இலங்கை மத்திய வங்கியின் மட்டுப்படுத்தப்பட்ட நாணய மதிப்பிறக்க கொள்கை தீர்மானத்தை அடுத்து அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை நாணயப் பெறுமதி [30 October 2008] வியாழக்கிழமை 110 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மைக்காலங்களில் டொலரொன்றுக்கு எதிராக இலங்கை நாணயப் பெறுமதி 108 ரூபாவாக இருந்து வந்தது.
உலகமய பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்றுமதி விலைகளிலும், ஏற்றுமதிக்கான கேள்விகள் குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ஏற்பட்டிருக்கும் சடுதியான வீழ்ச்சி மற்றும் முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அண்மைக்கால சடுதியான பெறுமதி உயர்வு போன்ற விடயங்களே மத்திய வங்கியின் இந்த தீர்மானத்துக்கு வழி வகுத்திருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment