பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Tuesday, September 30, 2008

ICT முதலீடும் தனியார்துறை அபிவிருத்தியும்

உள்நாட்டு ICT துறை மற்றும் இலங்கையின் ICT ஏற்றுமதிக் கைத்தொழில் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும் சமாந்தரமான நோக்கங்களை இவ்வேலைத் திட்டம் கொண்டுள்ளது. உள்நாடடுத் துறையைப் பொறுத்த வரை, நாட்டிலுள்ள சகல தனியார் துறை சார்ந்தவர்களிடையே ICT பாவனையை அதிகரிக்க ICTA முயற்சி எடுக்கிறது. ICT உற்பத்திகள், சேவைகள் மற்றும் முதலீடுகளுக்குச் சிறந்ததொரு தெரிவு இடமாக மீண்டும் இலங்கையை இலங்கச் செய்வது அதன் இரண்டாவது நோக்காகும். இலங்கையில் நிலைத்தகவுள்ள பொருளாதார வளர்ச்சியையும் தொழில் உற்பத்தியையும் அடைவதற்காக இவ்விரண்டு நோக்கங்களும் உதவும்.

தூர நோக்கு:
குறிப்பிட்ட உலகச் சந்தைகளுக்கு சிறந்த ICT தீர்வுகளைத் தயாரிப்பதில் வினைத்திறனுடைய அரசாங்க மற்றும் தனியார் துறையொன்றை உறுதிப்படுத்துவதற்காக ICT இனை வெற்றிகரமாகப் பாவிக்கும் நாடாக மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி அத்துடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக வர்த்தகச் செயற்பாட்டு புறவளத் தெரிவு அமைவிடமாக இலங்கையை இலங்கச் செய்வது.

உத்திகள்:


அரசாங்கத்துக்கு ICT தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குவது மூலம் தனியார் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.


உள்நாட்டுக் கைத்தொழிலுக்கு மற்றும் அதன் மூலம் பொதுமக்களுக்கு ஆளுமையை வழங்கி, மேலும் பரவலாக வர்த்தகம் அத்துடன் வணிகத்தில் ICT இனை பாவிப்பது கொண்டு கிடைக்கும் இலாபங்களை அவர்கள் அடைவதற்கு வழிவகுத்தல்.


உலகச் சந்தையில் உள்நாட்டு ICT உற்பத்திகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தல்.


உலகளாவிய சர்வதேச கூட்டுத்தாபனங்கள் தம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான (வெளிநாட்டு நேரடி முதலீடு) கவர்ச்சிமிக்கதொரு அமைவிடமாக இலங்கைக்கு வர்த்தகச் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்தல்.


வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்காகவும் உலகச் சந்தைகளில் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் முக்கியமானதொரு பங்கினைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பதற்காகவும் சிறந்த மத்திகளை நிறுவுதல்.

கருத்திட்டங்கள்:


ICT திறமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்



e-இலங்கை PC கருத்திட்டம்



IT இனால் இயலுமாக்கப்பட்ட சேவைகள் (ITeS)


நோக்கம் :

இலங்கையில் வெற்றிகரமானதொரு ITeS கைத்தொழிலுக்குச் சாதகமானதொரு சூழலை உறுதிப்படுத்தல்.

விளக்கம் :

உட்கட்டமைப்பு வசதி, மனித வளங்கள் மற்றும் பாவிக்கும் பொருட்களின் விலை ஆகியவை ITeS கைத்தொழில் வளர்ச்சிக்கு வசதியளிக்கும் முக்கிய காரணிகள் என இனங்காணப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வசதி மற்றும் பொருட்களின் செலவு தொடர்பான பரவலான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து இக்கருத்திட்டம் செயற்படும். ஆயினும், ஆரம்ப நடவடிக்கையாக வளர்ந்து வரும் இக்கைத்தொழிலுக்கு தரமான ஆளணியினரை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். இது தொடர்பாக, ITeS கைத்தொழில் துறையில் கிடைக்கும் தொழில் வாய்ப்புக்கள் பற்றி பாடசாலை விட்டகழ்வோர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான செறிவுள்ளதொரு அறிவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக்கருத்திட்டத்துக்குச் சமாந்தரமாக, ITeS பயிற்சிக் கருத்திட்டம் ஒன்றுக்கும் ICTA வசதியளிக்கும். ICT மனித வள திறனைக் கட்டியெழுப்பும் ICTA இன் நான்காம் வேலைத்திட்டத்தின் கீழ் இக்கருத்திட்டம் அமைந்துள்ளது.

இலக்குப் பார்த்த குழு :


தமது நடவடிக்கைகளுக்கான புற வளங்களைத தேடும் சர்வதேச கம்பெனிகள்.


பாடசாலை விட்டகழ்வோர்


பகுதி நேர மாணவர்கள்.


பெற்றோர்


ஆசிரியர்கள்

கருத்திட்டப் பெறுபேறுகள்


இக்கைத்தொழிலுக்குச் சேவை வழங்குவதற்கான பெரியதொரு மற்றும் சிறந்த தகைமையுடைய ஆளணி.


அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் தமது புறவள நடவடிக்கைகளை இலங்கையில் நிறுவுதல். கருத்திட்ட நன்னமைகள்


வளர்ச்சி மற்றும் மூலதனத்தை உந்தும் விதத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (எவ்டிஐ) இலங்கைக்கு கிட்டுதல்.


உள்நாட்டுக் கம்பெனிகள் மேலும் இலாபகரமாகச் செயற்படல்.


திறமையுள்ள உள்நாட்டவர்களை இலங்கையில் வைத்திருத்தல் மற்றும் மேலும் அதிக தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல்.


இலங்கை ICT கைத்தொழிலின் வெற்றிவாகை சூடிய கதைகள்
இலங்கையின் ICT கைத்தொழில் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தரத்தை அத்தாட்சிப் படுத்தும் பல விருதுகளை வென்று அண்மைக் காலங்களில் பல இலங்கைக் கம்பெனிகள் உலக அரங்கில் பிரகாசமாகத் தோற்றமளித்துள்ளன. அப்படியான கதைகள் சிலவற்றை இங்கு நாம் தருகிறோம்.
மேலும் வாகிக்க

ICT தனியார் துறையுடன் ஒன்றோடொன்று இணைந்து ICTA செயற்படுகிறது.
சகல துறைகளினதும் பங்களிப்பு இன்றி நாடு முன்னேற முடியாது என்பதை ICTA உறுதியாக நம்புவதோடு, முன்னேற்றத்தில் தனியார் துறை முக்கியமானதொரு பங்காளர் என அது கருதுகிறது. e-ஸ்ரீ லங்கா இனை ICT கைத்தொழிலின் துடிப்பான பங்களிப்புடன் எவ்வாறு எய்தலாம் என்பது பற்றிய அர்த்தமுள்ளதொரு கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்காக, ICT தனியார் துறையுடன் காலாண்டுக் கூட்டங்களை நடாத்துவதற்கு ICTA உறுதி பூண்டுள்ளது.

‘அறிவியல் கண்டுபிடிப்பு,விஞ்ஞான செய்திகள்உலகை அச்சுறுத்தும் ‘க்ளோபல் வார்மிங்

உலகை அச்சுறுத்தும் ‘க்ளோபல் வார்மிங்‘உலகம் இன்று மிரண்டு போய் கொண்டிருப்பது அமெரிக்கா போன்ற நாடுகளின் அணு ஆயுதங்களுக்கோ, அரசுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கோ அல்ல. அதைவிட மோசமான ஆபத்தை விளைவிக்க கூடிய உலகை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் குளோபல் வார்மிங் என்று கூறப்படும் உலகம் வெப்பமயமாதல் என்ற நிகழ்வு தான் உலக மக்களின் வயிற்றில் இன்று புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.உலக அளவில் நாளுக்கு நாள் அரசுகளின் புரிந்துணர்வு அடிப்படையில் திறப்பு விழா கொண்டாடும் தொழிற்சாலைகளாலும், அதிக அளவில் நகர்வலம் வரும் வாகனங்களாலும், உணவு தானியம் படைக்க, நிலத்திற்கு அதிக அளவில் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை படைப்பதாலும், 50 கிராம் எடை கொண்ட பொருளை சமைக்கக்கூடிய 5 கிலோ சுமக்கும் திறனுடைய பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதாலும் புவி இன்று வெப்பம் கூடி எரிமலையாய் எரியத் தொடங்கியுள்ளது.உலகம் வெப்ப மயமானால் என்ன பிரச்சனை? என நீங்கள் கேட்கலாம். உலகம் வெப்பமயமாதலால் சூரிய வெப்பம் உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத்தட்டுபாடு, உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்பு, வறுமை, பருவம் மாறி மழை பெய்தல், வெயில் தாக்கம், பனிமலைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலகம் வெப்பமயமாதல் என்பது அணுகுண்டை விட ஆபத்தானது.புவி வெப்பம் அதிகரித்து வருவது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருவதாக ஆய்வாளர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர். 1975ம் ஆண்டிலிருந்து கடல் மட்டம் உயர்வு அதிக அளவில் உள்ளதாக கூறுகின்றனர்.உலக சராசரி கடல் மட்டம் கடந்த 100 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு ஒன்று முதல் 2 மி.மீட்டர் வரை உயர்ந்து வருவதற்கான ஆதாரத்தை அள்ளி நீட்டுகின்றனர். இந்த நிலை நீடித்தால் 2100ம் ஆண்டு கடல் மட்டம் உயர்வு 18 முதல் 59 சென்டி மீட்டர் வரை இருக்குமென மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.இதற்கு இன்னொரு சான்றாக நிலப்பரப்பில் தற்போது அடிக்கடி அனல் காற்று வீசுவதையும், பனிப்பொழிவு அதிகமாவதையும், பனிபுயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் அடிக்கடி நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும் பெட்ரோலிய பொருட்களின் அதிகளவு பயன்பாடும், தொழில்துறை, வேளாண்துறை, நிலப் பயன்பாடு போன்றவற்றில் மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான செயல்களே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகும்.இந்தியாவை குறித்துப் பார்த்தால் புவி வெப்பம் அடைந்து வருவதால் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளது. இதனால் 2100க்குள் இந்தியாவில் 16 முதல் 17 கோடி மக்கள் இடம் பெயர நேரிடும்.மேற்கு வங்கத்தில் 1 கோடி மக்களும், மும்பை மற்றும் புறநகரில் 12 கோடி மக்களும், தமிழ்நாட்டில் 1 கோடி மக்களும், ஆந்திராவில் 60 லட்சம் மக்களும், குஜராத்தில் 55 லட்சம் மக்களும், ஒரிசாவில் 40 லட்சம் மக்களும், இராஜஸ்தான், கர்நாடகா, வடக்கு ஆந்திரா, தெற்கு பீகார், மராட்டியத்தின் உட்பகுதி என சுமார் 70 லட்சம் மக்களும் இடம் பெயர வேண்டியிருக்கும்.அவ்வாறு இல்லையெனில் உலக நிலபரப்பில் 2.5 சதவீத அளவு மட்டுமே கொண்ட இந்தியா சுமார் 120 முதல் 130 கோடி மக்களை தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்கி காப்பாற்ற வேண்டியிருக்கும்.தட்ப வெப்பநிலை மாற்றம் உலகின் சுற்றுச்சுழலுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் அவையில் 1992ம் ஆண்டில் நடைபெற்ற தட்பவெப்பநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை உலகம் முழுவதுமுள்ள நுகர்வோர் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே வருவதாலும், பல்வேறு ஆதாரங்களிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் அதிகம் உற்பத்தியாவதாலும் தட்ப வெப்ப நிலை செயற்கையாக அதிகரிக்கும் என்பதை ஐ.நா பன்னாட்டுக் குழுவின் ஆய்வை உணர்ந்த அறிவியலாளர்கள் 1996ம் ஆண்டு உறுதி செய்தனர்.1997ம் ஆண்டு பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க செல்வந்த நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் கொடுத்த வாக்குறுதியை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பருவநிலை மாற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளுக்கு செலவிடுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளே நியாயமாக பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.1997ம் ஆண்டு ஐ.நா. கோட்பாடுகளைத் தொடர்ந்து க்யோடோ உடன்பாடு காணப்பட்டது. இதன்படி இணைப்பு 1 நாடுகளான வளர்ந்த நாடுகள் தங்களுடைய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012ம் ஆண்டில் சராசரியாக 5.2 சதவீதம் குறைந்து 1990ம் ஆண்டு நிலவி வந்த நிலைக்கும் குறைவாகக் கொண்டு வர இணங்கின. இந்த மொத்த குறியீடு ஒவ்வொரு நாட்டின் தேசிய இலக்காக மாற்றப்பட்டது.புவி வெப்பமயமாதலால் என்ன பாதிப்பு?புவி வெப்பமயமாதலால் பருவகால மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.வேளாண்மை உற்பத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போதைய பாதிப்பை விட மிகக் கடுமையானப் பாதிப்பிற்குள்ளாகும். அரிசி, பருப்பு, தானிய வகைகளின் விளைச்சல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, சில காலங்களில் அந்தப் பயிர் வகைகளே இல்லாமல் முழுமையாக அழிந்து போகும். இதனால் உலக உணவுப் பாதுகாப்பிற்கு மிகுந்த பின்னடைவு ஏற்படுவதுடன், பெரும்பாலான நாடுகளில் வறுமையும் பட்டினிசாவும் பெருகும்.உலகின் பல்வேறு பாகங்களில் அதிகரித்து வருவது நீர்ப்பற்றாக்குறை. இந்தியாவில் ஓடும் பல நதிகளின் இருப்பிடமாக விளங்கும் இமயமலை, புவி வெப்பமயமாதலால் தொடர்ந்து உருகி வருவதால் ஆறுகள் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது.இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திட நாம் என்ன செய்ய வேண்டும். நம் அன்றாட நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் மாற்றியமைத்தால் மட்டுமே புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். இதுவரை நம் பல செயல்கள் இயற்கைக்கு எதிரானவையே. எனவே தான் இயற்கை நமக்கு எதிராக மாறியுள்ளது.புவியை காக்க இதோ சில வழிகள்:தொழிற்சாலை, வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் கார்பன் மாசுக்களைக் கட்டுபடுத்த மரங்கள் அவசியம். எனவே, உலக அளவில் காடுகள் வளத்தைப் பெருக்குவதோடு 'வீட்டுக்கு 2 மரம் வளர்ப்போம்' என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் புங்கன், காட்டாமணக்கு, ஆமணக்கு போன்றவற்றின் மூலம் கிடைக்கும். பயோ டீசலை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.நாம் அன்றாடம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். அவற்றை குறைக்க சூரிய மின் ஆலையை நிறுவுவதோடு ஒவ்வொரு தனி நபரும் சூரிய ஒளியை பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் பயன்படுத்தும் டியூப் லைட், பல்ப் இனிமேல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சி.எஃப்.எல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.வீடுகளிலும், ஆலைகளிலும் தேவைப்படும் எரிவாயுவிற்கு பதிலாக உயிரி எரிவாயுக்கனைப் பயன்படுத்த வேண்டும்.இவைகளில் மிகவும் முக்கியமானது நிலத்தடி நீர்வளத்தை காக்க வேண்டும். எனவே மழை நீர் சேகரிப்பு, கிணற்றின் ஊற்றுக் கண்களுக்கு போதிய நீர் வரும்படி செய்தல் போன்றவற்றால் எதிர்கால விவசாயத்தை காக்க முடியும் என்பதோடு எதிர்கால நீர்த் தேவையையும் சமாளிக்க முடியும்.சிந்து சமவெளி நாகரிகத்தையும், இன்டஸ்பள்ளத்தாக்கு நாகரிகத்தையும் நாம் அறிய காரணம் அக்கால மனிதர்கள் விட்டு சென்ற அழகிய வேலைபாடுள்ள பானைகளும், ஆயுதங்களும் தான். ஆனால் நமக்கு பிறகு 3000 ஆண்டுகள் கழித்து யாராவது அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் கிடைப்பது வெறும் பாலித்தீன் பைகளாகத் தான் இருக்கும்.ஏனெனில் மிகப்பெரும் கலைகளை போல பாலித்தீன் பைகளும் காலத்தால் அழியாதவை. அதோடு மழை நீரையும் மண்ணுக்குள் போக விடாமல் தடுப்பவை. இவைகளால் நீர், நிலம், காற்று என்ற 3 அடிப்படை கூறுகளுமே மாசுபடுகிறது. எனவே பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை விடுத்து சணல், துணி, காகித பைகளின் பயன்பாட்டைப் பெருக்க வேண்டும்.இவை எல்லாவற்றையும் விட வேளாண்மையை பாதுகாக்க போதுமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வேளாண்மையில் இன்று நாம் அதிகளவில் பயன்படுத்தி வரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விட்டொழித்து இயற்கை உரங்களையும், மூலிகைச் சாறு பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். இதனால் நிலத்தின் வளம் பெருகுவதோடு எதிர்கால வேளாண்மையும் பிழைக்கும்.அவ்வாறில்லாமல் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்ணில் உயிர் வாழும் பல லட்சம், கோடி நுண்ணுயிர்கள் மடிகின்றன. மண்ணும் உயிரிழக்கிறது. இதனால் மண் வேளாண்மைக்கு சிறப்பாக உதவி செய்ய முடிவதில்லை.மேலும் வேளாண்மையில் உதவி செய்யும் புழு, பூச்சிகளின் ஆதிக்கமும், நோய்களின் ஆதிக்கமும் அதிகரிக்கிறது.இதற்கு மேலும் மேலும் உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் வேளாண்மைச் செலவு அதிகரிப்பதோடு, விளைச்சலும் குறைகிறது. இதோடு நின்றுவிடாமல் விளைபொருட்களில் நச்சுக்கலந்தே இருக்கிறது. அதை உண்ணும் நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம். தேவைதானா இது?புவி வெப்பமடைந்து வருவதற்கு இது மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொணடே போகலாம். ஆனால் இங்கே கூறியுள்ள அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே 90 சதவீதம் வரை புவி வெப்பமாதையும் கடல் மட்டம் உயருவதையும் தடுக்க முடியும்.புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பொறுப்பு அரசுகளுக்கு எந்தளவிற்கு உள்ளதோ அதே அளவு பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. நாம் ஒன்று கூடி புவியை காத்தால், புவி நம்மை காக்கும்

Saturday, September 27, 2008

இலங்கை முதலீட்டாளர்கள் இந்தியா செல்ல வீசா கட்டுப்பாடில்லை-இந்தியா




சீபா உடன்படிக்கை மூலம் பரந்தளவிலான பொருளாதார நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர் சந்தோஷ் ஜா, இலங்கை முதலீட்டாளர்களுக்கு இந்தியா வரையறைகள் எதுவுமின்றி வீசாக்களை வழங்கத்தயாராகவிருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.

சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமானால், இருநாடுகளும் சமனான நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் எனக்குறிப்பிட்ட அவர், உடன்படிக்கை தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்;ளார்.
"இந்தியா இலங்கையுடன் வர்த்தக உறவினைக் கொண்டுள்ள பெரிய நாடு மட்டுமல்ல, இலங்கையுடன் சமனான வர்த்தக உறவினைப் பேணும் நாடும் கூட. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையுடன் சமத்துவமான உறவையே இந்தியா பேணி வருகிறது" என்றும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் 5 வீதத்தினால் குறைவடைந்துள்ளது-மத்திய வங்கி


K.S.அனோஜி
நாட்டின் பணவீக்கம் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் 5 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஓகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருட காலத்திற்கும் மேலாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி, உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக, 2008 ஜூலை முதல் இலங்கையில் பணவீக்கம் குறைவடையத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 28.2 வீதமாகக் காணப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண், ஜூலை மாதத்தில் 26.2 வீதமாகக் குறைவடைந்திருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
"சர்வதேச சந்தையில், உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அழுத்தங்கள் குறைவடைந்தமையின் காரணமாகவே, இலங்கையிலும் பணவீக்கம் குறைவடைந்திருக்கிறது" என்றும் மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம்





K.S.அனோஜி
ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையினுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து, அண்மையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதியுடனும், சீன வர்த்தக அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை தான் கவனத்தில் கொள்வதாகவும் சீன ஜனாதிபதி கு ஜிந்தாவோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையின் உற்பத்திக் கொள்ளளவை அதிகரிப்பதற்கு சீனா உதவியளிக்க இணங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சீன வர்த்தக அமைச்சரைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீன தொழில்முயற்சியாளர்களுக்காக மீரிகம ஏற்றுமதி வலயத்தில், விசேட முதலீட்டு வலயம் ஒன்றை ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனா தொடர்ந்தும் நிதியுதவியளிக்கும் என சீன வர்த்தக அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். கொழும்பு-கட்டுநாயக்க அதிவேகப் பாதை, புத்தளம் அனல்மின் நிலையம், ஹம்பாந்தோட்டை எண்ணெய்த் தாங்கி ஆகிய திட்டங்களுக்கு நிதியுதவியளிப்பதையும் சீன வர்த்தக அமைச்சர் இந்த சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன 'எக்சிம்' வங்கியின் தலைவர் லீ ரோகுவைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித்திட்டத்திற்கான நிதியுதவி குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கைத் தாதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2008 இன் முதல் அரையாண்டில் 7.3 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தளர்வான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது-'ஸ்டான்டர்ட் சார்டட்' வங்கி

K.S.அனோஜி
ஏனைய நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் தளர்ச்சியான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றபோதிலும், உள்நாட்டு பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொள்ளும்போது இலங்கையில் அதனை கடைப்பிடிக்க முடியாது என 'ஸ்டான்டர்ட் சார்டட்' வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி க்லைவ் ஹாஸ்வெல் தெரிவித்துள்ளார்.

