பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, October 30, 2008

இலங்கையின் மிகமோசமான பணவீக்கத்துக்கு

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசு தெரிவிப்பதுபோல எண்ணெய் இறக்குமதிக்கு அதிக நிதி பயன்படுத்துவது காரணமல்ல எனத் தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் உள்ளூர் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் 2006 முதல் 2007 வரையான காலப்பகுதிக்குரிய பணவீக்க நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் செல்வாக்கிற்கு உட்படாத வெளிக்காரணிகளான எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவையே பணவீக்கத்திற்கு காரணம் என அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றபோதிலும் இவ்விவகாரத்துக்கு இந்த விளக்கம் போதுமானதல்ல என அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.எண்ணெய் விலைஅதிகரிப்பு இந்தப் பிராந்தியத்தின் சகல நாடுகளுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ள போதிலும், ஏனைய நாடுகளை விட இலங்கையில் பணவீக்கம் அதிகமாகவுள்ளமை, இதற்கு எண்ணெய்விலை காரணமன்று என்பதைப் புலப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ஆய்வின் முடிவில் இலங்கையின் பணவீக்க அதிகரிப்பிற்கு உள்நாட்டுக் காரணிகளே அடிப்படை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் உள்ளூர் பணவீக்கத்தைத் தீர்மானிப்பதில் எண்ணெய் விலை போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றாததால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் கொள்கைகள் மிக முக்கியமானவையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் நுகர்வோர் விலையில் 29 வீதமாகவும் பணவீக்கத்தில் 32 வீதமாகவும், மாத்திரமே எண்ணெய் விலையின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக உள்ளூர் காரணிகளே இலங்கையில் பணவீக்க அதிகரிப்பிற்கு காரணம் என்பது உறுதியாவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, October 28, 2008

பண்டம்

நுகர்விற்கு உட்படுத்தப்படகூடியதும், நுகருவதால் பயன்பாட்டினை அதிகரிக்ககூடியதும் இவை காரணமாக சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படகூடியதாகவுள்ள பொருளோ (object) சேவையோ பொருளியலில் பண்டம் (Good) எனும் பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மதிப்பு உள்ள மகிழுணர்வு போன்ற துல்லியமாக அளவிடமிட முடியாதவற்றையும் கூட மெய்யியலில் பண்டமாகவே கருதுவர்.
கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது.

பண்டங்களின் வகைகள்
பண்டங்களின் வகைகள்
கூட்டுரிமைப் பண்டம் (social good) - தனியார் உரிமப் பண்டம் - பொதுப் பண்டம் - common-pool resource - குழுவுரிமைப் பண்டம் - மக்களுரிமைப் பண்டம்
போட்டிப் பண்டம் மற்றும் விலக்கமுடியாப் பண்டம்
இணைப்புப் பண்டம் எதிர் பிரதியீட்டுப் பண்டம்
இலவசப் பண்டம் எதிர் அருமைப் பண்டம், positional good
durable good - non-durable good - இடைப் பண்டம் (producer good) - final good - நுகர்வுப் பண்டம் - மூலதனப் பண்டம்.இழிவுப் பண்டம் - இன்றியமையாப் பண்டம் - ஆடம்பரப் பண்டம் - வெப்லன் பண்டம் - கிப்பன் பண்டம் - superior goodதேடு பண்டம் - (post-)experience good - merit good - credence good - demerit good

இணைப்புப் பண்டம்

இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி தனித்தல்லாது இன்னொரு பண்டத்துடன் இணைத்து நுகரப்படும் பண்டமாகும்.
பண்டங்கள் அ, ஆ ஆனது இணைப்புப்பண்டங்களாயின், அ வினது நுகர்வு அதிகரிக்க பண்டம் ;;ஆ வின் நுகர்வும் இணைந்து அதிகரிக்கும்.
உ-ம்: கமரா - பிலிம்ரோல், துவக்கு - தோட்டா, கார்பயணம் - பெற்றொல்
வலக்கால் சப்பாத்து மற்றும் இடக்கால் சப்பாத்துக்கள் முழுமையான இணைப்புப்பண்டதிற்கு உதாரணமாகும். பிரதியீட்டுப்பண்டமானது இணைப்புப்பண்டதிற்கு எதிர்நடத்தையினைக் காண்பிக்கும்.

பிரதியீட்டுப் பண்டம்


பிரதியீட்டுப் பண்டம் எனப்படுவது பொருளியலின்படி ஒரு பண்டத்திற்குப் பதிலீடாக நுகரப்படக்கூடிய வேறொரு பண்டமாகும்.
இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு வெண்ணெயும், வெண்ணெய் போன்ற மார்ஜரிக் காடி (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும்.
இவ்விரு பண்டங்களுக்கான கேள்விகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு ஒரு பொருளின் விலை அதிகரிக்குமாயின் அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போது அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும்.
எ.கா: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட்
இணைப்புப் பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும்

இலவசப் பண்டம்

இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடப்பருமையற்ற பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும், நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச்சியமாகும்.
உ-ம்: மழைநீர், காற்று, சூரியஓளி, சட்டக் கட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள், சிந்தனைகள்
கொளவனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப்பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள் உபயோகப்பட்டிருக்கும்.
இலவசப்பண்டமாக இருப்பவை கிடப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது.

மூலதனப் பண்டம்

பொருளியலில் மூலதனத்தை பெருக்குவதில் அல்லது உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தப்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும்.

இழிவுப் பண்டம்


பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள் பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும்.
உ+ம்: பீடி,போலிநகை
தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும் அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும் அடையும்.
ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக் காண்பிக்கும்.


ஆடம்பரப் பண்டம்

ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள் ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர் வருமானக்கேள்வி நெகிழ்ச்சியினைக் காண்பிக்கும். இவ் வகையான பண்டங்கள் மக்களின் அந்தஸ்து, கௌரவம், உயர் வருமானம் ஆகியவற்றை விளம்புகின்ற சின்னமாகக் கருதப்படும். மக்களின் வருமான மட்டம் அதிகரிக்கும்போது ஆடம்பரப்பண்டங்களுக்கான் கேள்வியும் அதிகரிக்கும். எனினும் வேறுபட்ட வருமான மட்டங்களில் இவை அவசியப்பண்டமாகவோ அல்லது இழிவுப்பண்டமாகவோ மாற்றமடையலாம். அதாவது மேலைத்தேசங்களில் தொலைக்காட்சியானது அவசியப்பண்டமாகக் காணப்படும் அதே சமயத்தில் கீழைத்தேசத்தில் அவை ஆடம்பரப்பண்டமாகக் கருதப்படும்.
உ-ம் :தங்கநகைகள், சொகுசுவாகனங்கள்


கிப்பன் பண்டம்

கிப்பன் பண்டம் (Giffen good) என்பது விற்பனை விலை ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய இழிவுப்பண்டத்தைக் குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.

Saturday, October 25, 2008

இலங்கையை வறுமைப் பிடியிலிருந்து மீட்கவழி என்ன?

