Friday, January 29, 2010
பங்குச்சந்தை நிலவரம் மற்றும் பெருளதார விடையங்கள் தொடர்பான இளையத்தளங்கள்
http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/
Friday, May 22, 2009
வணிக வங்கி
பொருளடக்கம்
1 வணிக வங்கிகளின் சேவைகள்
2 வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்
3 இலங்கையின் சில வணிக வங்கிகள்
4 இவற்றையும் பார்க்க
வணிக வங்கிகளின் சேவைகள்
மேலதிக பற்றுகள்(Over Draft),கடன் வழங்கள்.( loans)
பிணைகள்,முறிகள் (Bonds) போன்றவற்றில் முதலீடல்.
ஏனைய தொழிற்பாடுகளாக
நிலையான வைப்புகளை பேணல்.
வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணல்.
வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்ப்படுத்தல்.
நகை அடகுபிடித்தல்.
நாணயமாற்றம் செய்தல்.
சர்வதேச கொடுக்கல் வாங்கல்களப் பேணல்.
ATM அட்டை,கடனட்டை(Credit card) வழங்கள்.
போன்றனவாகும்.
வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்
நடைமுறைக்கணக்கு (Current Deposits)
சேமிப்பு கணக்கு (Savings Deposits)
நிலையான வைப்பு(Fixed Deposits)
அழைப்பு வைப்பு (Call Deposits)
இலங்கையின் சில வணிக வங்கிகள்
- இலங்கை வங்கி
- மக்கள் வங்கி
- கொமர்ஷியல் வங்கி
- ஹட்டன் நசனல் வங்கி
- சம்பத் வங்கி
- செலான் வங்கி
- பான் ஏசியா வங்கி
- யூனியன் வங்கி
- நேசன் டிரஸ்ட் வங்கி
வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.
வங்கியால் வழங்கப்படும் சேவைகள்
வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல் கடன்களை வழங்குதல் (loans) காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்) கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல். பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல் நாணய மாற்று செய்து கொடுத்தல் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல். வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக நேரடியாக ATM
மின்னஞ்சல்
தொலைபேசி
இணையம்
வங்கி அமைப்புக்கள்
வணிக வங்கி (Commercial bank) - காசோலை வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து பணத்தினை மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கி அமைப்புகள் மேற்கொள்ளவதில்லை
- சேமிப்பு வங்கி (Savings bank)
- வியாபார வங்கி (Merchant banks)
- கூட்டுறவு வங்கி (Cooperative Banks)
- அபிவிருத்தி வங்கி
- மூதலீட்டு வங்கி (Investment banks)
- மத்திய வங்கி (Central Bank) -
பொருளாதார உறுதி,பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும். இஸ்லாமிய வங்கி (Islamic banks) - இஸ்லாமிய சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி வழங்கப்படமாட்டாது. இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிநபர் நிதி
அடமானக் கடன்
கடன் அட்டை
காப்புறுதி
சொத்து வரி
வருமான வரி
அடமானக் கடன்
அடமானக் கடன் என்பது நிலம், வீடு, தொழில், அல்லது இதர அசையாப் பொருட்களை ஒரு வங்கி போன்ற ஒரு நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து பெறப்படும் கடன் ஆகும். பொதுவாக இப்படிப் பொறப்படும் நிதி தவணை முறையில் வட்டியுடன் செலுத்தப்படும். செலுத்த முடியாமல் போனால் அடமானம் வைக்கப்பட்ட பொருள் அந்த நிதி நிறுவனத்துக்க் சொந்தமாகும்.
கடன் அட்டை
கடன் அட்டை என்பது பணம் செலுத்தும் முறை. ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்த அவருக்கு வங்கியோ வேறு ஒரு வணிக நிறுவனமோ கடன் வழங்கும். கடன் அட்டையில் நிதி விபரமும் இதர தகவல்களும் சேமிக்கப்படும். ஒவ்வொருமுறை பயன்படுத்தப்படும் பொழுது இத்தகவல்களை கணக்குக்கு ஏற்ப இன்றைப்படுத்தப்படும்.
பொதுவாக இப்படி வழங்கப்படும் கடனுக்கு அதிக வட்டி அறவிடப்படும்.
காப்புறுதி
காப்புறுதி என்பது ஒரு இழப்பு அல்லது இடர் ஏற்படக்கூடிய சூழலில் அதில் இருந்து பாதுகாப்பதற்காக அல்லது மீழ்வதற்காக முன்னேற்பாட்டின் படி வழங்கப்படும் நிதி. எவ்வளவு பணம் பெறப்படும் என்பது எவ்வளவு காப்பீட்டு கட்டணம் கட்டப்பட்டது என்பதையும், இடர் எத்தகையது என்பதையும் பொறுத்தது ஆகும். சில தொழிற்பாடுகளுக்கு காப்புறுதி கட்டாயம் தேவைப்படும். எடுத்து காட்டாக கார் ஓட்டும் ஒருவர் காப்புறுதி வைத்திருக்க வேண்டும்.
பெரும்பான்மை காப்புறுதிகள் வணிக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை. சில காப்புறுதிகள் கூட்டுறவுகளால் நிர்வகிக்கப்படுபவை. அரசும் மருத்துவம் போன்ற சில சேவைகளுக்கு காப்புறுதி வழங்குவதில்லை
சொத்து வரி
சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர், அல்லது நிறுவனம் வதியும் இடத்தை நிர்வகிக்கும் அரசு அல்லது அரசுகள் வரியை விதிக்கும். நிலம், நிலத்தில் உள்ள தென்னை மா பலா போன்ற மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் என பல தரப்பட்ட சொத்துக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.
வருமான வரி
வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். முற்போக்கு, சம விகிதம், Regressive ஆகியவை முக்கிய மூன்று வரி முறைமைகள் ஆகும்.
வரி
வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு. வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன. பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.
வரி அறவிடுவதன் நோக்கங்கள்
அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:
சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல், பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல், பொது வேலைகள் (public works), சமூகப் பொறியியல் (social engineering), அரச செயற்பாடுகள். பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன: கல்வி முறைமைகள், உடல்நலம் பேணல் முறைமைகள், வயோதிபர்களுக்கான ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவுகள், சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து. அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்: வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல். தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல், பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது), குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.
அறிவுசார் சொத்து
தனித்த மாறுபட்ட, முற்றிலும் வெவ்வேறு பொருட்களையும், சட்டங்களையும் பிரதிபலிக்கின்ற பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகிய மூன்று விஷயங்களையும் ஒரே குட்டையில் போட்டு "அறிவுசார் சொத்து" என்று குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இது ஏதோ விபத்தில் விளைந்த விபரீதம் அல்ல. இதனால் இலாபமடையும் நிறுவனங்கள் வளர்த்துவிட்ட குழப்பம். இந்த குழப்பத்தினை தவிர்க்க இப்பதத்தை முற்றிலும் புறக்கணிப்பதே தெளிவான வழி.
"அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது 1967 ல் "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" நிறுவப்பட்ட பின்னர், பின்பற்றப்படத் துவங்கி சமீபத்தில் தான் மிகவும் பிரபலமானது என்கிறார் ஸ்டான்போஃர்டு சட்டப் பள்ளியில் தற்பொழுது பேராசிரியராக இருக்கும் மார்க் லேமேய். "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" முன்னர் ஐநா சபையின் அங்கமாய் இருந்தது. ஆனால் உண்மையில் பதிப்புரிமை, சுய உரிமை மற்றும் வர்த்தக முத்திரை உடையோர்களுடைய விருப்பங்களைத் தான் அது பிரதிபலித்தது.
இப்பதத்திலுள்ள பாரபட்சத்தினை கண்டறிவது மிகச் சுலபம். இது பௌதீக பொருட்களின் மீதுள்ள சொத்துரிமையைப் போல பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகியவற்றைக் கருதச் சொல்கிறது. (அறிஞர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரைகளுக்கான சட்ட விளக்கங்களோடு இந்த ஒப்பீடானது முரண்படுகிறது.) உண்மையில் இச்சட்டங்கள் பௌதீக சொத்துரிமைச் சட்டங்களைப் போலில்லை என்றபோதும் இப்பதத்தினை அவ்வர்த்ததிலேயே பிரயயோகப்படுத்துகின்ற காரணத்தினால் சட்டமன்றத்தினர் இதனை அங்ஙனமே மாற்ற முனைகின்றனர். பதிப்புரிமை, சுயயுரிமை மற்றும் வர்த்தகமுத்திரைகளைப் கடைபிடிக்கின்ற நிறுவனங்கள் இம்மாற்றத்தினையே விரும்புகிறார்கள் என்பதால் "அறிவுசார் சொத்து" என்பதின் பாரபட்சம் நன்கு புலப்படும்.
