பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Tuesday, October 13, 2020

கடன் தரப்படுத்தல் அறிக்கை என்றால் என்ன?

 அண்மையில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட செய்தியொன்று, பலருக்கு ஆச்சரியமானதாக இருந்திருக்கலாம். இப்படி எல்லாம் எங்கள் நாட்டில் இருக்கிறதா எனும் கேள்வியை எழுப்பி இருக்கலாம். இன்னும் சிலருக்கு, இலங்கையின் சேவைப்படுத்தல் மிக இலகுபடுத்தப்பட்டிருக்கிறதே என்று  மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம்.  எனவே, கடந்த வாரங்களில் பேசப்பட்ட கடன்தரப்படுத்தல் அறிக்கைகளை, நேரடியாக பொதுமக்களே பெற்றுக்கொள்ள முடியும். கடனுக்கு உத்தரவாதம் வழங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் நிலையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய செயன்முறையை பார்க்கலாம். 

இலங்கையின் தனிநபர் கடன் சுமையானது, நகரம், கிராமம் முழுவதுமே வெவ்வேறு வடிவங்களில் பரந்து கிடக்கின்றன. கிராமங்களிலுள்ளவர்கள் நுண்கடன் சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்க, நகரங்களில் வாழ்பவர்கள் கடனட்டை சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், கடனை அடைத்துக்கொள்ள இன்னுமொரு கடனைப் பெற்றுக்கொள்வ​ைதயும் ஒரு கடனட்டை உச்சவரம்பை எட்டிக்கொள்கின்றபோதும், மற்றுமொரு கடனட்டையைப் பெற்று பயன்படுத்துவதையும் ஒரு தீர்வாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மற்றுமொரு வங்கியோ அல்லது கடனட்டை வழங்கும் நிறுவனமோ எப்போது கடனை அல்லது கடனட்டை வழங்குவ​ைத  நிறுத்திக் கொள்ளுகின்றதோ அப்போதுதான் உண்மையான கடன்சுமையை உணரத் தொடங்குவதுடன், அதை மீளச் செலுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். 

கடனையும் கடனட்டையும் ஒரு வங்கியில் பெற்றுக்கொள்ளுபவர்கள், மற்றுமொரு வங்கியில் கடனைப் பெற்றுக்கொள்ளச்செல்லும்போதும் முன்னைய வங்கியில், பெற்றுக்கொண்ட வங்கிக்கடன் தொடர்பில் அவர்களுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடனையே, கடனைப் பெற்றுக்கொள்ளச் செல்கிறார்கள். ஆனால், இலங்கையில் கடனொன்றை அல்லது கடனட்டை ஒன்றை பெற்றுக்கொள்ளும் எந்தவொரு நபரினதும் தகவல்,  இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகத்தில் (CRIB ) பதிவாகின்றது என்பதையும், அதை எந்தவொரு நிதி நிறுவனமும் குறித்த தனிநபரும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள். இதனால், மற்றுமொரு வங்கியோ, கடனட்டை நிறுவனமோ, கடன் அல்லது கடனட்டை விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது, செய்வதறியாது நிற்கும் நிலை ஏற்படுகின்றது. 

இந்தக் கடன்கொடுகடன் பணியகம்,  தமது கடனுக்கான அறிக்கை, சரியான விழிப்புணர்வு போன்றவை தொடர்பாக, நம்மவர்களின் நிதியியல்சார் கல்வியறிவு இல்லாததன் காரணத்தாலேயே, கடன் மீள்செலுத்தும் திறன் பற்றியும் இதனால் ஏற்படும் சிக்கல்தன்மை குறித்தும் பலர் அறிந்திருப்பதில்லை.  

கடன்தரப்படுத்தல் என்றால் என்ன? 

கடன்தரப்படுத்தல் எனப்படும் இலங்கையின் கடன்கொடுகடன் பணியகமானது, நாட்டின் கடன் தரப்படுத்தலை மேம்படுத்தும் நோக்கிலும், கடன் வழங்கல், பெறுதலில் ஒரு சீராக்கத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் தெற்காசியாவிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட நிறுவகமாகும். 1980ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவகத்தில், இலங்கை மத்திய வங்கி பங்குதாரராக இருப்பதுடன், இதற்கு மேலதிகமாக மேலும் 93 பங்குதாரர்களை அங்கமாகக்கொண்டு, இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. மொத்தம் 94 பங்குதாரர்கள் பட்டியலில் 25 வணிக வங்கிகளும் 7 விஷேட வங்கிகளும், 45 பதிவு செய்யப்பட்ட நிதிநிறுவனங்களும்   6 குத்தகை நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். 

கடன்தரப்படுத்தல் நிறுவனத்தின் மிகப்பெரும் நோக்கமே, வாடிக்கையாளர்களுக்கு மிக இலகுவாகவும் விரைவாகவும் கடன்தகவல்களை வழங்கு வதுடன், நாட்டின் கடன்நிலையை ஸ்திரமானநிலையில் கொண்டுநடாத்த உதவுவதாகும்.  

கடன்தரப்படுத்தல் பயன்பாடுகள் என்ன? 

கடன்தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையிலுள்ள வங்கிகள்,  நிதிநிறுவனங்கள் அனைத்துமே தமது கடன்தொடர்பான விபரங்களையும் தம்மிடம் கடன் பெற வருபவர்கள் தொடர்பானத் தகவல்களை ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் ஆவணக் கோரிக்கைகளின் வாயிலாகவே பெற்றுக்கொண்டிருந்தார்கள். இதன்காரணமாக, வங்கிகள் , நிதி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, மாதக்கணக்கில் காத்திருக்கும்நிலை ஏற்பட்டது. ஆனால், இலங்கை கொடுக்கடன் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு, அனைத்து தகவல்களும் ஒன்றுதிரட்டப்பட்டு ஓரிடத்தில் ஆவணப்படுத்தப்பட்டு, முறையானவகையில் உடனுக்குடன் தேவைப்படும் தரப்பினருக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை கொடுக்கடன் பணியகத்தின் தகவல் களஞ்சியமானது, ஒவ்வொரு மாத இறுதியிலும், தன்னியக்க முறையில் அங்கத்துவம் கொண்ட நிறுவனங்களின் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலமாக, எந்தவொரு நிறுவனமும் பொது மகனும் தனது கடன்நிலை தொடர்பில் மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இந்தத் தகவல் களஞ்சியத்திலுள்ள தகவல்கள் தனி நபர்களின் தேசிய அடையாள அட்டை எண் அடிப்படையிலும் நிறுவனங்களின் தகவல்கள், வியாபார பதிவெண்ணின் பிரகாரகமும் மிக இலகுவாகக்
கண்டறியப்படுகிறது. 

கடன்தரப்படுத்தலில் உங்கள் பெயர் உள்ளதா? 

நம்மில் பலருக்குமே கடன்தரப்படுத்தல் தொடர்பான மிக தவறான அனுமானங்களே மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானவொன்று, இலங்கை கடன்கொடு பணியகத்தின் அறிக்கையில் இடம்பெறுகின்ற பெயர்கள், நிறுவனங்கள் அனைத்துமே, தமது கடனை மீளச்செலுத்தாதவர்களாகவே இருப்பர்கள் என்பதாகும். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.   