வறுமையானது பல பரிமாணங்களைக் கொண்டது. தங்கள் அடிப்படைத் தேவைகள் தன்னும் பூர்த்தி செய்ய முடியாத வருமானமுடையவர்கள் வறியவர்கள். அத்துடன், அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாத தனிப்பட்டவர்களும் வறியவர்கள். எனவே, வறுமையானது நுகர்வுத் தேவையின் ஒரு குறைந்த தொகுதியைப் பெறக்கூடிய குடும்பமொன்றின் திறனை மையமாகக் கொண்டது. நுகர்வுத் தேவையின் குறைந்த தொகுதியைப் பெற முடியாத வருமானமுடைய குடும்பமும் வறுமைக்குரிய குடும்பமாகும்.
இலங்கையில் வறுமை பற்றிய தகவல்களைச் சேகரிக்க குடிசன மதிப்பீடும் புள்ளிவிபரத்திணைக்களத் தரவுகளுமே பெரும்பாலும் உதவுகின்றன. 1991 இற்கும் 1995 இற்கும் இடையிலான 5 வருட வறுமையானது உயர் வறுமைக்கோட்டின் பிரகாரம் 33 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டின் பிரகாரம் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, எமது நாட்டின் 1995 குடி மதிப்புத் திணைக்களத்தின் படி சனத்தொகையில் 25 சதவீதத்தினர் கடுமையான நீண்டகால வறுமையில் மூழ்கியுள்ளனர். கடுமையானதாகவும் தற்காலிகமானதான வறுமையில் 45 சதவீத்தினர் மூழ்கியுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 5.1 சதவீதமாக இருந்தபோது தலைக்குரிய மொத்த உள்ளூர் உற்பத்தி 3.9 சதவீதமாக இருந்தது. எனவே, மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி வீதமோ அல்லது அதன் விநியோக விளைவுகளோ வறுமை மட்டத்தைக் குறைக்க முயலவில்லை. மேலும், நடைபெற்ற போர்ச்சூழல் நிலையானது மொத்த உள்ளூர் உற்பத்தியை ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 2 இலிருந்து 3 சதவீதமாக குறைத்துள்ளது. 1990 இல் குடி மதிப்பீட்டுத் திணைக்கள புள்ளிவிபரப்படி ஆள் ஒன்றுக்கு மாதத்திற்கு குறைந்த வறுமைக்கோடாக ரூ.791 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடான ரூ.950 இனையும் பயன்படுத்தியது. மத்திய வங்கியின் மதிப்பீட்டுப் படி குறைந்த வறுமைக்கோடாக ரூ.860 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடாக ரூ.1,032 இனையும் பயன்படுத்தியுள்ளது. 1996 இல் மத்திய வங்கி குறைந்த வறுமைக்கோடாக தலைக்குரிய கணிப்புச் சுட்டெண் 19 சதவீதத்திலும் உயர்ந்த வறுமைக்கோட்டின் படி 31 சதவீதத்திலும் மதிப்பீடு செய்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் குறைந்த மற்ற உயர்ந்த வறுமைக்கோடுகளுக்கு இடையில் வாழ்பவர்கள் அடிக்கடி ஏற்படும் தற்காலிக வறுமையினால் பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றனர்.
மாவட்ட மட்டத்தில் வறுமையைக் கணிப்போமாயின் கொழும்பு மாவட்டம் மிகக்குறைந்த 19 சதவீத நுகர்வு வறுமைத் தாக்கங்களையும் மிக உயர்ந்த 74 சதவீத நகர மயமாக்கலையும் கொண்டுள்ளது. குருநாகல், இரத்தினபுரி, அநுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உயர்ந்த வறுமை மாவட்டங்களாகவும் மிகக் குறைந்த நகர மயமாக்கலையும் கொண்டிருந்தன. மிக வறிய மாவட்டங்களாக மொனராகலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் காணப்பட்டன.
வறுமைக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1997 இல் வேலை வாய்ப்பற்றோரில் 71 சதவீதத்தினர் இளைஞர்களாகியிருந்தனர். க.பொ.த. உயர்தர வகுப்புத் தகைமையாகவுள்ள 24 சதவீதத்தினர் வேலை வாய்ப்பின்றி இருந்தனர். 1990 இல் வேலை வாய்ப்பின்றி ஆண்களை விட பெண்களே அதிகம் காணப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் ஆண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 7 சதவீதத்திற்குக் குறைவாகவும் பெண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 12 சதவீதமாகவும் காணப்பட்டன. தொழிலாளர்களில் பலர் விவசாயிகளாக இருந்தபோதும் இவர்களில் பலர் மிக உயர்ந்த வறுமைத் தாக்கத்திற்கு (52 சதவீதம்) உள்ளாயினர். மிக வறியவர்கள் நெல் உற்பத்தியில் அல்லது பெருந்தோட்ட வேலைகளில் காணப்பட்டனர். உற்பத்தி தொழிலாளர்களுக்கிடையில் வறுமை மட்டம் 38 சதவீதமாக மிக உயர்வாக காணப்பட்டது. இன்று அரசு பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பளித்துள்ள போதும் க.பொ.த. உயர்தரத்திலுள்ள வேலையற்றோர் பலர் உள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வறுமையின் நடமாட்டம் அதிகரிக்கக் காரணம் 20 வருட போர்ச் சூழலாகும். மக்கள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, போசாக்கு ரீதியாகப் பலத்த பாதிப்புக்குள்ளாயினர். போர் காரணமாக ஏறக்குறைய 600,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 1,72,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். வீடுகள் பல சேதமாக்கப்பட்டன. 60,000 உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 48 சதவீதமாக பெண்கள் ஊட்டச்சத்து இன்றி காணப்பட்டனர். இந்தப் போர்ச் சூழ் நிலை கட்டுப்பாடுள்ள, கட்டுபாடற்ற பிரதேசங்களை வடக்கு, கிழக்கில் உருவாக்கியது. கட்டுபாடற்ற பிரதேசங்களென அரசு பல பொருளாதாரத் தடைகளை விதித்து வறுமை மட்டத்தை அங்கு கூட்டியுள்ள நிலை இருந்தது. இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தடைகள் பல நீக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் விவசாயம் தொழிலடிப்படையில் 40 சதவீதமாகவும் மொத்த உள்ளூர் உற்பத்தியில் 18 சதவீதமாகவும் உள்ளது. எனவே, இதனை நவீன தொழில்நுட்ப உதவியுடன் குறைந்த செலவில் உற்பத்தித் திறனைக் கூட்ட முயல வேண்டும். உயர் வேலைவாய்ப்பு வீதமானது உயர் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். உயர்ந்த வருமானங்களுடனான உயர் உற்பத்தித்திறன் மிகு தொழில்களில் நாம் நாட்டம் கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்தை எமது நாட்டின் செழிப்பான இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் பயன்படுத்தி முன்னேற்ற முடியும். 20 வருடமாக நிகழ்ந்த போர்ச் சூழ்நிலையில் வளங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. எனினும், முன்னேற்றத்தை நாடி வளங்களைப் பயன்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி வீதங்கள் எமது நாட்டின் 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரையே காணப்படுகிறது. இதை மாற்றி 10 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையும் இலக்காக நாம் கடைப்பிடிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருமானங்களை உயர்த்த வேண்டும்.
அரசாங்கமானது இன்று உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் நோக்குடன் நிலக்கண்ணிகளை அகற்றியும் அத்தியாவசிய சமூக சேவைகள் உட்கட்டமைப்புகளான நீர் விநியோகம், தெருக்கள் நிர்மாணம் என்பனவற்றை சீர்திருத்துகின்றது. தனியார்துறை பங்குபற்றுதலும் இன்று ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும் ஒன்றிணைவுடன் நவீன தொழில்நுட்ப ரீதியான முறையில் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். சிறிய நடுத்தரமான தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் கிராமிய நகர்ப்புற குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கலாம். வறுமையை இது ஓரளவு குறைக்கமுற்படும்.
மேலும், நாம் கைத்தொழில் மயப்படுத்தலில் நாட்டம் கொள்ள வேண்டும். வளங்களை அடிப்படையாகக் கொண்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இதனால் வேலையற்றோருக்கு தொழில் வாய்ப்பளிக்க முடியும். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற முடியும். நகர அபிவிருத்தியை ஏற்படுத்த காணிகளை வழங்கி அரசு உதவ வேண்டும். நகர நீர் வழங்கல் திட்டங்களில் தனியார்துறையினரை ஈடுபடுத்த வேண்டும். நகர உட்கட்டமைப்பை ஏற்படுத்த நகராட்சி மன்றங்கள், பிரதேச சபைகளுக்கு உரிய வருவாயைத் தோற்றுவிக்க வழிவகுக்க வேண்டும்.
உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் வாழ்கைத்திறன்களை உயர்வடையச் செய்யவும் தரமான கல்வி, சுகாதார, சமூக நல வசதிகளைப் பெறவும் முயல வேண்டும். கல்வி, சுகாதார நலனுக்காக நாம் தனியார் துறையினரை ஊக்குவிக்க வேண்டும். இலங்கையில் தனியார்துறையை பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிக்கும்போது பல எதிர்ப்புகள் ஏற்பட இடமுண்டு. மேலும், வறுமையைக் குறைக்க முயல வேண்டும். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகளின் உதவியுடன் வறுமையைக் குறைக்க முயல வேண்டும். எனவே, பொருளாதார வளர்ச்சியில் கூடிய நாட்டம் தேவை.
அரசாங்கம் இன்று பாரிய பற்றாக்குறைகளைச் சுமப்பதைக் காணலாம். பற்றாக்குறையின் இலக்கு மொத்த உள்ளூர் உற்பத்தியின் 8.5 சதவீதமாகும். இந்தப் பற்றாக்குறையானது பொது படுகடனில் மொத்தத் தொகையானது அதிகரிக்க வழிவகுக்கிறது. எமது பொது கடனைப் பார்ப்பின் 2002 ஆம் ஆண்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 83,200 கடன் பெற்றுள்ளதாகவே கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான பெரிய பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து செல்லுமாயின் பொதுக்கடனானது பொருளாதார வளர்ச்சியை விஞ்சுவதால் நாம் இதைத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அரசிறைப் பற்றாக்குறை காரணமாக ஏற்றுமதி, சேவை வருமானங்களின் மூலமாக பெறும் நிதியானது, கூடுதலான பொருட்கள் சேவைகள் இறக்குமதி செய்யும் நிலையினால் பாதிக்கப்படுகிறது. மேலும், நாணயமானது விரைவாக மதிப்பிறங்கியதுடன், சென்மதி நிலுவைகளின் பதிவும் மேலதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றன. கடன் சேவைச் செலவுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் படுகடனில் வட்டிச்செலவை ஓர் படிப்படியான அடிப்படையில் குறைக்க வேண்டும். உயர் வட்டி கொண்ட கடன்களை விடுத்து மிகவும் குறைந்த வீதம் வட்டி கொண்ட கடனை பரிமாற்றம் செய்ய வேண்டும்.
அரசானது அரசிறைப் பற்றாக்குறையை 2001 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திலிருந்து 2002 ஆம் ஆண்டில் 8.9 சதவீதமாக குறைக்க முனைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக அரசதுறைப் படுகடன் 2002 இல் 103 சதவீதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டில் 81 சதவீதமாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்பட்டது. இது அரசிறை திட்டத்தின் வளர்ச்சி, குறைந்த வட்டி வீதங்கள், செலவினக் கட்டுப்பாடுகள் என்பவற்றில் தங்கியுள்ளன.
இலங்கையில் சமாதான சூழ்நிலை ஏற்பட வேண்டும். 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி சமாதானத்தை ஏற்படுத்த ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் செய்தது. இந்த யுத்த நிறுத்தம் சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகும். சமாதான சூழ்நிலை இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சிக்குக் கூடுதலான நாட்டம் செலுத்த முடியும். எனவே, வறுமையைக் குறைப்பதாயின் சமாதான வாசலைத் திறந்துவிட வேண்டும். எமது 20 வருட யுத்த காலம் எமது வளங்களை பாதித்ததை நாம் அறிவோம். எனவே, சமாதானம் முன்னெடுக்கப்படுமாயின் முன்னேற வழியுண்டு. மோதும் நிலை மாறி நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்திற்கு முயல வேண்டும்.
உயர்ந்த உற்பத்தியாற்றல் கொண்ட கைத்தொழில் மற்றும் சேவைகள் துறை உற்பத்திக்கு கிராமிய குடித்தொகையைப் பயன்படுத்த வேண்டும். எனவே, கிராமிய அபிவிருத்திக்குப் புத்துயிரளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை நாடலாம். இலங்கையில் வறிய மக்களில் 90 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும், விவசாயத்தில் உற்பத்தி ஆக்கத்திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும். விவசாயமான பயிர் செய்தல், விலங்கு வளர்ப்பு, மீன்பிடி, காட்டுத்தொழில் என்பவற்றில் வளர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.
சிறிய, நடுத்தர அளவுக் கைத்தொழில்களுக்கு நீண்டகால கொடுகடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வங்கிகள் மூலம் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஏற்ற கொடு கடன்களை வழங்கி ஊக்குவிக்கலாம். மேலும், தனியார்துறைக்கு முதலீடு செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கைத்தொழில்துறையில் வறியவர்களை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். இதற்கு ஏற்ற மூலப் பொருட்களையும் மூலதனப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழில் முயற்சிகளுக்கும் விரிவாக்கத்திற்கும் இறை ஊக்குவிப்புகள் வழங்க வேண்டும். கைத்தொழில் பேட்டைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். கைத்தொழில் முயற்சிகளுக்கு நீண்டகால கடன் வழங்கமுற்பட வேண்டும். தொழில் முயற்சிகளில் செலவுகளைக் குறைக்கும் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், நகரங்களில் கைத்தொழில் வலயங்களை நிறுவ அரசு மாத்திரமல்ல தனியார்துறைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம். சூழல், சுற்றுலா வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும். சுற்றுலாக் கைத்தொழில் வளர்ச்சிக்கு சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும். சூழல், சுற்றுலா பாதுகாப்பு என்பன பேணப்பட வேண்டும். சுற்றுலா அபிவிருத்தியுடன் சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பான 6.6 மில்லியன் ஹெக்டயர் நிலத்தில் 28 சதவீதம் காடுகளாகும். 1.65 மில்லியன் ஹெக்டயர் பாதுகாக்கப்பட்ட காடுகளாகும். காடழிப்பும் வேகமான மண்ணரிப்பும் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனாலும் சுற்றாடல் சூழல் என்பவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அரசானது கவனத்தில் எடுத்து சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

Friday, October 24, 2008

திறைசேரியில் வெளிநாட்டவர்களும் முதலிடலாம்: மத்திய வங்கி

மொத்த திறைசேரி உண்டியலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 10 வீதம் வரையான முதலீட்டினை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திறைசேரி உண்டியல் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

திறைசேரி சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நுழையும்பட்சத்தில், மூன்று மாத காலப்பகுதியில் இச் திறைசேரி உண்டியலின் விளைதிறன் 18.51 வீதமாகவும், ஆறு மாத காலப்பகுதியில் 18.96 வீதமாகவும், ஒரு வருடத்தில் 19 வீதமாகவும் குறைவடையும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சந்தையில், தற்போது சில வர்த்தகர்கள் அதிகமான உண்டியல்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருபபினும், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் அவதானங்களின் அடிப்படையிலேயே இந்த முயற்சியின் வெற்றி தங்கியிருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Wednesday, October 22, 2008

பொருளியல் என்னக்கருக்கள்

கிடைப்பருமை

எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய முடியும் அளவிற்கு வளங்களானது போதியளவு காணப்படாமை பொருளியலில் கிடைப்பருமை(Scarcity) எனப்படும். வேறுவிதமாக கருதினால் ஒரு குமுகத்தின் (சமூகத்தின்) இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைபருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. பொருளியலாளரான லயனல் ராபின்சன் என்பவர் கிடைப்பருமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பொருளியலுக்கு அளித்த வரைவிலக்கணம் பின்வருமாறு:
மாற்றுப் பயன் உள்ள கிடைப்பருமையான வளங்களைக்கொண்டு தனது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் மனித நடப்புகளை ஆராயும் அறிவியலே பொருளியலாகும். (economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses.)

நுகர்வு

பொருளியலில் நுகர்வு (consumption) என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.

கெயின்ஸ் பொருளியலும் கூட்டு நுகர்வும்

கெயின்ஸ் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.

வரலாறு

ஜான் வேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes) என்பவர் நுகர்வுச் செயற்பாடு என்னும் எண்ணக்கருவை உருவாக்கினார். இதன்படி நுகர்வு என்பது இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது:
--- (Induced consumption)
--- (Autonomous consumption)

ஆய்வுகள்

நுகர்வு பற்றிய ஆய்வுகள், சமூகமும், தனியாட்களும் (தனி நபர்களும்) எவ்வாறு, ஏன் பண்டங்களையும், சேவைகளையும் நுகர்கிறார்கள் என்றும், எப்படி இது சமூக மற்றும் மனிதத் தொடர்புகளைப் பாதிக்கிறது என்பதையும் அறிய முயல்கின்றன. இன்றைய ஆய்வுகள், பொருள் விளக்கம், அடையாள உருவாக்கத்தில் நுகர்வின் பங்கு, நுகர்வோர் சமூகம் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்துகின்றன. முன்பு, உற்பத்தி, அதனைச் சூழவுள்ள அரசியல், பொருளாதார விடயங்களோடு ஒப்பிடுகையில், நுகர்வு என்பது முக்கியமற்ற ஒன்றாகவே நோக்கப்பட்டது. நுகர்வோர் சமூகத்தின் வளர்ச்சியும், சந்தையில் வளர்ந்துவரும் நுகர்வோர் சக்தியும், சந்தைப்படுத்தல், விளம்பரம் செய்தல், நெறிமுறைசார் நுகர்வின் (ethical consumption) வளர்ச்சி, போன்றவையும், நுகர்வை, நவீன வாழ்க்கை முறையின் முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ள வைத்துள்ளன. நுகர்வு சார்ந்த சமூகவியல், வெப்லென் (Veblen) என்பாரின் கவனத்தை ஈர்க்கும் நுகர்வு பற்றிய ஆரம்பகால ஆக்கத்தைக் கடந்து வெகுதூரம் முன்னேறிவிட்டது. உற்பத்தியாளர்களாலும், சமூக நிலைமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக நுகர்வோரை நோக்கும் அணுகுமுறை வளர்ந்து வருவதனால், இன்றைய கோட்பாடுகள், நுகர்வைக் கட்டுப்படுத்தும் பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றி ஆராய்கின்றன

சிற்றினப்பொருளியல்

சிற்றினப்பொருளியல் (Microeconomics) ஒர் சமூகவிஞ்ஞானமாகும். பொருளாதார நடவடிக்கை பற்றியும் அதற்கான காரணங்களயும் இது ஆராய்கின்றது. அத்துடன் உற்பத்தி, வருமானம், விநியோகம் என்பனவும், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார நடத்தையும் இதன் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும்.
பொருளடக்கம்
1 சிற்றினப்பொருளியல் அடிப்படைக்கருத்துகள்
2 நுகர்வு கோட்பாடு
3 உற்பத்தி,விலை கோட்பாடு
4 Industrial organization

சிற்றினப்பொருளியல் அடிப்படைக்கருத்துகள்
நெகிழ்ச்சி,நுகர்வோன் மிகை,

நுகர்வு கோட்பாடு
இணைபயன் வளையீ, பயன்பாடு, எல்லைப்பயன்பாடு, வருமானம்

உற்பத்தி,விலை கோட்பாடு
Production theory basics,உற்பத்திக்காரணிகள், உற்பத்திசாத்திய வளையீ, உற்பத்திச் சார்புகள், விலை பேதப்படுத்தல்,

Industrial organization
நிறைவுப்போட்டி, தனியுரிமைப்போட்டி, தனியுரிமை, இருவருரிமை

சந்தை

சந்தை (Market) எனப்படுவது பொருளியலில் வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்கின்ற விரிந்த முழுமையான பரப்பைக் குறிக்கும். இது ஒர் இடத்தைக் (Place) குறிக்காமல் வாங்குபவர்கள் விற்பவர்கள் இருவரும் தொடர்பு கொள்ளும் பரப்பினைக் குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் விதமான சந்தை காணப்படும். அவ்விதமான சந்தைகள் அப் பெயர் கொண்டு அழைக்கப்படும். உதாரணமாக, பணச்சந்தை, பங்குச்சந்தை, தேயிலைக்கான சந்தை.

பொருளடக்கம்

1 சந்தைகளின் இயல்புகள்
2 சந்தையின் பரப்பு
3 சந்தைப்பகுப்புக்கள்
4 இவற்றையும் பார்க்க
சந்தைகளின் இயல்புகள்

வாங்கி விற்கின்ற பண்டம் ஒன்று காணப்படல்,
விற்பனை, கொள்வனவிற்கான இடம் காணப்படல்
வாங்குபவர்கள், விற்பவர்களிடே போட்டியொன்று காணப்படல் வேண்டும்.

சந்தையின் பரப்பு

தடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்ற காரணிகள் சந்தையின் பரப்பினை(Extent of Market) விரிவடையச்செய்யும். தேவை அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பாவனை பொருட்கள், மற்றும் நிரம்பல் அதிகமாக உள்ள பொருட்கள் என்பனவற்றிக்கு விரிவான சந்தை காணப்படும். அதே நேரம் குறுகியகால பாவனையுள்ள பொருட்கள், அழியக்கூடிய பொருட்களுக்கு ஒடுக்கமான சந்தையும் காணப்படும்

சந்தைப்பகுப்புக்கள்

பொருட்களின் இயல்பின் அடிப்படையில்
விளைபொருட் சந்தை
உற்பத்திச் சந்தை
Bullion Market
பங்குச்சந்தை
பரப்பின் அடிப்படையில்
உள்ளூர்ச்சந்தை (Local market)
தேசியச்சந்தை (National market)
உலகச்சந்தை/பன்னாட்டுச்சந்தை (International market)
போட்டியின் அடிப்படையில்
நிறைவுப்போட்டி (Perfect competition)
தனியுரிமை (Mopoly)
தனியுரிமை போட்டிச்சந்தை (Monopolistic competition)
இருவரிமைப்போட்டி (Duopoly)
சிலருரிமைப் போட்டி (Oligopoly)

இவற்றையும் பார்க்க
அரசதனியுரிமை
சிற்றினப்பொருளியல் தலைப்புக்கள்
கிடைப்பருமை - சந்தர்ப்பச்செலவு - இணைபயன் வளையீ கேள்வி-நிரம்பல் - நுகர்வோர்மிகை - சந்தைச் சமனிலை - சந்தை உற்பத்தி - செலவு

நிறைபோட்டி

எண்ணிறைந்த உற்பத்தியாளர்களும் எண்ணிறைந்த வாங்குபவர்களும் ஒரு பொருளை விற்கவும் வாங்கவும் போட்டி போடுகின்ற நிலமையே பொருளியலில் நிறைபோட்டி அல்லது நிறைவுப்போட்டி (Perfect competition) எனப்படும்.
இவ்வாறான நிலமை காணப்படும் சந்தை அமைப்பு ‘’’நிறைவுப்போட்டி சந்தை’’’ எனப்படும்.இச்சந்தை அமைப்பில் பண்டங்களுக்கான விலையானது சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் நிரம்பல் மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கபடும்.உற்பத்தியாளனோ அல்லது நுகர்வோனோ பண்டங்களின் விலையில் ஆதிக்கம் செலுத்தமுடியாது.இச் சந்தை அமைப்பின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

தேவைகள்

சந்தை அமைப்பில் நிறைபோட்டி நிலவ சிலஅம்சங்கள் தேவையாக உள்ளது அவைகள்,
எண்ணிறைந்த உற்பத்தியாளர்களும் எண்ணிறைந்த வாங்குபவர்களும் காணப்படல்
விலை தொடர்பில் உற்பத்தியாளர்க வாங்குபவர்களின் ஆதிக்கம் இல்லாதொழிக்கப்படுகின்றது
ஒரினத்தன்மையான பண்டங்களை உற்பத்தி செய்தல்
பிரவேச சுதந்திரம் காணப்படல்
நிறுவனங்கள் உட்பிரவேசிக்கவும்,வெளியேறவும் சுதந்திரம் காணப்படுவதால் சந்தையை கட்டுபடுத்தும் ஆற்றல் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் குவிவது காணப்படாது. இதற்கு எதிரானது தனியுரிமை
உற்பத்தியாளரும் நுகர்வோனும் சந்தை பற்றிய பூரணஅறிவுள்ளவராகக்காணப்படல்
பொருள் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால விளம்பரப்படுத்தல் காணப்படாது.
இவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்யுமிடத்தே அங்கு நிறைவுப்போட்டி தோன்றும், உலகநடைமுறையில் இச்சந்தை அமைப்பு காணப்படுவது அரிது

இவற்றையும் பார்க்க
சந்தை
Perfect competition

அரசதனியுரிமை

ஒரு குறிப்பிட்ட பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் சந்தையானது போட்டி எதுவுமின்றி முழுவதுமாக அரச துறையால் கட்டுப்படுத்தப்படுமாயின்,அத்தகைய நிலமையினை பொருளியலில் அரசதனியுரிமை அல்லது அரசமுற்றுரிமை (government monopoly) எனப்படும்.இங்கு போட்டியானது சட்ட கட்டுப்பாடின் மூலம் நீக்கப்படும், இதன் காரணமாக சந்தையில் வேறு நிறுவனக்கள் காணப்படாது.இந் நிலையிலிருந்து government-granted monopoly வேறுபடும் இங்கும் பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் தனியுரிமை காணப்படும் இத் தனியுரிமை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்ட கட்டுப்பாடுகளுடன் அரசால் வழங்கப்படும்.(உ+ம்) இலங்கையில் சிகரட் உற்பத்திஅரச தனியுரிமையானது அரசாங்கத்தின் எந்த ஒரு மட்டத்தினாலும் (தேசிய,மாகாண,மாவட்ட ...)நடாத்தப்படலாம்,

பல நாடுகளில் காணப்படும் தபால் சேவைகள் சமூகநல சேவைகள்,ரயில் சேவைகள் போன்றவைகள் அரச தனியுரிமையின் உதாரணங்களாக்கும்,
இக் காலகட்டத்திலே சந்தையில் அரச தனியுரிமை இல்லாது அழிக்கப்படுவதும் தனியார்மயமாக்கல் துரிதப்படுத்தப்படும் போக்கும் காணப்படுகின்றது

தனியார்மயமாக்கல்

தனியார்மயமாக்கல் (Privatization) என்பது அரசதுறையின் கட்டுபாட்டிலுள்ள நிறுவனங்களின் உடைமைகள் அல்லது முகாமையினை தனியார்துறையிடம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மாற்றம் செய்யும் நடவடிக்கையினைக் குறிக்கும்.
தேசியமயமாக்கல் (nationalization), municipalization என்பன இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும்.
1948 ம் ஆண்டு காலப்பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந் நடவடிக்கை 1980 இன் பின்னர் ஒரு சிறந்த பொருளாதார நடவடிக்கையாகப் பொருளியளாலர்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய வைப்பகம் (சர்வதேச நாணய நிதியம்) என்பவற்றால் பரவலாக முன்நிறுத்தப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
"

ஆடம் சிமித்




ஆடம் சிமித்
மேல்நாட்டுப்பொருளியலாளர
தொன்மைப்பொருளியல்
(தற்காலப் பொருளியல்)

முழுப் பெயர் ஆடம் சிமித்
பிறப்பு ஞானஸ்நானம்
(அகவை 67)
முக்கிய ஆர்வங்கள் அரசியல் மெய்யியல்,
நெறிமுறை, பொருளியல்

குறிப்பிடத்தக்கஎண்ணக்கருக்கள் மரபுப் பொருளியல்,தற்கால
கட்டற்ற சந்தை
ஆடம் சிமித் (Adam Smith - ஞானஸ்நானம் ஜூன் 16, 1723ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.
சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், எடின்பரோவில் பல வெற்றிகரமான விரிவுரைகளை நிகழ்த்தினார். பின்னர் ஸ்காட்டிய அறிவொளிக் காலத்தில் அவர் டேவிட் ஹியூம் (David Hume) என்பவருடன் சேர்ந்து பணியாற்றினார். ஒழுக்க மெய்யியல் கற்பிப்பதற்காக சிமித்துக்கு கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி கிடைத்தது. இக்காலப்பகுதியில்தான் இவர்ஒழுக்க உணர்வுக் கோட்பாடு என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் தனது வாழ்வின் பிற்காலங்களில் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கொண்ட பல கற்பித்தல் வாய்ப்புக்களைப் பெற்றார். இவற்றின் மூலம் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த பல அறிவுத்துறை சார்ந்த தலைவர்களைச் சந்தித்தார். பின்னர் சொந்த நாடு திரும்பிய அவர் அடுத்த பத்து ஆண்டுகளையும் நாடுகளின் செல்வம் என்னும் நூலை எழுதுவதில் செலவிட்டார். இது 1776 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1790 ஆம் ஆண்டில் சிமித் காலமானார்.
"

Tuesday, October 21, 2008

விலைமதிப்பு தினைக்கழத்தின் செயற்பாட்டு விளக்கம்

விலைமதிப்பீட்டுப் பிரிவு

திணைக்களத்தின் பணி “பொதுவான விலைமதிப்பீடு” மற்றும் “வீதவரியிடல் விலைமதிப்பீடு” என நன்கு அடையாளங் காணப்படக்கூடியதாகவுள்ளவிடத்து, விலைமதிப்பீடு மற்றும் ஆதன நிருவாகம் என்னும் துறையில் அரசுக்கும் அதனோடு இணைந்த நிறுவகங்களுக்கும் திணைக்களம் சேவைகளை வழங்குகிறது.

அ) பொதுவான விலைமதிப்பீடு (விலைமதிப்பீடுகள் மற்றும் சேவைகள் தொடர்பிலான மூலதனப் பெறுமானமும் வாடகைப் பெறுமானமும்)-
  1. காணி கொள்ளல் சட்டத்தின் பிரிவு 38(அ) இன்கீழ் பகிரங்க நோக்கத்துக்காகக் கட்டாயமாகக் கொள்ளப்பட்ட தனிப்பட்ட காணிகள் தொடர்பில் நிபந்தனையான அறிக்கைகளைத் தயாரித்தலும், மற்றும் அதன்பின்னர் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் கொள்ளப்பட்ட அத்தகைய காணிகள் தொடர்பிலான இழப்பீட்டுக் கொடுப்பனவுக்காக விலைமதிப்பீடுகளைத் தயாரித்தலும்.
  2. காணி கொள்ளல் சட்டத்தின்கீழ் கொள்ளப்படவுள்ள காணிகள் தொடர்பில் நியதிகளைக் குறித்தொதுக்குவதற்காக மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
  3. தனிப்பட்ட உடன்படிக்கை கணக்கிடும் நோக்கங்களுக்காகவும் மற்றும் குத்தகை நோக்கங்களுக்காகவும் கொள்வனவுகள், கொடுத்துத்தீர்த்தல் என்பன உட்பட்ட வௌ;வேறு நோக்கங்களுக்காக அசைவற்ற மற்றும் அசைவுள்ள ஆதனங்களை விலைமதிப்பிடல்.
  4. மேலும் நியதிச்சட்ட ஏற்பாடுகளின்கீழ் அத்தகைய விலைமதிப்பீடுகளைச் செய்வதற்காக விலைமதிப்பீட்டாளர் தேவைப்படுத்தப்பட்டுள்ளவிடத்து அல்லது தத்துவமளிக்கப்பட்டுள்ளவிடத்து, விலைமதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. கீழே குறிப்பிடப்பட்ட ஏனைய பின்னைய நியதிச்சட்டங்கள், விசேட நோக்கங்களுக்காக ஆதனத்தின் கட்டாயக் கொள்வனவை வேண்டுவனவும், சந்தைப்பெறுமதியின் நியதிகளிலான இழப்பீட்டுடன் தலையீடு செய்துள்ளனவும் அத்துடன் ஆதனங்கள் அரசினால் கட்டாயமாகக் கொள்ளப்படுமிடத்து அல்லது சட்டத்தின் வலுவுடைமை காரணமாக அரசுக்குரித்தாக்கப்படுமிடத்து இழப்பீட்டுக் கொடுப்பனவின்மீது விலைமதிப்பீட்டை நிர்ணயிப்பதில் குறித்தசில மட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் சூழ்நிலைகளையும் சுமத்தியுள்ளதுமானவையுமே இவை
  • - 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம்
  • - 1979ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம்
  • - 1978ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க பாரிய கொழும்பு பொருளாதார (முதலீட்டுச் சபைச்) சட்டம்
  • - 1946ஆம் ஆண்டின் பட்டின மற்றும் நாடு திட்டமிடல் கட்டளைச்சட்டம்
  • - 1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காணி சீர்திருத்தச் சட்டம்
  • - 1972ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டம்
  • - 1968ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க கொழும்பு மாவட்ட (தாழ் நிலை இடப்பரப்பு) மீட்பு மற்றும் அபிவிருத்தி சபைச் சட்டம்
  • - 1972ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க வாடகைச் சட்டமும் 1980ஆம் ஆண்டின் 55ஆம் இலக்க, மற்றும் 2002ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க அதன் திருத்தச் சட்டங்களும்- 1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்
  • - 1973ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வீடமைப்பு ஆதனங்களின் உச்சவரம்புச் சட்டம்
  • - 1973ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மைச் சட்டம்
  • - 1968ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உல்லாசத்துறை அபிவிருத்திச் சட்டம்- கரையோரம் பேணல் சட்டம்
  • - 1979ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க கமத்தொழிற் சேவைகள் சட்டம்
  • - 1956ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க மற்றும் 1973ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தெருக்களும் பொதுவழிப்பாதைகளும் சட்டம்
  • - 1979ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டம்
  • - 1958ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வளவ காணிகள் சட்டம்
  • பகிரங்க தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் வேண்டுகோளின்மீது, தனியார் மயமாக்கல் நோக்கங்களுக்காக, திணைக்களம், பகிரங்க தொழில் முயற்சிகளின் விலைமதிப்பீட்டையும் பொறுப்பேற்கிறது.
  • குத்தகைக்கு விடல் நோக்கங்களுக்கும் அடையாளங் காணப்பட்ட அவர்களது ஆதன உடைமை தொடர்பில் அல்லது அத்தகைய நிறுவகங்கள் தங்களது பயன்பாட்டுக்காகவும் இருப்பாட்சிக்காகவும் தனியார் ஆதனங்களைத் தேவைப்படுத்துவதும் தொடர்பில், வாடகை விலைமதிப்பீடுகள் அரசுக்கு அல்லது அரசுத் துறையினருக்கு கொடுத்துதவப்படுகின்றன.
  • இழப்பீட்டுப் பிணக்குகளை விசாரித்துத் தீர்மானிக்கும் சட்ட நீதிமன்றங்கள் மற்றும் பல்வேறுபட்ட ஏனைய நியாயமன்றுகள் என்பவற்றுக்கு, நிபுணத்துவ சான்றினை வழங்குவதில் உதவி செய்கிறது. இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாநகரசபைக்குள் உள்ள ஆதனங்களைத் தவிர்த்து, திணைக்களத்தின் அலுவலர்கள், வாடகைச் சபைகளில் பிரதான விலைமதிப்பீட்டாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஆ) வீத வரியிடல் விலைமதிப்பீடு

வீத வரிகளை (உள்ளுர் வரியிடல்) அறவிடுவதற்காக, கொழும்பு மாநகரசபை எல்லையினுள் அமைந்துள்ளவை தவிர்ந்த நாட்டிலுள்ள அநேகமான எல்லா உள்ளுரதிகார சபைகளதும் ஆதனங்களினதும் வரிமதிப்பீடுகளையும், மீள் வரிமதி;ப்பீடுகளையும் திணைக்களம் செய்து வருகிறது. அத்துடன் அத்தகைய வரிமதிப்பீடுகள் தொடர்பில் இன்னலுறுகின்ற வீதவரி செலுத்துநர்களால் செய்யப்பட்ட ஆட்சேபனைகளைத் தீர்மானிப்பதில் உதவியும் செய்கிறது. உள்ளுர் வரிக்கான அடிப்படையாக, பாரம்பரியமான ஆண்டுப்பெறுமானத்துக்காக ஒரு தொகையைப் பெறுதலே வீதவரியிடலுக்கான விலைமதிப்பீட்டின் நோக்கமாகும். சம்பந்தப்பட்ட சட்டவாக்கங்களில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவாறாக, “ஆண்டுப் பெறுமானத்தை மதிப்பீடு செய்வதே இங்கு விலைமதிப்பீட்டாளரது கடமையாகும். இலங்கையில் “வீதவரிகள்” அல்லது “ஆதன வரி” யை அறவிடுவதை தத்துவமளிக்கும் சட்டவாக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

– 230ஆம் பிரிவு

மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள ஒவ்வொரு விவரணத்திலுமான எல்லா வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் எல்லா காணிகளும் மற்றும் குடியிருப்புகளும், “உள்ளுர் வரி” க்குப் பொறுப்பாதல் வேண்டும்.

327ஆம் பிரிவு (“ஆண்டுப் பெறுமானத்தின்” வரைவிலக்கணம்)

“ஆண்டு வாடகை” என்பது வாடகையை கோரி நிற்கத்தக்க நிலையிலே காணப்படத்தக்க வீடு, கட்டிடம் காணி அல்லது குடியிருப்பு மனையைப் பேணுவதற்கு அவசியமான ஏதேனும் காப்புறுதி, திருத்தங்கள், பராமரிப்பு மற்றும் பேணுவதற்கான செலவுகள் இருப்பின் அவற்றை வீட்டுச் சொந்தக்காரரினால் செலுத்தப்படுவதாகவும் அத்துடன் எல்லா வீதவரிகள் மற்றும் வரிகளுக்கான வாடகைக் குடியிருப்பாளரினால் செலுத்தப்படுவதாகவும் இருப்பின் ஏதேனும் ஒரு வீடு, கட்டிடம், காணி அல்லது குடியிருப்பு மனைக்கு செலுத்துவதற்கான ஒரு வாடகை, குடியிருப்பாளரால் ஒவ்வொரு வருடமும் நியாயமாக எதிர்பார்க்கப்படும் வாடகையாகும்.

1939ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க நகரசபைக் கட்டளைச் சட்டம் (முன்னைய நகர மாவட்ட சபைகள்)

பிரிவு 160

பட்டினத்தினுள் அமைகின்ற ஏதேனும் அசைவற்ற ஆதனம் அல்லது அசைவற்ற ஆதனத்தின் ஏதேனுமொரு தொகுதியானது “உள்நாட்டு வரி” செலுத்தப்படுவதற்குப் பொறுப்பானதாதல் வேண்டும்.

பிரிவு 249(1)- (ஆண்டு பெறுமதிக்கான வரைவிலக்கணம்)

“ஆண்டு வாடகை” என்பது வாடகையை கோரி நிற்கத்தக்க நிலையிலே காணப்படத்தக்க வீடு, கட்டிடம் காணி அல்லது குடியிருப்பு மனையைப் பேணுவதற்கு அவசியமான ஏதேனும் காப்புறுதி, திருத்தங்கள், பராமரிப்பு மற்றும் பேணுவதற்கான செலவுகள் இருப்பின் அவற்றை வீட்டுச் சொந்தக்காரரினால் செலுத்தப்படுவதாகவும் அத்துடன் எல்லா வீதவரிகள் மற்றும் வரிகளுக்கான வாடகைக் குடியிருப்பாளரினால் செலுத்தப்படுவதாகவும் இருப்பின் ஏதேனும் ஒரு வீடு, கட்டிடம், காணி அல்லது குடியிருப்பு மனைக்கு செலுத்துவதற்கான ஒரு வாடகை, குடியிருப்பாளரால் ஒவ்வொரு வருடமும் நியாயமாக எதிர்பார்க்கப்படும் வாடகையாகும்.1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம் (முன்னைய பட்டின சபைகள் கட்டளைச்சட்டம் மற்றும் கிராம சபைக் கட்டளைச்சட்டம)பிரிவு 134உதவி ஆணையாளரின் அனுமதியுடன் உள்ளுர் அதிகாரசபையினால் கட்டப்படக்கூடிய இடங்களாக வெளிப்படுத்தப்பட்ட இடப்பிரதேசங்களில் அமைந்துள்ள ஏதேனும் அசைவுள்ள ஆதனம் அல்லது அசைவற்ற ஆதனத்தின் ஏதேனும் தொகுதியானது உள்ளுர் வரிக்குப் பொறுப்பிக்கப்படுதல் வேண்டும்.பிரிவு 226- (ஆண்டுப் பெறுமானத்துக்கான வரைவிலக்கணம்)“ஆண்டு வாடகை” என்பது வாடகையை கோரி நிற்கத்தக்க நிலையிலே காணப்படத்தக்க வீடு, கட்டிடம் காணி அல்லது குடியிருப்பு மனையைப் பேணுவதற்கு அவசியமான ஏதேனும் காப்புறுதி, திருத்தங்கள், பராமரிப்பு மற்றும் பேணுவதற்கான செலவுகள் இருப்பின் அவற்றை வீட்டுச் சொந்தக்காரரினால் செலுத்தப்படுவதாகவும் அத்துடன் எல்லா வீதவரிகள் மற்றும் வரிகளுக்கான வாடகைக் குடியிருப்பாளரினால் செலுத்தப்படுவதாகவும் இருப்பின் ஏதேனும் ஒரு வீடு, கட்டிடம், காணி அல்லது குடியிருப்பு மனைக்கு செலுத்துவதற்கான ஒரு வாடகை, குடியிருப்பாளரால் ஒவ்வொரு வருடமும் நியாயமாக எதிர்பார்க்கப்படும் வாடகையாகும்.ஆயின், ஆண்டுப் பெறுமானத்தைக் கணித்து மதிப்பீடு செய்வதில்-(அ) அத்தகைய காப்புறுதி, திருத்தம், பராமரிப்பு, மற்றும் பேணுவதற்கான சாத்தியப்படக்கூடிய சராசரி செலவு கழிக்கப்படல் வேண்டும்.(ஆ) குடியிராத ஏதேனும் காலத்திற்கான எந்தவொரு சலுகையோ அல்லது தள்ளுபடியோ செய்யப்படலாகாது.


திறன்கள் அபிவிருத்தி நிலையம்

  • மட்டுப்படுத்தப்பட்ட பௌதீக மற்றும் மனிதவளங்களின் சேர்க்கையின் உருவாக்கத்தில், அடிப்படைகள், நீண்ட வாழ்க்கை முறை கற்றல் மற்றும் செயல்நிறைவேற்ற தர மதிப்பீட்டினூடாக உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பினூடாக திறன் மற்றும் திறன்களின் அபிவிருத்தியுடன் கூடிய செயல் தூண்டுதல் என்பன அடையாளங் காணப்பட்டு, 2006ஆம் ஆண்டிலே நிறுவப்பட்டதும், முன்னர் காணப்பட்ட திணைக்களத்தின் பயிற்சிப் பாடசாலையின் இடத்தை எடுத்துக்கொண்டதும், உதவி பிரதான விலைமதிப்பீட்டாளரின்கீழ் தொழிற்படுவதுமான திறன்கள் அபிவிருத்தி மையத்தின் கருப்பொருளாக இருப்பது “அறிவு, மனப்பான்மை மற்றும் திறன் என்பதாகும்.திறன்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வழங்கப்படும் வசதிகள் உள்ளக மற்றும் வெளியகமானவை என இரு பிரதான பிரிவுகளின்கீழ் பின்வரும் விரிவான பிரிவுகளுக்கு வழங்கப்படுகின்றன:
  • உள்ளக நிகழ்ச்சிகள் (உள்ளக உயர்தொழில்சார் மற்றும் முகாமைத்து ஊழியர் கோப்பு):(அ).தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகள் பற்றியது(ஆ).விடயங்களை மையமாகக் கொண்ட பயிற்சி நிகழ்;ச்சிகள் மற்றும் கள ஆய்வுகள்(இ).பரீட்சையினை மையமாகக் கொண்ட பயிற்சி நெறிகள்@ அத்துடன்(ஈ).அறிவினைப் பகிர்கின்ற நெறிகள் மற்றும் கள ஆய்வுகள
  • வெளிவாரி நிகழ்ச்சிகள்: (அ).கிராமசேவை அலுவலர்களுக்கான பயிற்சி நெறிகள்(ஆ).அரசிறை வரி அலுவலர்களுக்கான பயிற்சி நெறிகள் மற்றும் கள ஆய்வுகள்(இ).ஆதன முகாமைத்துவ பட்டமுன் பட்டதாரிகள் (டீளுஉ) விலை மற்றும் மதிப்பீட்டு பட்டமுன் பட்டதாரிகளுக்கான சேர்க்கப்பட்ட நிகழ்ச்சிகள்(ஈ).ஆதன முகாமைத்துவ பட்டமுன் பட்டதாரிகள் மற்றும் விலைமதிப்பீட்டு பட்டமுன் பட்டதாரிகளுக்கான தொழிலை மையமாகக் கொண்ட பயிற்சி நிகழ்ச்சிகள்@ மற்றும்(உ).கொள்ளல் அதிகாரிகளுக்கான கள ஆய்வுகள் மற்றும் பயிற்சி நெறிகள்.வங்கி, காப்புறுதி மற்றும் ஆதன முகாமைத்துவ பிரிவிலுள்ள ஏனைய திணைக்களங்களதும் நிறுவனங்களதும் தேவைப்பாடுகளை எதிர்கொள்வதற்கு சுங்கப்பகுதியினால் செய்யப்படும் கள ஆய்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் கவனத்தின்கீழ் உள்ளன.


ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு (ஊழுசுநு)

ஒருங்கிணைப்பு

  • உயர்தொழில் சார்ந்தவை பின்வருவன போன்ற பாரிய அளவிலான விலை மதிப்பீடுகளை ஒருங்கிணைத்தல்
  • நாடளாவிய ரீதியில் சிதறியுள்ள சொத்துக்களுடன் கூடிய பாரிய நிறுவனங்களின் ஆதனங்களின் விலைமதிப்பீடுகள்.
  • விரைவான திறன்மிக்க சேவைக்கான, தனியார் மயப்படுத்தல் நோக்கத்துக்காக, பகிரங்க தொழில் முயற்சிகளின் விலைமதிப்பீடு.


பொதுவானவை

  • திணைக்கள கட்டளைகள், திணைக்கள சுற்றறிக்கைகள், கையேடுகள், வழிகாட்டிகள் முதலியவற்றை வரைந்து வெளியிடுதல்.
  • தொழில் விவரணங்கள் மற்றும் நடத்தைக் கோவைகளைத் தயாரித்தல்
  • ஆண்டுச் சுற்றறிக்கைகள், கருத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் கருத்து ஆவணம் முதலியவற்றைத் தயாரித்தல்
  • மாதாந்த அறிக்கை மற்றும் விலைமதிப்பீட்டு சஞ்சிகையை ஒருங்கிணைத்தல்
  • செயல் நிறைவேற்ற சுட்டிக்காட்டிகள் மற்றும் செயல் நிறைவேற்ற தரமதிப்பீடு என்பவற்றைத் தயாரித்தல்
  • தலைவர்களின் மாதாந்தக் கூட்டங்கள், பிரிவுகளின் தலைவர்களின் கூட்டங்கள் முதலியவற்றை ஒருங்கிணைத்தல்
  • திணைக்கள பொது பதிவு அறையைப் பராமரித்தல்
  • செய்தித்தாள்கள் மற்றும் பருவ சஞ்சிகைகளை வழங்குதலும் அத்துடன் தொலைத்தொடர்பு வசதிகளை முகாமை செய்தலும்
  • திணைக்களத்திற்கான விஜயங்கள், கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல்
  • திணைக்கள திறன் எல்லைப் பரிசோதனைகள் மற்றும் சேவை பரிசோதனைகளை ஒழுங்குசெய்தலும் நடாத்துதலும்
  • கண்காட்சிகளுக்கு பிரதிநிதித்துவங்களை ஒழுங்கு செய்தல்
  • துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள் மற்றும் கையேடுகள் போன்றவற்றை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல், திணைக்களத்தின் தகவல்களைக் கொண்டு செல்லல் அத்துடன்
  • தகவல் தொழினுட்ப பிரிவுடன் இணைந்து திணைக்களத்தின் இணையத் தளத்தினைக் கொண்டிருத்தல்


ஆராய்ச்சி


தகவல் தொழில்நுட்பம் (ஐவு)

  • பிராந்திய விலைமதிப்பீட்டாளர் தலைமையிலும் பிரதான விலைமதிப்பீட்டாளரின் நேரடி மேற் பார்வையின்கீழும் தொழிற்படும் (திணைக்களத்தின் உயர்தொழில்சார் மற்றும் நிருவாக அம்சங்களை உள்ளடக்குகின்ற) ஒரு புஐளு சார்ந்த கணனி மயப்படுத்தப்பட்ட பாரிய விலைமதிப்பீட்டு முறைமை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக உத்தேச கணனிமயப்படுத்தப்பட்ட விலைமதிப்பீட்டு முறைமையை அமுல்படுத்தலுடன், ஒரு ஏயுமுறைமை (முழு அலுவலக வலையமைப்பினையும் தொடர்புபடுத்துகின்ற) விரிவுபடுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தலை நோக்காகக் கொண்டு ஒரு டுயுN முறைமைக்கான காகித (எழுத்து) வேலை ப+ர்த்தி செய்யப்பட்டுள்ளது. பின்வருவன தொடக்க மற்றும் படிப்படியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுள் சிலவாகும்.
  • திணைக்களத்தின் முன்னேற்றத்தின் தொடர்ச்சியான பகுப்பாய்வு மற்றும் மீளாய்வினைச் சாத்தியமாக்குகின்ற, தனிப்பட்ட அலுவலர்களுக்கும் மற்றும் முழு திணைக்களத்துக்குமான கணனிமயப்படுத்தப்பட்ட முன்னேற்ற கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் அமுல்படுத்தவும்பட்டுள்ளது. இது தனிப்பட்ட அலுவலர்களின் ஆற்றல்களை அதிகரிக்கச் செய்வதுடன், திணைக்களத்தினால் கையாளப்படுகின்ற உயர்தொழில்சார் சேவைகளின் தரம் மற்றும் அளவினை உச்ச மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உருமாதிரிகளில், நியமங்களில் பேணிக்காக்கின்றது.
  • திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் நிருவாக பிரிவுகளிற்கு துணைபுரியும் கட்டண கணிப்பான்கள் போன்ற கணனிமயப்படுத்தப்பட்ட கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அமுல்படுத்தவும்படவுள்ளன.
  • திணைக்களத்திற்காகப் பணிபுரியும் உயர் தொழிலர்களுக்கான விற்பனை மற்றும் வாடகை பகுப்பாய்வுடன்கூடிய அடிப்படை விலைமதிப்பீட்டு முறைமை, அளவுகளின் விலைப்பட்டியல்களைத் தயாரிப்பதற்கான கணனிமயப்படுத்தப்பட்ட இலகுவில் பயன்படுத்தத்தக்க அமைப்பு போன்ற கணினி மயப்படுத்தப்பட்ட உதவி கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை மட்டத்தின் கீழும் உள்ளன.
  • சிறிய வீதவரியிடும் மற்றும் விலைமதிப்பீட்டு அலகொன்றின் கையாலைச் சாத்தியமாக்குகின்ற மைக்ரோசொப்ட் அக்சஸ் இனை அடிப்படையாகக் கொண்ட வீதவரியிடல் விலைமதிப்பீட்டு அமைப்பு ஒன்று ஒரு அலுவலரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தகவல் தொழினுட்ப பிரிவின் மீளாய்விலும் உள்ளது.
  • வீதவரியிடல் அலகு கண்காணிப்பு முறைமை ஒன்றானது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதோடு, தக்க திருத்தங்களுடன் மீளாய்விலும் உள்ளது.
  • சகலவித விலைமதிப்பீட்டுடனும் தொடர்புபட்ட பன்மடங்காக்கிகளைச் சிறப்பாகக் கையாளத்தக்க புத்தகக் கருத்துக்களினது புறம்பே வைத்திருக்கும் கணனி மயப்படுத்தப்பட்ட கணிப்பான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பூர்த்தியாகும் கட்டத்திலும் உள்ளது. தகவல் தொழினுட்பப் பிரிவின் பொறுப்புக்களாவன:
  • கணனிமயப்படுத்தலுக்கான ஒரு சூழலை ஏற்படுத்தல்@
  • கணனி விழிப்புணர்வு நிகழ்ச்சி வசதிகளை அலுவலர்களுக்கு ஏற்பாடு செய்தல்@
  • கணனியறிவில் அலுவலர்களைப் பயிற்றுதல்@
  • கணனிமயப்படுத்தப்பட்ட பாரிய விலைமதிப்பீட்டு முறைமையில் வடிவமைப்பு மற்றும் அறிமுகப்படுத்தலில் துணைபுரிவதுடன், அதன் அமுல்படுத்தலிலும் பேணிவருதலும் துணைபுரிதலும்@
  • கணனி தேவைப்பாடுகளைப் புரிந்துகொள்வதுடன் அவற்றை வழங்குதலும் பேணிவருதலும்
  • திணைக்களத்தின் இணையத் தளத்தினை வைத்திருத்தலும் பேணிவருதலும்.


சட்டப் பிரிவு

இச்சட்டப்பிரிவானது சட்டத்தரணியாகத் தகுதியுடைய மூன்று சட்ட உதவியாளர்களின் உதவியினால் சட்ட அலுவலரின் தலைமையில் இயங்குகிறது. செயலாளருக்குரிய வேலையானது சபைக்கு நியமிக்கப்பட்ட ஒரு செயலாளரினால் கையாளப்படுகின்றது. கட்டாயக் கொள்ளலுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இழப்பீடுகளுடன் அரசு சார்பாக திணைக்கள விலைமதிப்பீட்டாளர்களின் நிபுணத்துவ சாட்சிகள் வழங்கல் என்பன அரசாங்கத்தின் சார்பாக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நம்பத்தக்க விலைமதிப்பீடுகள் திருப்திப்படாத திறத்தினர்களின் மேன்முறையீடுகளை விசாரிக்கும் நோக்கத்துக்காக, 1950ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணி கொள்ளல் ஏற்பாடுகள் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் நிறுவப்பட்ட காணி கொள்ளல் மீளாய்வு சபைக்கு உதவி செய்வதே திணைக்களத்தின் சட்டப்பிரிவின் பிரதானமான குறிக்கோளாகும். மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளல், மேன்முறையீட்டாளர்களுக்கு அறிவிப்புகளை வழங்குதல், வழக்குகளை விசாரிப்பதற்கான சபைகளை தீர்மானித்தல், அழைத்தல், மேன்முறையீட்டாளர்களுக்கு சபையின் தீர்மானங்களைத் தெரியப்படுத்துதல் மற்றும் காணி கொள்ளல் மீளாய்வு சபைக்கு எதிரான மேன்முறையீடுகளுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளல் போன்ற மீளாய்வு சபைக்கு முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளுடன் தொடர்பான நிருவாகம் மற்றும் தாபன வேலை எனும் காணி கொள்ளல் மீளாய்வு சபையின் சகல தொழிற்பாடுகளும், சட்டப்பிரிவினால் மேற்கொள்ளப்படும் தொழிற்பாடுகளுள் அடங்கும்.காணி கொள்ளல் மீளாய்வு சபைக்கு உதவி புரிவதைத் தவிர பிரதான விலைமதிப்பீட்டாளரும் பிரதிவாதியாகக் காணப்படுகின்ற நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஏனைய வழக்குகளுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் போன்ற சட்டம் சார்ந்த விடயங்களில் பிரதான விலைமதிப்பீட்டாளருக்கு துணைபுரிவதும் சட்டப்பிரிவின் கடமை மற்றும் பொறுப்பாக அமைந்துள்ளது.மேன்முறையீட்டு நடைமுறையானது, 1950ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணி கொள்ளல் சட்டத்தின் 19 தொடக்கம் 29 வரையான பிரிவுகளிலே குறிப்பிடப்பட்டுள்ளது.கட்டாயக் கொள்ளலுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இழப்பீடுகளில் திருப்தியடையாத திறத்தினர்களினால் செய்யப்பட்ட மேன்முறையீடுகளை விசாரிக்கும் நோக்கத்திற்காக, 1950ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணி கொள்ளல் சட்ட ஏற்பாடுகளின்கீழ் தாபிக்கப்பட்ட காணி கொள்ளல் மீளாய்வு சபை ஒன்று உள்ளது. எட்டு சட்டத்தரணி உறுப்பினர் மற்றும் எட்டு விலைமதிப்பீட்டாளர் உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினாறு உறுப்பினர்களைக் கொண்ட மூன்று வருட காலத்துக்கான ஒரு மீளாய்வு சபையினை ஜனாதிபதி நியமித்தல் வேண்டும். இதன் தலைவராக ஒரு சட்டத்தரணி உறுப்பினரும், உப தலைவராக இன்னொரு உறுப்பினரும் சனாதிபதியால் நியமிக்கப்படுதல் வேண்டும்.


நிருவாகக் கிளை

நிருவாக அலுவலர் ஒருவரின் தலைமையிலான நிருவாக சபையானது முழுத் திணைக்களத்தினதும் நிருவாக மற்றும் தாபன வேலைக்குப் பொறுப்பாக உள்ளது. தனிப்பட்ட பதிவுக்கோவைகளைப் பேணுதல், ஆட்களை வேலைக்கமர்த்தல், உறுதிப்படுத்தல், பதவியுயர்வு வழங்கல், இடமாற்றம் செய்தல், வருடாந்த சம்பள அதிகரிப்பு, ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைகள் என்பன இப்பிரிவின் பிரதான தொழிற்பாடுகளுள் சிலவாகும்.


கணக்குக் கிளை

  • பிரதான விலைமதிப்பீட்டாளரே நிதிசார் ஒழுங்குவிதியின்கீழ் திணைக்களத்திற்கான கணக்கீட்டு அலுவலராவார். அத்துடன் பிரதான கணக்கீட்டு அலுவலருக்கு (உதாரணம்: நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கான அமைச்சுச் செயலாளருக்கு) பொறுப்பானவருமாதல் வேண்டும். (திணைக்களத்திற்கான கணக்கீட்டு அலுவலரான) பிரதான விலைமதிப்பீட்டாளரின் மேற்பார்வையின்கீழ் கணக்கீட்டு அலுவலரின் எல்லாப் பணிகளும் கணக்குக்கிளையினால் மேற்கொள்ளப்படும்.பின்வருவன பிரதான பணிகளாகும்:
  • வருடாந்த வரவுசெலவுத்திட்;டத்தைத் தயாரித்தல்
  • வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பில் பணக்கொடுப்பனவைத் தயாரித்தல்
  • எல்லா நிதி அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தலும் அத்துடன் கணக்காய்வாரள் தலைமையதிபதியினதும் உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தல். அத்துடன் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவுகளையும் முற்பணக் கொடுப்பனவுகளையும் கொடுத்தல் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என்பவற்றை மீளளித்தல் போன்ற நிதியுடன் தொடர்புபட்ட ஏனைய கருமங்களுக்கும் பொறுப்பாக உள்ளது.


நலன்புரி மற்றும் வளவுகள

வளவு அலுவலர்களினால், ( கௌரவப் பதவி) தலைமைவகிக்கப்படுகின்றது. நலன்புரி மற்றும் வளவுப் பிரிவுகளின் பொறுப்புக்கள்:

நலன்புரி -

இத்திணைக்களத்தின் பணியாட்களின் நலனுடன் தொடர்புபட்ட எல்லா நடவடிக்கைகளைக் கவனித்தலும் ஒருங்கிணைத்தலும்வளவுகள் -
திணைக்களத்திற்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடத் தொகுதிகள் மற்றும் சுற்றுலா ஒற்றை மாடி வீடுகளைப் பேணுதல் மற்றும் பராமரித்தல்
திணைக்களத்திற்கு வாடகைக்குஃகுத்தகைக்கு விடப்பட்ட அலுவலகக் கட்டிடங்களைப் பேணுதல் மற்றும் பராமரித்தல்,
திணைக்களத்திற்கு வாடகைக்குஃகுத்தகைக்கு விடப்பட்ட அலுவலகக் கட்டிடங்களின் வாடகைஃகுத்தகை ஒப்பந்தங்களின் புதுப்பித்தல்

Monday, October 20, 2008

சந்தைப் பொருளாதாரம்

சந்தைப் பொருளாதாரம் அல்லது கட்டற்ற சந்தைப் பொருளாதாரம் என்பது ஒரு பொருளியல் முறை ஆகும். இதில் பொருட்களினதும், சேவைகளினதும் உற்பத்தியும், விநியோகமும் கட்டற்ற விலை முறைமையினால் நெறிப்படுத்தப்படும் கட்டற்ற சந்தைப் பொறிமுறையினால் நடைபெறுகின்றது. ஒரு சந்தைப் பொருளாதார அமைப்பில் வணிகத்துறையும், நுகர்வோரும் எதை வாங்குவது எதை உற்பத்திசெய்வது போன்ற முடிவுகளைத் தாங்களாகவே எடுக்கின்றனர். இம்முறையில் வளங்களின் ஒதுக்கம் அரசின் தலையீடுகள் இன்றி நடைபெறும். கோட்பாட்டு அடிப்படையில் இம் முறையின் கீழ், எதனை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது, என்ன விலை விற்பது, தொளிலாளருக்கு எவ்வளவு ஊதியம் வழங்குவது போன்ற முடிவுகளை உற்பத்தியாளரே எடுப்பார், அரசு அல்ல. சந்தைப் பொருளாதாரத்தில் இம் முடிவுகள், போட்டி, தேவையும் வழங்கலும், போன்றவற்றால் உண்டாகும் அழுத்தங்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன. இது என்ன பொருளை எவ்வளவு உற்பத்தி செய்வது போன்றவற்றை அரசே தீர்மானிக்கும் திட்டமிட்ட பொருளாதார முறைக்குப் புறம்பானது. திட்டமிட்ட பொருளாதாரம்போல் விரிவாக இல்லாவிட்டாலும், முற்றிலும் கட்டற்ற முறையில் இல்லாமல் ஓரளவு அரசின் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் கலப்புப் பொருளாதார முறையும், சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து வேறுபடுகின்றது. நடைமுறையில் எந்த நாட்டிலும் உண்மையான சந்தைப் பொருளாதாரம் இருப்பதாகக் கூறமுடியாது.

பொருளியல்

பொருளியல் என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும். உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் ஸ்மித்தின் என்பாரின் வெல்த் ஆஃவ் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூல் வெளிவந்த பின்னரே அது பொருளியல் என ஓர் குமுகம் பற்றிய அறிவியல் துறையாகவும் மரபாக புத்தாக்கம் பெற்றது.
பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொர் காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள்(1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும், நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்." (the science which studies human behaviour as a relationship between ends and scarce means which have alternative uses).இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை ) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்கள் மாற்றுப்பயன்பாடு அற்றபோதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது.
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியது சிற்றினப்பொருளியல் , பேரினப்பொருளியல் ( macroeconomics) என்பனவாகும். இவைதவிர நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics), கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics), சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics) எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறைக்கான நிதியுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுத்தட்டுப்பாட்டையடுத்து இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய உணவுத்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு கடன்களைப் பெற்றிருக்கும் இலங்கையின் கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்டு இலங்கைக்குக் கடன்வழங்க முன்வந்திருப்பதாக கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்த உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பிரதித் தலைவர் ப்ரவுல் பட்டேல் கூறியுள்ளார்.
“இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், எவ்வளவு என்பதைகக் கூறுவது கடினமானது. 10 மில்லியன் அல்லது 15 மில்லியன் டொலர்கள் பற்றி நாங்கள் கதைக்கவில்லை. 100 மில்லியன் டொலர் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் உலக வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், உணவுத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நிதியத்தின் ஊடாக உலக வங்கியே சரியான நடவடிக்கையை எடுத்த முதலாவது அமைப்பு எனக் கூறியுள்ளார்.
“நாங்கள் 50மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளோம். அவை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன” என பட்டேல் குறிப்பிட்டார்.
“இலங்கை போன்ற உணவுத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்குவதற்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுகிறது. சர்வதேச அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கடன்கள் வழங்கப்படும்” என்றார் அவர்.இலங்கையில் வறுமை இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கியின் ஆசிய பிராந்தியத்தின் பிரதித் தலைவர் ப்ரவுல் பட்டேல், மேல்மாகாணத்தில் 2006-2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15.2 ஆகக் காணப்பட்ட வறுமை 7 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கூறினார்.

Friday, October 17, 2008

உலக வங்கி


உலக வங்கி குழுமம், ஐந்து பன்னாட்டு நிருவனங்களை உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். வறுமை குறைப்பு, நாடுகளின் முன்னேற்றம், உறுப்பு நாடுகளில் பன்னாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது ஆகியன உலக வங்கியின் குறிக்கோள்களாகும். உலக வங்கியும் அதன் அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலை நகரான வாஷிங்டன் டி.சி. யில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.

தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் யும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஆம்ப்ஷயர் நகரின், பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் மானிட்டரி மற்றும் ஃபினான்ஷியல் மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இன்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.