உலகத் தரங்களை இலங்கை கவனமாக நோக்கவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், வட்டிவீதங்களை அதிகரிக்கும்போது மிகக் கவனமாக நடந்துகொள்வது அவசியம் எனவும், இந்த வருடம் இலங்கையில் வட்டிவீதம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் நிச்சயமாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் உச்சக்கட்டத்தில் இருக்கின்ற நிலையில், வட்டி வீதம் குறைவடைவது சாத்தியமற்றது என்றும் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி க்லைவ் ஹாஸ்வெல் தெரிவித்துள்ளார்.
சமகால உலக பொருளாதார நிலைமைகள் காரணமாக, உலகிலுள்ள பாரிய சர்வதேச வங்கிகள் கூட கடுமையான அழுத்தங்களைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது பணவீக்கமும், வட்டி வீதமும் அதிகரிப்பதானது தவிர்க்கமுடியாதது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக பொருளாதார வளர்ச்சி 2009 இல் 1-1.5 வீதத்தினால் வீழ்ச்சியடையும்-ஐ.நா



உலக பொருளாதார வளர்ச்சி 2009 ஆம் ஆண்டில், 1-1.5 வீதத்தினால் வீழ்ச்சியடையும் எனவும், இது 2008 ஆம் ஆண்டில் எதிர்ப்பார்க்கப்பட்ட 2.9 வீத வளர்ச்சியின் அரைவாசியாக இருக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைமைப் பொருளியலாளர் ஹெய்னர் ப்ளாஸ்பெக் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக, ஏற்கனவே உலகளாவிய பொருளாதாரம் தட்டுத்தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதிப்பிடப்பட்ட அளவையும் விட அதிகமாக பணவீக்கம் அதிகரித்துச் செல்வதானது இன்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பணவீக்கத்தை எதிர்கொள்ள வட்டி வீதத்தினைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றைக் கட்டப்படுத்த இறுக்கமான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் அபிவிருத்திக் குழுவானது, அபிவிருத்தியடைந்த நாடுகளும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் மேலும் தமது வளர்ச்சி குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்நாடுகளின் மத்திய வங்கிகள் தமக்கிடையில் பொறுப்புணர்வுடன் கூட்டிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அந்தக் குழு வேண்டுகோள்விடுத்துள்ளது

Friday, September 26, 2008

ஜி.எஸ்.பி. பிளஸ் நலன்களை தொடர்ந்தும் தக்கவைப்பது இலங்கைக்கு சாத்தியமா?



ஜி.எஸ்.பி. பிளஸ் நலன்களை தொடர்ந்தும் தக்கவைப்பது இலங்கைக்கு சாத்தியமா? ஜி.எஸ்.பி.பிளஸ் என்பது இலங்கையில் தற்போது பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. ஆகவே, இலங்கைப் பொருளாதாரம் மீதான இதன் பொருளாதாரப் பரிமாணங்களைப் பகுப்பாய்வு செய்வது இங்கு சாலப்பொருத்தமானதாகும். ஜி.எஸ்.பி. என்பதன் விரிவாக்கப்பட்ட வடிவம் விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை (Generalized System of Preferences- GSP) என்பதாகும். சில வேளைகளில் இது தீர்வை விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை (Generalized System of Tariff Preferences) எனவும் அழைக்கப்படுகின்றது. வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மகாநாடு (அங்காட) அமைப்பு ஜி.எஸ்.பி. இனை 1968 இல் சிபார்சு செய்த போதும் ஐரோப்பிய ஒன்றியமே இதனை 1971 இல் முதன்முதலாக அமுல் செய்தது. இம்முறைமையின் கீழ் அபிவிருத்தியடைந்த நாடுகள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் ஏற்றுமதிகளுக்குத் தீர்வைச் சலுகைகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது.
ஜி.எஸ்.பி.பிளஸ் என்பது எளிதில் பாதிப்படையக்கூடியதும் விசேட அபிவிருத்தித் தேவைகளை உடையதுமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய முறைமையாகும். இம்முறைமையின் கீழ் இலங்கை , மொங்கோலியா, பொலிவியா, கொலம்பியா, ஈக்குவடோர் , பெரு, வெனிசுவெலா, கோஸ்ட்ராரிக்கா, எல்சல்வடோர், கௌதமாலா, கொண்டுராஸ், நிக்கரகுவா, பனாமா, மோல்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய பதினைந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது ஒன்றில் தீர்வை ஏதும் செலுத்தாமல் அல்லது குறைந்த தீர்வைகளைச் செலுத்தி ஏற்றுமதிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
இதனால், ஏனைய நாடுகளுடன் வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் போது இந்நாடுகள் சாதகமான நிலையினைக் கொண்டுள்ளன. ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளை ஆசியாவில் இலங்கை மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகள் மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்கு குறிப்பிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் என்பவற்றினால் விதந்துரைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் , நல்லாட்சிச் செயன்முறை மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவை தொடர்பான குடியியல் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம் ,பொருளாதாரம் , சமூகம் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம், அனைத்து வகையான இனப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம் , பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம், சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவாக நடத்துதல் அல்லது தண்டனை என்பவற்றுக்கு எதிரான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம், இனப்படுகொலைகளைத் தடுத்தல் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபடுவோர்களைத் தண்டிப்பதற்கான பொது இணக்க ஒப்பந்தம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம் என்பவற்றை உள்ளடக்கியதாக இருபத்து மூன்று மிக முக்கிய சர்வதேச பொது இணக்க ஒப்பந்தங்களை ஏறுறுக் கொண்டு செயற்றிறனுடன் அமுல்படுத்த வேண்டும் என்பது அத்தியாவசியமானதாகக் கருதப்படுகின்றது.
அவ்வாறு ஏற்று அமுல்படுத்தத் தவறும் பட்சத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளைக் குறிப்பிட்ட நாடுகள் இழக்கும் நிலை ஏற்படலாம் என வலியுறுத்தப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையிலும் ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையினைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நிலவுகின்றன. மேற்கூறிய இருபத்திமூன்று சர்வதேச பொது இணக்க ஒப்பந்தங்களை இலங்கை செயற்படுத்த வேண்டுமானால் இலங்கையின் அரசியல் யாப்பினை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
ஆனால், அரசாங்கம் மேற்குலகில் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவ்வாறு அரசியல் யாப்பினை மாற்ற முடியாது என்றும் நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்த முடியாது எனவும் வாதிடும் அதேவேளை நாட்டின் எதிர்க்கட்சியோ, மனித உரிமை தொடர்பான சர்வதேச நியமங்களுக்கேற்ப இலங்கை செயற்பட வேண்டும் எனவும் ஏற்றுமதியாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வாதிடுகின்றது.
ஜேர்மனுக்கான எதிர்க்கட்சித் தலைவரின் தற்போதைய விஜயமும் ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான ஒரு முயற்சியே என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ் வாய்ந்த மூவரான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் , தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டெஸ்மன் ருடு மற்றும் ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த அடொல்போ பெரெஸ் எஸ்குய்வெல் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் அங்கத்துவம் பெறுவதற்கான முயற்சியில் இலங்கையின் தோல்வியை உறுதிப்படுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டமையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தமையும் மனித உரிமை விவகாரத்தில் இலங்கைக்கு மிகப் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகின்றது.
இது இலங்கை ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையினைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதில் சில இடர்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் கருதப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இவ்வருட இறுதிப்பகுதியுடன் முடிவடைய இருப்பதால் அதனை 2009 ஜனவரியில் தொடங்கி அடுத்த மூன்று வருடங்களுககு நீடிக்கச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் மூலம் இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையே அதிகளவு நன்மையினை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை வருடாந்தம் மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆடை ஏற்றுமதிகள் மூலம் உழைக்கின்றது. தற்போது இலங்கை ஐம்பது வீதமான ஆடைகளை அமெரிக்காவிற்கும் நாற்பத்தைந்து வீதமான ஆடைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐந்து வீதமான ஏற்றுமதிகளை கனடா மற்றும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றது. ஆடைக் கைத்தொழில் துறையானது கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இலங்கை இழக்குமானால் மோசமாகப் பாதிக்கப்படுவது இலங்கையின் ஆடை உற்பத்தித்துறையாகும். முக்கியமாக நேரடியாகத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ள தொழிலாளர்கள் மட்டுமன்றி அத்துறையில் மறைமுகமாகத் தங்கியுள்ள ஏறக்குறைய பன்னிரெண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
ஆடைகள் ஏற்றுமதி செய்யும் போது இலங்கை பல்நார் உடன்படிக்கையின் கீழ் ((Multi Fiber Agreement - MFA) அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் அனுமதிப் பங்குகளை (Quota) 2006 ஆம் ஆண்டுவரை கொண்டிருந்தது. இதன் கீழ் இலங்கை ஏனைய நாடுகளுடன் போட்டியிட வேண்டிய தேவையின்றி தனக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பங்குகளுக்கேற்ப ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. ஆனால் 2006 ஜனவரியில் இம்முறைமை நீக்கப்பட்டமையினால் குறிப்பாக அமெரிக்காவிற்கான ஆடைகள் ஏற்றுமதி வீதமானது அண்மைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. இவ்வீழ்ச்சியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி அதிகரிப்பின் மூலமே இலங்கை ஈடுசெய்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் நீக்கப்படுமானால் அமெரிக்கச் சந்தையில் போட்டியிடுவதைப் போன்று ஐரோப்பிய சந்தையிலும் இலங்கை ஏனைய உலக நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். இது இலங்கைக்கு இலகுவான ஒரு விடயமல்ல. ஏனெனில சீனா, இந்தியா, பங்களாதேஷ், மெக்சிக்கோ, வியட்நாம் போன்ற நாடுகளை இலங்கையுடன் ஒப்பிடும் போது அதிக மனித வளத்தினையும் ஆடை உற்பத்திக்குத் தேவையான அதிக நார்த்தளத்தினையும் (Fiber Base) கொண்டிருப்பதால் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நிலையிலுள்ளன. இதனால் இந்நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிடுவது இலங்கைக்கு ஒரு சவால் நிறைந்த விடயமாகும். குறிப்பாக தொடரும் பெற்றோலிய விலையேற்றம், உயர் பணவீக்கம், உயர் உற்பத்தி செலவு போன்ற காரணிகளால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளை இலங்கை இழக்குமானால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் இன்னும் அதிகரித்து இலங்கை தனது சந்தை வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் எனவும் கருதப்படுகின்றது.
தற்போது இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு வீதமானது 29 காணப்படும் அதேவேளை கைத்தொழில் துறையின் உபபிரிவான ஆடைகள் உற்பத்தியினை உள்ளடக்கியுள்ள தயாரிப்புத் துறையானது 18 வீதமாகக் காணப்படுகின்றது. இலங்கையின் ஏற்றுமதியினைப் பொறுத்த வரையில் கைத்தொழில் துறைசார் ஏற்றுமதிகளின் பங்களிப்பு வீதமானது தற்போது 78 வீதமாகக் காணப்படும் அதேவேளை அத்துறையினுள் உள்ளடங்கும் ஆடைகள் ஏற்றுமதியானது 61 வீதமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என அனைத்துக் கோணங்களிலும் இலங்கைப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறும் ஆடை உற்பத்தித் துறையின் சிறந்த செயலாற்றத்திற்கு ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இலங்கைக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து கிடைப்பதனை உறுதி செய்வது பொருளாதார நோக்கில் மிகவும் அவசிமானதாகும்.

தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மிக மோசமாக அதிகரிப்பு[11 - February 2008]

K.S.அனோஜி
தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மோசமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்தவருடம் சராசரி பணவீக்கம் இலங்கையில் 21.6 சதவீதமாக காணப்பட்ட அதேசமயம் நவம்பரில் 26.2 சதவீதமாக படுமோசமாகஅதிகரித்திருந்தது.கடந்தவருடம் இறுதி காலாண்டில் இந்தோனேசியாவின் பணவீக்கம் 7 சதவீதமாகும். தாய்லாந்தில் 2.6 சதவீதமாகவும் மலேசியாவில் 2 சதவீதமாகவும்சிங்கப்பூரில் 2.9 சதவீதமாகவும் பிலிப்பைன்ஸில் 3 சதவீதமாகவும் இந்தியாவில் 6 சதவீதமாகவும் பங்களாதேஷில் 11.2 சதவீதமாகவும் இருந்ததைசுட்டிக்காட்டியுள்ள லிர்னே ஏசியாவின் பிரதம பொருளியலாளரும் புத்திஜீவியுமான ஹர்ஷா டி சில்வா, "நாங்கள் மக்களை துன்பத்திற்கு இட்டுச்செல்வதில் சம்பியன்களாக இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.இலங்கையின் நிதிக் கொள்கைகள் தொடர்பான தமது பிந்திய கட்டுரையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.அதிக விலை கொடுத்து எண்ணெய் இறக்குமதி செய்வதே பணவீக்கம் அதிகரிப்புக்குக் காரணமென அரசாங்கம் கூறுகின்றது.ஆனால், எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு காரணமாக இருந்தால் எண்ணெய் இறக்குமதி செய்யும் ஏனைய தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும்பணவீக்கம் அதிகரித்து இருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்புகின்றர். பங்களாதேஷை தவிர்த்து ஏனைய நாடுகளில் பணவீக்கம் மிகத் தாழ்ந்தமட்டத்தில் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.பொருத்தமான கொள்கைகளை நடை முறைப்படுத்துவதால் இந்த நாடுகள் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் ஆனால்,இலங்கையில் அந்த நிலைமை இல்லையென்றும் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.பணவீக்கம் மோசமான அளவுக்கு அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தேவையற்றஅபரிமிதமான செலவினமும் வரவு செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடுகட்ட மத்திய வங்கியால் அச்சிடப்படும் பாரிய தொகைபணமுமே காரணமென ஹர்ஷா டி சில்வா கூறுகின்றார்.2007 மே மாதத்திற்கும் செப்டெம்பர் மாதத்திற்கும் இடையில் மத்திய வங்கி 4900 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.கடந்த ஜூலை ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் நாணய இறுக்கத்தை நிறுத்தியமை பணவீக்கம் அதிகரித்ததற்கு பங்களிப்பை செலுத்தியுள்ளதென்று2007 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.அரசாங்கத்தின் நிதித்தேவைகளில் அதிகமானவை மத்திய வங்கி பணத்தை அச்சிடு வதன் மூலமே பூர்த்தி செய்யப்படுவதால் இலங்கையில் பணவீக்கம்அதிகமாக இருப்பதாக எச்.எஸ்.பி.சி.யின் உயர்மட்ட பொருளியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.அதிகளவு பணத்தை வெளியிடுவதை மத்திய வங்கி மறுத்துள்ள போதும் கடந்த அக்டோபரில் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பந்துலகுணவர்த்தன வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பணத்தை அச்சிடும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டதை ஏற்றுக்கொண்டார்.இதனால், மேலதிகமாக பணவீக்கம் ஏற்பட்டதென்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.பணத்தை அச்சிடுவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு தெரிவு இல்லையெனவும் 2007 டிசம்பரில் அமைச்சர் குணவர்த்தன கூறியிருந்தார்.வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணை அண்மையில் அரசாங்கம் மறுசீரமைப்புச் செய்திருந்தது. நடைமுறையிலிருக்கும் சுட்டெண் முறைகாலாவதியானதொன்று என்று அரசு தெரிவித்திருந்தது.புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணின் பிரகாரம் 2007 இல் பணவீக்கம் 20.8 சதவீதமெனவும் 21.6 சதவீதமல்ல எனவும் அரசாங்கம்தெரிவித்திருந்தது.பழைய வாழ்க்கைச்செலவு சுட்டெண் பலவழிகளில் காலத்திற்கு பொருத்தமானதாக இல்லையென்பதை ஏற்றுக்கொள்ளும் பொருளியலாளர்கள்,அதேசமயம், புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணும் யதார்த்தபூர்வமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர். செலவினத்தின் முக்கியவிடயங்கள் இந்தப் புதிய சுட்டெண்ணில் சேர்க்கப்படவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கு ஹர்ஷா டி சில்வா உதாரணமொன்றைக் கூறியுள்ளார். இலங்கையில் சராசரியாக வருமானத்தில் 2.2 சதவீதம் மதுபானம், சிகரெட்டுக்காகசெலவிடப்படுகின்றது. புதிய சுட்டெண்ணில் இது உள்ளடக்கப்படவில்லை என்று ஹர்ஷா டி சில்வா கூறுகிறார்.இத்தொகையானது கல்விக்காக குடும்பமொன்று தனது வருமானத்தில் செலவிடப்படும் தொகைக்கு ஏறக்குறைய சமமானதாகும். கல்விக்காககுடும்பமொன்று சராசரியாக வருமானத்தில் 2.3 சதவீதத்தை செலவிடுகிறது.

யாழ் உதயன் செய்திகள்பொருளாதாரம் போகும் போக்கு

பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் தற்போதைய அரசினால் நாட்டின் பணவீக்கம் எகிறுகின்றது।கடந்த வருடம் சராசரிப் பணவீக்கம் 21.6 வீதமாகும். நவம்பரில் மாத்திரம் அது 26. 2 வீதத்தைத் தொட்டு நின்றதாக அதிர்ச்சித் தகவல்.2008 இல் நாட்டின் பணவீக்கத்தை பத்து முதல் பதினொரு வீதத்துக்குள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதாக மனக்கோட்டை கட்டிய இலங்கைமத்தியவங்கி அந்த நம்பிக்கையை வருடம் பிறந்து ஒன்றரை மாத காலம் முடிவதற்குள்ளேயே கோட்டை விட்டுவிட்டது.இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் பணவீக்கம் 16 முதல் 20 வீதமாக இருக்கும் என்று இப்போதே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அது வந்துவிட்டது. ஆனால் உண்மையில் யதார்த்தத்தில் அந்தப் பெறுபேறு நிச்சயம் இருபது முதல் இருபத்தியைந்து வீதத்தைத் தாண்டும் என்று உறுதிகூறுகின்றன பொருளாதார நிபுணத்துவ வட்டாரங்கள்.இந்தப் பிராந்தியத்தில் தெற்காசிய பிரதேசங்களில் ஆகக் கூடுதலான பண வீக்கத்தை வெளிப்படுத்தும் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும்தேசம் என்ற பெருமையை இலங்கையே தட்டிச் செல்கின்றது.இத்துணை சனத்தொகையையும், பின்தங்கிய கிராமங்களையும் கொண்ட இந்தியா கூட தனது பணவீக்கத்தை 6 வீதத்துக்குள் கட்டுப்படுத்திவைத்திருக்கின்றது.இப்பிரதேசத்தில் இலங்கைக்கு அடுத்து மோசமான பணவீக்க அதிகரிப்பைக் கொண்ட நாடாக பங்களாதேஷ் விளங்குகின்றது. அங்கு கூட பணவீக்கம்11 வீதம்தான். ஆனால் அதன் இரட்டிப்பு மடங்கில் முன்னிலை வகிக்கின்றது இலங்கை. ஒரு புறம் கண், மண் தெரியாமல்யுத்த தீவிரத்துக்கு நாட்டின் பொருளாதார வளத்தைக் கபளீகரம் செய்யும் செயற்பாடுகள்.மறுபுறம், எங்கும் ஊழல், எதிலும் மோசடி, எவற்றிலும் லஞ்சம் என்று அதிகாரத் துஷ்பிரயோகங்கள், குளறுபடித்தனங்கள்.இன்னொரு புறம் தவறான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்ற அவலம். தனிநபர்களின் விருப்பு, வெறுப்புக்காக வகுக்கப்படும்பொருளாதாரக் கொள்கைகள் தீர்க்க தரிசனத்துடனும், யதார்த்தப் புறநிலைகளுக்கு அமைவாகவும் நடைமுறைப்படுத்தப் படுவதேயில்லை.உதாரணத்துக்கு, தேவைப்படும் போதெல்லாம் கணக்கு வழக்கின்றி பணத்தை புது ரூபா நோட்டுக்களை கண் மண் தெரியாமல் அச்சிட்டுத்தள்ளி,அவற்றை சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு விடும் கோமாளித்தனத்தைக் குறிப்பிடலாம்.இவையெல்லாம் சேர்ந்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் மைய நாணையே சிதறடிக்கச் செய்துவிட்டன.வெளிநாட்டு முதலீடுகளை நட்புறவுடன் அரவணைக்கும் போக்கு இல்லாத காரணத்தாலும் அதற்கான அரசியல், களநிலை யதார்த்தங்கள்காணப்படாமையாலும் புதிய முதலீடுகள் இல்லாமற் போகின்றன. பழைய முதலீடுகளும் வாபஸ் பெறப்படும் அலங்கோல நிலைமை."செல்லும் செல்லாததற்கொல்லாம் செட்டியார் பொறுப்பு' என்பது போல உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பாலேயே இங்கு இந்த இக்கட்டுஎன்ற சாக்குப் போக்கு வேறு.இதேபோன்ற சர்வதேச எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் இந்தோனேஷியாவினாலும், தாய்லாந்தினாலும், பிலிப்பைன்ஸினாலும் கூடபணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமானால், அதையே காரணம் காட்டி பணவீக்கத்தை தவிர்க்கமுடியாதது எனக் கொழும்பு அரசுநியாயப்படுத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.நாட்டில் ஒரு பக்கத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு. மறுபக்கத்தில் மின் உற்பத்திக்கான மானியம் வெட்டப்பட்டதால் சராசரி 40 வீத மின் கட்டணஅதிகரிப்பு இன்னும் மூன்று வார காலத்துக்குள் நடைமுறைக்கு வரப்போகின்றது. தவிரவும் அரிசி, மா, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின்விலைகளும் எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டன. போரினால் பொருளாதார அபிவிருத்தி செத்துவிட்டது.இந்தப் பின்னணியில் வருடாந்தப் பணவீக்கம் 25 வீதத்தைத் தாண்டுவது நிச்சயமாகத் தவிர்க்க முடியாத நிதர்சனமாகப் போகின்றது.இதேவேளை, தன்னுடைய போர்வெறிப் போக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தினசரி அறுபது கோடி ரூபாவை யுத்தத்தின் பெயரால்நாசமாக்குகின்றது அரசு. அதாவது ஒவ்வொரு நிமிடத்துக்குச் சராசரி 40 லட்சம் ரூபா வீணே செலவாகிக் கரைந்து கொண்டிருக்கின்றத