உதாரணத்துக்கு, தனிநபராகிய நீங்கள், வங்கியில் கடன் ஒன்றையோ அல்லது கடனட்டை ஒன்றையோ பெற்றுக்கொள்ளும்போது அல்லது மற்றுமொருவரின் கடனுக்காக உத்தரவாத கையொப்பத்தை வைக்கும் போது, உங்களது அனைத்து விவரமும் கடன்கொடு தகவல் பணியகத்தில் சேமிக்கப்பட்டுவிடும். இதற்கு அர்த்தம், கடன்கொடுகடன் பணியகத்தில் உங்கள் தகவல் வருவதால், நீங்கள் கடனை மீளச்செலுத்தாதவர் என்றாகிவிடாது. கடன்பெற்ற நீங்கள் மீளவும் மற்றுமொரு வங்கியில் கடனைப் பெற செல்லும்போது, இதுதொடர்பில் அறிவிக்கவும், இந்த நபருக்கான இயலுமைத்தன்மை தொடர்பில் குறித்த வங்கியோ, நிதிநிறுவனமோ அறிந்துகொள்ளவும், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில், கடன்தரப்படுத்தல் அறிக்கையின் வகைப்படுத்தலின் பிரகாரமே, ஒருவரது கடன் மீள்செலுத்தும் நிலையும், மற்றுமொரு கடன் பெறக்கூடிய நிலையும் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, கடன் அறிக்கையில் பெயர் இடம்பெற்ற ஒரே காரணத்தால், கடன் வழங்க மறுக்கப்படுவதுமில்லை, கடன்பெற்றவர் தவறாக வகைப்படுத்தப்படுவதுமில்லை. 

மேற்கூறிய உதாரணம்போலவே, குறித்த நிறுவனமொன்றின் உரிமையாளராக நீங்கள் உள்ள சந்தர்ப்பத்தில், குறித்த நிறுவனம் ஏதேனும் வங்கி கடனையோ அல்லது ஏதேனும் நிதி வசதிகளை பெற்றிருந்தாலோ நிறுவனத்தின் பெயரும் உங்களது பெயரும் கடன் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். 

எப்படியானது; எப்படிப் பெறுவது?

இலங்கை கடன்கொடு பணியகத்தால் வழங்கப்படும் கடன் அறிக்கையில், கடன் அல்லது கடனட்டை வழங்கிய நிறுவனத்தின் பெயர், பெற்றுக்கொண்டவரின் தனிநபர் விபரம், பெற்றுக்கொண்ட கடனின் அளவு, கடன் வழங்கப்பட்ட திகதி, மீள்செலுத்துகை முறை, கடனுக்காக வழங்கப்பட்ட உத்தரவாத முறை, மாதாந்தம் மீளச்செலுத்தும் தொகை, திகதி விவரம், மாதாந்த மீளசெலுத்தலில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பிலான குறிப்பு, அண்மையில் மீளச்செலுத்தி முடிக்கப்பட்ட கடனின் விவரம், பெற்றுக்கொண்ட கடனில் மீளசெலுத்தாமல் நிலுவையாக உள்ளவற்றின் விபரம், காசோலை வழங்குதலில் தொடர்பிருப்பின் அதுதொடர்பான விவரம், ஏதேனும் காசோலைகள் பணமாக்கப்படாது மறுக்கப்பட்டிருப்பின் அதுதொடர்பிலான விவரம், கடன் தொடர்பில் முக்கியமான ஏனைய விவரங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இவ்வறிக்கை, இலங்கை கடன்கொடு பணியகத்தால், தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். 

மேற்கூறிய கடன்தரப்படுத்தல் அறிக்கையை நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களது கடன் மதிப்பீடு தொடர்பில் அறிந்துகொள்ளக் கூடியவகையில் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு தற்போது வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றது. பொதுமக்காளாகிய நீங்கள், உங்களது கடன் மதிப்பீட்டை அறிந்துகொள்ளவோ அல்லது உங்களது பெயரில் யாரேனும் கடன் பெற்று ஏதேனும் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளவோ இந்தக் கடன் அறிக்கையைப் பெறுவது அவசியமாகவுள்ளது. இதற்கு, உங்களுக்கு அருகாமையிலுள்ள அல்லது நீங்கள் வங்கி கணக்கை கொண்டுள்ள ஏதேனுமொரு வங்கிக்கிளையில் குறித்த CRIB அறிக்கையை பெறுவதற்கான விண்ணப்பப்படிவத்ைத  இலவசமாகப் பெற்று பூரணப்படுத்தி கையளித்தாலே போதுமானது ஆகும். விண்ணப்பபடிவம் மட்டுமே இலவசமாக வழங்கப்படுவதுடன், குறித்த CRIB அறிக்கை நம்கைகளுக்கு கிடைக்க தனிநபர் ஒருவர் 150/- ரூபாயாயும், நிறுவனம் 500/- ரூபாயும் இலங்கை கொடுகடன் பணியகத்துக்கு கட்டணமாக செலுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் விண்ணப்பத்தைக் கையளித்த தினத்திலிருந்து அதிகூடியதாக இரண்டு வாரத்தில், CRIB அறிக்கையானது தபாலில் உங்களை வந்துசேரும். இ​ைத விடவும் மிகவேகமாக உங்களுக்கு CRIB அறிக்கை தேவைப்படின், இணையத்தில் (http://www.crib.lk/) தரவிறக்கிய விண்ணப்பப் படிவத்தை அல்லது வங்கியில் பெற்ற படிவத்தை பூரணப்படுத்தி, ஏதேனும் வங்கியின் அத்தாட்சிப்படுத்தலுடன், கொழும்பிலுள்ள இலங்கை கொடுகடன் பணியகத்தில் கையளிக்கும் அதேநாளில் குறித்த CRIB அறிக்கையை பெற்றுக்கொள்ள கூடியதாகவிருக்கும். குறித்த ஒருநாள் சேவைக்கு மேலதிகமாக 100 ரூபாய்  மட்டும் இலங்கை கடன் கொடுகடன் பணியகத்தால் அறவிடப்படுகின்றது. 

எனவே, தனிநபர் ஒவ்வொருவரும் தமது கடன்நிலை தொடர்பிலும் கடன் தரப்படுத்தல் தொடர்பிலும் அறிந்துகொள்ள, குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்ளுவது அவசியமாகிறது. குறித்த  அறிக்கையின் மூலமாக, நிதி நிறுவனங்களுக்குச் செல்ல முன்பே, உங்களது நிதி இயலுமைத் தன்மை, நிதி நிறுவனத்தில் மேலதிக நிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மை ஆகியவற்​ைற நீங்களாவே சுயமதிப்பீடு செய்து கொள்ள முடிவதுடன், அதற்கேற்ப உங்கள் வாழ்க்கை முறையையும் வாழ்க்கை செலவீனங்களையும் கூட நெறிப்படுத்திக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

Friday, May 22, 2009

வணிக வங்கி

வணிக வங்கி (Commercial bank) என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும்.இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும்.இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும். வணிக வங்கியால் சகலவிதமான வைப்புக்களையும் பேணமுடியும்,இவற்றில் முக்கியமானது நடைமுறை கணக்குகளை பேணல் மற்றும் கடனாக்கம் செய்தல் (accepting deposits and making loans, as well as other fee based services) என்பனவாகும்

பொருளடக்கம்

1 வணிக வங்கிகளின் சேவைகள்

2 வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்

3 இலங்கையின் சில வணிக வங்கிகள்

4 இவற்றையும் பார்க்க

வணிக வங்கிகளின் சேவைகள்


இவற்றின் பிரதான தொழிற்பாடு


பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப்(Deposit) பெறல் அவர்கள் கேட்கும் பொழுது அவற்றினைமீளளித்தல்


மேலதிக பற்றுகள்(Over Draft),கடன் வழங்கள்.( loans)


பிணைகள்,முறிகள் (Bonds) போன்றவற்றில் முதலீடல்.