இந்த பாரபட்சம் ஒன்றே இப்பதத்தினை முற்றிலும் புறக்கணிக்க போதுமான காரணமாகும். மேலும் இவையனைத்தையும் உள்ளடக்கிய புதிய பெயரொன்றையும் பரிந்துரைக்குமாறு மக்களில் பலர் எம்மிடம் கேட்டுள்ளதோடு, அவர்களே முன்வந்து (வேடிக்கையான) பல பரிந்துரைகளையும் செய்துள்ளனர். அவைகளுள் சில தான் திணிக்கப்பட்ட ஏதேச்சாதிகார உரிமைகள் மற்றும் அரசிடமிருந்து தோற்றுவிக்கப் பட்டு சட்டபூர்வமாக செயல்படுத்தப்பட்ட ஏதேச்சாதிகாரங்கள் முதலியன. ப்ரத்யேக உரிமையுள்ள அதிகாரங்கள் என்று கூட சிலர் கூறியதுண்டு. ஆனால் தளைகளை உரிமைகளாக மொழிவது என்பது இரட்டிப்பு வேலைதான்.
இம்மாற்றுப் பரிந்துரைகளுள் சில பொருத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் "அறிவுசார சொத்து" என்பதற்கு மாற்றுச் சொல்லினைத் தேடுவது தவறு. அதிகம் பரவலாக்கப்பட்டிருக்கும் இப்பதத்தின் ஆழமான பிரச்சனையை மாற்றுப் பெயர்களால் நிரப்ப இயலாது. "அறிவுசார் சொத்து" என்ற ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு கானல் நீர். அதிகம் பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் தனித்துவம் வாய்ந்த துறையாக அது காட்சியளிக்கிறது.
அடிப்படையில் மாறுபட்ட இச்சட்டங்களை ஒன்றாய் வழங்குவதற்கு கிடைத்த அருஞ்சொல்லே "அறிவுசார் சொத்து" என்பதாகும். வழக்குரைஞர் அல்லாத ஏனையோர் இப்பதம் இச்சட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அறியும் போது இவையனைத்தும் ஒரே கொள்கையாலும் ஒத்த செயல்திட்டத்தாலும் உந்தப்பட்டதாக பாவித்துக் கொள்கிறார்கள்.
இதைத் தாண்டி இதில் சொல்வதற்கொன்றுமில்லை. தனித்தனியே தோன்றியதாகவும், பலவகைகளில் பரிணாமம் பெற்று மாறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகவும் , வெவ்வேறான பொதுக் கொள்கைகளை எழுப்பியவையாகவும் இச்சட்டங்கள் அமைகின்றன.
பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை உள்ளடக்கியது. சுயயுரிமை சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில் அவசியமற்றது.
மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை அறியத் துணை புரிகிறது. "அறிவுசார் சொத்து" என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் விளம்பரத்திற்கு ஊக்கதொகை வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர்.
இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு அம்சத்திலும் அவை மாறுபட்டு விளங்குகின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே மாறுபட்டு நிற்கிறது. ஆக பதிப்புரிமை பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தால் சுயயுரிமை வேறுபட்டது என்பதை சுயமாகவே யூகித்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் தாங்கள் தவறிழைப்பது மிகவும் கடினம்.
ஏதோ ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த வகையைச் சுட்டும் பொருட்டு "அறிவுசார் சொத்து" என மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உதாரணத்திற்கு பணக்கார நாடுகள் ஏழை நாடுகளிடமிருந்து பணம் பிடுங்க வேண்டி அநியாயமான சட்டங்களை சுமத்துகிறார்கள். அவற்றுள் சில தான் அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள். சில சட்டங்கள் அப்படி இருப்பதில்லைதான். எது எப்படியோ, இந்நடைமுறைகளை விமர்சிப்போர் அப்பதம் தங்களுக்கு பரிசயமான காரணத்தினால் அதனை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளனர். அதைப் பிரயோகப் படுத்தும் காரணத்தினால் பிரச்சனையின் தன்மையை தவறாக புரிந்துக் கொள்ளச் செய்கிறார்கள். இதற்கு மாறாக "சட்டபூர்வமாக காலனியாதிக்கம்" போன்ற மெய்ப்பொருளையுணர்த்த வல்ல சரியான சொற்களை பயன்படுத்தலாம்.
சாதாரண மக்கள் மட்டும் இதனால் குழப்பத்திற்கு ஆளாகவில்லை. சட்டப் பேராசியர்களே "அறிவுசார் சொத்து" எனும் இப்பதத்தில் உள்ள மாயையால் கவரப்பட்டு சிந்தை சிதறடிக்கப் பட்டு நிற்கிறார்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களோடு முரண்படுகிற பொதுவான அறிவிப்புகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு பேராசிரியரொருவர் பின்வருமாறு எழுதினார்,
''அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்பினை வடிவமைத்தோர், தற்போது உலக அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் பணிபுரிகின்ற தங்களின் வழித்தோன்றல்களைப் போலல்லாது, அறிவுசார் சொத்து விஷயத்தில், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கக் கூடியதான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்கள். உரிமைகள் அவசியமானதுதான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்த போதிலும் காங்கிரஸின் கைகளை கட்டிப்போட்டு அதன் அதிகாரங்களை பல வழிகளிலும் கட்டுப்படுத்தியிருந்தார்கள்.''
அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1, பகுதி 8ன் உட்பிரிவு 8னை மேற்குறிப்பிடப்பட்ட வாசகம் மேற்கோள் காட்டுகிறது. இந்த உட்பிரிவிற்கும் வர்த்தக முத்திரைச் சட்டத்திற்கும் தொடர்பே கிடையாது. "அறிவுசார் சொத்துரிமை" என்கிற பதம் இப்பேராசிரியரை மிகைப்படுத்தி கூறவைத்தது.
சொற்பமான சிந்தனைக்கும் "அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது மக்களை இட்டுச் செல்கிறது. பொதுவாக இருக்கக் கூடிய அற்பமான அம்சங்களுக்காக வேவ்வேறாக விளங்கக் கூடிய இச்சட்டங்களை ஒப்பு நோக்க வைக்கிறது. இச்சட்டங்கள் ஒவ்வொன்றும் பொது மக்களின் மீது விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள், அதனால் ஏற்படக்கூடிய கூடிய விளைவுகள் போன்ற அடிப்படை விவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இவை ஏதோ செயற்கையான வசதிகளை சிலருக்கு வழங்குவதாகக் கருதச் செய்கிறது. இந்த சொற்பமான சிந்தனை இப்பிரச்சனைகளின்பால் பொருளாதார அணுகுமுறையினை ஊக்குவிக்கின்றது.
பரிசோதிக்கப் படாத அனுமானங்களில் சவாரி செய்தவாறெ இங்கேதான் பொருளாதாரம் எப்பொழுதும் போல தனது வேலையைக் காட்டத் துவங்குகிறது. சுதந்திரமும் வாழ்க்கை முறையும் முக்கியமன்று மாறாக எவ்வளவு உற்பத்தி என்பதே பிரதானம் போன்ற மதிப்பீடுகளால் எழுகின்ற அனுமானங்களுக்கு வழிவிடுகின்றது. இசைமீதான பதிப்புரிமை இசைக் கலைஞர்களை ஆதரிக்கவும், மருந்துகள் மீதான சுயயுரிமை உயிர் காக்கும் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுவதாகவும், ஏட்டளவில் கூறப்படுகின்ற தவறான யூகங்களும் ஏற்படுகிறது.