இலங்கை மத்திய வங்கி ஆளுனரின் கருத்து

சர்வதேச ரீதியில் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகம். இப்படி மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ரோய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.எனினும் இவ்வருடம் இலங்கை ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுதை அவர் நிராகரித்துள்ளனர். கிழக்கில் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இவ்வருட பொருளாதார வளர்ச்சி ஏழுசத வீதமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள இலங்கை வங்கியின் ஆளுநர், எண்ணெய் விலை, உணவு விலை அதிகரிக்காத பட்சத்தில் உள்நாட்டு யுத்தத்தின் மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்த༢r />?? விட எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தும். விவசாயத்துறை, மீன்பிடித்துறை மூலமும் திருகோணமலையில் அனல் மின் நிலையத்தை ஏற்படுத்துவதன் மூலமும் இது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச ரீதியில் எண்ணெய் விலைகள் குறைவடைந்தால் இலங்கையின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அஜித் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.வருடத்தின் நான்காவது மாதமே தற்போது நடைபெறுகின்றது. எண்ணெய் விலை குறைவடையுமென சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அது இடம்பெற்றால் பணவீக்கத்தைக் குறைக்கலாம். இல்லையேல் நிலைமை கடினமாக விளங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.உணவுப் பொருட்களின் விலைகள் தற்போதைய அளவில் தொடர்ந்தும் காணப்பட்டால் பணவீக்கம் எவ்வாறு காணப்படும் என்பது குறித்து எதுவும் கூற மறுத்துள்ள மத்திய வங்கி ஆளுநர் உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற் பட்ட விடயமாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி நாணய விநியோகம் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயல்கின்றது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையையும் ஓரளவு பாதித்துள்ளது.இலங்கையின் வெளிநாட்டு முதலீடு கடந்த வருடம் மிக உயர்ந்து காணப்பட்டது. யுத்தநிறுத்த உடன்படிக்கை முறிவடைந்தமை மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் குறித்து முதலீட்டாளர்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Thursday, September 25, 2008

இலங்கை கைத் தொழில் சபை

K.S.அனோஜி
இலங்கை கைத்தொழில் சபை‚ 1982ம் ஆண்டு 35ம் இலக்க தேசிய கைத்தொழில் கவுன்சில் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் 1983ம் வருடம் 17ம் திகதி நிறுவப்பட்டது. ஸ்ரீ லங்கா கைத்தொழில் சபையானது ”லக்சல” என நன்கு பிரசித்தி பெற்றிருப்பதோடு கைத்தொழிலாளர்களின் மரபுமுறை திறன்களை பேணிக்காக்கவும் அபிவிருத்தி செய்யவும் கிராமிய கைத்தொழில் மற்றும் சுய தொழில் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாகும். இச்சபையானது கிட்டத்தட்ட 3500 முன்னணி கைத்தொழில் வல்லுனர்களோடும்‚ இலாப நோக்கோடு கிராம குடிசை கைத்தொழில் மட்டத்தில் கைத்தொழிலில் பொருட்களை உற்பத்தி செய்கின்றவர்களோடும் தொடர்புகளை கொண்டுள்ளது. லக்சல ஒன்றுதான் கைத்தொழில் பொருட்களை சந்தைப் படுத்துதலையும‚ ஏற்றுமதி செய்தலையும் அதனை உயர்த்துவதையும் கைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி நல்குவதற்குமான ஏற்பாடுகளை கொண்டுள்ள அரசுரிமை கொண்ட கைத்தொழில் சந்தைப்படுத்தல் நிறுவனமாகும். இச்சபையானது அதன் குறிக்கோள்களை எய்தும் நோக்கோடு 140 பயிற்சி நிலையங்களையும்‚ 10 விற்பனை வினியோக நிலையங்களையும் மற்றும் 11 மாகாண மட்டத்திலான கொள்வனவு நிலையங்களையும் செயற்படுத்தி வருகின்றது.

Wednesday, September 24, 2008

2007ல் இலங்கையில் 124 வெளிநாட்டு தொழ்ற்சாலைகள் முடப்பட்டுள்ளன:

K.S.அனோஜி
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த 124 தொழிற்சாலைகள் கடந்த 2007 ஆம் ஆணடில் மூடப்பட்டது என இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 24 தொழிற்சாலைகள் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது. இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் தலா 500 தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாகவும் இவை மூடப்பட்ட நிலையில் 12 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் முதலீட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கை முதலீட்ச் சபையின் அனுமதியின் கீழ் 2006ஆம் ஆண்டில் ஆயிரத்து 852 தொழிற்சாலைகள் இயங்கின. எனினும் 2007ஆம் ஆண்டில் ஆயிரத்து 788 தொழிற்சாலைகள் மாத்திரமே செயற்பட்டன. 2006ஆம் ஆண்டில் 187 ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கிய போதிலும் 2007ஆம் ஆண்டில் இந்த தொகை 163 வாக குறைவடைந்தது. இதேவேளை 2006ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 91 மில்லியன் ரூபா நேரடி வெளிநாட்டு முதலீகள் மேற்கொள்ளப்பட்டது எனினும் 2007ஆம் ஆண்டு அந்த தொகை 2 ஆயிரத்து 659 மில்லியன் ரூபாவாக குறைவடைந்தது எனவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது

மீண்டும் பணவீக்கம்

மீண்டும் பணவீக்கப் பிரச்சினை இந்தியப் பொருளாதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1960ல் தொடங்கி 2000 - 01ஆம் ஆண்டுவரை 8 முதல் 9 சதவீதமாக இருந்த பணவீக்க அளவு, மத்திய அரசின் விரைவான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 4லிருந்து 5 சதவீதமாகக் குறைந்தது.
தற்போது மிக அதிக அளவிலான பணஅளிப்பு மற்றும் வங்கிக்கடனில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தையின் தொடர்ந்த ஏறுமுகம் மற்றும் அசையா சொத்துகளின் அபரிமித விலைஉயர்வு ஆகியன இதன் விளைவே என்பதில் ஐயமில்லை.
தற்போதைய பணவீக்கப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு, அதாவது நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஒன்று, இந்த பணவீக்க உயர்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது; அடுத்து 9 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காதவண்ணம் பணவீக்கத்தை எங்ஙனம் கட்டுப்படுத்துவது என்பதாகும்.
அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பொதுவாக நான்கு வித நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. அவை
பணக்கொள்கை,
நிதிக்கொள்கை,
வர்த்தக மற்றும்
செலாவணிக் கொள்கை என்பவை ஆகும்.
பணக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் பண அளிப்பையோ அல்லது வட்டி விகிதத்தையோ கட்டுப்படுத்த இயலும்.
நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் தீர்வை தளர்வுகளுக்கு வழிவகுப்பது; வர்த்தகக் கொள்கையின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் தளர்வுக்கு வழிகோலுவது; செலாவணிக் கொள்கையின் மூலம் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தி, இறக்குமதிப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகும்.
பணவீக்கத்திற்குக் காரணமான பணசுழற்சி மற்றும் பண உருவாக்கம், பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்பது பரவலான கருத்து. ஆகவே பணவீக்கப் பிரச்சினையை பணவளர்ச்சியை மட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது வட்டி விகிதத்தின் மூலமோதான் கட்டுப்படுத்த இயலும்.
அண்மையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அதேவேளையில், தற்போதைய பணவீக்கம் சந்தைத் தேவையின் அடிப்படையில் எழுந்த காரணியாக இல்லாமல் சந்தை அளிப்பின் பின்புலத்தால் எழுந்த காரணியாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி பெரிய அளவில் பங்களிப்பது என்பது இயலாத செயலாகும்.
ஆகவே நிதியமைச்சகத்தின் நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
சிமெண்ட், அலுமினியம், ரசாயனப் பொருள்கள் மற்றும் சில குறிப்பிட்ட மூலதனப் பொருள்களின் மீதான சுங்கத் தீர்வையை ஏற்கெனவே கணிசமாகக் குறைத்ததன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் நிதியமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளது ஆரோக்கியமான சமிக்ஞையாகும்.
இதன் மூலம் உயரும் பணவீக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.
இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளால் சில நேரங்களில் பணவீக்கம் காணாமல்போய் பணவாட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இன்றைய அளவில் பணவீக்கம் என்பது உலகளாவிய பிரச்சினை. வளர்ந்த, வளர்ச்சியடைந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் பணக்கொள்கையின் மூலம் பணவீக்கத்தை அணுகும் போக்கு தொடர்ந்து வருகிறது.
அதேவேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்துவது என்ற வழக்கமான நடவடிக்கையைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.
மேலும் வட்டி விகித உயர்வு என்ற நடவடிக்கையைப் பெருமளவு சார்ந்திருப்பது என்பது பொருளாதாரத்தை இறக்கநிலைக்குக் கொண்டு செல்லும் என்ற வாதத்தை இந்தியா கடந்த காலங்களில் நிரூபணமாக்கியுள்ளது.
பொருளாதார உண்மை நிலவரம் பற்றிய முழுமையான தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் இல்லாதது பணக்கொள்கையைக் கொண்டு மட்டும் தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்தியாவின் 10 சதவீத வளர்ச்சி இலக்கு பாதிக்கப்படும் என்ற ஐயத்துக்கும் அடிப்படை இல்லை.
இருப்பினும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, 6 சதவீத பணவீக்கம் என பயணத்தைத் தொடங்கியுள்ள இந்தியா, 10 சதவீத வளர்ச்சி மற்றும் 2 சதவீத பணவீக்கம் என 10 ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் சீனாவிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது.
இது விரிவுரையாளர் திருவள்ளுவரின் கட்டுரையின் ஒரு பகுதி(K.S.அனோஜி)

200 கோடி டொலர்களுக்கும் அதிகமாக இலங்கையின் வர்த்தக நிலுவை அதிகரிப்பு



இலங்கையின் வர்த்தக நிலுவை கடந்த 4 மாதங்களில் 200 கோடி டொலர்களுக்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி மூலம் கிடைக்கும் செலாவணியின் பெரும்பகுதி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதால் வர்த்தக நிலுவை இடைவெளி கடுமையாக அதிகரித்திருக்கிறது.
மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் வர்த்தக நிலுவை அதிகரித்திருப்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையான காலப் பகுதியில் இறக்குமதிச் செலவு 4.53 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இதே காலப் பகுதியில் 3.29 பில்லியன் டொலர்களாக இறக்குமதி செலவினம் இருந்தது. ஏற்றுமதி 2.23 பில்லியன் டொலர்களிலிருந்து 2.48 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வருடத்தின் முதல் 4 மாதங்களிலும் வர்த்தக நிலுவை 92.4 சதவீதமாக விரிவடைந்திருக்கும் அதேவேளை, சென்மதி நிலுவை மேலதிகமாக 320 மில்லியன் டொலர்களாக அதிகரித்திருப்பதாக வங்கி கூறியுள்ளது.
சென்மதி நிலுவைகள் சாதகமான நிலைமையை அடைந்திருப்பது எவ்வாறென்பதை மத்திய வங்கி கூறவில்லை. ஆனால், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமெனவும் அதிகளவான அந்நியச் செலாவணி கிடைத்திருப்பதாகவும் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மேயில் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் தொகை 23.3 சதவீதத்தால் 752.2 மில்லியன் டொலர் அதிகரித்ததாக மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் 1.11 பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்களை இலங்கை கொள்வனவு செய்திருந்தது. கடந்த வருடம் இதே காலப் பகுதியில் 632 மில்லியன் டொலரை எரிபொருள் கொள்வனவுக்காக செலவிட்டிருந்தது. இந்த வருடம் 76.3 சதவீதம் கொள்வனவுக்காக செலுத்தப்பட்ட தொகை அதிகரித்திருக்கிறது.
உலக உணவுப் பொருள் அதிகரிப்பால் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் தருணத்தில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு அதிக அனுகூலம் கிடைத்திருக்கின்றது.

தேசம் கடந்த பன்னாட்டு மூலதனங்கள் தேச எல்லைகளையே அழிக்கின்றன



 .


உலகளவில் மக்கள் கூட்டம் தமது வரலாற்று ரீதியான சுயஅடையாளங்களையே, படிப்படியாக ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களிடம் இழந்து வருகின்றன. மறுபக்கத்தில் உழைப்பு சார்ந்து உருவாகும் மனிதனுக்கேயுரிய சுயமான சிந்தனைத் திறனை, மூலதனம் மலடாக்குகின்றது. சுதந்திரமான ஜனநாயகமான தெரிவுகள் அனைத்தும், உலகளவில் பரந்துபட்ட மக்களுக்கு படிப்படியாக மறுக்கப்படுகின்றது. தேசங்கடந்த அந்நிய முதலீட்டினால், இயற்கையான மனித தேர்வுகள் எல்லாம் பாரிய அளவில் எல்லை கடந்து அழிக்கின்றது.

தேசங்கடந்த அந்நிய முதலீடுகள் தேசிய முதலீட்டை அழிக்கின்ற போது, தேசிய பண்பாடுகள், தேசிய கலாச்சாரங்கள், சுயஅறிவியல் தளங்கள் முற்றாகவே சிதைக்கப்பட்டு மலடாக்கப்படுகின்றது. தேசிய உற்பத்திகள் அழிகின்ற போது, பன்னாட்டு உற்பத்திகளே ஒரேயொரு தெரிவாகி விடுகின்றது. சுதந்திரமான தேசிய தெரிவுகள் எல்லாம் முற்றாக சிதைத்து மலடாக்கப்படுகின்றது.


இதன் விளைவுகள் கற்பனைக்கு உட்பட முடியாத வகையில் மிகப் பிரம்மாண்டமானவை. உதாரணமாக மூன்றாம் உலக நாடுகளின் அந்நிய நேரடி மூலதனத்தின் அளவு 1990இல் 12 சதவீதமாக இருந்தது. இது 1995இல் 38 சதவீதமாகியது. மூன்றாம் உலக நாடுகளின் தேசியம் அன்றாடம் உயிருடன் கொல்லப் படுகின்றது. இதை யாரும் மறுக்க முடியாது. உண்மையில் 1995ஆம் ஆண்டில் மூன்றாம் உலக நாடுகளில், தனியார் மூலதனம் அரசு மூலதனத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக மாறியது. இது ஐந்து வருடத்துக்கு முன்பு அதாவது 1990இல் அரசு மூலதனம் தனியார் மூலதனத்தை விடவும் அதிகமாக இருந்தது. 19901994இல் மொத்த நிதிவரத்தில் 29 சதவீதம் அரசைச் சார்ந்து இருந்தது. இது 1994இல் 6 சதவீதமாகியது. அரசு என்பது தனது அடிப்படையான சமூகக் கட்டுமானத்தை முற்றாக தனியார்துறை சார்ந்ததாக மாறி வந்ததையே இவை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. தேசிய சமூகப் பண்புகள் சிதைவதை இது துரிதமாக்கியது. 1980இல் உலகளவிலான வணிகத்தில் ஈடுபட்ட நாடுகள் எண்ணிக்கை 28 சதவீதமாக இருந்தது. இது 1986இல் 19 சதவீதமாக குறைந்த போனது. தேசங்களின் தேசிய தலைவிதி, சமூகத்துக்கு வெளியில் தனியார் கையில் தாரைவார்க்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் 1990இல் உலக அளவில் மொத்த அந்நிய முதலீடு 15 சதவீதமாகவே இருந்தது. இது 1996இல் 40 சதவீதமாகியது. ஏற்றுமதி முதலீடு 2 சதவீதத்தில் இருந்த 30 சதவீதமாகியது. தனிப்பட்ட முதலீடுகள் 1995இல் 3200 கோடி டாலரில் இருந்து 1996இல் 4600 கோடி டாலராகியது. சமூகக் கூறுகள் அன்றாடம் அரித்து உறிந்தெடுக்கப்பட்டது.


ஒரு நாட்டின் தலைவிதி தனியார் துறை சார்ந்து அந்நியர் வசம் கைமாறிச் செல்வதை இவை எடுத்துக் காட்டுகின்றது. ஒரு தேசத்தின் சுயாதீனம் சிதைந்து, மறுகாலனியாக தேசங்கள் திவாலாவதையே காட்டுகின்றது. இதன் வெட்டுமுகத் தோற்றமோ மேலும் துயரமானவை. உதாரணமாக 1991இல் உலகில் உள்ள 40,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் 2,50,000 உற்பத்தி நிறுவனங்களை விழுங்கி ஏப்பமிட்டது. அதாவது 2.5 லட்சம் தேசிய உற்பத்திகள் மட்டுமின்றி அதன் பன்மைத்துவத்தையும் கூட 40,000 நிறுவனங்கள் விழுங்கி ஏப்பமிட்டன. இதன் மூலமான பண்பாட்டுச் சிதைவுகளை, கலாச்சாரச் சிதைவுகளை, மனித அவலங்களை எந்த ஜனநாயகமும் சரி சுதந்திரமும் கூட ஏறெடுத்து கூடப் பார்த்தில்லை. இந்த பன்னாட்டு நிறுவனங்களின் வரலாறு என்பது பல கட்டங்கள் ஊடாகவே வளர்ச்சியுற்றன. ஆரம்பத்தில் காலனிகள் மூலம் உலகத்தையே அடிமைப்படுத்தி உலகைப் பங்கிட்டு கொள்ளை அடித்தன. முதலாம் உலக யுத்தம் இப்படிக் கொள்ளையடித்த காலனிகளை மறுபங்கீடு செய்யக் கோரியே ஆரம்பமாகியது. இந்த மூலதனத்துக்கான யுத்தத்தின் முன்பு இந்த நாடுகள் இட்டுயிருந்த அந்நிய முதலீடுகளைப் பார்ப்போம்.


1914இல் உலகளாவிய அந்நிய மூலதனங்கள் கோடி டாலரில்


மேற்குஐரோப்பா 9நாடுகள் தென் ஐரோப்பா கிழக்குஐரோப்பா தென்அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா மொத்தம்
இங்கிலாந்து 26.3 825.4 24.8 61.8 368.2 287.3 237.3 1831.1
பிரான்ஸ் 125.5 38.6 133.2 266.3 115.8 83.0 102.3 864.7
ஜெர்மனி 131.0 100 83.5 83.4 90.5 23.8 47.6 559.8
அமெரிக்கா 67.4 90 3 2.9 164.9 24.6 1.3 351.4
7 நாடுகள் 10 10 0 10 20 150 20 220
மொத்தம் 459.2 1117.5 325.5 559.4 839 6 10 466.4 4377

9 நாடுகள் இலங்கை, பர்மா, இந்தோசீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தியா மற்றும் சீனாவாகும்

7 நாடுகள் பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிஸ், ஜப்பான், ரஷ்யா, போர்ச்சுகல், சுவீடன்


ஏகாதிபத்தியம் நேரடிக் காலனிகள் மூலமும், மிகப் பெரிய அந்நிய முதலீட்டின் மூலமும் மிகப் பிரம்மாண்டமான வகையில் கொள்ளையிட்டன. கொள்ளைகளை எடுத்துவரும் வசதிக்காகவே அதிக அந்நிய முதலீட்டை நடத்தினர். அதாவது கொள்ளைகளை எடுத்துவர புகையிரதப் பாதைகளை அமைப்பதில் பெரும் நிதி செலவிடப்பட்டது. 18701913க்கும் இடையில் 1.91 லட்சம் கிலோ மீட்டர் நீளமாக புகையிரதப் பாதைகளை 36 நாடுகளில் ஏகாதிபத்தியம் அமைத்தது. இந்த பாதைகள் ஊடாகத்தான், மூலதனம் ஏகாதிபத்தியத்துக்கு கடத்திச் சென்றனர். இந்த மூலதனங்கள் தான் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் அடித்தளமாகும். அடிமைகளின் உழைப்பையும், சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் உழைப்பையும் சூறையாடி பெரும் மூலதனங்களை திரட்டிக்கொண்டனர். காலனிய மூலதனத்துக்கு முன்பு, கூலிகளற்ற அடிமைகளின் உழைப்பே, மேற்கில் குவிந்த மூலதனத்துக்கு ஆதாரமாகவும் நெம்புகோலாகவும் இருந்தது. உதாரணமாக 14501870க்கும் இடையில் 1.5 கோடி ஆப்பிரிக்க அடிமைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்திச் சென்றனர். இவை பல நாடுகளில் காணப்பட்ட மனித அடிமைகளின் ஒரு பகுதி மட்டும்தான். மனித உழைப்புகள் சூறையாடப்பட்ட வடிவங்கள் பற்பல. அந்நிய மூலதனத்தின் குவியல், மனிதப் புதைகுழிகளின் மேல் கட்டமைக்கப்பட்டவைதான். இது மனிதர்களை புதிதாக மேலும் நவீனமாக அடிமைப்படுத்துவதன் மூலமே, நாகரிகமடை கின்றது. இது சொந்த இனம் மற்றும் நிறத்தையும் கூட விட்டு விடவில்லை.