காசோலை(Cheque) வழங்கல்.


ஏனைய தொழிற்பாடுகளாக


நிலையான வைப்புகளை பேணல்.


வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணல்.


வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்ப்படுத்தல்.


நகை அடகுபிடித்தல்.


நாணயமாற்றம் செய்தல்.


சர்வதேச கொடுக்கல் வாங்கல்களப் பேணல்.


ATM அட்டை,கடனட்டை(Credit card) வழங்கள்.
போன்றனவாகும்.

வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்


நடைமுறைக்கணக்கு (Current Deposits)

சேமிப்பு கணக்கு (Savings Deposits)

நிலையான வைப்பு(Fixed Deposits)

அழைப்பு வைப்பு (Call Deposits)


இலங்கையின் சில வணிக வங்கிகள்

  1. இலங்கை வங்கி
  2. மக்கள் வங்கி
  3. கொமர்ஷியல் வங்கி
  4. ஹட்டன் நசனல் வங்கி
  5. சம்பத் வங்கி
  6. செலான் வங்கி
  7. பான் ஏசியா வங்கி
  8. யூனியன் வங்கி
  9. நேசன் டிரஸ்ட் வங்கி
வங்கி

வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல் கடன்களை வழங்குதல் (loans) காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்) கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல். பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல் நாணய மாற்று செய்து கொடுத்தல் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல். வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக நேரடியாக ATM

மின்னஞ்சல்
தொலைபேசி

இணையம்

வங்கி அமைப்புக்கள்


வணிக வங்கி (Commercial bank) - காசோலை வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து பணத்தினை மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கி அமைப்புகள் மேற்கொள்ளவதில்லை

  1. சேமிப்பு வங்கி (Savings bank)
  2. வியாபார வங்கி (Merchant banks)
  3. கூட்டுறவு வங்கி (Cooperative Banks)
  4. அபிவிருத்தி வங்கி
  5. மூதலீட்டு வங்கி (Investment banks)
  6. மத்திய வங்கி (Central Bank) -

பொருளாதார உறுதி,பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும். இஸ்லாமிய வங்கி (Islamic banks) - இஸ்லாமிய சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி வழங்கப்படமாட்டாது. இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது


தனிநபர் நிதி

அடமானக் கடன்
கடன் அட்டை
காப்புறுதி
சொத்து வரி
வருமான வரி

அடமானக் கடன்

அடமானக் கடன் என்பது நிலம், வீடு, தொழில், அல்லது இதர அசையாப் பொருட்களை ஒரு வங்கி போன்ற ஒரு நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து பெறப்படும் கடன் ஆகும். பொதுவாக இப்படிப் பொறப்படும் நிதி தவணை முறையில் வட்டியுடன் செலுத்தப்படும். செலுத்த முடியாமல் போனால் அடமானம் வைக்கப்பட்ட பொருள் அந்த நிதி நிறுவனத்துக்க் சொந்தமாகும்.

கடன் அட்டை

கடன் அட்டை என்பது பணம் செலுத்தும் முறை. ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்த அவருக்கு வங்கியோ வேறு ஒரு வணிக நிறுவனமோ கடன் வழங்கும். கடன் அட்டையில் நிதி விபரமும் இதர தகவல்களும் சேமிக்கப்படும். ஒவ்வொருமுறை பயன்படுத்தப்படும் பொழுது இத்தகவல்களை கணக்குக்கு ஏற்ப இன்றைப்படுத்தப்படும்.
பொதுவாக இப்படி வழங்கப்படும் கடனுக்கு அதிக வட்டி அறவிடப்படும்.

காப்புறுதி

காப்புறுதி என்பது ஒரு இழப்பு அல்லது இடர் ஏற்படக்கூடிய சூழலில் அதில் இருந்து பாதுகாப்பதற்காக அல்லது மீழ்வதற்காக முன்னேற்பாட்டின் படி வழங்கப்படும் நிதி. எவ்வளவு பணம் பெறப்படும் என்பது எவ்வளவு காப்பீட்டு கட்டணம் கட்டப்பட்டது என்பதையும், இடர் எத்தகையது என்பதையும் பொறுத்தது ஆகும். சில தொழிற்பாடுகளுக்கு காப்புறுதி கட்டாயம் தேவைப்படும். எடுத்து காட்டாக கார் ஓட்டும் ஒருவர் காப்புறுதி வைத்திருக்க வேண்டும்.
பெரும்பான்மை காப்புறுதிகள் வணிக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை. சில காப்புறுதிகள் கூட்டுறவுகளால் நிர்வகிக்கப்படுபவை. அரசும் மருத்துவம் போன்ற சில சேவைகளுக்கு காப்புறுதி வழங்குவதில்லை

சொத்து வரி

சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர், அல்லது நிறுவனம் வதியும் இடத்தை நிர்வகிக்கும் அரசு அல்லது அரசுகள் வரியை விதிக்கும். நிலம், நிலத்தில் உள்ள தென்னை மா பலா போன்ற மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் என பல தரப்பட்ட சொத்துக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.

வருமான வரி
வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். முற்போக்கு, சம விகிதம், Regressive ஆகியவை முக்கிய மூன்று வரி முறைமைகள் ஆகும்.

வரி

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு. வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன. பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்
அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:

சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல், பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல், பொது வேலைகள் (public works), சமூகப் பொறியியல் (social engineering), அரச செயற்பாடுகள். பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன: கல்வி முறைமைகள், உடல்நலம் பேணல் முறைமைகள், வயோதிபர்களுக்கான ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவுகள், சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து. அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்: வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல். தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல், பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது), குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.


அறிவுசார் சொத்து


தனித்த மாறுபட்ட, முற்றிலும் வெவ்வேறு பொருட்களையும், சட்டங்களையும் பிரதிபலிக்கின்ற பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகிய மூன்று விஷயங்களையும் ஒரே குட்டையில் போட்டு "அறிவுசார் சொத்து" என்று குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இது ஏதோ விபத்தில் விளைந்த விபரீதம் அல்ல. இதனால் இலாபமடையும் நிறுவனங்கள் வளர்த்துவிட்ட குழப்பம். இந்த குழப்பத்தினை தவிர்க்க இப்பதத்தை முற்றிலும் புறக்கணிப்பதே தெளிவான வழி.
"அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது 1967 ல் "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" நிறுவப்பட்ட பின்னர், பின்பற்றப்படத் துவங்கி சமீபத்தில் தான் மிகவும் பிரபலமானது என்கிறார் ஸ்டான்போஃர்டு சட்டப் பள்ளியில் தற்பொழுது பேராசிரியராக இருக்கும் மார்க் லேமேய். "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" முன்னர் ஐநா சபையின் அங்கமாய் இருந்தது. ஆனால் உண்மையில் பதிப்புரிமை, சுய உரிமை மற்றும் வர்த்தக முத்திரை உடையோர்களுடைய விருப்பங்களைத் தான் அது பிரதிபலித்தது.

இப்பதத்திலுள்ள பாரபட்சத்தினை கண்டறிவது மிகச் சுலபம். இது பௌதீக பொருட்களின் மீதுள்ள சொத்துரிமையைப் போல பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகியவற்றைக் கருதச் சொல்கிறது. (அறிஞர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரைகளுக்கான சட்ட விளக்கங்களோடு இந்த ஒப்பீடானது முரண்படுகிறது.) உண்மையில் இச்சட்டங்கள் பௌதீக சொத்துரிமைச் சட்டங்களைப் போலில்லை என்றபோதும் இப்பதத்தினை அவ்வர்த்ததிலேயே பிரயயோகப்படுத்துகின்ற காரணத்தினால் சட்டமன்றத்தினர் இதனை அங்ஙனமே மாற்ற முனைகின்றனர். பதிப்புரிமை, சுயயுரிமை மற்றும் வர்த்தகமுத்திரைகளைப் கடைபிடிக்கின்ற நிறுவனங்கள் இம்மாற்றத்தினையே விரும்புகிறார்கள் என்பதால் "அறிவுசார் சொத்து" என்பதின் பாரபட்சம் நன்கு புலப்படும்.
இந்த பாரபட்சம் ஒன்றே இப்பதத்தினை முற்றிலும் புறக்கணிக்க போதுமான காரணமாகும். மேலும் இவையனைத்தையும் உள்ளடக்கிய புதிய பெயரொன்றையும் பரிந்துரைக்குமாறு மக்களில் பலர் எம்மிடம் கேட்டுள்ளதோடு, அவர்களே முன்வந்து (வேடிக்கையான) பல பரிந்துரைகளையும் செய்துள்ளனர். அவைகளுள் சில தான் திணிக்கப்பட்ட ஏதேச்சாதிகார உரிமைகள் மற்றும் அரசிடமிருந்து தோற்றுவிக்கப் பட்டு சட்டபூர்வமாக செயல்படுத்தப்பட்ட ஏதேச்சாதிகாரங்கள் முதலியன. ப்ரத்யேக உரிமையுள்ள அதிகாரங்கள் என்று கூட சிலர் கூறியதுண்டு. ஆனால் தளைகளை உரிமைகளாக மொழிவது என்பது இரட்டிப்பு வேலைதான்.
இம்மாற்றுப் பரிந்துரைகளுள் சில பொருத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் "அறிவுசார சொத்து" என்பதற்கு மாற்றுச் சொல்லினைத் தேடுவது தவறு. அதிகம் பரவலாக்கப்பட்டிருக்கும் இப்பதத்தின் ஆழமான பிரச்சனையை மாற்றுப் பெயர்களால் நிரப்ப இயலாது. "அறிவுசார் சொத்து" என்ற ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு கானல் நீர். அதிகம் பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் தனித்துவம் வாய்ந்த துறையாக அது காட்சியளிக்கிறது.

அடிப்படையில் மாறுபட்ட இச்சட்டங்களை ஒன்றாய் வழங்குவதற்கு கிடைத்த அருஞ்சொல்லே "அறிவுசார் சொத்து" என்பதாகும். வழக்குரைஞர் அல்லாத ஏனையோர் இப்பதம் இச்சட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அறியும் போது இவையனைத்தும் ஒரே கொள்கையாலும் ஒத்த செயல்திட்டத்தாலும் உந்தப்பட்டதாக பாவித்துக் கொள்கிறார்கள்.
இதைத் தாண்டி இதில் சொல்வதற்கொன்றுமில்லை. தனித்தனியே தோன்றியதாகவும், பலவகைகளில் பரிணாமம் பெற்று மாறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகவும் , வெவ்வேறான பொதுக் கொள்கைகளை எழுப்பியவையாகவும் இச்சட்டங்கள் அமைகின்றன.
பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை உள்ளடக்கியது. சுயயுரிமை சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில் அவசியமற்றது.

மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை அறியத் துணை புரிகிறது. "அறிவுசார் சொத்து" என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் விளம்பரத்திற்கு ஊக்கதொகை வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர்.
இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு அம்சத்திலும் அவை மாறுபட்டு விளங்குகின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே மாறுபட்டு நிற்கிறது. ஆக பதிப்புரிமை பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தால் சுயயுரிமை வேறுபட்டது என்பதை சுயமாகவே யூகித்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் தாங்கள் தவறிழைப்பது மிகவும் கடினம்.

ஏதோ ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த வகையைச் சுட்டும் பொருட்டு "அறிவுசார் சொத்து" என மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உதாரணத்திற்கு பணக்கார நாடுகள் ஏழை நாடுகளிடமிருந்து பணம் பிடுங்க வேண்டி அநியாயமான சட்டங்களை சுமத்துகிறார்கள். அவற்றுள் சில தான் அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள். சில சட்டங்கள் அப்படி இருப்பதில்லைதான். எது எப்படியோ, இந்நடைமுறைகளை விமர்சிப்போர் அப்பதம் தங்களுக்கு பரிசயமான காரணத்தினால் அதனை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளனர். அதைப் பிரயோகப் படுத்தும் காரணத்தினால் பிரச்சனையின் தன்மையை தவறாக புரிந்துக் கொள்ளச் செய்கிறார்கள். இதற்கு மாறாக "சட்டபூர்வமாக காலனியாதிக்கம்" போன்ற மெய்ப்பொருளையுணர்த்த வல்ல சரியான சொற்களை பயன்படுத்தலாம்.

சாதாரண மக்கள் மட்டும் இதனால் குழப்பத்திற்கு ஆளாகவில்லை. சட்டப் பேராசியர்களே "அறிவுசார் சொத்து" எனும் இப்பதத்தில் உள்ள மாயையால் கவரப்பட்டு சிந்தை சிதறடிக்கப் பட்டு நிற்கிறார்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களோடு முரண்படுகிற பொதுவான அறிவிப்புகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு பேராசிரியரொருவர் பின்வருமாறு எழுதினார்,
''அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்பினை வடிவமைத்தோர், தற்போது உலக அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் பணிபுரிகின்ற தங்களின் வழித்தோன்றல்களைப் போலல்லாது, அறிவுசார் சொத்து விஷயத்தில், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கக் கூடியதான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்கள். உரிமைகள் அவசியமானதுதான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்த போதிலும் காங்கிரஸின் கைகளை கட்டிப்போட்டு அதன் அதிகாரங்களை பல வழிகளிலும் கட்டுப்படுத்தியிருந்தார்கள்.''

அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1, பகுதி 8ன் உட்பிரிவு 8னை மேற்குறிப்பிடப்பட்ட வாசகம் மேற்கோள் காட்டுகிறது. இந்த உட்பிரிவிற்கும் வர்த்தக முத்திரைச் சட்டத்திற்கும் தொடர்பே கிடையாது. "அறிவுசார் சொத்துரிமை" என்கிற பதம் இப்பேராசிரியரை மிகைப்படுத்தி கூறவைத்தது.

சொற்பமான சிந்தனைக்கும் "அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது மக்களை இட்டுச் செல்கிறது. பொதுவாக இருக்கக் கூடிய அற்பமான அம்சங்களுக்காக வேவ்வேறாக விளங்கக் கூடிய இச்சட்டங்களை ஒப்பு நோக்க வைக்கிறது. இச்சட்டங்கள் ஒவ்வொன்றும் பொது மக்களின் மீது விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள், அதனால் ஏற்படக்கூடிய கூடிய விளைவுகள் போன்ற அடிப்படை விவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இவை ஏதோ செயற்கையான வசதிகளை சிலருக்கு வழங்குவதாகக் கருதச் செய்கிறது. இந்த சொற்பமான சிந்தனை இப்பிரச்சனைகளின்பால் பொருளாதார அணுகுமுறையினை ஊக்குவிக்கின்றது.
பரிசோதிக்கப் படாத அனுமானங்களில் சவாரி செய்தவாறெ இங்கேதான் பொருளாதாரம் எப்பொழுதும் போல தனது வேலையைக் காட்டத் துவங்குகிறது. சுதந்திரமும் வாழ்க்கை முறையும் முக்கியமன்று மாறாக எவ்வளவு உற்பத்தி என்பதே பிரதானம் போன்ற மதிப்பீடுகளால் எழுகின்ற அனுமானங்களுக்கு வழிவிடுகின்றது. இசைமீதான பதிப்புரிமை இசைக் கலைஞர்களை ஆதரிக்கவும், மருந்துகள் மீதான சுயயுரிமை உயிர் காக்கும் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுவதாகவும், ஏட்டளவில் கூறப்படுகின்ற தவறான யூகங்களும் ஏற்படுகிறது.

இப்படி பலவகையான சட்டங்கள் எழுப்புகின்ற குறிப்பிட்ட பிரச்சனைகள் "அறிவுசார் சொத்து" என்பதன் பரந்த நோக்கில் காணாது போய்விடுகின்றன. இப் பிரச்சனைகள் அவற்றுக்குரிய சட்டங்களுக்கேயான குறிப்பிட்ட அம்சங்களால் எழுபவை. "அறிவு சார் சொத்து" என்கிற பதம், மக்கள் இவற்றை புறக்கணிக்க ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு இசையை பகிர்ந்து கொள்வது தகுமா என்பது பதிப்புரிமை சட்டத்தில் வருகின்ற பிரச்சனை. சுயயுரிமைச் சட்டத்திற்கு இதில் எந்தவொரு இடமும் இல்லை. பணம் குறைந்த நாடுகள் உயிர் காக்கும் மருந்துகளை தயார் செய்து குறைந்த விலைக்கு உயிர் காக்கும் பொருட்டு விற்பனை செய்யலாமா என்பது சுயயுரிமைச் சட்டத்தில் வருகின்றது. பதிப்புரிமைச் சட்டத்திற்கு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.

மிகைப்படுத்தப்பட்ட குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவற்றை பார்க்கின்ற எவராலும் இவ்வித்தியாசங்களை உணர முடியாது. ஏனெனில் இவை இரண்டுமே தமக்குள் உடன்படாதவை. மேலும் இவையிரண்டும் முழுமையான பொருளாதாரப் பிரச்சனைகளும் அல்ல. இவ்விரண்டினையும் ஒரே கண்ணோட்டத்தில் தாங்கள் பார்க்க முற்பட்டால், அது இவற்றை தாங்கள் தனித்தனியே தெளிவாக பார்கக் கூடிய திறனுக்கு முட்டுக்கட்டையாய் அமையும்.

ஆக, அறிவுசார் சொத்து என்ற பொருளைப் பற்றிய கருத்துக்களும் அதை மிகைப் படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முட்டாள் தனமானவை. இவையனைத்தையும் ஒன்றென கருத தாங்கள் முற்பட்டால் மிதமிஞ்சிய மிகைப்படுத்தப்பட்ட சிந்தனைகளிலிருந்தே தங்களின் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இது நிச்சயமாக நல்லதல்ல.
சுயயுரிமை, பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை எழுப்பும் பிரச்சனைகளைப் பற்றி தெளிவாக சிந்திக்க தாங்கள் விரும்பினால் இவையனைத்தையும் ஒன்றாக கோர்க்கும் எண்ணத்தை மறந்துவிடுங்கள். இவற்றை வெவ்வேறானதாகக் கருதுங்கள். அடுத்த வழி "அறிவுசார் சொத்து" என்கிற பதம் வழங்க முற்படுகின்ற குறுகிய சொற்பமான அணுகுமுறைகளை புறக்கணியுங்கள். இவற்றை அதனதன் முழுமையானப் பொருளில் வெவ்வேறானதாகக் கருதுங்கள். அங்ஙனம் செய்தால் இவற்றைப் பற்றி தெளிவாகக் கருதும் வாய்ப்பினைப் பெறுவீர்கள்.

பதிப்புரிமை © 2004, 2006 ரிச்சர்ட் எம் ஸ்டால்மேன்

Friday, February 13, 2009

தீர்வை

பொருளியல் தொடர்பில், தீர்வை என்பது, வருமானம் ஈட்டுவதற்காக நாடொன்றினால் விதிக்கப்படுகின்ற ஒரு வகை வரி ஆகும். இது பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை தொடர்பில் விதிக்கப்படுகின்றது. இவற்றையே சுங்கத் தீர்வை எனக் குறிப்பிடுகின்றனர்

வரி

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு.
வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.
பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்
அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:
சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல்,

சொத்துக்களைப் பாதுகாத்தல்,

பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல்,

பொது வேலைகள் (public works),

சமூகப் பொறியியல் (social engineering),

அரச செயற்பாடுகள்.
பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன:

கல்வி முறைமைகள்,

உடல்நலம் பேணல் முறைமைகள்,

வயோதிபர்களுக்கான ஓய்வூதியம்,

வேலையற்றோர் கொடுப்பனவுகள்,

சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்

பொதுப் போக்குவரத்து.

அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்:

வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல்.

தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல்,
பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது),
குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.

Thursday, December 11, 2008

நாணய மதிப்பிறக்கத்திற்கு மத்திய வங்கி அனுமதி டொலர் 110 ரூபாவாக வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் மட்டுப்படுத்தப்பட்ட நாணய மதிப்பிறக்க கொள்கை தீர்மானத்தை அடுத்து அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை நாணயப் பெறுமதி [30 October 2008] வியாழக்கிழமை 110 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மைக்காலங்களில் டொலரொன்றுக்கு எதிராக இலங்கை நாணயப் பெறுமதி 108 ரூபாவாக இருந்து வந்தது.
உலகமய பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்றுமதி விலைகளிலும், ஏற்றுமதிக்கான கேள்விகள் குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ஏற்பட்டிருக்கும் சடுதியான வீழ்ச்சி மற்றும் முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அண்மைக்கால சடுதியான பெறுமதி உயர்வு போன்ற விடயங்களே மத்திய வங்கியின் இந்த தீர்மானத்துக்கு வழி வகுத்திருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பிட்ச் ரேடிங்ஸ் அறிக்கைக்கு மத்திய வங்கி விளக்கம்