இப்படி பலவகையான சட்டங்கள் எழுப்புகின்ற குறிப்பிட்ட பிரச்சனைகள் "அறிவுசார் சொத்து" என்பதன் பரந்த நோக்கில் காணாது போய்விடுகின்றன. இப் பிரச்சனைகள் அவற்றுக்குரிய சட்டங்களுக்கேயான குறிப்பிட்ட அம்சங்களால் எழுபவை. "அறிவு சார் சொத்து" என்கிற பதம், மக்கள் இவற்றை புறக்கணிக்க ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு இசையை பகிர்ந்து கொள்வது தகுமா என்பது பதிப்புரிமை சட்டத்தில் வருகின்ற பிரச்சனை. சுயயுரிமைச் சட்டத்திற்கு இதில் எந்தவொரு இடமும் இல்லை. பணம் குறைந்த நாடுகள் உயிர் காக்கும் மருந்துகளை தயார் செய்து குறைந்த விலைக்கு உயிர் காக்கும் பொருட்டு விற்பனை செய்யலாமா என்பது சுயயுரிமைச் சட்டத்தில் வருகின்றது. பதிப்புரிமைச் சட்டத்திற்கு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.
மிகைப்படுத்தப்பட்ட குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவற்றை பார்க்கின்ற எவராலும் இவ்வித்தியாசங்களை உணர முடியாது. ஏனெனில் இவை இரண்டுமே தமக்குள் உடன்படாதவை. மேலும் இவையிரண்டும் முழுமையான பொருளாதாரப் பிரச்சனைகளும் அல்ல. இவ்விரண்டினையும் ஒரே கண்ணோட்டத்தில் தாங்கள் பார்க்க முற்பட்டால், அது இவற்றை தாங்கள் தனித்தனியே தெளிவாக பார்கக் கூடிய திறனுக்கு முட்டுக்கட்டையாய் அமையும்.
ஆக, அறிவுசார் சொத்து என்ற பொருளைப் பற்றிய கருத்துக்களும் அதை மிகைப் படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முட்டாள் தனமானவை. இவையனைத்தையும் ஒன்றென கருத தாங்கள் முற்பட்டால் மிதமிஞ்சிய மிகைப்படுத்தப்பட்ட சிந்தனைகளிலிருந்தே தங்களின் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இது நிச்சயமாக நல்லதல்ல.
சுயயுரிமை, பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை எழுப்பும் பிரச்சனைகளைப் பற்றி தெளிவாக சிந்திக்க தாங்கள் விரும்பினால் இவையனைத்தையும் ஒன்றாக கோர்க்கும் எண்ணத்தை மறந்துவிடுங்கள். இவற்றை வெவ்வேறானதாகக் கருதுங்கள். அடுத்த வழி "அறிவுசார் சொத்து" என்கிற பதம் வழங்க முற்படுகின்ற குறுகிய சொற்பமான அணுகுமுறைகளை புறக்கணியுங்கள். இவற்றை அதனதன் முழுமையானப் பொருளில் வெவ்வேறானதாகக் கருதுங்கள். அங்ஙனம் செய்தால் இவற்றைப் பற்றி தெளிவாகக் கருதும் வாய்ப்பினைப் பெறுவீர்கள்.
பதிப்புரிமை © 2004, 2006 ரிச்சர்ட் எம் ஸ்டால்மேன்
Friday, February 13, 2009
தீர்வை
வரி
வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு.
வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.
பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.
வரி அறவிடுவதன் நோக்கங்கள்
அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:
சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல்,
சொத்துக்களைப் பாதுகாத்தல்,
பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல்,
பொது வேலைகள் (public works),
சமூகப் பொறியியல் (social engineering),
அரச செயற்பாடுகள்.
பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன:
கல்வி முறைமைகள்,
உடல்நலம் பேணல் முறைமைகள்,
வயோதிபர்களுக்கான ஓய்வூதியம்,
வேலையற்றோர் கொடுப்பனவுகள்,
சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்
பொதுப் போக்குவரத்து.
அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்:
வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல்.
தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல்,
பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது),
குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.
Thursday, December 11, 2008
நாணய மதிப்பிறக்கத்திற்கு மத்திய வங்கி அனுமதி டொலர் 110 ரூபாவாக வீழ்ச்சி
உலகமய பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்றுமதி விலைகளிலும், ஏற்றுமதிக்கான கேள்விகள் குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ஏற்பட்டிருக்கும் சடுதியான வீழ்ச்சி மற்றும் முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அண்மைக்கால சடுதியான பெறுமதி உயர்வு போன்ற விடயங்களே மத்திய வங்கியின் இந்த தீர்மானத்துக்கு வழி வகுத்திருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பிட்ச் ரேடிங்ஸ் அறிக்கைக்கு மத்திய வங்கி விளக்கம்

Wednesday, December 10, 2008
உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1
Thursday, December 4, 2008
உலக உணவுப் பாதுகாப்பு சில தீர்மானங்கள்
உணவு தானியப் பற்றாக்குறை அல்லது தொடர்ந்து வாட்டும் வறுமையில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் சில நாடுகளைக் கூட (எத்தியோப்பியா, சோமாலியா) மற்றநாடுகளின் அபரிமிதமான தானிய உற்பத்தியைக் கொண்டு காத்து வந்திருக்கின்றோம். 1930களின் இறுதியில் நிலவிய உலகப் பெருமந்தம் (Great Depression of World Economy) அதன்பிறகு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றின் தாக்கம் உலக நாடுகளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. தொழிற்துறை வளர்ச்சி வேகம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்று மிகவும் நம்பப்பட்ட அந்தக் காலகட்டத்தில் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியும், உணவு உற்பத்தியுமே ஒரு நாட்டில் நிலையான வளர்ச்சியை ஊக்கப் படுத்தும் என்ற உண்மை உணரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், அன்றைய ஒருங்கிணைந்த ரஷ்யாவும் 1940 மற்றும் 1950 களில் உணவு உற்பத்தி பெருக்கத்தில் பெரிதும் தனது கவனத்தையும், ஆய்வையும் செலுத்தியது. அவரவர் வசதிக்கும், தேவைக்குகேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. உயர் விளைச்சல் தரும் ரகங்கள், அதிகரிக்கப்பட்ட விளைநிலங்கள், நீர்ப்பாசன வசதி, ரசாயன உரக் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, வேளாண்மையில் இயந்திரங்களின் அறிமுகம் ஆகியவை மேற்கூறிய காலகட்டத்தில் வேளாண்மைப் புரட்சிக்கு உலக அளவில் வித்திட்டது.
இதன் தாக்கம் நம் நாட்டிலும் பெரிதும் உணரப்பட்டது. இதன் விளைவாக 1930 மற்றும் 1940களில் வறுமையிலும், பஞ்சத்திலும் பாதிக்கப்பட்ட நமது நாடு நவீன வேளாண் உற்பத்தியின் அவசியத்தையும், முக்கியத்துவத் தையும் உணர்ந்து ரஷ்யப் பொருளாதார முறையின் ஐந்தாண்டு திட்டங்களைப் போல் வகுத்துச் செயல்பட முனைந்தது. முதல் மற்றும் இரண்டாவது திட்ட காலத்தில் (1951-56 மற்றும் 1956-1961) வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வழிவகை ஏற்பட்டது. அதிவேகமாக வளர்ந்து வந்த மக்கள் தொகையின் அளவிற்கு ஏற்ப உணவளிக்கச் சாத்தியப்பட்டது. இன்றுவரை உலகின் இரண்டாவது மக்கள் தொகையைப் பெற்றிருக்கும் நமது நாட்டில் உணவுப் பற்றாக்குறையும், பட்டினிச்சாவும் இல்லை என்பது நமது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் சமீபத்தில் ரோம் நாட்டில் கூடிய 180 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் “உலக உணவு நிலை” பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியதின் அவசியத்தையும், நம்முன் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வரும், காலநிலை மாற்றம் பற்றியும் உயிரி எரிசக்தி பற்றியும் சில உண்மை நிலைமையையும், எதிர் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்ந்துள்ளனர்.
