம், உணவுத் தேவைக்கே அல்லல்படும் நாடுகள் இன்னொருபுறம் என்றநிலையை இனியும் மாற்றாவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றகருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருள் பற்றாக்குறைஅல்லது தட்டுப்பாட்டிற்கு சமீபத்திய காரணியாக உயிரி எரிபொருள் (க்ஷண்ர்-ச்ன்ங்ப்) உருவெடுத்துள்ளதாகவும் கருத்து வெளிப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எழுந்துள்ள முக்கிய தீர்மானம் அல்லது முடிவு என்ன வென்றால் வளர்ந்துவரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் மற்றவற்றையும் விட வேளாண் துறைவளர்ச்சிக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியத்துவமும், உதவியும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடு களும் வேளாண்துறைமுதலீட்டையும், வேளாண்சார்ந்த வாணிபத்தையும், கிராமப் புறவளர்ச்சியையும் ஊக்குவிக்கவேண்டும். குறிப்பாக வேளாண்சந்தை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
இத்தீர்மானத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், சில நாடுகள் இக்கருத்தை விமர்சனம் செய்யத் தயங்கவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் வேளாண் மானியமுறையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி போன்ற அமைப்பினை நாம் அதிகமாக சார்ந்திருப்பதாலும் வேளாண் கொள்கையில் பெரிய மாற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்த முடியவில்லை என்றகருத்தை அர்ஜென்டினா, மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் இம்மாநாட்டில் வலியுறுத்தியுள்ளன.
வாணிப தாராளமயமாக்கலைப் பற்றி நாம் பேசும் போதும், எழைகளின் வாழ்வாதாரத் தையும் உணவுப் பாதுகாப்பையும், ஏழை விவசாயிகளின் இன்றைய உண்மை நிலைமை யும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். இது நமக்கு மகிழ்ச்சியளித்தாலும் உலக வேளாண் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தில் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்தாக மற்ற நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. வேளாண் துறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு உணவுப் பொருள் ஏற்றுமதி மேற்கொள்ளுதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் வளர்ந்து வரும் நாடுகள் உணவுத் தட்டுபாட்டில் மேலும் சிக்கிக் கொள்ளும் என்பது தென் அமெரிக்கா, கியூபா, நிகரகுவா, ஈக்வடார் ஆகிய நாடுகளின் ஒத்த கருத்தாக இம்மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் 10 நாடு களில் உணவு நிலை ஓரளவு சீராக இருந்தாலும் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறைஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு கணிசமான அளவு தடை விதித்துள்ளன. ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால் மட்டுமே நிலைமை சீராகிவிடுமா என்றகேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமே. வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேளாண் தொழில் முற்றிலும் பாதுகாக்கப் படவேண்டும். விளைநிலங்களின் அளவு எக் காரணம் கொண்டும் குறைய அனுமதிக்கக் கூடாது. அதேபோல் மக்கள் தொகை பெருகு வதை கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட வேண்டும். மேற்கூறிய தீர்மானங்கள் இந்தியாவிற்கு இன்றைய அவசரத் தேவையாகும்.
இத்தருணத்தில் நாம் மற்றொரு உலகளாவிய பெரும் பிரச்சனையை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டியள்ளது. அதாவது, பருவநிலையிலும் காலநிலையிலும் ஏற்படும் மாற்றம் உலக வேளாண்துறையிலும், உணவுப் பொருள் உற்பத்தியிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இப்பிரச்சனை குறித்தும் ரோம் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக மழையின் அளவிலும், காலநிலையிலும் ஏற்பட்டு வரும் மாற்றம் நமக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வரும் காலங்களில் இப்பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இயற்கையின் தன்மையை சலனப்படுத்தாமல், பசுமையைக்காத்து, நீர் ஆதாரங்களை சிறப்புடன் நிர்வகித்து, இயற்கை சார்ந்த வாழ்வு முறைக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நிலைமை சீர்படும் என்றும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.