பேரினப் பொருளாதாரம் பலவீனம் அடைந்து செல்வதால் நிதிக் கம்பனிகள் மீது திரவத்தன்மை கோரி அழுத்தம்" என்ற தொனிப்பொருளில் பிட்ச் ரேடிங்ஸ் நிறுவ னத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பதில் அனுப்பி வைத்துள்ளது. பிட்ச் நிறுவனத்தின் இந்த அறிக்கையானது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைப்பதாக தெவித்துள்ள மத்தியவங்கி இதுதொடர்பில் மேலும் விளக்கமளித்திருப்பதாவது கடந்த முன்று ஆண்டுகளாக பொருளாதாரம் 6 சதவீதத்திற்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டின் முதற் கா லாண்டில் 6.2 சதவீதமும்இ இரண்டாம் காலாண்டில் 7.0 சதவீதமும் வளர்ச்சி கண்டிருக்கிறது. பொருளாதாரத்தின் முன்று பெரும் பிரிவுகளும் 2008 இன் முதல் அரையாண்டில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கண்டிருக்கின்றது. விவசாயம் மற்றும் தொழிற்துறை தலா 6.5 சதவீத வளர்ச்சியையும் சேவைகள் பிரிவு 6.7 சதவீத வளர்ச்சியையும் கண்டிருக்கிறது. வெளிநாடுகளுடன் தொடர்புபட்ட துறைகளில் ஏற்றுமதித்துறை 2008 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 4.7 பில்லியன் டொ லர்களுக்கு உயர்ந்து 12 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது. இதே காலப்பகுதியில் இறக்குமதிகள் 35 சதவீதத்தினால் உயர்ந்து 8.3 பில்லியன் டொலர்களாகியுள்ளது. ஏற்பட்டிருந்த வர்த்தகப் பற்றாக்குறை வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனுப்பி வைக்கும் அதிகரித்தளவு பண அனுப்பீடுகள் மற்றும் அர சாங்கத்தினதும்இ தனியார் துறையினதும் முலதனங்கள் என்பவற்றினால் ஈடு செய்யப்படுகிறது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் ஊழியர் பண அனுப்பீடுகள் 22 சதவீதத்தினால் அதிகரித்து 1.5 பில்லி யன் டொலர்கள் வரை உயர்ந்ததுஇ அன்னிய நேரடி முதலீ டுகள் மற்றும் முதலீட்டுப் பட்டியல் மொத்தம் முறையே 360 மில்லியன் டொலர்களாகவும். 355 மில்லியன் டொலர்களாகவும் முதல் அரையாண்டில் உயர்ந்தது. இவற்றைத் தொடர்ந்து மொத்த கொடுப்பனவு மீதி முதல் அரை யாண்டில் 390 மில்லியன் டொலர்களாகவும் மிகையாக இருந்தன. அத்துடன் மொத்த ஒதுக்கங்கள் 3.5 பில்லியன் டொலர்களாக 2008 யூலையில் அதிகரித்தன. அதாவது 2007 இறுதியில் இத்தொகை 3.1 பில்லியனாக இருந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலர் இலங்கை ரூபா நாணய மாற்று வீதம் தளம்பாமல் இருந்தது. வருவாய் துறையை எடுப்போமாயின்இ 2008 முதல் அரையாண்டில் அரச வருமானம் 24.2 சதவீதம் அதிகரித்து ரூபா 312.5 பில்லியன் ஆகியது. 2007 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வரிவருவாய் 22.6 சதவீதத்தினால் அதிகரித்தது. மீண்டுவரும் செலவினம்இ முலதனச் செலவினம் அதிகரிப்பு காரணமாக செலவினமும் 22.5மூ மாக அதிகரித்து ரூபா 476.6 பில்லியனை எட்டியது. உரமானியம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் காரணமாக மீண்டுவரும் செலவினத்தில் பெரும் அதிகரிப்பு காணப்பட்டது. முலதன செலவின அதிகரிப்பு துரித அபிவிருத்தி திட்டங்களால் ஏற்பட்டது. முக்கியமாக வீதி அபிவிருத்திஇ மின்னுற்பத்திஇ நீர்ப்பாசனம் வேறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பனவே இதற்கான காரணமாகும். 2007 இல் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 85.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த உள்நாட்டுக் கடன்கள் தொடர்ந்தும் அதேபோக்கையே காட்டுகின்றன. 2008 இறுதியில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பணக்கொள்கை விடயத்தில் மத்திய வங்கி இறுக்கமான கொள்கைப் போக்கினைக் கொண்டுள்ளது. நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை அது முக்கிய இலக்காக கொண்டுள்ளது. இவ்வாண்டில் இரு தடவைகள் பண ஒதுக்க இலக்குகளை கீழ் நோக்கி நகர்த்தியது. இதனால்இ சேமவைப்பு பணம் மற்றும் மொத்தப் பணம் என்பவற்றின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தனியார் துறைக்கான கடன் வசதிகள் 12 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டன. மேலுயர்ந்து சென்ற பணவீக்க நிலை யூலை மாதம் வரையில் பின்நோக்கி நகரத் தொடங்கியது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த கொழும்பு பாவனையாளர் விலைச்சுட்டெண் 2008 ஓகஸ்ட்டில் 24.9 சதவீதத்திற்கு இறங்கியது. இன்றைய நாணயக் கொள்கையை தொடரும் அதேவேளை பேரினப் பொருளியற் சூழலையும் முன்னேற்றும் போது இவ்வாண்டில் பணவீக்கம் மேலும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. பதிவு செய்யப் பட்ட நிதிக்கம்பனிகள் நிதிமுறைமையின் மொத்தச் சொத்துக்களில் 3 சதவீதத்தை கொண்டிருக்கின்றன. பணவைப்புக்களை ஏற்கும் பெரும் நிறுவனங்களின் மொத்த பணவைப்பு பொறுப்புகளின் 5 வீதத்தினை கொண்டிருக்கின்றன. மேலும் நிதிக்கம்பனிகள் வழங்கிய கடன்கள் மொத்த உள்நாட்டுக் கடனில் 5 வீதமாக இருக்கிறது நிதிக்கம்பனிகள் கொண்டிருக்கும் சொத்துக்கள் மற்றும் வைப்புக்களின் அளவுகளை கருத்தில் கொள்ளும் போது நிதிக்கம்பனிகள் தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள போக்குகள் நிதித்துறையின் உறுதிப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இல்லை எனலாம். அத்துடன் பிரச்சினை தரமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளவாறு இன்றைய பேரினப் பொருளியல் சூழல் திரவத்தன்மைக்கான அழுத்தத்தை அதிகரிக்காது. எனவேஇ இலங்கையின் பேரினப் பொருளியல் நிலை பலவீனமான தன்று. ஆனால்இ இலங்கை அதிகாரிகளின் சரியானதும் பொருத்தமானதுமான நாணய கொள்கைகள் காரணமாக அது முன்னேற்றம் கண்டுவருகிறது. ஆகவே பொருளாதார துறையின் பல பிரிவுகளின் நிறைவேற்றங்கள் மற்றும் பேரினப் பொருளியல் துறையின் முக்கிய முன்னேற்றங்களின் முன்னிலையில் பேரினப் பொருளியற் சூழல் பலனவீனமடைந்துள்ளது என விவரிப்பது தவறாக இட்டுச் செல்வதாகும். எனமத்திய வங்கி தெரிவித்துள்ளது