இன்றைய நிலையில், மிகவும் கவலை அளிக்கக்கூடிய செய்தியாக, நாளும் உலக அளவில் அதிகரித்துவரும் உணவுப் பொருட் களின் விலைதான் என்று இம்மாநாடு சுட்டிக் காட்டியுள்ளது. இதே நிலை தொடருமானால் வரும் ஆண்டுகளில் கிட்டத்திட்ட 100 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் தள்ளப்படுவார்கள் என்கிற கணக்கும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (ஊஅஞ) டைரக்டர் ஜெனரல் ஜேக்ஸ் டயாஃப் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது, உணவுப் பற்றாக்குறை என்பது வருங்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், வளர்ந்துவிடும் மக்கள் தொகை, உணவு உற்பத்தி செய்யும் நாடுகளின் வேளாண்மைத் தேக்கம், உலக வாணிபம் ஆகியவற்றைநாம் கடுமையாக எதிர்கொண்டு சமாளிக்கவில்லை என்றால் 2015க்குள் திட்டமிட்டுள்ள உலக வறுமை ஒழிப்பு எனும் தீர்மானம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்திய ரோம் மாநாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது உலகின் உணவுப் பொருள் உற்பத்தி நிலையை ஆராய்ந்து வேளாண் பொருட்களின் வழங்கலை உலகம் முழுக்க சீர் செய்வதுடன் அவற்றின் விலையை நிலைப்படுத்துவதும் ஆகும். இம்முயற்சி மேற் கொள்ளப்படாவிட்டால், சீரற்றவேளாண் உற்பத்தியும், நிலையற்றவேளாண் பொருட்கள் விலையும் உலக அரங்கில் ஒரு பெரிய பொருளாதார சீர்கேட்டை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் இம்மாநாட்டில் முன்வைக்கப் பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை ஒருபுறம், உயர்தரம் வாய்ந்த வாழ்க்கை நிலையில் உள்ள நாடுகள் மறுபுறம், உணவுத் தேவைக்கே அல்லல்படும் நாடுகள் இன்னொருபுறம் என்றநிலையை இனியும் மாற்றாவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றகருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருள் பற்றாக்குறைஅல்லது தட்டுப்பாட்டிற்கு சமீபத்திய காரணியாக உயிரி எரிபொருள் (க்ஷண்ர்-ச்ன்ங்ப்) உருவெடுத்துள்ளதாகவும் கருத்து வெளிப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எழுந்துள்ள முக்கிய தீர்மானம் அல்லது முடிவு என்ன வென்றால் வளர்ந்துவரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் மற்றவற்றையும் விட வேளாண் துறைவளர்ச்சிக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியத்துவமும், உதவியும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடு களும் வேளாண்துறைமுதலீட்டையும், வேளாண்சார்ந்த வாணிபத்தையும், கிராமப் புறவளர்ச்சியையும் ஊக்குவிக்கவேண்டும். குறிப்பாக வேளாண்சந்தை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
இத்தீர்மானத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், சில நாடுகள் இக்கருத்தை விமர்சனம் செய்யத் தயங்கவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் வேளாண் மானியமுறையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி போன்ற அமைப்பினை நாம் அதிகமாக சார்ந்திருப்பதாலும் வேளாண் கொள்கையில் பெரிய மாற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்த முடியவில்லை என்றகருத்தை அர்ஜென்டினா, மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் இம்மாநாட்டில் வலியுறுத்தியுள்ளன.
வாணிப தாராளமயமாக்கலைப் பற்றி நாம் பேசும் போதும், எழைகளின் வாழ்வாதாரத் தையும் உணவுப் பாதுகாப்பையும், ஏழை விவசாயிகளின் இன்றைய உண்மை நிலைமை யும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். இது நமக்கு மகிழ்ச்சியளித்தாலும் உலக வேளாண் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தில் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்தாக மற்ற நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. வேளாண் துறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு உணவுப் பொருள் ஏற்றுமதி மேற்கொள்ளுதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் வளர்ந்து வரும் நாடுகள் உணவுத் தட்டுபாட்டில் மேலும் சிக்கிக் கொள்ளும் என்பது தென் அமெரிக்கா, கியூபா, நிகரகுவா, ஈக்வடார் ஆகிய நாடுகளின் ஒத்த கருத்தாக இம்மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் 10 நாடு களில் உணவு நிலை ஓரளவு சீராக இருந்தாலும் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறைஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு கணிசமான அளவு தடை விதித்துள்ளன. ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால் மட்டுமே நிலைமை சீராகிவிடுமா என்றகேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமே. வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேளாண் தொழில் முற்றிலும் பாதுகாக்கப் படவேண்டும். விளைநிலங்களின் அளவு எக் காரணம் கொண்டும் குறைய அனுமதிக்கக் கூடாது. அதேபோல் மக்கள் தொகை பெருகு வதை கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட வேண்டும். மேற்கூறிய தீர்மானங்கள் இந்தியாவிற்கு இன்றைய அவசரத் தேவையாகும்.
இத்தருணத்தில் நாம் மற்றொரு உலகளாவிய பெரும் பிரச்சனையை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டியள்ளது. அதாவது, பருவநிலையிலும் காலநிலையிலும் ஏற்படும் மாற்றம் உலக வேளாண்துறையிலும், உணவுப் பொருள் உற்பத்தியிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இப்பிரச்சனை குறித்தும் ரோம் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக மழையின் அளவிலும், காலநிலையிலும் ஏற்பட்டு வரும் மாற்றம் நமக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வரும் காலங்களில் இப்பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இயற்கையின் தன்மையை சலனப்படுத்தாமல், பசுமையைக்காத்து, நீர் ஆதாரங்களை சிறப்புடன் நிர்வகித்து, இயற்கை சார்ந்த வாழ்வு முறைக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நிலைமை சீர்படும் என்றும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Monday, November 10, 2008
பயோ எரிபொருளும் சோளம் உற்பத்தியும்
இன்றைக்கு உலகின் பெருமளவில் பேசப்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று எரிபொருட்கள் தொடர்பான சர்ச்சைகள். அனு ஆற்றலோ, பெட்ரோலிய குழாய் திட்டமோ, எரிவாயு திட்டப்பணியோ, இன்றைக்கு சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தும் இந்த எரிபொருள் சர்ச்சை காலப்போக்கில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை நழுவிக்கொண்டிருக்கிறது நம்மில் பலருக்கு. இந்த நிலையில் வளர்ந்த முன்னேறிய நாடுகள் பல மாற்று எரிபொருள் என்ற திசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் வளர்ச்சியயும் ஊக்குவித்ததோடு, அவற்றில் பயன்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து சுகவாசிகளாக சிரித்துக்கொண்டுள்ளன. வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அல்லது வளரும் நாடுகளோ இன்றைக்கு செல்வந்த நாடுகளின் பிடியில் உள்ள எண்ணெய் வளங்களின் சந்தை பேரத்தில் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை இழந்துகொண்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் வாசத்தோடு கொஞ்சம் அரசியல் வாசமும் வீசுவதுபோல தோன்றுகிறதா, சரி விடயத்திற்கு வருவோம். ஆக இன்றைக்கு எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் தோண்டத்தோண்ட சுரக்கும் கேணிபோன்ற நிலை கடந்து, சரக்கு தீர்ந்தது அடுத்த கிணறை பார் என்ற நிலைக்கு ஆளாகிக்கொண்டுள்ளன. ஒரு விதை ஊன்ற ஐம்பதாய், எழுபதாய், நூறாய் பலன் தரும் பயிர்கள் போல் இந்த பெட்ரோலும், டீசலும் இருந்தால் இன்றைக்கு பெட்ரோல் பயிர்கள் நிறைந்த பரப்பாகத்தான் பூமி காட்சியளித்திருக்கும். கற்பனையில் மட்டுமே சாத்தியமாகும் பெட்ரோல் பயிர் உண்மையில் சாத்தியம் என்றால்..?? அட போப்பா கிண்டலடிக்கத்தான் இவ்வளவு நேரம் பேசினது என்று சலிக்கவேண்டாம். உண்மையில் பெட்ரோல் விளையும் பயிர்கள் உண்டு நேயர்களே. ஓ, என்ன மறுபடியும் மூலிக பெட்ரோல் கதையா? என்கிறீர்களா. இல்லை, இல்லை. உண்மையில் பெட்ரோல் விளையும் பயிர்கள் உண்டு. ஆனால் அப்பயிர்கள் பெட்ரோல் என்ற பெயரோடு அழைக்கப்படுவதுமில்லை, அவை பெட்ரோலை தருவதுமில்லை. விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், பயிர்கள் மூலம் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் தயாரிப்பது சாத்தியம் என்பதை இன்றைக்கு பல நாடுகள் ஏற்றுக்கொண்டதோடு, அவற்றை பரவலான அளவில் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளன. பயோடீசல், எத்தனால் ஆகியவை சோளம், கரும்பு போன்ற பயிர்களிலிருந்து தயாரிக்கப்பட்டு செல்வந்த நாடுகள் பலவற்றில் பயனபடுத்தப்படு வெற்றிகரமான, லாபகரமான எரிபொருளாக மாறியுள்ளன.வடமேற்கு சீனாவின் சோள விவசாயிகளுக்கு சுன் ஜியாங்ஹொங்கின் சோளத் தட்டுகள், சோளக் கதிர்களின் மீதான் ஆர்வம் மட்டில் வியப்பு மேலிடுகிறது. எதற்காக இந்த நபர் நம்மிடம் வந்து சோள அறுவடைக்கு பின்னர் பயனில்லாமல் வீசி எறியப்படும் தண்டுகள் அல்லது சோளத் தட்டுகளை கேட்கிறார் என்ற கேள்விகள் அவர்களுக்கு உண்டு. வழமையாக கால்நடைத் தீவனமாக அல்லது வெற்றாக எரியூட்டப்பட்டுவிடுகிற இந்த சோளத் தட்டுகளை பயன்படுத்தி எத்தனால் எனப்படும் எரிபொருளை தயாரிக்கும் ஒரு ஆலையை நிறுவவேண்டும் என்பதுதான் சுன் ஜியாங்ஹொங்கின் எண்ணம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? எத்தனால் மற்றும் பயோடீசல் எரிபொருள் பயன்பாட்டிலும், சந்தையிலும் ஒரு புரட்சியே செய்யும் அளவுக்கு உலகின் எரிபொருள் தேவை இருக்கிறது. பயனில்லாதது என்று தூக்கியெறிப்பட்ட, கொளுத்து குளிர் காயப்பட்ட இது போன்ற பயிர்களின் மிச்சங்களில் எரிபொருள் தயாரித்து வளரும் நாடுகள் தங்களது தேவையை நிறைவு செய்ய முயற்சிக்கலாம் என்பது மகிழ்ச்சியான சேதியல்லவா. ஆனால் இதெல்லாம் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடிய மாய வித்தை அல்ல. சவால்கள் நிறைந்த பணியாகும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், ஒரு டன் எத்தனால் தயாரிக்க நான்கு டன் சோளத் தட்டுகள் அல்லது தண்டுகள் தேவை. வீணாகப்போகும் இவற்றை சேகரிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதே சுன் ஜியாங்ஹொங்கின் அனுபவம். இது சீனா போன்ற நாடுகளின் பயோடீசல், எத்தனால் ஆகிய பயோ எரிபொருள் அல்லது உயிரி எரிபொருள் துறையின் நிலையாகும்.
சீனாவில் உயிரி எரிபொருள் என்பது வேண்டுமானால் புதியதாக இருக்கலாம் ஆனால் இந்த எரிபொருளின் தயாரிப்பில் முக்கியத்துவமிக்க கிரெயின் ஃபெர்மன்டேஷன் எனப்படும் நுண்ணுயிர் பதப்பாடு முறை சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சயமான ஒன்று என்கிறார் சீன வேளான் பொறியியல் கழகத்தின் தலைவர் ஷு மிங்.
பயோ எரிபொருள் என்று பார்த்தால் அதிகமாக பயன்பாட்டில் இருப்பது எத்தனால் ஆகும். இது பெரும்பாலும் சோளத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர சோயாபீன்ஸிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பயோ டீசல் அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் அதிகம். கரும்பு உற்பத்தி அதிகம் உள்ள பிரேசில் இந்த பயோ எரிபொருள் துறையில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. அமெரிக்காவில் இந்த பயோ எரிபொருள் துறை இன்றைக்கு நேற்றல்ல, கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது. அப்போதைக்கு தேவைக்கதிகமான விளைச்சல், தானியங்கள் கூடுதலாக உள்ள நிலையில் உபரியானதை வீணாக்காமலிருக்க இந்த எத்தனால், பயோ டீசல் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் 2000ம் ஆண்டில் முற்பகுதியில் உலக பெட்ரோல் டீசல் விலை அதிகாகிக்கொண்டிருந்தபோது, மாற்று எரிபொருள் தேவை என்ற நிலையில், இந்த பயோ எரிபொருட்கள் மாற்று எரிபொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. புதிய ஆய்வுகள் இந்த பயோ எரிபொருட்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமான பயன் தருபவை, உற்பத்தித் திறன் கொண்டவை என்று வலியுறுத்துகின்றன.
அன்மையில் பெய்சிங்கில் சிங்ஹுவா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநில வேளாண்துறை உள்ளிட்ட சில துறைகளும், நிறுவனங்களும் ஏற்பாடு செய்த உலக பயோ எரிபொருள் ஆய்வரங்க கூட்டமர்வில் சீனாவின் மிகப்பெரிய அளவிலான வேளான் உற்பத்தி பொருட்கள் பயோ எரிபொருளாக மாற்றப்படும் சாத்தியங்களை உறுதிபடுத்துவதாக சீன தேசிய உயிரி மேம்பாட்டு மைய்த்தின் உயிரி தொழிநுட்பத்துறை சியு ஹொங்வேய் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைக்கு சீனாவின் ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், லியாவ்நிங், சிலின் ஆகிய மாநிலங்களில் வழமையான பெட்ரோலுடன், எத்தனால் எனப்படும் உயிரி எரிபொருளை, பயோ எரிபொருளை கலந்து பயன்படுத்தும் முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், மற்றும் சிலின் மாநிலங்களில் உள்ள நாஙு ஆலைகளில் எத்தனால் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. சீனாவை பொறுத்த வரை பயோ எரிபொருள் உற்பத்தியை தொழிலாகக் கொண்டால் பெருமளவு லாபம் பார்க்கமுடியாது. காரணம் இங்கே பெட்ரோல் டீசல் விலை இந்தியாவிலோ அல்லது வேறு சில நாடுகளில் உள்ளது போலவோ அதிகம் இல்லை. ஆனால் அதர்காக இந்த மாற்று எரிபொருளின் ஆக்கப்பூர்வமான பலன்களை ஒதுக்கிவுட முடியுமா என்ன. அன்மையில் சென்னையில் தேசிய வேளான் அறக்கட்டளை மையத்தில் வைத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சந்த்த்தபோது 2020ம் ஆண்டுக்குள் உணவு உற்பத்தியை தொழில்நுட்ப உதவியுடன் இருமடங்காக அதிகரிக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தொடர்ந்து ஒரே பயிராக பயிர் செய்யாமல் சுழற்சி முறையில் பயிர்களை மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும் என்றும் இதன்காரணமாக அதிக உற்பத்தி கிடைப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கும் என்றும் கூறிய குடியரசுத் தலைவர்,
நாட்டில் டீசல் எண்ணை இறக்குமதிக்காக ரூ.13 ஆயிரத்து 500 கோடி செலவாகிறது. இந்த நிலையில் பயோ-டீசல்தான் மாற்று எரிபொருள். காட்டாமணக்கில் 22 சதவீதம் எண்ணை உள்ளது. எனவே, விவசாயிகள் பயோ-டீசல் உற்பத்திக்காகவும், தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ளவும், விளைநிலங்களில் காட்டாமணக்கு பயிரிட முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசின் 2006 - 2007 திருத்த நிதியறிக்கையில் விவசாயிகளது நலன் பற்றி குறிப்பிடும்போது, எத்தனால் பெட்ரோலிற்கு மாற்றாகவும், பயோ டீசல், டீசலிற்கு மாற்றாகவும் பயன்படுகிறது. முதல் கட்டமாக பெட்ரோலுடன் எத்தனால் 5 விழுக்காடு கட்டாயமாகக் கலந்து பயன்படுத்த நடுவணரசு ஆணையிட்டுள்ளது. எனவே, அத்தனை சக்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்க்கரைச் சோளம், சர்க்கரைக் கிழங்கு மூலமும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதனால் இவைகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும் ஜெட்ரோப்பா எனப்படும் காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசலாக, டீசலிற்கு மாற்றாக பயன்படும் என்பதால் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு விளைவிக்க ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக பயோ எரிபொருளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் உலகின் இரு பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஊக்கமுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்றைக்கு உலக பொருளாதார வளர்ச்சியில் தங்களது அசுர வேக வளர்ச்சியால் மற்ற எல்லா நாடுகளையும் வாயைப் பிளக்கச் செய்யும் இந்த இரு பெரும் நாடுகள் முனைப்புடன் செயல்பட்டால், வேளான்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடுகளின் கையில் பயோ எரிபொருட்களின் எதிர்காலம் என்பதை மாற்ற இயலாது.
Friday, November 7, 2008
பொருளாதார தாராளவாதமும் மக்கள் உரிமைகளும்
கடந்த இரு தசாப்தங்களாக நவதாராளவாதம் உலகளாவியரீதியில் பரவி வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கின் அடிப்படையாக அமைந்திருப்பது சுதந்திரவர்த்தகக் கொள்கையும் தனியுடைமையாக்கலுமாகும். அரசியல் தாராளவாதத்தின் முக்கிய விழுமியங்களாகக் கருதப்படும் தனிமனித சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றிற்கும் இந்தப் பொருளாதார அடிப்படைக் கொள்கைக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. அதாவது லிபரலிசத்தின் அரசியல் ஜனநாயக இலட்சியங்கள் அதன் பொருளாதார இலட்சியங்களுடன் முரண்படுகின்றன.
தாராளவாதத்தின் உலகளாவிய எழுச்சிக் காலகட்டத்தில் - அதாவது கடந்த இரு தசாப்தங்களில் - மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு ஒரு முக்கிய காரணம் பல தெற்கத்திய நாடுகளில் பொருளாதார தாராளவாதக் கொள்கைகளின் அமுலாக்கல் தொழிலாளர்களினதும் பொதுமக்களினதும் அரசியல் உரிமைகளை நசுக்கிவருவதே ஆகும். தெற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல கிழக்கு ஐரோப்பாவிலும் இந்தநிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.
லிபரலிசத்தின் பொருளாதாரத்திற்கும் அரசியலுக்குமிடையிலான இந்த முரண்பாடு வரலாற்றுரீதியானது. அரசியல் ஜனநாயகமாக்கலின் வளர்ச்சியை ஏற்படுத்த சந்தைப் பொருளாதாரத்தை அரசு பலவகையில் நெறிப்படுத்தல் கட்டுப்படுத்தல் அவசியம் என்பதை மேற்கு ஐரோப்பாவின் வரலாறு நன்கு காட்டுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானியாவின் அரசியல் பொருளாதார போக்குகளை ஆய்ந்தறிந்த கார்ல் பொலன்யி கூறுவதுபோல் அந்நாட்டின் முதலாளித்துவ அபிவிருத்தியின் வரலாறு ஒரு இரட்டை இயக்கப்பாட்டினைக் கொண்டிருந்தது. ஒருபுறம் சந்தை சக்திகள் பரவி எழுந்தன. இவை பண்டமயமாக்கலை முன்தள்ளின. மறுபுறம் மனித உழைப்புச்சக்தியும் இயற்கை வளங்களும் பண்டமயமாக்கப்படும் இந்தப் போக்கிற்குச் சமூகத்திடமிருந்து பலவிதமான எதிர்ப்புக்கள் தோன்றின. தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளைக் கோரினர். ஆளும் வர்க்கத்தினால் மூலதனத்திற்கும் உழைப்பிற்குமிடையிலான முரண்பாட்டைச் சந்தைச்சக்திகளிடம் மட்டுமே விட்டுவிட முடியவில்லை. தொழிற்சங்கங்கள் வேலைநேரம், கூலி, வேலைத்தள சூழல் போன்றவற்றைப் பிரதான போராட்ட விடயங்களாக்கின. இந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்று உழைப்புச்சக்திச் சந்தையின் நெறிப்படுத்தலாகும். அரசினால் பலவிதமான சட்டங்களும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன. இதேபோன்று பொதுமக்கள் அமைப்புக்கள், வறுமை குறைப்பு, சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் போராடிச் சில வெற்றிகளைப் பெற்றன. இந்தப் போராட்டங்கள் இன்றும் தொடருகின்றன. நிலம் பண்டமயமாக்கப்பட்டபோதும் சூழல் பாதுகாப்புச் சட்டங்களும் விதிகளும் நிலச்சந்தையை சிலவழிகளில் நெறிப்படுத்த உதவுகின்றன.
சகல விருத்தி பெற்ற முதலாளித்துவ நாடுகளின் வரலாற்றிலும் முரண்பாடான இந்த இரட்டை இயக்கப்பாட்டினைக் காணலாம். இதன் செயற்பாடுகளினால் நடைமுறை முதலாளித்துவ பொருளியல் பாடநூலில் முன்வைக்கப்படும் தூயசந்தைப் போட்டி பொருளாதார மாதிரியைவிட பலவகையில் வேறுபட்டிருக்கிறது. நிறுவனமயமாக்கப்பட்டுள்ள மனிதஉரிமைகள், தொழிற்சங்கங்கள், சூழல் இயக்கங்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் போன்றவை முதலாளித்துவத்தின் ஜனநாயக முகத்தினைச் சார்ந்தவை. இவை அதே முதலாளித்துவத்தின் மற்றைய முகத்தின் அம்சங்களான சந்தைப்போட்டி, தனியுடைமை லாபநோக்கு போன்றவற்றுடன் முரண்படுகின்றன. இறுதி ஆய்வில் இந்த முரண்பாட்டிற்கு முதலாளித்துவ அமைப்பிற்குள் தீர்வுகாணமுடியாது. ஆயினும் மக்களுரிமைகளின் குறைந்தபட்ச நிறுவனமயமாக்கலின் நடைமுறை முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. விருத்தியடைந்த முதலாளித்துவ அமைப்புகளின் இந்த வரலாற்றம்சம் இன்று முதலாளித்துவம் விருத்திபெறும் நாடுகளின் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சில பாடங்களைத் தருகின்றது. சந்தைச்சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்கெதிராக அணிதிரண்டு போராடுவதன்மூலமே குறைந்தபட்ச உரிமைகளையாயினும் வென்றெடுக்க முடியும். அதேவேளை இந்த உரிமைகளின் நிரந்தரமான நிறுவனமயமாக்கலையும் நியாயமான செயலாக்கலையும் உத்தரவாதப்படுத்த தொடர்ச்சியான வெகுஜன இயக்கங்களும் அவசியம்.
2. இன்று நாம் எதிர்நோக்கும் சவால்
மூலதனத்தின் சர்வதேச மயமாக்கல் இதை இன்று பூகோள மயமாக்கல் - புடழடியடணையவழைn - என அழைக்கிறார்கள். முன்னெப்போதையும்விட பரந்து ஆழ்ந்து நகரும் காலமிது. இந்தக் காலகட்டத்தில் பொருளாதார தாராளமயமாக்கல் பல தேசியப் பொருளாதாரங்களைப் பாதகமாகத் தாக்கியுள்ளது. சமீப காலங்களில் ஜப்பானையும் தென்கிழக்காசிய நாடுகளையும் தாக்கிய பொருளாதார நெருக்கடிகள் உலகப்பொருளாதார அமைப்பின் நெறிகெட்ட இயக்கத்தன்மைகளை நன்கு வெளிப்படுத்தின. ஆசியநாடுகளின் நெருக்கடிகள் தொடரும் அதேவேளை கிழக்கு ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கக்கண்டமும் பல பாதகமான விளைவுகளை அனுபவிக்கிறது.
மேலும் குறிப்பாகக் கூறுவதாயின் பல்வேறு வறிய நாடுகளில் வேலையில்லாதோர் தொகை அதிகரித்துள்ளது. அரசாங்கங்கள் சமூகவிருத்திக்கான செலவினத்தைக் குறைத்ததால் பள்ளிக்கூடம் செல்லமுடியாத குழந்தைகளின் தொகையும் பொதுமக்களின் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன. கல்வி, சுகாதாரத்துறைகளின் தனியுடைமையாக்கலினால் கணிசமானோர் இந்த வசதிகளிலிருந்து நிரந்தரமாக வெளிவாரிப்படுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைப்போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. விலைவாசியேற்றம் தொழிலாளர்களை மட்டுமல்ல விவசாயிகளையும் பாதிக்கிறது.
இன்று உழைக்கும் மக்கள் தமது உரித்துடைமைகள் பலவீனமாக்கப்படுவதைத் தடுக்க முடியாத நிலையிலுள்ளனர். ஒருபுறம் அடிப்படைச் சமூகசேவைகளுக்கான அரசசெலவு குறைக்கப்படுகிறது. இச்சேவைகள் படிப்படியாக தனியார்துறைமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் உழைப்பாளிகளின் ஊதியம் போதியளவு வளரவில்லை. தரமான சமூகசேவைகளை விலைகொடுத்து வாங்குமளவிற்கு பெரும்பாலான தொழிலாளரிடம் கொள்வனவு சக்தியில்லை. இதனால் இவர்கள் படிப்படியாகத் தரம் குறைந்துகொண்டிருக்கும் அரச சமூகசேவை நிலையங்களிடம் செல்கிறார்கள். அரசினால் வழங்கப்படும் சமூகசேவைகளின் தரம் உயர்த்தப்படாவிட்டால் இந்த மக்களின் எதிர்கால சந்ததிகளின் கல்வி, சுகாதார நலன்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும். நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற வறிய விவசாயிகள், கூலியுழைப்பாளர்கள் (தோட்டத்தொழிலாளர்கள் உட்பட) போன்ற சமூகப்பிரிவுகளும் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழும் மக்களும் தரம்குறைந்த சமூகசேவைகளின் நீண்டகால பாதகமான விளைவுகளை அனுபவிக்கிறார்கள்.
இத்தகைய சமூக அரசியல் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையிலும் சர்வதேச நிதிநிறுவனங்களும் மேற்கத்தைய அரசியல் தலைமைகளும் பொருளாதார தாராளவாதத்திற்கு தொடர்ந்தும் புகழ்பாடுகின்றன. இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை, தவிர்க்கமுடியாதவை என சர்வதேசநாணய நிதியமும் உலகவங்கியும் கூறுகின்றன. இதுதான் நீண்டகால அபிவிருத்திக்கு சமூகம் கொடுக்கும் விலை. ஆனால் இந்த விலையைவிட வரப்போகும் சமூகநன்மைகளின் பெறுமதி அதிகமானதென அவை ஆறுதல் கூறுகின்றன. ஆனால் எனது அபிப்பிராயத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இப்போ தீர்வு கிடைக்காவிடில் சமூகத்தின் கணிசமானோர் நீண்டகாலத்தில் பெரிதும் பாதிக்கப்படப்போகின்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இன்றைய பொருளாதார தாராளவாதிகளுக்கான பதிலை விருத்திபெற்ற முதலாளித்துவநாடுகளின் வரலாறு கொடுக்கிறது. அந்த வரலாற்றின் இரட்டை இயக்கப்பாட்டினை நாம் புரிந்துகொள்ளல் இன்றைய சவாலை எதிர்நோக்க ஓரளவு உதவும். இங்கு நான் குறிப்பிட்ட சமூக அரசியல் பிரச்சினைகளை மற்றைய பல பிரச்சினைகளுடன் இணைத்துப் பார்த்தலும் அவசியமாகும். இப்படி அணுகும்போது நாடுகளிற்கிடையிலான விசேட வேறுபாடுகள் முக்கியத்துவம் அடைகின்றன. உதாரணமாக இலங்கையை எடுத்துக்கொள்வோம். இங்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் எல்லாம் இருக்கும் அதேவேளை இலங்கையில் இன்னும் தீர்த்துவைக்கப்படாத தேசியஇனப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இராணுவமயமாக்கப்பட்டுள்ள இப்பிரச்சினை மற்றைய பிரச்சினைகளை அரசியல்ரீதியில் பின்தள்ளியுள்ளது. ஆயினும் மற்றைய பிரச்சினைகளும் தொடர்ந்து ஆழமாகிவருகின்றன. அதுமட்டுமல்ல அரசின் உள்நாட்டு யுத்தக்கொள்கையும் நடைமுறையும் தமிழ்மக்களை பெரிதும் பாதிக்கும் அதேவேளை சகலமக்களினதும் அடிப்படை சுதந்திரங்களையும் பாதிக்கின்றது. தென்னிலங்கை அரசியலையும் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது. வன்செயல்களற்ற ஒரு உள்@ர்த் தேர்தலைக்கூட அரசாங்கத்தினாலும் பிரதான எதிர்க்கட்சியான ரு.N.P.யினாலும் நடத்த முடியவில்லை.
இலங்கைபூராவிலும் மக்கள் உரிமைகள் மீறப்பட்டுவரும் இந்த நிலையில் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள், உரிமைமீறல்களை மேலும் வலுப்படுத்துகின்றன. ஆனால் தொழிலாளர் உரிமைகளுக்கான சமூகநல உத்தரவாதங்களுக்கான போராட்டங்கள் மற்றைய ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஒரு பலமான ஆதர்ஷத்தையும் நேரடி உந்துதலையும் வழங்கவல்லன. தேசியஇனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு இல்லாவிடில் உள்நாட்டு யுத்தம் தொடரும். இது தொடர்வது பொதுவான உரிமை மறுப்புகளுக்கு உதவுகிறது. இங்கு நாம் இலங்கையின் தெற்கில் வாழும் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கும் வடகிழக்கில் வாழும் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பினைக் காண்கிறோம். தமிழ்மக்களின் இனவிடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை வலுப்படுத்த இந்தத் தொடர்பு பயன்படும். அதேநேரம் தெற்கில் இடம்பெறும் மக்களுரிமைப் போராட்டங்கள் வடகிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஆதர்ஷத்தை வழங்கும். அங்கே ஜனநாயகத்திற்கான போராட்ட நிலைமைகள் இராணுவமயப்படுத்தலாலும் துப்பாக்கிக் கலாச்சாரத்தாலும் நசுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய உலகின் அரசியல் பொருளாதாரப் போக்குகளின் உள்நாட்டுத்தாக்கங்களையும் இவற்றிற்கெதிராக தொழிலாளர்களும் பொதுமக்களும் எடுக்கும் முயற்சிகளையும் கணக்கிலெடுக்காது இனவிடுதலைக்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. இந்தப்பரிமாணத்தை உள்வாங்குதல் சகல இனவிடுதலைப்போராட்டங்களின் கடமை. இந்த உள்வாங்கல் இனஎல்லைக்கோடுகளைக் கடந்து செயற்படும் பிரச்சினைகளுக்கும் இனரீதியாகத் தாக்கும் பிரச்சினைகளுக்கும் இடையிலான உறவுகளைப் புரிந்துகொள்ள உதவும். அந்தப்புரிந்துணர்வு பல மட்டங்களில் இடம்பெறும் உரிமைப்போராட்டங்களுக்கிடையிலான தொடர்புகளைப்பலப்படுத்த உதவும்.
3. முடிவுரை
பொருளாதார தாராளவாதத்தின் நடைமுறைகள் மக்களுரிமைகளை மறுப்பதையும் அதை எதிர்த்து அணிதிரண்ட தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்களுக்கூடாக போராட்டங்கள் நடத்தவேண்டிய அவசியத்தையும் பற்றிப் பார்த்தோம். இன்றையநிலையில் இந்தப் போராட்டங்களை நீண்டகாலநோக்கில் அணுகி அவற்றை மக்கள் ஜனநாயகப் புரட்சிமீட்டெடுப்பின் அம்சங்களாக்குவது அடிப்படைச் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவும். மக்கள் ஜனநாயகப்புரட்சியின் மீட்டெடுப்பிற்கு அப்புரட்சிபற்றிய மீள்சிந்திப்பு அவசியமாகும். இது தனிமனிதர்களால் அன்றி போராட்ட இயக்கங்களின் கூட்டுமுயற்சிக்கூடாக செயற்படுத்துதலே சரியான நடைமுறையாக எனக்குப்படுகிறது. இந்தக்கூட்டு முயற்சியும் போராட்டங்களும் இன்றைய முதலாளித்துவத்திற்கு அப்பால் ஒரு புதிய சமூகஅமைப்பு பற்றிய கற்பிதத்திற்கு அவசியமாகும். அதாவது சோசலிசம்பற்றிய புதிய கற்பிதத்திற்கான வழிமுறையாக இது அமைகிறது.