இந்த நாகரிகமானது மார்க்ஸ் மூலதனத்தில் கூறுவது போல் ஒரு சமூக இயக்கத்தின் மேல் நிகழ்கின்றது. அதை அவர் மார்னிங் ஸ்டார் பத்திரிகையில் இருந்தே எடுத்துக்காட்டுகின்றார். நம் வெள்ளை அடிமைகள் உழைத்துழைத்து சாவுக்குழியில் விழுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் அமைதியாக வாய் பேசாமல் உழைத்து உழன்று நோயுற்றுச் சாகின்றனர். ஏன் இந்த அவலச் சாவுகள் என்றால், நாகரிகமான இந்த மூலதன அமைப்பிற்காகவே. சுதந்திரமாகவும், ஜனநாயகபூர்வமாகவும் உயிர் வாழும் முதலாளியின் ஆன்மா ஈடேற்றத்துக்காகவே. மார்க்ஸ் கூறுவது போல் ஒரு வணிகச் செயலால் மட்டும் ஆதாயம் ஈட்டுதலும் அவனது குறிக்கோள் அல்ல. செல்வத்தின் மீது எல்லையற்ற பேராசை, பரிமாற்ற மதிப்பை நோக்கி வெறியுடன் ஓடுதல். முதலாளிக்கும் கஞ்சனுக்கும் பொதுக் குணங்கள். கஞ்சன் பைத்தியம் பிடித்த முதலாளி. முதலாளியோயெனில் பகுத்தறிவுள்ள கஞ்சன் என்றார். ஜனநாயகம், சுதந்திரம் என்பது பேராசையுடன் கூடிய மூலதனத்தின் சொந்த ஆன்மாவே. இந்த வரையறையில் தான் மூலதனம் உலகெங்கும் சதிராட்டம் போடுகின்றது.


மனித இனத்துக்கே எதிராக ஊடுருவும் அந்நிய மூலதனம், மனித இனத்துக்கு எதிராக கொடூரமாக, எப்படி தேசிய எல்லைகளைக் கடந்து ஊடுருவிப் பாய்கின்றது என்பதை நாம் பார்ப்போம். 2002இல் தேசம் கடந்த அந்நிய ஆக்கிரமிப்பு சார்ந்த முதலீடுகள் அண்ணளவாக 2,00,000 கோடி டாலரைத் தாண்டிச் சென்றது. இவற்றின் மூலம் ஏகாதிபத்தியங்களில் கொழுப்பேறியுள்ள பெரும் பணக்காரக் கும்பல்கள், மனித இனத்துக்கு எதிராக உலகைச் சூறையாடி செல்வக் கொழுப்பில் மிதந்தனர். 2001ஐ விட 2002ஆம் ஆண்டு செழிப்பான ஆண்டாகவே திகழ்ந்தது. 2000உடன் ஒப்பிடும் போது, 2001இல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தத்துக்கு அந்நிய முதலீட்டில் ஏற்பட்ட நெருக்கடியும் ஒரு காரணமாகும். 2001இல் உலகளவில் அந்நிய முதலீடு 2000டன் ஒப்பிடும் போது, 51 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது. இது 2001க்கு முந்திய 10 வருடத்தில் முதல் தடவையாக நடந்தது. இப்படி ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, கடந்த 30 வருடத்தில் கூட நடக்கவில்லை. 2000ஆம் ஆண்டில் அந்நிய முதலீடு 1,50,000 கோடி டாலர் தாண்டிச் சென்றது. இது 2001இல் 73,500 கோடி டாலராகக் குறைந்த போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சரிவால் ஏற்பட்ட விளைவை நாம் மேல் உள்ள அத்தியாயங்களில் பார்த்தோம். உண்மையில் 2001இல் ஏழை மக்கள் பெரும் பணக்காரக் கும்பலுக்கு எதிராக, தங்கள் மூச்சுக்களை கொஞ்சம் தக்கவைக்க முடிந்தது அவ்வளவே. ஆனால் 2002இல் மீண்டும் அந்நிய முதலீட்டை வேகப்படுத்திய தேசங்கடந்த பன்னாட்டு மூலதனங்கள், உலகை அடிமைப்படுத்துவதில் எகிறிக் குதிக்கின்றன.


2002இல் 65,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள், உலகளவில் 8.5 லட்சம் அந்நிய முதலீட்டை நடத்தியது. இவற்றில் மூன்றில் ஒன்று மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களாகும். இவை மூன்றில் ஒரு பகுதி உலக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 2001இல் அந்நிய முதலீடுகள் வழங்கிய மொத்த வேலை வாய்ப்பு உலகளவில் 5.4 கோடியாகும். ஆனால் மறுபக்கத்தில் தேசிய உற்பத்திகள் அழிக்கப்படும்போது, கோடிக்கணக்கான மக்கள் வேலையை இழந்து விடுகின்றனர். அத்துடன் இன்று தேசிய முதலீடுகள் எதுவும் செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் அந்நிய முதலீடுகள் மட்டுமே ஒரேயொரு முதலீடாகியுள்ளது.


பயன்பாட்டுப் பொருட்கள் கூட பெருமளவில் அந்நிய முதலீட்டு உற்பத்தியாகவே காணப்படுகின்றது. 1995இல் உலகில் 37,000 பன்னாட்டு நிறுவனங்கள் இருந்தன. இதில் முதல் 100 நிறுவனங்கள் 3,40,000 கோடி டாலர் சொத்தை வைத்திருந்தது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் 2 லட்சம் பொருட்களை உற்பத்தி செய்தது. அதே நேரம் 15 கோடி மக்களுக்கே வேலை வழங்கியது. 1993இல் 5,50,000 கோடி டாலர் பெறுமதியான வர்த்தகத்தை உலகளவில் கட்டுப்படுத்தியது. உலகளவில் அந்நிய முதலீடுகளின் நிரந்தர இருப்பு 1990இல் 1,70,000 கோடி டாலராக இருந்தது. இது 2001இல் 6,60,000 கோடி டாலராகியது. இது 2002இல் 15,00,000 கோடி ஈரோவாகியது. 1990உடன் 2002யை ஒப்பிடும் போது அந்நிய முதலீட்டின் நிரந்தர இருப்பு 9 மடங்காகியுள்ளது. உலகம் படிப்படியாகவே சில பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தாக மாறி வருவதையே இது எடுத்துக் காட்டுகின்றது.


2000 ஆண்டு அந்நிய முதலீடு 1,50,000 கோடி டாலராக இருந்தது. 60,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் 8.2 லட்சம் அந்நிய முதலீட்டை மூன்றாம் உலக நாடுகளில் நடத்தியது. இன்று தேசங்களில் முதலீடு என்பது, அந்நிய முதலீடு மட்டும் தான். 54 நாடுகளில் 1,000 அந்நிய பொருட்கள் சார்ந்த உற்பத்தியின் பெறுமதி மட்டும், 6,00,000 கோடி டாலராக இருந்தது. மொத்த அந்நிய முதலீட்டில் நாலில் மூன்றை, முன்னேறிய மேற்கு நாடுகள் கட்டுப்படுத்தின. 2000ஆம் ஆண்டில் மேற்கு உலகைச் சூறையாடிய அந்நிய முதலீட்டின் அளவு 21 சதவீதத்தால் அதிகரித்த போது, இதன் தொகை 1,00,000 கோடி டாலராகியது.


இப்படி உலக மக்களையே வரைமுறையின்றிச் சூறையாடும் அந்நிய முதலீட்டின் அளவு, மறுபக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் சர்வதேச நெருக்கடியை கூர்மையடைய வைக்கின்றது. உலகச் சந்தையை கைப்பற்றும் ஏகாதிபத்திய போட்டியில் நாள் தோறும், ஒவ்வொரு வினாடியும் ஒரு யுத்தமாகவே தொடர்கின்றது. ஒன்றையொன்று அழிப்பது முதல், தேச எல்லை கடந்த சூறையாடலில் கடுமையாகப் போரிடுகின்றன. முதலீட்டின் அளவு சூறையாடும் அளவைத் தீர்மானிப்பதுடன், அவர்களுக்கு இடையிலான வெற்றி தோல்விகளை வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நிர்ணயம் செய்கின்றது. இந்த வகையில் அந்நிய முதலீடுகளின் அளவுகளைக் குறிப்பாகப் பார்ப்போம்.


அந்நிய முதலீடுகளைச் செய்வோர் யார் எனப் பார்ப்போம். அந்நிய முதலீட்டை 2001இல் அதிகமிட்ட ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்


முன்னேறியநாடுகள் 1996 1997 1998 1999 2000 2001
அமெரிக்கா 8897.8 10339.8 17443.4 28337.6 30091.2 12443.5
பிரிட்டன் 2578 3322.9 7432.4 8797.3 11655.2 5379.9
பிரான்ஸ் 2197 2317.4 3098.4 4707.0 4293.0 5262.3
பெல்ஜியம்,லுக்கசம்பேர்க் 1406 1199.8 2269.1 13305.9 24556.1 5099.6
நெதர்லாந்து 1500 11132 3696.4 4128.9 5245.3 5047.1
ஜெர்மனி 640 1224.4 2459.3 5475.4 19512.2 3183.3
கனடா * 1152.7 2280.9 2443.5 6661.7 2746.5
ஸ்பெயின் * 769.7 1179.7 1575.8 3752.3 2178.1
இத்தாலி * 370.0 263.5 691.1 1337.7 1487.3
சுவீடன் 549 1096.8 1956.4 6085.0 2336.7 1273.4
ஜப்பான் 20 320 326 1231 * *
ரசியா 247 663 276 289 * *
* தெரியாது


அந்நிய முதலீட்டை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் 2000, 2001இல் அதிகமிட்டன. சில விதிவிலக்குகள் இருந்த போது நிலைமை அமெரிக்கா சார்பு நிலையில் காணப்பட்டது. ஆனால் இதற்குப் பிந்திய காலத்தில் நிலைமை முற்றிலும் நேரெதிராக மாறியது. இதை பின்னால் விரிவாகப் பார்க்கவுள்ளோம். அந்நிய முதலீடுகள் எந்த நாட்டில் அதிகமிடப்பட்டது என்பதைப் பார்ப்போம்.


அந்நிய முதலீட்டை 2001இல் அதிகமிட்ட மூன்றாம் உலக நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்


வளரும் நாடுகள் 1997 1998 1999 2000 2001
சீனா 4423.7 4375.1 4031.9 4077.2 4684.6
மெக்சிக்கோ 1404.4 1193.3 1253.4 1470.6 2473.1
ஹாங்காங் (சீனா) 1136.8 1477.0 2459.6 6193.8 2283.4
பிரேசில் 1899.3 2885.6 2857.8 3277.9 2245.7
பெமூட்டாஸ் 292.8 539.9 947.0 1098.0 985.9
போலந்து 490.8 636.5 727.0 934.2 883.0
சிங்கப்பூர் 1074.6 638.9 1180.3 540.7 860.9
சவுதி அரேபியா 381.7 56.1 150.2 88.8 665.3
சிலி 521.9 463.8 922.1 367.4 550.8
செக்குடியரசு 130.0 371.8 632.4 498.6 491.6


உலகமயமாதல் தனது விரிவான ஆக்கிரமிப்பை உலகளவில் தொடங்கியவுடன், பெருமெடுப்பில் அந்நிய மூலதனத்தை சீனாவில்தான் இட்டன. இதில் ஹங்காங் உள்ளடங்கும் போது, மிகப் பிரமாண்டமான ஒன்றாக மாறிவிடுகின்றது. எந்தளவுக்கு நாடுகளின் சுயாதீனம் இழக்கப்படுகின்றதோ, அந்தளவுக்கு அந்நிய முதலீடுகள் அதிகரிக்கின்றது. இதில் சீனா மட்டுமே விதிவிலக்காக உள்ளது. சீனா விதிவிலக்காக இருப்பதற்குக் காரணம், அதிக லாப வீதத்தை மூலதனத்தக்கு பெற்றுத் தருவதால் மூலதனம் வரைமுறையின்றி ஊடுருவிப் பாய்கின்றது. அதே தளத்தில சீன மூலதனமும் சுயதீனமாகச் செயலாற்றத் தொடங்குகின்றது.


எல்லை கடந்த அந்நிய முதலீடுகள் ஏகாதிபத்தியம் சார்ந்து இருப்பதுடன், அவை விரல்விட்டு எண்ணக் கூடிய சில நாடுகளைச் சார்ந்து இருக்கின்றது. உலகம் ஒரு சில நாடுகளுக்கு அடிமையாவதையே இவை எடுத்துக்காட்டுகின்றது. அதிலும் ஏகாதிபத்திய அரசுகளின் மூலதனத்துக்கு வெளியில், பெருமளவில் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களினால் அந்நிய முதலீடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றது. இங்கு அந்நிய ஏகாதிபத்திய அரசு மூலதனங்களின் அளவு குறைக்கப்பட்டு, தேசங்கடந்த பன்னாட்டு மூலதனங்கள் பெருகிவருவது உலகமயமாதலின் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்.


மூன்றாம் உலக நாடுகள் சார்ந்தும் சில அந்நிய முதலீடுகள் நடக்கின்றன. இதில் சில விதிவிலக்குடன் சீன மூலதனம் பெருமெடுப்பில் நிகழ்கின்றது. இது தவிர்ந்த மூன்றாம் உலக நாடுகள் சாந்த முதலீடுகள் என்பது, தேசிய எல்லைக்குள் உருவான சில தரகு முதலாளிகள், தாம் சூறையாடிய பெருந்தொகை மூலதனத்தை நாட்டுக்கு வெளியில் கடத்திச் செல்லுவதையே இது குறிக்கின்றது. இவை ஏகாதிபத்திய நாடுகளில் பொதுவாக போடப்படுகின்றது. இந்த முதலீடுகள் அல்லது நிதி மூலதனங்கள் எப்போதும் எடுத்துச் சென்ற தனிப்பட்ட நபரின் குடியுரிமையை அடிப்படையாக கொண்டு, நாட்டின் பெயரால் வரையறுக்கப் படுகின்றது. உண்மையில் இந்த மூலதனம் நாட்டின் எல்லையைக் கடந்து வெளியேறுகின்றதேயொழிய, குறித்த மூன்றாம் உலக நாட்டின் அந்நிய முதலீடாக இருப்பதில்லை. அரசியல் ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி எந்த விதமான தாக்கத்தையும் சொந்த நாட்டுக்கு சார்பாக செயல்படுவதில்லை.


இது ஏகாதிபத்திய நாட்டுக்கு சார்பாக, சொந்த நாட்டுக்கு எதிராகவே எப்போதும் செயல்படுகின்றது. இந்த மூலதனத்தை நாட்டுக்கு வெளியில் கடத்திச் செல்லும் மூன்றாம் உலக கொள்ளைக்காரர்கள், தமது குடியுரிமையை மாற்றிக் கொள்வதன் மூலம், ஒரே நாளில் அந்த சொத்துக்கள் ஏகாதிபத்தியம் சார்ந்து விடுகின்றது. மூலதனத்தை அமெரிக்காவுக்குள் கடத்தி வரும் நபருக்கு விசேட குடியுரிமை சட்டத்தின் கீழ் விசேட அமெரிக்கப் குடியுரிமை வழங்கப்படுகின்றது. வருடாந்தரம் பெருந்தொகையானோர் இப்படி அமெரிக்காவுக்குள் மூலதனத்தைக் கடத்திச் செல்கின்றனர். உலகில் 100 கோடிக்கு அதிகமான சொத்துக்களை வைத்திருந்த பல மெக்சிகர்கள் ஒரே நாளில் அமெரிக்கராகிவிட்டனர். இது பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் பெயரால் அடையாளம் காணப்படும் பெரும் மூலதனத்துக்கு, நாள்தோறும் நடக்கின்றது. இது சீனா மூலதனத்துக்கு மட்டும் விதிவிலக்காக உள்ளது. சீனா ஒரு ஏகாதிபத்தியமாக தன்னை மாற்றி அமைத்து வருகின்றது. உலக மூலதனத்தில் உயர்ந்த லாபவெறி வக்கரிக்கும் போது, சீனா ஏகாதிபத்தியமயமாதல் துரிதமாகி வருகின்றது.


அந்நிய முதலீடு சார்ந்த உலக ஆதிக்கம் ஏகாதிபத்தியம் சார்ந்தும், அதேநேரம் கடுமையான ஏகாதிபத்திய முரண்பாட்டையும் கொண்டுள்ளது. இங்கு உலகமயமாக்கலில் ஏகாதிபத்திய அரசுகள் இடும் அந்நிய முதலீடுகள் குறைந்து, ஏகாதிபத்தியம் சார்ந்த பன்னாட்டு தனியார் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. ஏகாதிபத்திய அரசு சார்ந்த முதலீடுகளும் கணிசமான பெரும் தொகையாகவே இருக்கின்றது. அதேநேரம் ஏகாதிபத்திய தேசிய ஆதிக்கம் முதன்மை பெற்ற உலகளாவிய ஒழுங்கு காணப்படுகின்றது. ஏகாதிபத்திய அரசு மூலதனத்தை உள்நாட்டிலும் அந்நிய நாட்டிலும் தனியார் மயமாக்கும் போக்கில், தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய உணர்வுடன் அக்கம்பக்கமாக ஒன்றிணைந்த ஏகாதிபத்திய ஆதிக்கப் போக்கு, ஏகாதிபத்திய முரண்பாட்டை ஆணையில் வைக்கின்றது. அந்நிய முதலீட்டில் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு இதில் முக்கியமானதும், ஏகாதிபத்திய அரசுக்கு நிகரான ஒரு பாத்திரத்தை வகிக்கின்றது.


1993இல் வெளிநாட்டு முதலீட்டை எடுப்பின், உலகளவிலான மொத்த முதலீட்டில் அரைவாசியை, ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனங்களே முதலிட்டன. உலகளவில் தேசிய அரசுகள், சுதந்திரமான மக்கள் கூட்டம், சுதந்திரமான தெரிவுகள் எப்படி பந்தாடப்படுகின்றது என்பதை இந்த முதலீடு எடுத்துக் காட்டுகின்றது. ஒருசதவீதமான முதலீட்டாளனின் பண்பாட்டு மற்றும் அவனின் நலன்களை உறுதி செய்வதை அடிப்படையாக கொண்டே, 50 சதவீதமான முதலீடுகள் உலகைச் சூறையாடியது. 50 சதவீதமான புதிய முதலீடு ஏற்படுத்திய உற்பத்தி தவிர்க்க முடியாமல், ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனத்தின் தெரிவையே சமூகத் தெரிவாக்கியது. உலகமயமாதல், வரையறைக்கு உட்பட்ட ஒரு சில நிறுவனங்களின் தெரிவையே மனித சமூகத்துக்கு ஏற்படுத்துகின்றது. இது மனித குலத்தின் உழைப்பு சார்ந்த இயற்கை பரிணாமத்துக்கே திட்டவட்டமாகவே எதிரானது. இதற்குள் தான் மனிதனின் சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் வாய்கிழிய பிதற்றிப் பீற்றப்படுகின்றது.


1993இல் உலகளாவிய முதலீட்டில் 50 சதவீதத்தை ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனங்களேயிட்டது என்றால், பரந்துபட்ட மக்களின் வாழ்வியல் இருப்பின் கொடூரத்தை நாம் புரிந்துகொள்ள எதுவும் நம்மைத் தடுப்பதில்லை. உண்மையில் முதலீட்டின் அளவு அந்நியனின் கைக்கும், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில நிறுவனங்களுக்கும் மாறிவரும் அளவு அதிகரிக்க, தேசிய முதலீடுகள் குறைகின்றது. இதன் மூலம் அந்நிய முதலீடு நவீனத் தொழில்நுட்பத்தின் துணையுடன் வேலை வாய்ப்பை இல்லாததாக்குகின்றது. மறுபக்கத்தில் தேசிய முதலீடு குறையும் போது, வேலையின்மை பெருகுவதை தாண்டி எதுவும் உலகில் நடப்பதில்லை. ஒரு நாட்டின் வறுமை, வேலையின்மை, சமூக சீரழிவுகள் அனைத்தும் முதலீட்டின் நோக்கில் இருந்தே தொடங்குகின்றது. உலக உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியவர்கள், உழைக்கும் ஆற்றல் உள்ள நூற்றுக்கு ஒருவனுக்குக் கூட வேலை வழங்கத் தயாரற்ற ஒன்றாகவே உலகமயமாதல் உள்ளது. அதாவது உழைக்கும் ஆற்றல் உள்ள 200 பேரில் ஒருவனுக்கே வேலை வழங்குகின்றது. மிகுதியாக உள்ள 199 உழைக்கும் மக்களுக்கு, மற்றைய உற்பத்தியாக விடப்பட்டு இருந்த 75 சதவீதமான துறையே வழங்கியது.


ஆனால் உலகளாவிய உலகமயமாதல் கொள்கை தேசிய உற்பத்திகளை அழித்து விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக ஒப்படைப்பதை அடிப்படையாகக் கொண்டது. எந்த சுதந்திரமான ஜனநாயகமான அரசும், இதைத்தான் தனது கொள்கையாக்கி உலகமயமாக்குகின்றது. இந்த வகையில் உலக முதலீட்டில் 50 சதவீதத்தை ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் நிலைக்கு 1993லேயே உலகம் தரம் தாழ்ந்தது. சுற்றிவளைத்து ஒட்டு மொத்தமாக பார்த்தால், 1982இல் உலக உற்பத்தியில் 30 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 70 சதவீதத்தையும், முதலீட்டில் 80 சதவீதத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்தின. 1992இல் 90 சதவீதமான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் ஏகாதிபத்திய நாடுகளிலேயே காணப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி என்பன வெளிநாட்டு முதலீட்டில் 79 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இங்கு முதலீடுகள் என்பது நேரடி மற்றும் மறைமுக வழிகளில் விரிவாகி வருகின்றது. தேசிய அரசுகளின் முதலீடுகள் கூட, இன்று பன்னாட்டு நலனுக்கு இசைவானதாக மாற்றப்படுகின்றது. இதை நோக்கி கடன்கள் நிபந்தனையுடன் வழங்கப்படுகின்றது. இம்முதலீடுகளை நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் செய்யாவிட்டாலும், பன்னாட்டு நிறுவனமே லாபத்தை முழுமையாக அடைகின்றது. பொருளாதார ரீதியாகவும், மறுபக்கத்தில் மூலதனத்துக்கான வட்டியை அறவிட்டு சூறையாடும் போது இரட்டைக் கொள்ளையே அரங்கேறுகின்றது.


உலகில் எதைத் திட்டமிட்டாலும் அதை பன்னாட்டு நிறுவனங்களே திட்டமிடுகின்றன. தேசிய அரசுகள் வெறும் வெற்றுப் பொம்மைகள்தான். மக்கள் சுதந்திரமாக வாக்குப் போட்டு தம்மை ஆள்வோரைத் தெரிவு செய்தனர் என்பது, இந்த முறுக்கி விட்ட (கீ கொடுத்த) பொம்மைகளுக்குத் தான். மக்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்த அரசுகள் என எதுவும் உலகில் இருப்பதில்லை. இதையே இன்றைய முதலீடுகள் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.


உலகம் எப்படி அடிமையாகி விடுகின்றது என்பதை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிய மொத்த முதலீட்டு இருப்பும், அவை எத்தனை முதலீடுகளில் செயல்படுகின்றது என்பது, எடுப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது.



1.எத்தனை முதலீடுகளில்

2.மொத்த முதலீடு (நிரந்தர இருப்பு) கோடி ஈரோ

3. எத்தனை முதலீடுகளில்

4.மொத்த முதலீடு (நிரந்தர இருப்பு) கோடி ஈரோ


1999 2000
ஐரோப்பா 21,835 3,22,300 25,559 3,55,300
அமெரிக்கா 7,791 6,81,500 8,172 7,48,500
ஜப்பான் 3,444 1,37,200 2,793 1,73,000


உலகெங்கும் உற்பத்தியை ஒரு சில நிறுவனங்களே திட்டமிடும் நிலைக்கு, உலகப் பொருளாதாரம் தரம்தாழ்ந்து வருவதையே இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இந்த நிறுவனங்கள் அதிக லாபம் தருவன என எதைக் கருதுகின்றதோ, அவைகளையே மனிதனின் தேவையாக மாற்றுகின்றனர். எவை எல்லாம் அதிக லாபத்தைத் தரமுடியாதவை என்று கருதுகின்றதோ அவை அழிக்கப்படுகின்றது. இது தேசிய உற்பத்தியிலும் மட்டுமின்றி, லாபத்தைப் பெறமுடியாத ஏழை மக்களையும் இட்டு ஒரேவிதமான கொள்கையைத் தான் கையாளுகின்றது. இதனடிப்படையில் பன்னாட்டு மூலதனம், ஒரேவிதமான முதலீட்டை உலகளவில் நடத்துவதில்லை. மாறாக இருப்பதையும் அழிப்பதில் தான், லாபம் அதிகரிக்கின்றது என்ற பாசிச தத்துவத்துக்கு இணங்கவே அழித்தொழிக்கின்றனர். இங்கு இருப்பதை என்பது பரந்து காணப்படும் பன்மையான உற்பத்திகளையும், உற்பத்தி முறைமைகளையும் அழிக்கப்படுகின்றது. உண்மையில் மனித இனத்தை, பண்ணையில் அடைத்து வளர்க்கும் மந்தைக்குரிய நிலைக்கு மூலதனம் அடிமைப்படுத்தி வருகின்றது. அதாவது வளர்ப்புப் பண்ணைகளில் எப்படி வளர்ப்பு மிருங்களுக்கு உணவிடப்படுகின்றதோ, அப்படி பன்னாட்டு நிறுவனங்கள் மனிதனின் நுகர்வை வரையறுக்கின்றது. இங்கு தெரிவுகள் முதல் அனைத்துவிதமான மனித செயற்பாடு களும், பன்னாட்டு நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றதோ, அதற்குள்தான் அனைத்தும். இந்த அடிமைத்தனம் உலகமயமாதலின் சிறப்பான எடுப்பான ஒரு நிலையாகும். இதுவே உலகமயமாதலின் அடிப்படையான தத்துவமும் கூட.


இந்த அடிமைத்தனம் ஒரு சில நாடுகளின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. அடக்கியாளும் ஒரு மக்கள் பிரிவின் வெற்றிகரமான ஒரு உலகம் என்ற பாசிச கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனடிப்படையில் உலகில் அந்நிய முதலீடுகள் விரிந்த தளத்தில் உலக மக்களிள் வாழ்வாதாரங்களின் மேலாகப் பாய்கின்றது. இந்த முதலீடுகள் அந்நிய நாடுகளில் ஒரு நிரந்தரமான அடிமைத்தனத்தை உருவாக்கும் அசையா மூலதனமாக மாறிவிடுகின்றன.


இந்த வகையில் அந்நிய முதலீடுகள் உலக மக்களை அடிமைப்படுத்த எங்கே இடப்படுகின்றது என்று பார்ப்போம். அந்நிய முதலீடு கோடி டாலரில்


1998 1999 2000 2001
உலகம் 69,446 1,08,826 1,49,193 73,514
ஏகாதிபத்திய நாடுகள் 48,424 83,776 1,22,747 50,314
மூன்றாம் உலக நாடுகள் 18,761 22,514 23,789 20,480


அந்நிய முதலீடுகள் ஏழை நாடு முதல் பணக்கார நாடுகள் வரை விரவிப் பாய்கின்றது. மூலதனம் குறித்த ஒரு பகுதியை மட்டும் குறிப்பாகச் சுரண்டுவதில்லை. உலகெங்கும் விரிந்த தளத்தில் சுரண்டுவதுடன், அதனடிப்படையில் உலகையே தனக்குக் கீழ் அடிமையாக்க முனைகின்றது. இதனடிப்படையில் மூலதனம் ஒன்றையொன்று ஏறிமிதித்து மேலேறவும் முயலுகின்றது. மறுதளத்தில் அதிக அந்நிய முதலீடு டாலரின் அடிப்படையில் மேற்கில் இடப்படும் நிலைமை என்பது, எந்தவிதத்திலும், ஏழை நாடுகளின் மேலான ஆக்கிரமிப்பை குறைத்ததாக புள்ளி விபரங்களை முன்வைத்து மதிப்பிட்டுக் காட்டமுடியாது. இப்படி ஒரு கோட்பாட்டு திரிபை, உலகமயமாதலை ஆதரிப்போர் சிலர் முன் வைக்கின்றனர். இதில் உள்ள உண்மை என்னவெனப் பார்ப்போம். உண்மையில் இந்த முதலீட்டின் அளவை, குறித்த நாடுகளின் பணப் பெறுமதியின் அளவில் காணும் போதே, இதைப் பூரணமாக புரிந்து கொள்ளமுடியும். இந்தப் பணப் பெறுமானம் பலமடங்காக (உதாரணமாக இந்தியா 50 முதல் இலங்கை 100 மடங்கு மேலான பெறுமதியைக் கொண்டது) பணப்பெருக்கத்தைக் கொண்டது. மற்றொரு உண்மை மூன்றாம் உலக நாடுகளில் 2 டாலரைக் கொண்டு வாழமுடியும் என்றால், அதைக் கொண்டு மேற்கில் உயிர்வாழவே முடியாது. உதாரணமாக மேற்கில் உழைப்புக்கான அடிப்படைக் கூலி மாதம் சராசரியாக 1000 டாலராக உள்ளது. ஆனால் அதைக் கொண்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதே சிரமமானது. அனைத்து உழைப்பளார்களிடமும் இருந்து அறவிடப்படும் கட்டாய வரியில் இருந்து மீள் வழங்கப்படும் சமூக உதவியைக் கொண்டே, இங்கு அடிப்படைக் கூலியை பெறுவோர் உயிர் வாழ்கின்றனர். ஆனால் இந்த 1000 டாலரைக் கொண்டு இலங்கையில் அல்லது இந்தியாவில் என்ன செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே. மேற்கு மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்திக்கான கூலியில் உள்ள அடிப்படையான பாரிய வேறுபாடு சார்ந்து, அந்நிய மூலதனம் மூன்றாம் உலக நாடுகள் மேல் பாயும் போது பலமடங்காகி, பிரமாண்டமான சமூக விரோதப் பாத்திரத்தை மனிதனுக்கு எதிராக உருவாக்குகின்றது.


இப்படி உலகில் அதிக அந்நிய முதலீடுகள் ஊடுருவியுள்ள நாடுகளையும், அவற்றின் தொகையையும் கோடி ஈரோக்களில் பார்ப்போம்.


1999 2000
மொத்தம் 1141000 கோடி ஈரோ 1276900 கோடி ஈரோ
அமெரிக்கா 681499 கோடி ஈரோ 748549 கோடி ஈரோ
ஐரோப்பா 322277 கோடி ஈரோ 355337 கோடி ஈரோ
ஜப்பான் 50045 கோடி ஈரோ 46426 கோடி ஈரோ
ஆஸ்திரேலியா * 36749 கோடி ஈரோ
கனடா 26858 கோடி ஈரோ 30038 கோடி ஈரோ
ஹாங்காங் 18143 கோடி ஈரோ 21055 கோடி ஈரோ
பிரேசில் 11721 கோடி ஈரோ 15963 கோடி ஈரோ
தென்கொரியா 16641 கோடி ஈரோ 11887 கோடி ஈரோ
தாய்வான் 3101 கோடி ஈரோ 3447 கோடி ஈரோ
மெக்சிக்கோ 1938 கோடி ஈரோ 1987 கோடி ஈரோ
மற்றவை 5065 கோடி ஈரோ 5418 கோடி ஈரோ

* தெரியாது


அந்நிய முதலீடுகள் தொகையின் அடிப்படையில் மேற்கில் அதிகமாக இருக்கின்றது. இதுபோல் தான் கடனும். ஆனால் பணப்பெறுமதி அடிப்படையிலும், உழைப்புக்கான கூலி அடிப்படையிலும் அந்நிய மூலதனத்தையும், கடனையும் மேற்குடன் ஒப்பிடும் போது, அவை மூன்றாம் உலகில் பல மடங்காக இருக்கின்றது. இவை நாடுகளின் திவால்தன்மையையே ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இவை மூன்றாம் உலகில் புகுந்தாலும் சரி, மேற்கில் புகுந்தாலும் சரி அனைத்து மேற்கு மூலதனமாகவே இருக்கின்றது. மாற்றாக மூன்றாம் உலகை நோக்கிய மேற்கத்திய மூலதனக் கொள்கை, நேரடியான ஈவிரக்கமற்ற சமூக அழித்தொழிப்பாகவே செயல்படுகின்றது. மேற்கில் சலுகைக்கு உட்பட்ட எல்லைக்குள் செயலாற்றுகின்றது. இதுவே உலகமயமாதலின் இன்றைய எதார்த்தம். மூலதனத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளி வர்க்கம் மேற்கில் ஸ்தாபனமாக இருப்பதும், மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளர்கள் ஸ்தாபனமாகாத நிலைமை மூலதனத்தின் சலுகைகளையும், சுரண்டலின் அளவையும், சுரண்டலின் பன்மையையும், தெரிவையும் கூடத் துல்லியமாக மாற்றியமைக்கின்றது.


இப்படியான இந்த அந்நிய முதலீடுகள் உலகமயமாதல் ஊடாக எந்த வேகத்தில் முன்னேறி, எப்படி உலக மக்களைச் சூறையாடுகின்றனர் எனப் பார்ப்போம். அனைத்துப் பெறுமானமும் கோடி டாலரில்


1 982 1990 2000
அந்நிய முதலீடு 5700 கோடி டாலர் 20200 கோடி டாலர் 127100 கோடி டாலர்
அந்நிய முதலீடுகள் கடத்தியவை 3700 கோடி டாலர் 23500 கோடி டாலர் 115000 கோடி டாலர்
அந்நிய முதலீட்டின் இருப்பு 71900 கோடி டாலர் 88900 கோடி டாலர் 631400 கோடி டாலர்
அந்நிய முதலீடு மூலமான அந்நிய இருப்பு 56800 கோடி டாலர் 171700 கோடி டாலர் 597600 கோடி டாலர்
உள்நாட்டில் அந்நிய பொருட்களின் விற்பனை 246500 கோடி டாலர் 546700 கோடி டாலர் 1568000 கோடி டாலர்
உள்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை 56500 கோடி டாலர் 142000 கோடி டாலர் 313700 கோடி டாலர்
உள்நாட்டில் அந்நிய சொத்துகள் 188800 கோடி டாலர் 574400 கோடி டாலர் 2110200 கோடி டாலர்
உள்நாட்டில் அந்நியரின் ஏற்றுமதி 63700 கோடி டாலர் 116600 கோடி டாலர் 357200 கோடி டாலர்
அந்நிய முதலீடு வழங்கிய வேலை வாய்ப்பு 1.74 கோடி 2.37 கோடி 4.5 கோடி
மிகப் பெரிய வீட்டு உற்பத்தியில் அந்நியர் 1061200 கோடி டாலர் 2147500 கோடி டாலர் 3189500 கோடி டாலர்

அந்நிய முதலீடுகள் எப்படி தேச எல்லைகளைக் கடந்து ஊடுருவிச் சுரண்டிச் செல்லுகின்றது என்பதையே இவை அழகாக எடுத்துக்காட்டுகின்றது. தேசங்களின் தனித்துவத்தைச் சிதைப்பதையும், தேசங்களைக் கொள்ளை அடித்துச் செல்வதையும் தாண்டி, உலகமயமாதல் எதையும் மனித குலத்துக்கு செய்து விடவில்லை என்பதையே அந்நிய மூலதனம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வீட்டு உற்பத்தி மீதான அந்நியர் கட்டுப்பாடுகள் மற்றும் ஆதிக்கம், சிறு உற்பத்திகளை இல்லாதொழிக்கின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை அந்நியரின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டதை இவை எடுத்துக்காட்டுகின்றது. தேசங்களின் சந்தை அந்நியப் பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தேசிய உற்பத்திகளையும் அது சார்ந்த பண்பாட்டு வேர்களையும் ஒழித்துக் கட்டுவதையே அந்நிய முதலீட்டின் விளைவுகள் நேரடியாக எடுத்துக் காட்டுகின்றது. 1982இல் இருந்ததைவிட 2000இல் புதிதாக 2.76 கோடி மக்கள் அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் புதிதாக தொழில் செய்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை 2,57,200 கோடி டாலரால் அதிகரித்தது. அண்ணளவாக இது 5 மடங்கால் அதிகரித்தது. அந்நிய பொருட்களின் விற்பனை 13,21,500 கோடி டாலராக அதிகரித்தது. அதாவது 6.3 மடங்கால் அதிகரித்தது. வீட்டு உற்பத்தி பொருட்களில் விற்பனை 21,28,300 கோடி டாலரால் அதிகரித்தது. அண்ணளவாக மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அந்நிய சொத்துக்களின் இருப்புகள் 10 மடங்காக அதிகரித்துள்ளது. அந்நிய முதலீட்டின் மூலம் நாட்டைவிட்டு கடத்திச் சென்றவை 1980இல் 3,700 கோடி டாலர் மட்டுமே. 1990இல் 23,500 கோடி டாலர். இது 2000இல் 1,15,000 கோடி டாலராகியது. அந்நிய நாடுகளின் தலையீடு தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுகின்றது. தேசங்களில் வாழ்ந்த, வாழ்கின்ற மக்கள் இவற்றை அந்நியரிடம் நாளந்தம் இழந்து செல்வதையே இவை எடுத்துக்காட்டுகின்றது.


சொந்தநாட்டின் உற்பத்தி அழிவால் சொந்த நாட்டின் நுகர்வின் அளவு வேகமாகக் குறைகின்றது. மேலுள்ள தரவுகள் உள்நாட்டு உற்பத்திகள் அழிந்து வருவதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தேசத்தினதும், மக்களினதும் சுய உற்பத்திகளை அழிப்பதன் மூலம், அதில் ஈடுபட்ட பல பத்து கோடி மக்கள் தமது உழைப்பையும் உழைப்பின் ஆற்றலையும் இழந்துள்ளனர். இதன் மூலம் பொருட்களின் மேலான அறிவையும், அதன் பன்மைத்துவம் சார்ந்த வரலாற்று பயன்பாட்டையும் இழந்து வருகின்றனர். மனித இனத்தின் இந்த இழப்பு, மனித உயிர்வாழ்வதற்கான அடிப்படையை வேட்டுவைக்கும் முதற்படிகளில் கால் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் மக்கள் இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்த நீண்ட நெடிய வாழ்வுக்கு ஏற்படும் அழிவு, பாரிய சுற்றுச்சூழல் சூறையாடலாகவே மாறிவிடுகின்றது.


அளவுக்கு மீறிய வகையில் சுற்றுச்சூழலை அந்நிய மூலதனம் வரைமுறையின்றி அழிக்கின்றது. ஒட்டுமொத்த விளைவால் வறுமை விரவிப் பரந்து பாய்கின்றது. அந்நியப் பொருட்களை வாங்கி நுகருமாற்றல் மேல் இருந்து கீழாக குறைந்து வருவதால், கீழ் உள்ளவர்களின் நுகரும் ஆற்றல் அழித்தொழிக்கப்படுகின்றது. பண்பாட்டு மற்றும் கலாச்சாரங்கள் உற்பத்தி உறவுகளில் இருந்து கட்டமைக்கப்படுவதால், தேசிய உற்பத்தியில் ஏற்படும் அழிவால் சொந்த தேசியப் பண்பாடுகள் கலாச்சாரங்கள் வேகமாக சீரழிவுக்குள்ளாகி பண்பாடற்ற மக்கள் கூட்டத்தை உருவாக்குகின்றது. அந்நியப் பொருள் சார்ந்த பண்பாடுகள் சமூகக் கூட்டைத் தகர்த்து, அதனிடத்தில் லும்பன் தனமான, வக்கிரமான, நுகர்வு வேட்கை சார்ந்த தனிமனிதப் பண்பாட்டை, கலாச்சாரத்தை உருவாக்குகின்றது. இது சூறையாடும் தனிமனித வக்கிரத்தால் வேட்கை அடைகின்றது. சமூக இருப்பின் அனைத்துக் கூறையும் மறுதலிக்கின்றது. பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடும் வேட்கையே, தனிமனிதனின் வேட்கையாக மாற்றப்பட்டு, அப்பண்பாடே உலகமயமாதல் பண்பாடாகி விடுகின்றது.


இப்படி உருவாகும் பண்பாட்டுக்கு அடிப்படையான கூறுகளையே அந்நிய முதலீடுகள் செய்கின்றன. தேசங்களையே கொள்ளையடிக்கும் இந்த அந்நிய முதலீடுகளை பிராந்திய ரீதியாக எடுத்துப் பார்ப்போம். அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்


பிரதேசம் 2000 2001 2002 2003 2003 2004
அரபு மற்றும் ஆப்பிரிக்கா 3,090 3,200 3,410 3,590 3,780 3,980
ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் 25,060 25,180 25,810 27,450 29,240 31,090
ஐரோப்பா 37,560 37,740 38,460 39,310 40,200 41,050
தென் அமெரிக்கா 6,560 6,570 6,840 7,290 7,820 8,350
வடஅமெரிக்கா 47,740 47,570 49,460 52,230 55,020 57,820

அந்நிய முதலீடுகள் வருடாந்தரம் சீராகவே, அனைத்து பிரதேசங்களிலும் அதிகரித்துச் செல்வதை இது எடுத்துக் காட்டுகின்றது. உலகைச் சூறையாடும் உலகமயமாக்கல் கொள்கை, உலகத்தின் எந்தப் பிரதேசத்தையும் விட்டுவிடவில்லை. மனித குலத்தின் அடிமைத் தனங்களின் மீது உலகமயமாதல் ஆதிக்கத்தை நிறுவும் மூலதனத்தின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கு எல்லைகள் எதுவும் கிடையாது என்பதையே தரவுகள் தெளிவாகவே பறைசாற்றி விடுகின்றது. உலகில் விதிவிலக்கற்ற வகையில் தேசங்களையும், அதில் வாழும் மக்களை சூறையாடுவதுமே உலகமயமாதலின் ஜனநாயகமாகும்.