உலக வங்கி நிர்வாகம்

இதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம்.


இவற்றையும் பார்க்க
அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை
அனைத்துலக நாணய நிதியம்
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி


உலக வணிக அமைப்பு
உலக வணிக அமைப்பு (ஆங்கிலம்)
Organisation mondiale du commerce (பிரெஞ்சு)
Organización Mundial del Comercio (எசுப்பானியம்)

தோற்றுவிக்கப்பட்ட நாள் 1 ஜனவரி 1995
தலைமை அலுவலகம் ஜெனீவா, சுவிட்சர்லாந்து
அங்கத்துவம் 153 உறுப்பு நாடுகள்
அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானியம் [1]
இயக்குனர் நாயகம் பஸ்கால் லாமி
வரவு-செலவு 180 மில்லியன் சுவிஸ் பிராங்க்குகள் (சுமார். 163 மில்லியன் USD) 2008 இல்.[2]
வேலையாட்கள்Staff 625[3]
இணையத்தளம் www.wto.int
உலக வணிக அமைப்பு (World Trade Organization) என்பது, பன்னாட்டு வணிகத்தை மேற்பார்வை செய்வதற்கும், அதைத் தாராண்மைப் படுத்துவதற்குமாக ஏற்படுத்தபட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இவ்வமைப்பு உருவானது.

உலக வணிக அமைப்பு, நாடுகளிடையே நடைபெறும் வணிக விதிகள் தொடர்பில், ஏறத்தாழ முழு உலகம் தழுவிய நிலையில் செயல்படுகின்றது. இது புதிய வணிக ஒப்பந்தங்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கும் பொறுப்பானது. அத்துடன் பெரும்பாலான உறுப்பு நாடுகளால் கையெழுத்து இடப்பட்டு அவற்றின் நாடாளுமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக வணிக அமைப்பின் ஒப்பந்தங்களை உறுப்பு நாடுகள் பின்பற்றுகின்றனவா என்பதையும் இவ்வமைப்பு கண்காணிக்கிறது.

இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது



அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை

உலக நாடுகள் அமெரிக்காவின் டொலரை நம்பிக்கையின் அடிப்படையில் பணமாக பயன்படுத்துகின்றன. இந்த செயல்ப்பாட்டை அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை (American Dollar System) எனலாம். இந்த நம்பிக்கை ஐக்கிய அமெரிக்காவின் ஆயுத பலத்தையும், தெழில்நுட்ப திறனையும் அடிப்படையாக கொண்டது. இப்படியான ஓழுங்கமைவில் ஒரு நாடு தனக்கு வேண்டிய இறக்குமதிகளை செய்வதற்கு அமெரிக்காவின் டொலர் தேவையாக இருக்கும். கடன், வட்டி, நாட்டுப் பொருளாதார திடநிலையை பேணுவதற்கான சேமைப்பு ஆகியவைக்கும் அமெரிக்க டொலரே தேவை.

அனைத்துலக நாணய நிதியம்


அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஒரு ஐரோப்பியராக இருப்பதும், உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராக இருப்பதும் வழக்கம்.

பொருளடக்கம்
1 அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு
2 இவற்றையும் பார்க்க
3 மேற்கோள்கள்
4 வெளி இணைப்புகள்

அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு
அண்மைக் காலத்தில் (2006, 2007) பல கடன் நாடுகள் அனைத்துலக நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதை தவிர்த்தும், பெற்ற கடனை அடைத்தும் வரவுதால், வருமான அனைத்துலக நாணய நிதியத்தின் வருமானம் குறைந்து, அதன் பலம் சற்று குறுகி வருகின்றது. [1

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஒரு கூட்டுப் பங்குக் கம்பனி ஆகும். 1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக ரீதியான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இக் கம்பனிக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது, ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. 1858 ஆம் ஆண்டில் இது ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியத்துடன் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.


ஆரம்பகாலக் கம்பனியின் கொடி. அக்காலத்தில், சென் ஜார்ஜின் சிலுவை பொறித்த இங்கிலாந்தின் கொடி இடது மேல் மூலையில் காணப்படுகின்றது.
1707 இல் பெரிய பிரித்தானியா உருவாக்கப் பட்ட பின்னர் கம்பனிக் கொடி, கண்டன் கொடியில் (canton flag), யூனியன் ஜாக் கொடியைத் தாங்கியதாக அமைந்தது.
1801 க்குப் பின்னர் கம்பனிக் கொடி பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் சேர்ந்து உருவான ஐக்கிய இராச்சியத்தின் கொடியைத் தாங்கியிருந்தது.பொருளடக்கம் [மறை]
1 நாடுகளின் அரசியலில் கம்பனியின் தாக்கம்
2 வரலாறு
2.1 ஆரம்ப காலம்
2.2 ஆரம்பக் கட்டமைப்பு
2.3 இந்தியாவில் காலூன்றியமை
2.4 விரிவாக்கம்
2.5 முழுமையான தனியுரிமைக்கான பாதை
2.5.1 வணிகத் தனியுரிமை
3 இவற்றையும் பார்க்க



நாடுகளின் அரசியலில் கம்பனியின் தாக்கம்
இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இக் கம்பனி, பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717 இல், வங்காளத்தில், சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றைக் கம்பனி, முகலாயப் பேரரசரடமிருந்து பெற்றுக்கொண்டது. இது, இந்திய வணிகத்தில், கம்பனிக்குத் தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 1757 இல், பிளாசி போரில், சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்தியக் கம்பனியை ஒரு, வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. 1760 ஆம் ஆண்டளவில், பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து, இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர் துரத்தப்பட்டனர்.

பெரிய பிரித்தானியாவிலிருந்து, இந்தியாவுக்குச் செல்லும் பாதைகளிலும், கம்பனி ஆர்வம் காட்டியது. 1620 ஆம் ஆண்டிலேயே, தென்னாபிரிக்காவின், டேபிள் மலைப் (Table Mountain) பகுதிக்கு உரிமை கோரியது. பின்னர், சென் ஹெலனாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்தது. கம்பனி, ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவற்றையும் நிறுவியது. கடற் கொள்ளைகளைத் தடுப்பதற்கு, கப்டன் கிட் (Captain Kidd) என்பவனை அமர்த்தியது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியிலும் ஈடுபட்டது.


வரலாறு

ஆரம்ப காலம்
இக் கம்பனி, கிழக்கிந்தியாவில் வணிகம் செய்யும், இலண்டன் வணிகர்களின் கம்பனி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. இதனை நிறுவிய சிறந்த முயற்சியாளர்களும், செல்வாக்குக் கொண்டவர்களுமான வணிகர் குழுவினர், 15 ஆண்டுகளுக்கு, கிழக்கிந்தியாவில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனியுரிமையை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 72,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களைத் தொடக்க மூலதனமாகக் கொண்டிருந்த இக் கம்பனியில் 125 பங்குதாரர்கள் இருந்தனர். தொடக்கத்தில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் டச்சுக் காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரித்தானியக் கம்பனியால் அசைக்க இயலாத நிலை. கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக் கூட வைத்திருக்க முடியவில்லை. 1608 ல், கம்பனிக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கரையில், வங்காள விரிகுடாவை அண்டி அமைந்திருந்த மசிலிப்பட்டினத்தில் புறக்காவல்தளம் (outpost) ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கம்பனி பெருமளவு இலாபம் ஈட்டத் தொடங்கியது. 1609 இல் முதலாவது ஜேம்ஸ் மன்னன், கம்பனிக்கு வழங்கப்பட்ட வணிக உரிமையை கால வரையறையின்றி நீடித்தான். எனினும், கம்பனி தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டாவிடில், அந்த உரிமம் செல்லுபடியாகாது என்ற ஒரு விதியும் அவ்வுரிமத்திலே சேர்க்கப்பட்டிருந்தது.


ஆரம்பக் கட்டமைப்பு
கம்பனியின் ஆளுநரும், 24 இயக்குனர்களும் கொண்ட இயக்குனர் சபை அதன் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தது. இவர்களை, உரிமையாளர் சபை நியமனம் செய்தது. இதனால், இயக்குனர்சபை, உரிமையாளர் சபைக்குப் பொறுப்புடையதாக இருந்தது. இயக்குனர் சபையின் கீழ் 10 குழுக்கள் இயங்கி வந்தன.

இந்தியாவில் காலூன்றியமை
இந்துப் பெருங்கடல் பகுதியில் கம்பனி வணிகர்களுக்கும், போத்துக்கீச, ஒல்லாந்த வணிகர்களுக்கும் இடையே பகைமை நிலவி வந்தது. 1612 ல், சுவாலிப் போரில், கம்பனி போத்துக்கீசரைத் தோற்கடித்த நிகழ்வு, முகலாயப் பேரரசரான ஜஹாங்கீரிடம், கம்பனிக்குச் சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த கம்பனி, பிரித்தானியா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரபூர்வமான அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து முகலாய அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசைக் கம்பனி கேட்டுக்கொண்டது. 1615 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், சர் தோமஸ் ரோ (Sir Thomas Roe) என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாகக் கம்பனி ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார்.


விரிவாக்கம்
இத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ், கோவா, பம்பாய் (இப்பொழுது மும்பாய்) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரைக், கம்பனி பின்தள்ளியது. கம்பனி, சூரத், மதராஸ்(இப்பொழுது சென்னை) (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில், கம்பனிக்கு இந்தியாவில், பக்டறிகள் (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை, வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டை, சென்னையில் உள்ள சென் ஜார்ஜ் கோட்டை, பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆயின.

கம்பனியின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (indigo), பொட்டாசியம் நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். மலாக்கா நீரிணைப் பகுதிகளில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல், வெள்ளி உலோகத்துக்காகத் தேயிலையை வாங்குவதற்காகச் சீனாவிலுள்ள காண்டனில் புறக் காவல்நிலை ஒன்றையும் கம்பனி நிறுவியது.

1670 ஆம் ஆண்டளவில், இரண்டாவது சார்ள்ஸ் மன்னர், கம்பனிக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும், நாணங்களை வெளியிடவும், கோட்டைகள், [[படை]கள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில், குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், கம்பனிக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும், பிற வல்லரசுகளாலும், பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த கம்பனி தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல், பெஉம்பாலும், அந்நந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளைக் கம்பனி உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில், வலிமை மிக்க படைபலத்துடன், வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச், சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு தனி நாடாகவே செயற்பட்டுவந்தது