Wednesday, December 10, 2008

உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1

உலகின் பொது நாணயமாக (World's reserve currency) அமெரிக்க டாலர் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த வாரம் ஹிந்து நாளிதழில் கூட இது பற்றிய ஒரு தலையங்கம் வெளியாகி இருந்தது.உலகின் பொது நாணயமாக டாலர் இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பில் ஒரு நிலையான தன்மை இருக்க வேண்டும். மாறாக டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாமல் இருக்கிறது. இந் நிலையில் அதற்கு மாற்றாக யூரோ அல்லது சீனாவின் RenMinBi நாணயம் உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனாவின் நாணயம் கட்டுப்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால் டாலருக்கு மாற்றாக யூரோ தான் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.1944 உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பால் அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகிய சூழலில் டாலர் உலகின் பொது நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முறையின் படி மற்ற நாட்டின் நாணயங்கள் அமெரிக்க டாலருடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்தில் நிலையாக பிணைக்கப்பட்டது. உதாரணமாக 1 அமெரிக்க டாலர் = 10 இந்திய ரூபாய். இதில் எப்பொழுதும் எந்த மாற்றமும் இருக்காது. இதனை Fixed Exchange Rate என்று சொல்வார்கள். இது போலவே அமெரிக்க டாலருடன் தங்கமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிணைக்கப்பட்டது.இந்த முறை மூலம் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சனைகளால் 1970க்குப் பிறகு இந்த முறை மாற்றப்பட்டு சந்தை வர்த்தகம் மூலம் ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்கு இருக்கும் தட்டுப்பாடு, தேவை போன்றவை கொண்டு நாணயத்தின் மதிப்பை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தது - Floating. இதுவே தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், சக்தி வாய்ந்த வல்லரசாகவும் அமெரிக்கா இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாகவே கொண்டு வரப்படுவதாக அனைவரும் கருதினர்.உலகின் பொது நாணயத்திற்கு ஏன் இந்தப் போட்டி ?உலகின் பொது நாணயமாக டாலர் இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி/ஏற்றுமதி நிலவரங்களில் கடுமையான பற்றாக்குறை உண்டு. அதன் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்தப் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து நீடிப்பது எப்படி ?அது தான் உலகின் பொது நாணயம் கொடுக்கும் நன்மைஉலகின் பல்வேறு வர்த்தகங்கள் டாலர் மூலமாகவே நடக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவை. கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமெனில் டாலர் வேண்டும். அதனால் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் டாலரை வாங்குகின்றன. இது தவிர ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதன் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். கடும் போட்டியிருக்கும் ஏற்றுமதியில் பல நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முயலுகிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்கு டாலர் வேண்டும். அதற்காக நிறைய டாலரை வாங்குகிறார்கள். அமெரிக்கா வெளியிடும் Treasury Bonds போன்றவற்றையும் பெற்று தங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உலகின் பெரும்பங்கு டாலர் கையிருப்பு ஆசிய நாடுகளிடம் தான் உள்ளது. அமெரிக்க டாலரில் 55% முதல் 70% அமெரிக்காவிற்கு வெளியே தான் இருக்கிறது.பல ஆசிய நாடுகள் ஏராளமான அமெரிக்காவின் பாண்ட்களை வைத்திருக்கிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்க டாலரை தங்கள் கையிருப்பில் இந்த நாடுகள் தேக்கிக் கொள்கின்றன. இதனால் ஆசிய நாடுகளின் நாடுகளின் நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களால் அமெரிக்காவிற்கு குறைந்த விலைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த தேக்கம் அமெரிக்காவிற்கு வட்டியில்லா கடன் போலத் தான். டாலர் உலகின் பொது நாணயமாக இருக்கும் வரையில் இது திருப்பி தரத் தேவையில்லாத கடனாக அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா நிறைய இறக்குமதிகளை செய்தாலும் உலகின் பொது நாணயமாக இருப்பதால் கிடைக்கும் கடனை கொண்டு குறைந்த விலைக்கு ஆசிய நாடுகளின் பொருட்களை பெற்றுக் கொண்டு சுகமாக காலம் கழிக்க முடிகிறது.உதாரணமாக சீனாவின் நாணயத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்க நாணயத்துடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்த விகிதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் சரியும் பொழுதெல்லாம் அதன் நாணயமும் சரிகிறது. நாணயம் சரிவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அதன் பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இவ்வாறான முறையை சீனா கைவிட வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனா கண்டுகொள்வதில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் ஏற்றுமதி/இறக்குமதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். அமெரிக்காவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் கால்வாசி சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.சீனா இம் முறை தனக்கு வசதியாக இருக்கும் வரை இதனையே பின்பற்றும். ஆனால் கூடிய விரைவில் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களுக்கேற்ப இதனை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் பொழுது தனது நாணயத்தின் கட்டுப்பாட்டு தன்மையை நீக்கும். அப்பொழுது சீனாவின் நாணய மதிப்பு உயரும். அமெரிக்காவில் மலிவாக கிடைக்கும் ஏராளமான சீனப் பொருட்கள் விலையும் உயரும். பல சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய சூழலில் அமெரிக்கா இருக்கிறது. பொருட்களின் விலை உயரும் பொழுது பணவீக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரத்திற்கு சவால் எழுகிறது.