1980இல் பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் வர்த்தகத்தில் 35 சதவீதம் சொந்த நாட்டுக்கு வெளியில் போடப்பட்ட முதலீட்டில் இருந்தே கிடைத்தது. மேற்கில் காணப்படும் செல்வத்தின் கொழிப்பு வெளியில் இருந்தே கிடைக்கின்றது. தேசங்களின் எல்லைகளைக் கடந்து மக்களின் வாழ்வையே அழித்தொழிக்கும் இந்த ஆக்கிரமிப்பு, 1985க்கு பின்பாக தலைகால் தெரியாதளவுக்கு வேகம் பெற்றது. 1990இல் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த முதலீடு 1,70,000 கோடி டாலராகும். இது 1985க்கும் 1990க்கும் இடையில் 35 சதவீதத்தால் வருடாந்தரம் அதிகரித்தது. இதன் மூலம் அந்நிய ஏற்றுமதி 13 சதவீதத்தாலும், வீட்டு பயன்பாட்டு உற்பத்தியை 12 சதவீதத்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் புதிதாகக் கட்டுப்படுத்தின. எதிர்மறையில் மக்கள் இதனால் தமது சுயபொருளாதார கட்டுப்பாட்டை இழந்தனர். இது சார்ந்த பண்பாட்டுச் சீரழிவுகளைச் சந்தித்தனர். உற்பத்தி சார்ந்த உலகளாவிய பன்னாட்டு அந்நிய முதலீடுகள் வருடாந்தரம் தொடர்ந்து அதிகரித்து செல்லுகின்றது. மறுபக்கத்தில் உலகைச் சூறையாடுவதில் சளையாத போட்டி, ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடுமையான முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. இது தேசங்களின் தேசியத்தை அழித்து, தேசங்கடந்த முதலீட்டை அதிகரிக்க வைக்கின்றது. இவற்றை கீழ் உள்ள புள்ளிவிபரங்கள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது.


தேசங் கடந்த உலகைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய முதலீடுகள், ஏகாதிபத்திய முரண்பாடுகளாகி விடுகின்றது. போட்டி போட்டுச் சுரண்டும் இந்த அந்நிய முதலீடுகள் சதவீதத்தில்


நாடு 1975-79 1985-89 1991
ஐரோப்பிய யூனியன் 40 44 45.4
அமெரிக்கா 45 16.9 16.6
ஜப்பான் 5.9 17.6 17.3


அந்நிய முதலீட்டில் ஏற்பட்ட கடுமையான சர்வதேச மாற்றத்தையே இது எடுத்துக் காட்டுகின்றது. உலகை அடிமைப்படுத்தி தக்கவைக்கும் சமூக ஆதிக்கத்தை, சுரண்டும் சுதந்திரமான ஜனநாயகம் என்ற எதார்த்த உலகப் போக்கு இணங்க, மூலதனத்தை கொண்டு நடத்தும் ஏகாதிபத்திய போராட்டத்தையே இது எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றது. ஜப்பான் தனது அந்நிய முதலீட்டை 1990இல் 214.6 சதவீதத்தால் அதிகரிப்பைச் செய்தது. இதன் மூலம் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடுமையான இழுபறியான போராட்டத்தை நடத்தினர். 1988இல் ஜப்பானின் தேசிய உற்பத்தி 35,00,000 கோடி இந்தியா ரூபாவாகியது. இதன் மூலம் அமெரிக்காவையும் மிஞ்சியது. அதேநேரம் 1987இல் ஜப்பனின் மொத்த வெளிநாட்டுச் சொத்தின் பெறுமதி 42,00,000 கோடி இந்தியா ரூபாவாகியது. ஜப்பான் அமெரிக்காவிலேயே தனது முதலீட்டை பெருக்கிக்கொண்டது. ஆனால் பின்னால் ஜப்பான் மூலதனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி, அமெரிக்காவை முன்னுக்கு கொண்டு வந்தது. இவை அலையலையாக ஏற்றயிறக்கத்தை ஏற்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து துல்லியமாக ஆராய்வோம்.


சொந்த நாடுகளுக்கு வெளியில் மற்றைய நாடுகளை சூறையாடப் போடப்பட்ட மொத்த அந்நிய மூலதனத்தில் தனித்தனி நாடுகளின் பங்கு சதவீதத்தில்


நாடுகள் 1971 1980 1990 1994
அமெரிக்கா 52 42.8 26.1 25.6
ஜப்பான் 2.7 3.8 12.1 11.7
பிரிட்டன் 14.5 15.6 13.8 11.8
ஜெர்மனி 4.4 8.4 9.1 8.6
பிரான்ஸ் 5.8 4.6 6.6 7.7


இங்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் மூலதனத்துக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான தொடர் நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றது. ஜப்பானின் வெளிநாட்டு முதலீடு 2001, 2002இல் 2,18,600 (அண்ணளவாக 2086 கோடி டாலராக) கோடி யென்னாக இருந்தது. 1992இல் இது 50,000 (அண்ணளவாக 500 கோடி டாலர்) கோடி யென்னாக இருந்தது. 1992 உடன் ஒப்பிடும் போது, 2001, 2002இல் ஜப்பானின் அந்நிய முதலீடு 4 மடங்கு மேலாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார ஆதிக்கத்துக்கான போட்டி கடுமையானதும், இழுபறியானதுமான ஒரு போராட்டமாக மாறி இருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. ஈராக் நெருக்கடி முதல், ஐரோப்பிய யூனியனில் முரண்டு பிடிக்கும் பிரிட்டிஷ் கொள்கைகளுக்கு அடிப்படையான விளக்கம், மூலதனத்தின் உலகளாவிய வெற்றி தோல்விகளில் இருந்தே பிறக்கின்றது.


ஜப்பான், மற்றும் ஐரோப்பிய சர்வதேச ரீதியாக உலகை மறுபங்கீடு செய்ய முனைந்த அமைதியான, சுதந்திரப் போட்டியை, அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் ஈடுகொடுக்க முடியவில்லை. தற்காப்பு நிலையில் நின்று, பலாத்காரமான ஆக்கிரமிப்புகள் ஊடாக காலனிகளை உருவாக்கி உலகைத் தக்கவைக்கவே முனைகின்றன. இதேநேரம் ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் இராணுவ ரீதியான தற்காப்பை எதிர்கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் எதிர்தாக்குதல் நிலையை அடையவும் தனது சொந்த இராணுவக் கட்டமைபை ஒருங்கிணைத்து வருகின்றனர். மூலதன நெருக்கடிகள் சமகாலத்தில் இராணுவ ரீதியானதாக அதிகரித்து வருகின்றது. மறுபக்கத்தில் தொடர்ந்தும் அமெரிக்காவின் அந்நிய முதலீட்டின் அளவு சரிந்த போதும், உலகளவில் அதிக முதலீட்டை அமெரிக்காவே செய்யும் நிலை தொடர்ந்தும் அமெரிக்காவுக்குச் சாதகமாகவே உள்ளது.


தேச எல்லைகளைக் கடந்து சென்ற அந்நிய மூலதனத்தின் பாய்ச்சல் சதவீதத்தில்

நாடுகள் 1990 1998 1999
அமெரிக்கா 89 223 179
ஜப்பான் 119 91 95
ஜெர்மனி 54 329 334
பிரான்ஸ் 57 415 -


ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் இழுபறியான போராட்டத்தை மட்டுமின்றி, அவர்கள் உலகெங்கும் எப்படி நாலுகால் பாய்ச்சலில் ஊடுருவி வருகின்றனர் என்பதையுமே இவை எடுத்துக்காட்டுகின்றது. அந்நிய முதலீடு மட்டுமின்றி, இதனுடன் நிதி மூலதனமும் அக்கம்பக்கமாகச் செயல்படுகின்றது. இது கடன் என்ற போர்வையில், வட்டி ஊடாகவும் தேசங்களையே சூறையாடுவதும், உள்நாட்டு உற்பத்திகளைக் கடுமையான கடன் நிபந்தனையூடாக அழித்து ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக உள்நாட்டு பொருளாதாரத்தை மாற்றி விடுகின்றனர். இதன் மூலம் உலகை அடிமைப்படுத்தி, கட்டுப்படுத்துகின்றனர். நாடுகளின் திவால் தன்மையை உருவாக்கி, அதை தனக்கு இசைவானதாகவே மாற்றிவிடுகின்றனர். வருடாந்தரம் அந்நிய முதலீடு ஊடான சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டியை அறவிடுவது அதிகரித்துச் செல்வதன் மூலம், ஏகாதிபத்திய உலக ஆதிக்கம் பரந்துபட்ட மக்களின் மேல் கடுமையாகி அவையே பெரும் சுமையாகி வருகின்றன. சுதேசிய மக்கள் தமது நாடுகளில் உழைத்துக் கூடி வாழமுடியாத நிலையில், பரிதாபகரமாகக் கையேந்தி நிற்கும் காட்சி உலகமயமாக்கலில் இரசனைக்குரியதாக, இதைக் காட்டியே பொறுக்கித் தின்னும் தன்னார்வக் கும்பலை உருவாக்குகின்றது. சுதேசிய மக்களைக் கொள்ளை அடித்தவர்களே, அதில் இருந்த சில சில்லறைகளை தன்னார்வக் குழுக்களுக்கு கிள்ளிப் போடுவதே கொடையாகப் பசப்பப்படுகின்றது.


இப்படி ஏகாதிபத்தியங்கள் உலகைத் தமக்குக் கீழ் அடக்கியாள்வதன் மூலம், மக்களை வரைமுறையின்றி சுரண்டவும், தமக்கு இடையில் உலகச் சந்தையைக் கைப்பற்ற நடத்தும் போராட்டம், எதார்த்தத்தில் எப்படி பிரதிபலிக்கின்றது எனப் பார்ப்போம். அந்நிய முதலீடுகள் கோடி டாலரிலும், இது உலகளவில் சதவீதத்திலும்


நாடுகள் 1989 1992 1994 1982-1986 1987-1991

அமெரிக்கா 2600 கோடி 3900 கோடி 4600 கோடி 19 சதவீதம் 13 சதவீதம்
ஜப்பான் 4400 கோடி 1700 கோடி 1800 கோடி 13 சதவீதம் 18 சதவீதம்
பிரிட்டன் 3500 கோடி 1900 கோடி 2500 கோடி 18 சதவீதம் 14 சதவீதம்
ஜெர்மனி 1800 கோடி 1600 கோடி 2100 கோடி 10 சதவீதம் 10 சதவீதம்
பிரான்ஸ் 2000 கோடி 3100 கோடி 2300 கோடி 5 சதவீதம் 11 சதவீதம்


அமெரிக்காவும், பிரிட்டனும் உலகைச் சூறையாடும் தமது சுதந்திர உரிமையைத் தக்கவைப்பதில், தொடர்ச்சியான நெருக்கடியில் சிக்கி நிற்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றது. உலகளவில் உருவாக்கியுள்ள மூலதன ஆதிக்கத்தைத் தக்கவைக்க கடுமையாகவே போராடுவதையும் இது காட்டுகின்றது. ஜப்பான், ஐரோப்பா (பிரான்ஸ், ஜெர்மனி...) போன்ற ஏகாதிபத்தியங்கள், உலகச் சந்தையைக் கைப்பற்றுவதன் மூலமே உலக ஆதிக்கத்தை நிறுவமுனைகின்றது. ஒரு ஏகாதிபத்திய யுத்தம், பொருளாதாரக் கட்டுமானத்தின் மேல் தொடர்ச்சியாக அலையலையாக அன்றாடம் நடக்கின்றது. இருந்தபோதும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் மூலதனங்கள் இரண்டாம் உலக யுத்தகால அனுகூலங்களைத் தக்கவைத்து நீடிப்பதால், உலகளவில் மிகப் பெரிய அந்நிய மூலதனத்தைத் தக்கவைக்க முடிகின்றது.

இதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால், அந்நிய முதலீடு கோடி டாலரில்


2001 2002
அமெரிக்கா 14,400 3,000
பிரிட்டன் 6,200 2,500
பிரான்ஸ் 5,520 5,150
சீனா 4,680 5,270
லுக்சம்பேர்க் * 12,500
ஜெர்மனி 3,400 3,800
நெதர்லாந்து 5,120 2,910
கனடா 2,900 2,050
* தெரியாது


உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் புதிய அந்நிய முதலீடுகள், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் இடம்மாறி வருவதையே இது எடுத்துக்காட்டுகின்றது. அந்நிய முதலீட்டை உலகளவில் குவிப்பதில் சீனாவும் புதிதாகக் களமிறங்கியுள்ளது. சீனாவுக்குள் ஊடுருவிய அந்நிய மூலதனம் மலிவு உற்பத்திகள் மூலம் உலகச் சந்தையைத் திணறடிக்க வைக்கின்றது. சீனப் பாசிசச் சர்வாதிகார அரசும், சீன முதலாளிகளும் இணைந்து, 100 கோடிக்கு மேற்பட்ட சீன உழைக்கும் மக்களை என்றுமில்லாத அளவில் தாம் மட்டும் அதிகளவில் சுரண்டுவதன் மூலம், பெரும் நிதியாதாரங்களைத் திரட்டுகின்றனர். இந்த நிதியை உள்நாட்டிலும், அந்நிய நாடுகளிலும் குவிக்கின்றனர். இதன் மூலம் சீனா ஒரு ஏகாதிபத்தியமாக தன்னை மாறிவருகின்றது. இதன் மூலம் சீனா உலகில் பலமுனைகளுக்கு இடையிலான புதிய ஏகாதிபத்திய நெருக்கடிகளைத் தொடங்கி வைத்துள்ளது.


உலகளாவிய நிதி மூலதனத்தை ஆராய்ந்தால், உலகமயமாதலில் சீனா வகிக்கும் சர்வதேச முக்கியத்துவத்தையும் அதன் ஏகாதிபத்தியப் போக்கையும் வெட்ட வெளிச்சமாக வெளிபடுத்துவதைக் காணமுடியும்.


2003இல் நிதி மூலதனத்தை அந்நிய நாடுகளில் அதிகமிட்ட நாடுகள்


ஜப்பான் 20.9 சதவீதம்
சீனா, ஹாங்காங் 9.8 சதவீதம்
ஜெர்மனி 9.2 சதவீதம்
சுவிஸ் 6.1 சதவீதம்
ரசியா 5.7 சதவீதம்
பிரான்ஸ் 4.8 சதவீதம்
தாய்வான் 4.8 சதவீதம்
நோர்வை 4.7 சதவீதம்
மற்றவை 34.3 சதவீதம்


நிதியாதாரங்கள் நாடு கடந்து செல்வதன் மூலம், சர்வதேச ரீதியான சூதாட்டத்தில் ஆழமாகவே கால்பதித்து நிற்பதை இவை குறிக்கின்றது. நிதி மூலதனத்தை நாடுகடத்திச் செல்வதில் அரசு மற்றும் மூலதனத்தின் பெரும் சொந்தக்காரராக உள்ள தனியாரும் ஈடுபடுகின்றனர். உற்பத்தியில் ஈடுபடாத நிதிகள், தன்னை பெருக்கிக் கொள்ள குறுக்கு வழியில் செயல்படுகின்றது. ஏகாதிபத்திய அரச கடன்களிலும், சர்வதேச கடன்களிலான சூதாட்டத்திலும் இந்த நிதியாதாரங்கள் ஏகாதிபத்தியத்தினால் கவர்ந்திழுக்கப்படுகின்றது. பெரும்பாலும் மூன்றாம் உலக நாடுகளில் கொள்ளையடிக்கும் பெரும் நிதிகள் முதல் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான ஏற்றத் தாழ்வான வர்த்தகப் பற்றாக்குறைகளால் உருவாகும் நிதிகள் இப்படி மாறிவிடுகின்றது. இந்த வகையில் ஜப்பான், சீன நிதிகள் பெருமெடுப்பில் அமெரிக்காவில் குவிந்து கிடக்கின்றது. அத்துடன் மக்களின் சிறு சேமிப்புக்களையும் கூட எடுத்து சர்வதேச நிதிச் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர். மக்களின் உழைப்பில் உருவான நிதிகளை எடுத்து தனது சூதாட்டத்தில் இறக்கிவிடுகின்றன. இதற்கு மக்களின் சேமிப்பாக உள்ள ஓய்வூதிய நிதிகளையும் பயன்படுத்து கின்றனர். மக்களின் ஓய்வூதிய நிதியில் இருந்து சர்வதேச முதலீடு 1989இல் 30200 கோடி டாலராக இருந்தது. இது 1994இல் 79,000 கோடி டாலராகியது. 1990இல் ஓய்வூதியம் மற்றும் பரஸ்பர நிதி சாந்த முதலீடு 20,00,000 (20 லட்சம்) கோடி டாலராகியது. இது 1980உடன் ஒப்பிடும் போது பத்து மடங்கு அதிகமாகும். இதேபோல் நிதி மூலதனத்திலும் ஓய்வூதிய நிதி இறக்கப்படுகின்றது. இப்படி உருவாகும் நிதி மூலதனத்தை யார் தமது சொந்தப் பற்றாக்குறையுடன் இறக்குமதி செய்கின்றனர் எனப் பார்ப்போம்.


2003இல் நிதி மூலதனம் இறக்குமதி செய்தவர்கள் யார் எனப் பார்ப்போம்.


அமெரிக்கா 75.5 சதவீதம்
ஒஸ்ரியா 2.8 சதவீதம்
ஸ்பானியோல் 2.5 சதவீதம்
பிரிட்டன் 2.3 சதவீதம்
மெக்சிகோ 2.2 சதவீதம்
இத்தாலி 1.5 சதவீதம்
போத்துகல் 1.4 சதவீதம்
மற்றைய நாடுகள் 12.0 சதவீதம்


உலகில் 75 சதவீதமான நிதியாதாரங்களை அமெரிக்காவே இறக்குமதி செய்துள்ளது. உலகளவில் மக்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நிதியில் 75 சதவீதம் அமெரிக்காவுக்குள் பாய்ந்து சென்றுள்ளது. இந்த நிதி தான் அமெரிக்கப் பொருளாதாரத்தை சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தக்கவைக்கின்றது. நிதி மூலதனம் அமெரிக்காவை நோக்கி பாய்ச்சல் என்பது, அமெரிக்கா பொருளாதார மீதான அந்நிய ஆதிக்கத்தை இறுக்குகின்றது. உதாரணமாக, சவூதி அரேபியா அமெரிக்காவில் 60,000 கோடி டாலர் முதலிட்டுள்ளது. இவை எல்லாம் அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகில் அமெரிக்காவே மிகப்பெரிய கடனாளி நாடாகியுள்ளது. இது அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்கள் மேல், ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்குகின்றது. இதன் போது அமெரிக்கா தான் உருவாக்கிய உலகமயமாதல் சட்டவிதிகளை ஒருதலைப்பட்சமாக மீறுவதுடன், தனக்கு விதிவிலக்கைக் கோரும் அளவுக்கு உலகையே தனது இராணுவ வலிமையால் மிரட்டுகின்றது.


மறுபக்கத்தில் அமெரிக்காவில் அமெரிக்கர் அல்லாதோர் ஆதிக்கம் பெருமெடுப்பில் உள்ளது. உதாரணமாக அமெரிக்கர் அல்லாத நிதி முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் வணிகக் கடனில் 40 சதவீதத்தையும், பெரும் நிறுவனப் பங்குப் பத்திரத்தில் 26 சதவீதத்தையும், அமெரிக்கா பங்குகளில் 13 சதவீதத்தையும் கைப்பற்றியிருந்தனர். இந்த வகையில் ஜப்பானை அடுத்து சீனாவின் மூலதனம் அமெரிக்காவுக்குள் அதிகளவில் சென்று, அமெரிக்கப் பொருளாதாரத்திலும் ஒரு கெடுபிடியை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஜப்பானுக்கு அடுத்ததாக, சீனாதான் அதிக நிதி மூலதனத்தை பங்குப் பத்திரம் மூலம் முதலிட்டுள்ளது. இது 2001இல் 8200 கோடி டாலராக இருந்தது. 2002இல் 11,900 கோடி டாலராக அதிகரித்தது. சீனா அசுரபலத்துடன் ஒரு ஏகாதிபத்தியமாக, சீனா மக்களின் பிணங்களின் மேலாக பரிணமித்து வருகின்றது. அதே நேரம் சீனாவின் கடன் ஒரு பாய்ச்சலை நடத்துகின்றது. 2002க்கு முந்திய ஐந்து வருடத்தை விடவும் கடன் இரண்டு மடங்காகியுள்ளது. இது 25,000 கோடி டாலரில் இருந்து 50,000 கோடி டாலராகியுள்ளது. கடன் எதற்காக வழங்கப்படுகின்றது என்று பார்த்தால் அதிர்ச்சியான விடயங்கள் வெளிவருகின்றன. உதாரணமாக சீனாவில் வாழ்பவர்களின் சராசரி வயதைக் குறைக்க உலக வங்கி கோருகின்றது.