Thursday, December 4, 2008

உலக உணவுப் பாதுகாப்பு சில தீர்மானங்கள்

கடந்தஆண்டு ஜீன் முதல் வாரத்தில் ரோம் நகரில், “உலக உணவுப் பொருள் நிலை” பற்றிய உயர்நிலை மாநாடு நடைப்பெற்று சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம் மாநாட்டில் 180 உலக நாடுகள் பங்கேற்று விவாதித் திருப்பது உலக உணவுப் பொருள் நிலைகுறித்த முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் நமக்கு நன்கு உணர்த்துகிறது. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி, உணவுத் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே!
உணவு தானியப் பற்றாக்குறை அல்லது தொடர்ந்து வாட்டும் வறுமையில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் சில நாடுகளைக் கூட (எத்தியோப்பியா, சோமாலியா) மற்றநாடுகளின் அபரிமிதமான தானிய உற்பத்தியைக் கொண்டு காத்து வந்திருக்கின்றோம். 1930களின் இறுதியில் நிலவிய உலகப் பெருமந்தம் (Great Depression of World Economy) அதன்பிறகு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றின் தாக்கம் உலக நாடுகளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. தொழிற்துறை வளர்ச்சி வேகம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்று மிகவும் நம்பப்பட்ட அந்தக் காலகட்டத்தில் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியும், உணவு உற்பத்தியுமே ஒரு நாட்டில் நிலையான வளர்ச்சியை ஊக்கப் படுத்தும் என்ற உண்மை உணரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், அன்றைய ஒருங்கிணைந்த ரஷ்யாவும் 1940 மற்றும் 1950 களில் உணவு உற்பத்தி பெருக்கத்தில் பெரிதும் தனது கவனத்தையும், ஆய்வையும் செலுத்தியது. அவரவர் வசதிக்கும், தேவைக்குகேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. உயர் விளைச்சல் தரும் ரகங்கள், அதிகரிக்கப்பட்ட விளைநிலங்கள், நீர்ப்பாசன வசதி, ரசாயன உரக் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, வேளாண்மையில் இயந்திரங்களின் அறிமுகம் ஆகியவை மேற்கூறிய காலகட்டத்தில் வேளாண்மைப் புரட்சிக்கு உலக அளவில் வித்திட்டது.
இதன் தாக்கம் நம் நாட்டிலும் பெரிதும் உணரப்பட்டது. இதன் விளைவாக 1930 மற்றும் 1940களில் வறுமையிலும், பஞ்சத்திலும் பாதிக்கப்பட்ட நமது நாடு நவீன வேளாண் உற்பத்தியின் அவசியத்தையும், முக்கியத்துவத் தையும் உணர்ந்து ரஷ்யப் பொருளாதார முறையின் ஐந்தாண்டு திட்டங்களைப் போல் வகுத்துச் செயல்பட முனைந்தது. முதல் மற்றும் இரண்டாவது திட்ட காலத்தில் (1951-56 மற்றும் 1956-1961) வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வழிவகை ஏற்பட்டது. அதிவேகமாக வளர்ந்து வந்த மக்கள் தொகையின் அளவிற்கு ஏற்ப உணவளிக்கச் சாத்தியப்பட்டது. இன்றுவரை உலகின் இரண்டாவது மக்கள் தொகையைப் பெற்றிருக்கும் நமது நாட்டில் உணவுப் பற்றாக்குறையும், பட்டினிச்சாவும் இல்லை என்பது நமது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் சமீபத்தில் ரோம் நாட்டில் கூடிய 180 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் “உலக உணவு நிலை” பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியதின் அவசியத்தையும், நம்முன் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வரும், காலநிலை மாற்றம் பற்றியும் உயிரி எரிசக்தி பற்றியும் சில உண்மை நிலைமையையும், எதிர் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்ந்துள்ளனர்.
இன்றைய நிலையில், மிகவும் கவலை அளிக்கக்கூடிய செய்தியாக, நாளும் உலக அளவில் அதிகரித்துவரும் உணவுப் பொருட் களின் விலைதான் என்று இம்மாநாடு சுட்டிக் காட்டியுள்ளது. இதே நிலை தொடருமானால் வரும் ஆண்டுகளில் கிட்டத்திட்ட 100 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் தள்ளப்படுவார்கள் என்கிற கணக்கும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (ஊஅஞ) டைரக்டர் ஜெனரல் ஜேக்ஸ் டயாஃப் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது, உணவுப் பற்றாக்குறை என்பது வருங்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், வளர்ந்துவிடும் மக்கள் தொகை, உணவு உற்பத்தி செய்யும் நாடுகளின் வேளாண்மைத் தேக்கம், உலக வாணிபம் ஆகியவற்றைநாம் கடுமையாக எதிர்கொண்டு சமாளிக்கவில்லை என்றால் 2015க்குள் திட்டமிட்டுள்ள உலக வறுமை ஒழிப்பு எனும் தீர்மானம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்திய ரோம் மாநாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது உலகின் உணவுப் பொருள் உற்பத்தி நிலையை ஆராய்ந்து வேளாண் பொருட்களின் வழங்கலை உலகம் முழுக்க சீர் செய்வதுடன் அவற்றின் விலையை நிலைப்படுத்துவதும் ஆகும். இம்முயற்சி மேற் கொள்ளப்படாவிட்டால், சீரற்றவேளாண் உற்பத்தியும், நிலையற்றவேளாண் பொருட்கள் விலையும் உலக அரங்கில் ஒரு பெரிய பொருளாதார சீர்கேட்டை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் இம்மாநாட்டில் முன்வைக்கப் பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை ஒருபுறம், உயர்தரம் வாய்ந்த வாழ்க்கை நிலையில் உள்ள நாடுகள் மறுபுறம், உணவுத் தேவைக்கே அல்லல்படும் நாடுகள் இன்னொருபுறம் என்றநிலையை இனியும் மாற்றாவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றகருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருள் பற்றாக்குறைஅல்லது தட்டுப்பாட்டிற்கு சமீபத்திய காரணியாக உயிரி எரிபொருள் (க்ஷண்ர்-ச்ன்ங்ப்) உருவெடுத்துள்ளதாகவும் கருத்து வெளிப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எழுந்துள்ள முக்கிய தீர்மானம் அல்லது முடிவு என்ன வென்றால் வளர்ந்துவரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் மற்றவற்றையும் விட வேளாண் துறைவளர்ச்சிக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியத்துவமும், உதவியும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடு களும் வேளாண்துறைமுதலீட்டையும், வேளாண்சார்ந்த வாணிபத்தையும், கிராமப் புறவளர்ச்சியையும் ஊக்குவிக்கவேண்டும். குறிப்பாக வேளாண்சந்தை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
இத்தீர்மானத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், சில நாடுகள் இக்கருத்தை விமர்சனம் செய்யத் தயங்கவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் வேளாண் மானியமுறையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி போன்ற அமைப்பினை நாம் அதிகமாக சார்ந்திருப்பதாலும் வேளாண் கொள்கையில் பெரிய மாற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்த முடியவில்லை என்றகருத்தை அர்ஜென்டினா, மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் இம்மாநாட்டில் வலியுறுத்தியுள்ளன.
வாணிப தாராளமயமாக்கலைப் பற்றி நாம் பேசும் போதும், எழைகளின் வாழ்வாதாரத் தையும் உணவுப் பாதுகாப்பையும், ஏழை விவசாயிகளின் இன்றைய உண்மை நிலைமை யும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். இது நமக்கு மகிழ்ச்சியளித்தாலும் உலக வேளாண் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தில் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்தாக மற்ற நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. வேளாண் துறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு உணவுப் பொருள் ஏற்றுமதி மேற்கொள்ளுதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் வளர்ந்து வரும் நாடுகள் உணவுத் தட்டுபாட்டில் மேலும் சிக்கிக் கொள்ளும் என்பது தென் அமெரிக்கா, கியூபா, நிகரகுவா, ஈக்வடார் ஆகிய நாடுகளின் ஒத்த கருத்தாக இம்மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் 10 நாடு களில் உணவு நிலை ஓரளவு சீராக இருந்தாலும் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறைஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு கணிசமான அளவு தடை விதித்துள்ளன. ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால் மட்டுமே நிலைமை சீராகிவிடுமா என்றகேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமே. வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேளாண் தொழில் முற்றிலும் பாதுகாக்கப் படவேண்டும். விளைநிலங்களின் அளவு எக் காரணம் கொண்டும் குறைய அனுமதிக்கக் கூடாது. அதேபோல் மக்கள் தொகை பெருகு வதை கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட வேண்டும். மேற்கூறிய தீர்மானங்கள் இந்தியாவிற்கு இன்றைய அவசரத் தேவையாகும்.
இத்தருணத்தில் நாம் மற்றொரு உலகளாவிய பெரும் பிரச்சனையை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டியள்ளது. அதாவது, பருவநிலையிலும் காலநிலையிலும் ஏற்படும் மாற்றம் உலக வேளாண்துறையிலும், உணவுப் பொருள் உற்பத்தியிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இப்பிரச்சனை குறித்தும் ரோம் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக மழையின் அளவிலும், காலநிலையிலும் ஏற்பட்டு வரும் மாற்றம் நமக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வரும் காலங்களில் இப்பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இயற்கையின் தன்மையை சலனப்படுத்தாமல், பசுமையைக்காத்து, நீர் ஆதாரங்களை சிறப்புடன் நிர்வகித்து, இயற்கை சார்ந்த வாழ்வு முறைக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நிலைமை சீர்படும் என்றும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.