இன்றைய சீன மக்களின் சராசரியான ஆயுள் வயதான 70 வருடங்கள், உலகச் சராசரியை விட 2 வருடம் அதிகம் என்கிறது உலகவங்கி. இதை, இரண்டு வருடங்களை, குறைப்பதன் மூலமே, மூலதனத்துக்கு அதிக லாபம் என்கின்றது. சராசரி வயதை 68 எனும் வகையில், அவர்களை உணவின் மூலம் உயிருடன் கொல்லக் கோருகின்றது. இதன் அடிப்படையில் பண்பாட்டு, கலாச்சார மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை சாத்தியமாக்கக் கோருகின்றது. பண்பாடு ரீதியாக உணவிலும் மாற்றத்தைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றது. அந்த அடிப்படையில் மாட்டு இறைச்சியையும், பால் கிரீமையும் உண்ணக் கோருகின்றது. இதற்காக 1999இல் 9.35 கோடி டாலரை கடனாக வழங்கியது. மாட்டுக் கறியை அதிகம் உண்பதன் மூலம் அதிகக் கொழுப்பை ஏற்படுத்தி மரணத்தை துரிதப்படுத்தவும், இதன் மூலம் ஏகாதிபத்திய மாட்டு இறைச்சிக்கான சந்தையாக சீனா மாறுவதையும் உறுதிசெய்ய உலகவங்கி கோரியது. அதிக மனிதர்கள் உயிருடன் இருத்தல், உலகமயமாதலுக்கு நெருக்கடிக்குரிய ஒன்றாக உலகவங்கி கருதுகின்றது. இப்படி உணவின் மூலம் படுகொலை செய்வது, உலக ஜனநாயகத்தினதும் அடிப்படையாகவும், சுதந்திரத்தின் உன்னதமான கோட்பாடாகவும் உள்ளது. சீனப் பாசிஸ்டுகளோ மக்களின் வாழ்வை அழிக்கவே கடன்களை வாங்கிக் குவிக்கின்றனர்.


உலகவங்கியின் வழிகாட்டலுக்கும் கட்டளைக்கும் ஏற்ப மக்களுக்கு எதிராக முன்னேறும் சீனா, 1990க்கு பின் அரசுத் துறையில் நான்கு கோடிப் பேரை அவர்களின் வேலையை விட்டே துரத்தியது. இன்றும் வருடம் 30 லட்சம் பேர் வேலையை இழந்து வருகின்றனர். இவை எல்லாம் உலகமயமாதல் என்ற சுதந்திர அமைப்பின் நிஜமான சாட்சியங்களே. சீனாவில் உண்மையில் இன்று என்ன நடக்கின்றது என்பதே, என்ன செய்யப் போகின்றது என்பதற்கு முன்மாதிரியாக உள்ளது. சீனப் பொருளாதாரம் முற்று முழுதாகவே மாஃபிய மயமாதலுக்குள் தகவமைந்துள்ளது. எந்தவிதமான அரசியல் சட்ட திட்டத்தையும், சீன மக்கள் பயன்படுத்தும் நிலை முற்றாக மறுக்கப்படுகின்றது. பரந்துபட்ட மக்கள் சிறிய சொத்துக்களை வைத்திருக்கும் சட்டப்பூர்வமான உரிமையை, எந்தச் சட்டமும் பாதுகாக்கவில்லை. பெரும் பணக்காரக் கும்பல், மாஃபிய வலைப்பின்னலூடாக இணைத்து பலாத்காரமாகவே சீன மக்களிடம் பறிமுதலையே நடத்துகின்றனர். சீன மக்களின் அற்ப சொத்துக்களையும், நீதிமன்றம் மற்றும் போலீசாரின் துணையுடன் சட்டப்பூர்வமாகவே பெரும் முதலாளிகள் பறித்தெடுக்க அரசு துணை நிற்கின்றது. சுரண்டல் கட்டமைப்பும் கூட மாஃபிய வலைப் பின்னலின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுவிட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் சீனாவை ஆள்வது திடீர்ப் பணக்காரக் கும்பல் சார்ந்த ஒரு மாஃபிய கும்பல் தான். இதன் மூலம் உயர்ந்த சுரண்டல் வீதத்தை, உள்நாடு மற்றும் அந்நிய மூலதனத்துக்கு உறுதி செய்யப்படுகின்றது. சமூகப் பாதுகாப்புத் திட்டம் எதுவும் சீன மக்களுக்கு இன்று கிடைப்பதில்லை. எந்த உரிமையும் மக்களுக்குக் கிடையாது. சீனாவில் சுரண்டுவதுக்கும், சூறையாடுவதற்கும் உள்ள ஜனநாயகம் சார்ந்த சுதந்திரம், அந்நிய மூலதனத்தை இயல்பாகவே தொடர்ச்சியாகக் கவர்ந்தெடுப்பதை உறுதி செய்கின்றது. இது எந்த வேகத்தில் வெறியாட்டம் போடுகின்றது என்பதை சீனாவில் ஊடுருவியுள்ள அந்நிய முதலீடே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


உண்மையில் அந்நிய முதலீடுகள் சீனாவில் புகுந்த வடிவத்தை நாம் பார்ப்போம்.


1989 300 கோடி டாலர்
1997 4200 கோடி டாலர்
1999 3800 கோடி டாலர்
2002 5300 கோடி டாலர்


மற்றொரு புள்ளிவிபரப்படி சீனாவில் அந்நிய முதலீடு


1997 1998 1999 2000 2001
சீனா 4423.7 4375.1 4031.9 4077.2 4684.6
சீனா ஹாங்காங் 1136.8 1477.0 2459.6 6193.8 2283.4


சீன முதலாளிகள் முதலாளித்துவ மீட்சியை நடத்தி கம்யூனிசத்தை தூக்கி எறிந்த பின்பு, அந்நிய மூலதனம் எப்படி எல்லை கடந்து ஊடுருவி வருகின்றது என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றது. இதைத்தான் மூலதனம் சுதந்திரம், ஜனநாயகம் என்று மார்பு தட்டுகின்றனர். சுதந்திரத்துக்காவும், ஜனநாயகத்துக்காவும் குரல் கொடுத்துப் போராடுவதாக பசப்பும் எந்த ஈனர்களும், இதனால் ஏற்பட்ட சமூக விளைவை ஆராய்வதில்லை. உண்மையில் பரந்துபட்ட மக்களின் சர்வாதிகார கம்யூனிசத்துக்கு எதிராக, ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் நடந்த முதலாளித்துவ மீட்சியைத் தொடர்ந்து, சீன முதலாளித்துவ வர்க்கம் சிலிர்த்துக் கொண்டது. அந்நிய மூலதனம் என்றுமில்லாத குதூகலத்தில் துள்ளிக் குதித்தது. இதன் மொத்த விளைவு என்ன? 1989இல் வெறும் 300 கோடி டாலர் அந்நிய முதலீடு என்ற நிலை மாறி, 2002இல் இது 20 மடங்கையும் தாண்டிச் சென்றது. இது சீன மக்களின் வாழ்வியல் அடிப்படைகளையே முற்றாகத் தகர்த்துள்ளது.


சமூகப் பாதுகாப்பு என எதுவுமற்ற நிலைக்குள், சீன மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காக தமது முதுகுத் தோலை உறித்து எடுத்து பறையாக்கும் மூலதனத்தின் வக்கிரத்துக்கு இரையாக்கப் படுகின்றனர்.


இப்படி உண்மையில் அந்நிய மூலதனம் ஊடுருவிப் பாய்ந்த வேகம் மலைக்க வைக்க கூடியவை. 19992002க்கும் இடையில் மொத்தமாக உலகளாவிய அதிக அந்நிய முதலீடுகள் இடப்பட்ட மேற்கு அல்லாத நாடுகளை எடுத்து ஆராய்ந்தால்


சீனா 38400 கோடி டாலர் (19822002க்கு இடையில் 44800 கோடி டாலர்)
பிரேசில் 15800 கோடி டாலர்
அர்ஜென்டினா 6500 கோடி டாலர்
போலந்து 5100 கோடி டாலர்
ரசியா 2600 கோடி டாலர்
இந்தியா 2400 கோடி டாலர்
பிலிப்பைன்ஸ் 1300 கோடி டாலர்
இந்தோசீனா 500 கோடி டாலர


ஒப்பீட்டளவில் சீனாவில் குவிந்த அந்நிய மூலதனம் மிகப் பிரம்மாண்டமானது. 19821998க்கும் இடையில், அதாவது சீன முதலாளித்துவ மீட்சிக்கு பிந்திய 17 வருடத்தில், சீனாவில் ஊடுருவிய அந்நிய முலதனம் 6400 கோடி டாலர் மட்டுமே. அதற்குப் பிந்திய காலத்தில் அதாவது உலகமயமாதலின் வேகநடை போடத் தொடங்கியதன் பின்பாக 1999க்கும் 2002க்கும் இடைப்பட்ட நான்கு வருடத்தில் 38,400 கோடி டாலர் அந்நிய மூலதனம் சீனாவில் வெள்ளமாக புகுந்துள்ளது. இது கட்டுக்கடங்காத வேகத்தில் செல்லுகின்றது. இது சார்ந்த உற்பத்திகள் மேற்கத்திய சந்தைகளைத் தடுமாற வைக்கின்றது. மேற்கில் உள்ள உற்பத்தி மையங்கள், தொழிற்சாலைகள் இரவோடு இரவாகவே புதிய காதலியுடன் சீனாவுக்குள் தப்பி ஓடிவிடுகின்றது.


இப்படிச் சீனாவை நோக்கி ஓடிவந்த, ஓடிவரும் அந்நிய மூலதனங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை எனப் பார்ப்போம். சீனாவில் உள்ள அந்நிய முதலீடுகள் 2002 செப்டம்பரில்


ஹாங்காங் 19,984 கோடி டாலர் 45.96 சதவீதம்
அமெரிக்கா 3,842 கோடி டாலர் 8.84 சதவீதம்
ஜப்பான் 3,535 கோடி டாலர் 8.13 சதவீதம்
தாய்வான் 3,197 கோடி டாலர் 7.35 சதவீதம்
வேர்ஜி தீவுகள் 2,276 கோடி டாலர் 5.23 சதவீதம்
சிங்கப்பூர் 2,097 கோடி டாலர் 4.82 சதவீதம்
பிரான்ஸ் 545 கோடி டாலர் 1.25 சதவீதம்
மற்றவை 8,009 கோடி டாலர் 18.42 சதவீதம்
மொத்தம் 43,478 கோடி டாலர் 100 சதவீதம்


சீனாவில் அதிக முதலீட்டைக் குவித்து வைத்திருப்பவர்கள் யார் என்பதை இங்கேக் காண்கின்றோம். இதில் ஹாங்காங் பெரியளவில் அந்நிய முதலீட்டை சீனாவில் கொண்டு இருக்கின்றது. ஆனால் உள்ளடகத்தில் ஹாங்காங் அல்லாத அந்நிய மூலதனம், ஹாங்காங் ஊடாகப் பின்பக்க வழியாகச் சீனாவில் ஊடுருவியதையே இது குறிக்கின்றது. இது தான் தாய்வான் முதல் பல நாடுகளின் பின் உள்ள கதை. உலகில் இக்காலக் கட்டத்தில் அதிக அந்நிய முதலீட்டை உள்ளிழுத்த நாடுகளில் சீனாவாக இருப்பது என்பது, அங்குள்ள மக்கள் மேலான அதீதமான அடிமைத்தனத்தை எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் மேலான வரைமுறையற்ற, பாசிசச் சுரண்டலுடன் கூடிய சூறையாடல் தான், அதிக அந்நிய முதலீட்டை கவர்ந்தெடுக்கின்றது. இதன் மூலம் உலகில் அதிக மலிவுப் பொருளை உற்பத்தி செய்வதுடன், உலகில் பல உற்பத்தியில் பெருவீதத்தை சீனாவே கைப்பற்றியுள்ளது. அந்நிய மூலதனம் குவிந்துள்ள சீனாவின் மறுபக்கத்தில், சீன முதலாளிகளின் சுரண்டலும் சூறையாடலும் பெரும் மூலதனத்தை உருவாக்கி விடுகின்றது. இந்த மூலதனம் நிதியாகவும், மூலதனமாகவும் எல்லை கடந்து செல்வது அதிகரித்து வருகின்றது. உள்வருவதும், வெளிச் செல்வதும் தலைகால் தெரியாத வேகத்தில் ஒருங்கே நடக்கின்றது. மறுபக்கத்தில் சீன முதலீடுகள், ஏகாதிபத்தியங்களுக்கு இணையாக புதிதாக உலகெங்கும் பாய்கின்றது.


அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்
2001 2002
அமெரிக்கா 14,400 3,000
சீனா 4,680 5,270
பிரான்ஸ் 5,520 5,150
பிரிட்டன் 6,200 2,500
ஜெர்மனி 3,400 3,800
கனடா 2,900 2,050
நெதர்லாந்து 5,120 2,910


2002இல் அந்நிய முதலீட்டை அதிகமிட்ட நாடுகளை எடுத்தால், சீனாவே அதிக முதலீட்டையிட்டது.


சீனா 5,270 கோடி டாலர்
பிரான்ஸ் 4,820 கோடி டாலர்
ஜெர்மனி 3,810 கோடி டாலர்
அமெரிக்கா 3,010 கோடி டாலர்
நெதர்லாந்து 2,920 கோடி டாலர்
பிரிட்டன் 2,500 கோடி டாலர்
கனடா 2,140 கோடி டாலர்
ஸ்பனியோல் 2,120 கோடி டாலர்
பிரேசில் 1,920 கோடி டாலர்
அயர்லாந்து 1,900 கோடி டாலர்
பெல்ஜியம் 1,830 கோடி டாலர்
இத்தாலி 1,460 கோடி டாலர்
ஹாங்காங் 1,370 கோடி டாலர்


2002இல் சீனாவே அதிக அந்நிய முதலீட்டை உலங்கெங்கும் நடத்தியது. இதன் மூலம் உலகம் புதிய கெடுபிடிக்குள் நகர்கின்றது. பாரம்பரியமான ஏகாதிபத்தியங்கள் கடும் நெருக்கடியில் சிக்கி நிற்கின்றன. ஜப்பான் முன்னணி பட்டியலில் இருந்தே காணாமல் போனது. ஒன்றுபட்ட ஐரோப்பிய முதலீடுகளே அதிகரித்துச் செல்லுகின்றது. இதனுடன் சீனா மற்றும் ஹாங்காங் கணிசமான ஒரு அந்நிய முதலீட்டை உலகெங்கும் நடத்துகின்றது. உண்மையில் சர்வதேச ரீதியான நெருக்கடி புதிய வடிவில் சிக்கலாகி, கோரமாகி வருகின்றது.
2000இல் மொத்தமாக ஏகாதிபத்திய அரசுகளின் அந்நிய முதலீடு 73,500 கோடி டாலராகும். இது 2002இல் அரைவாசியாகியது. இந்த நெருக்கடியான காலத்தில் சீனா முழு வேகத்தில் உலகில் தலைநீட்டியது. 5270 கோடி டாலரை நேரடியாக முதலீடு செய்தது. சீனா 1991 தொடங்கி 2002 முடிந்த 12 வருடத்தில் மொத்த அந்நிய முதலீடாக 44,800 கோடி டாலரை உலகெங்குமிட்டது. அதேநேரம் ஹாங்காங்குடன் சேர்ந்ததால், அந்நிய முதலீடு 89,100 கோடி டாலராக மாறியுள்ளது. இது உலகில் இரண்டாவது மிகப் பெரிய அந்நிய முதலீடாகும். முதலாவது இடத்தில் உள்ள அமெரிக்காவோ, 1,35,100 கோடி டாலரை அந்நிய முதலீடாக உலகெங்கும் கொண்டுள்ளது. அதேநேரம் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளின் முதலீடு கடந்த 12 வருடத்தில் 1,50,100 கோடி டாலராகும். பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய முதலீடு 1,03,300 கோடி டாலராகும். இது போல் பிரான்ஸ் 63,200 கோடி டாலரும், ஜெர்மனி 57,800 கோடி டாலருமாகும். ஒருபுறம் அரசின் அந்நிய முதலீடும், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அக்கம் பக்கமாகவும், ஒன்றுக்குச் சார்பாக மற்றொன்றாக இயங்கி உலகையே சூறையாடுகின்றது.


உலகில் ஏகாதிபத்தியங்களின் (தொழில்வள நாடுகளின்) மொத்த அந்நிய முதலீடுகள் 2002 முடிய உலகளாவில் 7,10,000 கோடி டாலராகும். இது அந்நிய மொத்த முதலீட்டில் 90 சதவீதமாகும். இந்த அந்நிய முதலீட்டில் 4,60,000 கோடி டாலர் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி சொந்தமாக இருந்தது. மறுபக்கத்தில் பெர்லின் சுவர் தகர்க்கப்படும் முன்பாக, 1990இல் மத்திய ஐரோப்பாவின் அந்நிய முதலீடு 300 கோடி டாலரே இருந்தது. இது 2002இல் 18,800 கோடி டாலராகியது. அதாவது 12 வருடத்தில் 60 மடங்கு மேலாகவே, அந்நிய மூலதனம் மத்திய ஐரோப்பாவில் ஊடுருவியது. கம்யூனிசத்துக்கு எதிரான சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோசத்தின் பின் உள்ள உள்ளடக்கம் இப்படி வக்கிரமாக வெளிப்பட்டு நிற்கின்றது. அங்கு வாழ்ந்த மக்களின் தலைவிதி சூறையாடலுக்குட்பட்டு, இருந்த கோவணத்தையும் இழப்பதையே துரிதப்படுத்துகின்றது.


இது தனித்து ஒரு பக்கம் மட்டும் ஒரு போக்கில் நிகழவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் பண்பான அமெரிக்காவின் தனிப் பலத்தையும் கூட சிதைக்கத் தொடங்கியுள்ளது. உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் என்பது மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. தனது பலத்தைக் கொண்டு 1949இல் அமெரிக்கா 30 முதலாளித்துவ நாடுகளின் பணமதிப்பை ஒரே நேரத்தில் குறைக்க வைத்தது. 1950இல் அமெரிக்காவின் அந்நிய முதலீடு 20,550 கோடி ரூபாவாகியது. இது 1976இல் இது 2,40,000 கோடி ரூபாவாகியது. இது ஏகாதிபத்தியங்களின் மொத்த மூலதன ஏற்றுமதியில் 52 சதவீதமாக இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்காவின் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு 1957இல் 10880 கோடி ரூபாவாக இருந்தது. இது 1982இல் 384360 கோடி ரூபாவாக மாறியது. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு 35 சதவீதமகவும், அரசு முதலீடு 13 சதவீதத்தாலும் அதிகரித்தது. 1970க்கும் 1978க்கும் இடையில் அந்நிய முதலீடு 1920 கோடி டாலரில் இருந்து 4050 கோடி டாலராக அதிகரித்தது. அதேநேரம் இந்த முதலீட்டால் கிடைத்த லாபம் 290 கோடி டாலரில் இருந்து 890 கோடி டாலராக அதிகரித்தது. 1970இல் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் அந்நிய வெளிநாட்டு முதலீட்டில் 84.2 சதவீதம் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவிலேயே இட்டுயிருந்தனர். இதில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. முதலீடுகள் அதிகளவில் ஏகாதிபத்தியத்தின் உள்ளும் நகரத் தொடங்கியது.


1999இல் அமெரிக்காவில் மூலதனம் உலகளவில் பரவிய விதம்

மொத்த மூலதனத்தின் சதவீதத்தில் மூலதனத்தில் அளவு
தென் அமெரிக்கா 19.7 22,300 கோடி டாலர்
தென் கடல் தீவுகள் 3.5 4,000 கோடி டாலர்
ஆசியா 13 14,600 கோடி டாலர்
கனடா 10 11,200 கோடி டாலர்
ஐரோப்பா 51.5 58,200 கோடி டாலர்
மத்திய அரேபியா 1 110 கோடி டாலர்
ஆப்பிரிக்கா 1.3 130 கோடி டாலர்

1955இல் மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு முதலீடு 25840 கோடி ரூபாவாக இருந்தது. அதேநேரம் ஏகபோக தனியார் முதலீடு 11,840 கோடி ரூபாவாக இருந்தது. இந்த அந்நிய முதலீடு மேற்கில் 1999இல் 58,200 கோடி டாலராகியது. இது உலகளாவிய அமெரிக்காவின் அந்நிய முதலீட்டில் 51.5 சதவீதமாகியது. லெனின் கூறியது போல் ஏகாதிபத்தியத்தை இனங் காண்பதற்குரிய குணாதிசயமாக இருப்பது விவசாயப் பிரதேசங்களை மட்டும் அது கைப்பற்ற முனைகின்றது என்பது அல்ல. வெகுவாய்த் தொழில் வளர்ச்சியடைந்த பிரதேசங்களையும் அது கைப்பற்ற முனைவது ஆகும் என்றார். ஏகாதிபத்திய அமெரிக்கா உலகெங்கும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான தனது பொருளாதார பலத்தின் மூலம் உலகெங்கும் கால் பரப்பியது.


ஆனால் நிலைமை இன்று தலை கீழாகியுள்ளது. சீனா, ஜப்பான், ஐரோப்பா உலகளவில் அதிக அந்நிய முதலீடுகளை இட்டு உலகை அன்றாடம் மறுபங்கீடு செய்கின்றது. இதேபோல் 2002இல் ரசியா கிழக்கு ஐரோப்பாவில் நேரடியாக இட்ட அந்நிய முதலீடு 400 கோடி டாலராகியது. இது 2003இல் 680 கோடி டாலராகியது. 2003இல் ரசியா தனது வெளிநாட்டு அந்நிய முதலீட்டை 65 சதவீதத்தால் உயர்த்தியது. மொத்தத்தில் இவற்றுக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா கடுமையான தற்காப்பில் ஈடுபடுவதுடன், பகிரங்கமான பலாத்காரமான ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றது. உலக வர்த்தகத்தைக் கைப்பற்றும், உலகளாவிய நெருக்கடியின் மொத்த விளைவு என்ன எனப் பார்ப்போம். அமெரிக்கா, பிரிட்டன் 2003க்கு முந்திய இரண்டு வருடத்தில் தனது அந்நிய முதலீட்டின் அளவை 37,000 கோடி டாலரால் இழந்தது. 2003க்கு முந்திய பத்து வருடத்தில் அந்நிய முதலீட்டின் அளவு 37,000 கோடியால் குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அந்நிய முதலீடுகளின் சரிவு வேகமாக நடக்கின்றது.


அமெரிக்காவின் அந்நிய முதலீடு


2002 3010 கோடி டாலர்
2001 13080 கோடி டாலர்
2000 30770 கோடி டாலர்
1999 28950 கோடி டாலர்

இதேபோல் பிரிட்டனின் அந்நிய முதலீடு


2002 2500 கோடி டாலர்
1999 6200 கோடி டாலர்


அந்நிய முதலீட்டின் சரிவால் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஏற்படும் சர்வதேச நெருக்கடிகள் கடுமையானவை. இது இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பாக மாறுகின்றது. இது தவிர்க்க முடியாமல், ஏகாதிபத்தியத்துக்கிடையிலான ஒரு போருக்கான சர்வதேச நெருக்கடிக்குள் இழுத்துச் செல்லுகின்றது. அமெரிக்காவின் அந்நிய முதலீடு 2002இல் மிக குறைந்த அளவை எட்டியது. இது 2002இல் 3010 கோடி டாலராகியது. பிரான்சை எடுத்தால் 2002இல் 5,150 கோடி டாலராக இருந்த அந்நிய முதலீடு 2001இல் 5,260 கோடி டாலராக இருந்தது. மேற்கத்திய அந்நிய முதலீடு 2002இல் 49,000 கோடி டாலராக இருந்தது. இது 2001இல் 61,500 கோடி டாலராக இருந்தது. பொதுவான சரிவு அந்நிய முதலீட்டில் காணப்பட்ட போதும், அதில் ஏற்றத்தாழ்வு ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடுமையாகவே பிரதிபலித்தது. 2002இல் பிரான்சின் 22,119 பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் உலகெங்கும் உற்பத்தியில் ஈடுபட்டது. இது உலகளாவிய அந்நிய முதலீட்டில் 4 சதவீதமாகும். இதன் மொத்த பெறுமதி 60,000 கோடி ஈரோவாகும்.


பிரான்சின் உலகளாவிய முதலீடுகளின் எண்ணிக்கை


பிராந்திய ரீதியாக
ஆசியா 3,371
மத்திய கிழக்கு 772
ஆப்பிரிக்கா 2,733
தென் அமெரிக்கா 1,346
வட அமெரிக்கா 2,766
ஐரோப்பா 11,131
மொத்தம் 22,119


பிரெஞ்சு அந்நிய முதலீடுகள் தொடர்ந்தும் அதிகரித்து செல்லுகின்றது. இது பிராந்திய ரீதியாக சில பிரதேசங்கள் குறித்த ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தைக் கூட உருவாக்குகின்றது. இன்று அந்நிய மூலதனம் பிராந்திய ஆதிக்கத்தைக் கூட உருவாக்குகின்றது. உதாரணமாக தென் அமெரிக்காவை அமெரிக்காவும், ஆப்பிரிக்காவை குறிப்பாக பிரான்சின் ஆதிக்கத்தையும் பிராந்திய ரீதியாகவே தக்க வைக்கின்றது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையிலான புதிய சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்புகள் பிரெஞ்சு மூலதனத்துக்கு, சர்வதேச நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றது. இக்காலத்தில் பிரான்சின் அந்நிய முதலீடுகளின் எண்ணிக்கையை எடுத்தால்


2000 2,994
2001 1,926
2002 1,778
2003 1,755


தொடர்ச்சியாக முதலீடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டிருப்பதை, இது எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச ரீதியாக பொது நெருக்கடி ஒன்று, அங்குமிங்குமாக அலைபாய்கின்றது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பிரிட்டனின் வெளிநாட்டு முதலீடுகளே உலகளாவியதில் மிகப் பெரிய பங்கு வகித்தது. 1914இல் பிரிட்டிஷ் முதலீடு உலகளாவிய அந்நிய முதலீட்டில் 45.5 சதவீதமாக இருந்தது. இது 1978இல் 16.2 சதவீதமாகவும், 1990இல் 13.8 சதவீதமாகவும், 1994இல் 11.8 சதவீதமாகவும் வீழ்ச்சிக் கண்டது. இந்த வீழ்ச்சி தொடர்ந்து வருகின்றது. இந்த வீழ்ச்சி கடுமையான ஏகாதிபத்திய நெருக்கடிகளை அலையலையாக உருவாக்கி வருகின்றது. ஈராக், சூடான்... என்று தொடரும் பல நேரடி இராணுவ ஆக்கிரமிப்புக்கள் எல்லாம், உலகை மறுபங்கீடு செய்யும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடாகவே தொடருகின்றது. இந்த நிலைமை என்பது தொடர்ந்தும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தின் ஊடாகவே நகருகின்றது. உதாரணமாக நெதர்லாந்து 1999க்கும் 2002க்கு இடையில், அந்நிய முதலீடு 5120 கோடி டாலரில் இருந்து 2920 கோடியாகக் குறைந்துள்ளது. பிரான்சின் அந்நிய முதலீடு 5260 கோடி டாலரில் இருந்து 4820 கோடியாகக் குறைந்துள்ளது. 2002இல் உலகளவில் மொத்தமாக அந்நிய முதலீடு 61500 கோடி டாலராக இருந்தது. இது 2003இல் 49000 கோடி டாலராக குறைந்தது. இது ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலும், அது போல் ஏகாதிபத்தியத்துக்கும் மக்கள் கூட்டத்துக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டைக் கொண்ட கெடுபிடியான காலகட்டத்துக்குள் நுழைந்துள்ளதையே எடுத்துக் காட்டுகின்றது. அந்நிய முதலீடுகள் வரலாற்று ரீதியான ஒரு தொடர்ச்சியான ஏகாதிபத்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்ததாகவே இருந்து வந்துள்ளது.


உலகையே கொள்ளை அடிக்க, எல்லை கடந்த ஏகாதிபத்திய அந்நிய முதலீடுகளின் மொத்த வரலாற்றையும் பார்ப்போம்.


1960 6,800 கோடி டாலர்
1967 11,200 கோடி டாலர்
1973 21,100 கோடி டாலர்
1980 51,300 கோடி டாலர்
1985 68,600 கோடி டாலர்
1990 1,71,400 கோடி டாலர்
1993 2,13,500 கோடி டாலர்
1994 2,41,200 கோடி டாலர்
1995 2,84,000 கோடி டாலர்
1996 ,14,500 கோடி டாலர்
1997 3,42,300 கோடி டாலர்
1998 4,11,700 கோடி டாலர்
2002 7,10,000 கோடி டாலர்


1960க்கும் 1998க்கும் இடையிலான அதாவது 38 வருடத்தில், எல்லை கடந்த வெளிநாட்டு மூலதனம் 60 மடங்கு மேலாக பெருகிக் கொழுத்துள்ளது. அதாவது மூலதனப் பாய்ச்சல் 6,000 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது 2002உடன் ஒப்பிடும் போது 104 மடங்காகியது. அதாவது மூலதனப் பாய்ச்சல் 10,400 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 1990க்கும் 1998க்கும் இடைப்பட்ட காலத்தில் 2.4 மடங்கால் மூலதனப் பாய்ச்சல் நடந்துள்ளது. அதாவது 240 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2002 உடன் ஒப்பிடும் போது 414 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உண்மையில் உலகமயமாதல் என்பது எல்லை கடந்து பாய்ந்து செல்லும் அந்நிய மூலதனத்தின் சூறையாடும் நலன்களுடன், இறுகப் பின்னிப் பிணைந்தவையே என்பதை மீண்டும் இவை துல்லியமாக நமக்குச் சுட்டி நிற்கின்றது. இங்கு தேசியம் என எதுவும், இன்று நிலவும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் கிடையாது என்பதை, மூலதனம் முகத்தில் அறைந்தாற் போல் பளிச்சென்று பதிலளிக்கின்றது.


அந்நிய மூலதனத்தின் ஆதிக்கமே ஜனநாயகமாகி அதுவே சுதந்திரமானதாகிவிட்டது. தேசிய அரசுகள் என்று நாம் நம்பும் எல்லைகளைக் கடந்து ஏகாதிபத்தியங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை ஏகாதிபத்தியம் சார்ந்த தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இப்படி 1991இல் 40,000 பன்னாட்டு நிறுவனங்களும், அதனுடன் இணைந்த 2.5 லட்சம் வெளிநாட்டுக் கிளை நிறுவனங்களும் உலகு எங்கும் எல்லை கடந்து விரிந்து கிடந்தன. 2000இல் 60,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் 8.2 லட்சம் அந்நிய முதலீட்டை நடத்தி இருந்தது. 2002இல் 65000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள், உலகளவில் 8.5 லட்சம் அந்நிய முதலீட்டை நடத்தி இருந்தது. அந்நிய முதலீடு தேசிய எல்லை கடந்து, தேசிய அரசுகளின் மேல் தமது ஆதிக்கத்தை நிறுவி வருகின்றது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இவற்றைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்கள் தான், உலகமயமாதல் என்னும் சட்டதிட்டங்கள். இவற்றையே தேசிய அரசுகள் தமது சட்டதிட்டமாக்கி வருகின்றது. 1991இல் இவற்றின் மொத்த விற்பனை வருமானம் 4,80,000 கோடி (4.8 டிரில்லியன்) டாலராகும். அதாவது 1980இல் கிடைத்த வருமானத்தைப் போல் இது இரண்டு மடங்காகும். தேசங்களின் எல்லை கடந்து சூறையாடும் உலகமயமாதலின் வெற்றி என்பது, 11 வருடத்தில் அதன் வருமானம் இரண்டு மடங்கானதைக் காட்டுகின்றது. இது இன்று பல மடங்காகிவிட்டதை மேலுள்ள தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.


உலகைக் கைப்பற்றும் சர்வதேச நெருக்கடியில், 1994இல் உலகளவில் பன்னாட்டு நிறுவனங்களின் நிலையான வெளிநாட்டு முதலீடு 2,60,000 கோடி டாலராக அதிகரித்த அதே நேரம், அதன் உற்பத்தி 23,000 கோடியாக இருந்தது. அதாவது அந்நிய முதலீட்டின் மூலம் செய்த உற்பத்தியை, 19 நாடுகளின் தேசிய வருமானம் மட்டுமே இதைவிட அதிகமாக இருந்தது. வருடாந்தரம் நடக்கும் புதிய முதலீடுகள் மூலம் செய்யும் உற்பத்தி, பல தேசங்களின் வருடாந்தர தேசிய உற்பத்தியை விட அதிகமாகும் போக்கு, சர்வதேச போக்காகவே இது பரிணமித்துள்ளது.


மிக வறுமைக்குள்ளான மிகவும் பின்தங்கிய நாடுகளைக் கூட ஏகாதிபத்தியம் சூறையாடுவதில் இருந்து விதிவிலக்காக விட்டு விடுவதில்லை. நிதி மூலதனத்துக்கான வட்டி முதல் நேரடி அந்நிய மூலதனம் மூலம் சுரண்டுவது வரை விதிவிலக்கற்ற பொது நடைமுறையாக இருப்பதே உலகமயமாதலாகும். ஏகாதிபத்தியம் சூறையாடுவதால் அதிக மரணவீதத்தைக் கொண்ட ஆப்பிரிக்காவில், 1996இல் போடப்பட்ட பன்னாட்டு மொத்த முதலீடு 550 கோடி டாலராகும் இது உலகளாவிய முதலீட்டில் 1.5 சதவீதமாகும். 1997இல் இந்த முதலீடு 900 கோடி டாலராகியது. இது 1970இல் 100 கோடி டாலராக மட்டுமே இருந்தது. 1983 முதல் 1987 வரையான காலத்தில் சராசரி வருடம் 190 கோடி டாலர் முதலீடாக அமைந்தது. வறுமை தலைவிரித்தாடும் ஆப்பிரிக்காவில், பண்ணை மந்தைகளாகி கையேந்தி நிற்கும் மக்கள், ஏகாதிபத்தியக் கொள்ளையால் அன்றாடம் பல லட்சக்கணக்கில் இறக்கின்றனர். அதையிட்டு கவலைப்படாத ஏகாதிபத்தியம் முன்பைவிட கொடூரமாகவே அங்கிருந்து செல்வத்தைக் கவர்ந்து வருகின்றனர். இதையே அதிகரித்து வரும் பன்னாட்டு முதலீட்டின் அளவு சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.


1997இல் மேற்கு அல்லாத நாடுகளில் அந்நிய முதலீடுகளை பிராந்திய ரீதியாக எடுத்து ஆராய்ந்தால்


தென் அமெரிக்கா மற்றும் கரிபிய நாடுகள் 11891.8 கோடி டாலர்
கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் நாடுகள் 10425.7 கோடி டாலர்
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா 4987.5 கோடி டாலர்
தென் ஆசியா 1111.0 கோடி டாலர்
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு 789.9 கோடி டாலர்
ஆப்பிரிக்கா 667.4 கோடி டாலர்


1997இல் மேற்கு அல்லாத பிரதேசங்களில் அந்நிய முதலீடுகள் 29,873 கோடி டாலராக இருந்தது. அதேநேரம் அந்நிய முதலீடு உலகளவில் 3,42,300 கோடி டாலராக இருந்தது. ஆனால் 1970இல் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனியின் மொத்த அந்நிய முதலீட்டில் 84.2 சதவீதம் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன் அமெரிக்காவில் போட்டிருந்தது. உலகமயமாதல் வேகம் பெற்ற போது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடந்த மாற்றங்கள், அந்நிய மூலதனத்தில் ஒரு பகுதியை உள்ளிக்க தொடங்கியது. இதையே 1997இல் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் செய்த முதலீட்டை விடவும் மேற்கில் 9 மடங்கு மேலானதாக இருந்தது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் செலவுடன் கூடிய கூலியை ஒப்பிடும் போது, மேற்கு அல்லாத நாடுகளின் முதலீட்டின் அளவு உயர்ந்தது. பணத்தின் பெறுமானத்தை டாலருடன் ஒப்பிட்டால், அவை பல பத்து மடங்காகவே இருக்கின்றது. உதாரணமாக 2003 பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு சிலியை எடுத்தால் 635 மடங்காகும். இதே போல் இந்தியா 45 மடங்காகவும், இலங்கை 100 மடங்காகவும், நைஜீரியா 136 மடங்காகவும், நேபாளம் 74 மடங்காகவும், வங்காளதேசம் 60 மடங்காகவும், தாய்லாந்து 40 மடங்காகவும் உள்ளது. உதாரணமாக மேற்கு அல்லாத முதலீடு மற்றொரு நாட்டில் ஊடுருவும் போது, ஒரு நாட்டின் பணத்தின் பெறுமானத்துக்கு ஏற்ப பலமடங்காகின்றது. இங்கு கூலியுடன் ஒப்பிடும் போதும் இதே நிலைதான் உள்ளது. உதாரணமாக பணம் 50 மடங்கால் பணப் பெறுமதி உயரும் போது, மேற்கு அல்லாத முதலீடு 14,93,650 கோடியாகின்றது. இது 100 மடங்காகும் போது 29,87,300 கோடியாகி விடுகின்றது. நாட்டின் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் போது, இந்த முதலீட்டின் பெறுமானம் மிகப் பெரியதாக இருப்பதுடன், அனைத்தையும் மாற்றி அமைக்க கூடிய ஒன்றாக இருப்பதைக் காணமுடியும். மொத்த முதலீட்டை அந்தந்த நாட்டின் பணப் பெறுமதியில் ஒப்பிடும்போது, மேற்கு அல்லாத முதலீட்டை மேற்குடன் ஒப்பிடும்போது அது பல மடங்காகி விடுகின்றது. தேசங்கள் எப்படி அழிந்து சிதைந்து வருகின்றது என்பதையும், தேசிய முதலாளித்துவம் எப்படி சூறையாடப்பட்டு வருகின்றது என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. தேசங்களின் தலைவிதியை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒரு தொடர்கதையாகின்றது. இதைப் புரிந்து கொள்ள, தேசங்கடந்த அந்நிய முதலீட்டின் அளவை ஒப்பீட்டில் சில நாடுகளைச் சார்ந்து பார்ப்போம்.


அந்நிய முதலீடு நேரடியாக கோடி டாலரில்


இஸ்ரேல் எகிப்து இந்தியா பிரிட்டன் செக் குடியரசு கங்கேரி இலங்கை
1997 174.3 89.1 300.6 6300.5 100.2 16.68 43.3
1998 49.4 107.6 200.6 11900.7 200.7 21.44 20.6
1999 141.4 106.5 200.2 20600.5 500.1 23.72 20.1
2000 383.2 123.5 200.5 25900.5 400.6 28.22 17.8
2001 120 40 300.2 18500.3 400.8 29.26 17.2
2002 150 30 400.3 16300.7 400.9 26.12 -


2001இல் அந்நிய முதலீடு


மொறக் 265.8 கோடி டாலர்
அல்ஜிரியா 118 கோடி டாலர்
எகிப்து 51 கோடி டாலர்
துருக்கி 86.2 கோடி டாலர்
சிரியா 20.5 கோடி டாலர்
ஜோர்டான் 10 கோடி டாலர்


தேசங்கடந்த அந்நிய மூலதனங்களைக் கொண்டு நிலையான மூலதனத்தை உருவாக்கி உலகத்தையே அடிமைப்படுத்தி சுரண்டும் ஏகாதிபத்தியம், புதிய நாடுகளை அடிமைப்படுத்த புதிய மூலதனங்களை நகர்த்துகின்றது. பெரும் மூலதனங்கள் மூலம் பல நாடுகளை அடிமைப்படுத்திய மூலதனம், புதிய நாடுகளை நோக்கி பெருமெடுப்பில் நகர்வது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. உலகில் மிகப் பலவீனமான மக்கள் கூட்டங்களை அடிமைப்படுத்தவும், உயர்ந்த சுரண்டல் வீதமே எப்போதும் முன்நிபந்தனையாக உள்ளது. இதை நிறைவு செய்ய உயர்ந்த தொழில் நுட்பத்தை இயக்கவல்ல, இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்ட நாடுகளில் மூலதனத்தில் பாய்ச்சல் அலை அலையாக இடமாறி நகர்கின்றது. அதாவது உயர்ந்த சுரண்டல் வீதத்தைக் கோரும் அதேநேரம், அதிலும் பணப் பெறுமதியில் உயர்ந்த டாலர் விகிதத்தையும் கோருகின்றது. இதற்குத் தொழில் நுட்ப அறிவை இலவசமாகப் பெறக் கூடிய இலவச தொழிலாளர் படை உள்ள நாடுகளைத் தெரிவதுடன், வேலையின்மை அதிக வீதத்தில் உள்ள நாடுகளைத் தெரிவு செய்கின்றனர். தொழிலாளர்களின் நிரந்தர அடிமைத்தனத்தை விலைபேசி விற்றுவிடக் கூடிய நாடுகளையும், மூலதனத்தின் சுயேச்சையான கட்டுப்பாடுகளற்ற இலகுவான சூறையாடலுக்கு இசைவான நாடுகளையே மூலதனம் தெரிவு செய்கின்றது. மூலவளங்களை மிக மலிவு விலையில் பெறக் கூடிய நாடுகள் தெரிவு செய்யப்படுகின்றன. இதனடிப்படையில் தான் மூலதனம் உலகெங்கும் எகிறிக் குதிக்கின்றது.


உண்மையில் இவை தேசவளங்களை, தேச எல்லைகள் கடந்து சூறையாடப்படுவதைக் காட்டுகின்றது. உலகளவில் மக்கள் தமது வாழ்க்கையை இழந்து வந்ததையும், இழந்து வருவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரத்தம் குடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், இதன் தொங்கு சதைகளும் நாட்டின் எல்லையைக் கடக்கும் முன்பு, அங்கிருந்த வளங்களை நுகர்ந்தவர்கள் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள்தான். ஆனால் அதை இன்று பன்னாட்டு நிறுவனங்கள் தேச எல்லை கடந்து தேசத்தை பலாத்காரமாகப் புணர்ந்து, மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பின்பு, வீதிகளில் வெற்று உடல்களாக எறிந்து விடுவதை உலகமயமாதல் செய்கின்றது. உலகமயமாதல் பற்றி பல்வேறு விதண்டாவாதமான, வக்கிரமான கருத்துக்கள் அனைத்தும், எதார்த்தத்துக்கு நேர்மாறானதாகவே உள்ளது. அறிவுத் துறை சார்ந்த பூச்சூடல்கள் எல்லாம் எதார்த்தத்தைக் கடந்த வக்கிரமானதாக இருப்பதையே புள்ளிவிபரங்கள் துல்லியமாக எடுத்துக் காட்டி நிறுவுகின்றது. அதே போல் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையும், தேசங்களில் நடந்துவரும் மாற்றங்களும் உலகமயமாதலின் கோரமான விளைவுகளாகி எதார்த்தத்தில் காட்சிப் பொருளாகின்றது.