Thursday, October 30, 2008
இலங்கையின் மிகமோசமான பணவீக்கத்துக்கு
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் 2006 முதல் 2007 வரையான காலப்பகுதிக்குரிய பணவீக்க நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் செல்வாக்கிற்கு உட்படாத வெளிக்காரணிகளான எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவையே பணவீக்கத்திற்கு காரணம் என அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றபோதிலும் இவ்விவகாரத்துக்கு இந்த விளக்கம் போதுமானதல்ல என அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.எண்ணெய் விலைஅதிகரிப்பு இந்தப் பிராந்தியத்தின் சகல நாடுகளுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ள போதிலும், ஏனைய நாடுகளை விட இலங்கையில் பணவீக்கம் அதிகமாகவுள்ளமை, இதற்கு எண்ணெய்விலை காரணமன்று என்பதைப் புலப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ஆய்வின் முடிவில் இலங்கையின் பணவீக்க அதிகரிப்பிற்கு உள்நாட்டுக் காரணிகளே அடிப்படை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் உள்ளூர் பணவீக்கத்தைத் தீர்மானிப்பதில் எண்ணெய் விலை போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றாததால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் கொள்கைகள் மிக முக்கியமானவையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் நுகர்வோர் விலையில் 29 வீதமாகவும் பணவீக்கத்தில் 32 வீதமாகவும், மாத்திரமே எண்ணெய் விலையின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக உள்ளூர் காரணிகளே இலங்கையில் பணவீக்க அதிகரிப்பிற்கு காரணம் என்பது உறுதியாவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tuesday, October 28, 2008
பண்டம்
கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது.
பண்டங்களின் வகைகள்
பண்டங்களின் வகைகள்
கூட்டுரிமைப் பண்டம் (social good) - தனியார் உரிமப் பண்டம் - பொதுப் பண்டம் - common-pool resource - குழுவுரிமைப் பண்டம் - மக்களுரிமைப் பண்டம்
போட்டிப் பண்டம் மற்றும் விலக்கமுடியாப் பண்டம்
இணைப்புப் பண்டம் எதிர் பிரதியீட்டுப் பண்டம்
இலவசப் பண்டம் எதிர் அருமைப் பண்டம், positional good
durable good - non-durable good - இடைப் பண்டம் (producer good) - final good - நுகர்வுப் பண்டம் - மூலதனப் பண்டம்.இழிவுப் பண்டம் - இன்றியமையாப் பண்டம் - ஆடம்பரப் பண்டம் - வெப்லன் பண்டம் - கிப்பன் பண்டம் - superior goodதேடு பண்டம் - (post-)experience good - merit good - credence good - demerit good
இணைப்புப் பண்டம்
இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி தனித்தல்லாது இன்னொரு பண்டத்துடன் இணைத்து நுகரப்படும் பண்டமாகும்.
பண்டங்கள் அ, ஆ ஆனது இணைப்புப்பண்டங்களாயின், அ வினது நுகர்வு அதிகரிக்க பண்டம் ;;ஆ வின் நுகர்வும் இணைந்து அதிகரிக்கும்.
உ-ம்: கமரா - பிலிம்ரோல், துவக்கு - தோட்டா, கார்பயணம் - பெற்றொல்
வலக்கால் சப்பாத்து மற்றும் இடக்கால் சப்பாத்துக்கள் முழுமையான இணைப்புப்பண்டதிற்கு உதாரணமாகும். பிரதியீட்டுப்பண்டமானது இணைப்புப்பண்டதிற்கு எதிர்நடத்தையினைக் காண்பிக்கும்.
பிரதியீட்டுப் பண்டம்
பிரதியீட்டுப் பண்டம் எனப்படுவது பொருளியலின்படி ஒரு பண்டத்திற்குப் பதிலீடாக நுகரப்படக்கூடிய வேறொரு பண்டமாகும்.
இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு வெண்ணெயும், வெண்ணெய் போன்ற மார்ஜரிக் காடி (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும்.
இவ்விரு பண்டங்களுக்கான கேள்விகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு ஒரு பொருளின் விலை அதிகரிக்குமாயின் அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போது அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும்.
எ.கா: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட்
இணைப்புப் பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும்
இலவசப் பண்டம்
இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடப்பருமையற்ற பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும், நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச்சியமாகும்.
உ-ம்: மழைநீர், காற்று, சூரியஓளி, சட்டக் கட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள், சிந்தனைகள்
கொளவனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப்பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள் உபயோகப்பட்டிருக்கும்.
இலவசப்பண்டமாக இருப்பவை கிடப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது.
மூலதனப் பண்டம்
பொருளியலில் மூலதனத்தை பெருக்குவதில் அல்லது உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தப்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும்.
இழிவுப் பண்டம்
பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள் பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும்.
உ+ம்: பீடி,போலிநகை
தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும் அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும் அடையும்.
ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக் காண்பிக்கும்.
ஆடம்பரப் பண்டம்
ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள் ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர் வருமானக்கேள்வி நெகிழ்ச்சியினைக் காண்பிக்கும். இவ் வகையான பண்டங்கள் மக்களின் அந்தஸ்து, கௌரவம், உயர் வருமானம் ஆகியவற்றை விளம்புகின்ற சின்னமாகக் கருதப்படும். மக்களின் வருமான மட்டம் அதிகரிக்கும்போது ஆடம்பரப்பண்டங்களுக்கான் கேள்வியும் அதிகரிக்கும். எனினும் வேறுபட்ட வருமான மட்டங்களில் இவை அவசியப்பண்டமாகவோ அல்லது இழிவுப்பண்டமாகவோ மாற்றமடையலாம். அதாவது மேலைத்தேசங்களில் தொலைக்காட்சியானது அவசியப்பண்டமாகக் காணப்படும் அதே சமயத்தில் கீழைத்தேசத்தில் அவை ஆடம்பரப்பண்டமாகக் கருதப்படும்.
உ-ம் :தங்கநகைகள், சொகுசுவாகனங்கள்
கிப்பன் பண்டம்
கிப்பன் பண்டம் (Giffen good) என்பது விற்பனை விலை ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய இழிவுப்பண்டத்தைக் குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.
Saturday, October 25, 2008
இலங்கையை வறுமைப் பிடியிலிருந்து மீட்கவழி என்ன?
இலங்கையில் வறுமை பற்றிய தகவல்களைச் சேகரிக்க குடிசன மதிப்பீடும் புள்ளிவிபரத்திணைக்களத் தரவுகளுமே பெரும்பாலும் உதவுகின்றன. 1991 இற்கும் 1995 இற்கும் இடையிலான 5 வருட வறுமையானது உயர் வறுமைக்கோட்டின் பிரகாரம் 33 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டின் பிரகாரம் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, எமது நாட்டின் 1995 குடி மதிப்புத் திணைக்களத்தின் படி சனத்தொகையில் 25 சதவீதத்தினர் கடுமையான நீண்டகால வறுமையில் மூழ்கியுள்ளனர். கடுமையானதாகவும் தற்காலிகமானதான வறுமையில் 45 சதவீத்தினர் மூழ்கியுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 5.1 சதவீதமாக இருந்தபோது தலைக்குரிய மொத்த உள்ளூர் உற்பத்தி 3.9 சதவீதமாக இருந்தது. எனவே, மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி வீதமோ அல்லது அதன் விநியோக விளைவுகளோ வறுமை மட்டத்தைக் குறைக்க முயலவில்லை. மேலும், நடைபெற்ற போர்ச்சூழல் நிலையானது மொத்த உள்ளூர் உற்பத்தியை ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 2 இலிருந்து 3 சதவீதமாக குறைத்துள்ளது. 1990 இல் குடி மதிப்பீட்டுத் திணைக்கள புள்ளிவிபரப்படி ஆள் ஒன்றுக்கு மாதத்திற்கு குறைந்த வறுமைக்கோடாக ரூ.791 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடான ரூ.950 இனையும் பயன்படுத்தியது. மத்திய வங்கியின் மதிப்பீட்டுப் படி குறைந்த வறுமைக்கோடாக ரூ.860 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடாக ரூ.1,032 இனையும் பயன்படுத்தியுள்ளது. 1996 இல் மத்திய வங்கி குறைந்த வறுமைக்கோடாக தலைக்குரிய கணிப்புச் சுட்டெண் 19 சதவீதத்திலும் உயர்ந்த வறுமைக்கோட்டின் படி 31 சதவீதத்திலும் மதிப்பீடு செய்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் குறைந்த மற்ற உயர்ந்த வறுமைக்கோடுகளுக்கு இடையில் வாழ்பவர்கள் அடிக்கடி ஏற்படும் தற்காலிக வறுமையினால் பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றனர்.
மாவட்ட மட்டத்தில் வறுமையைக் கணிப்போமாயின் கொழும்பு மாவட்டம் மிகக்குறைந்த 19 சதவீத நுகர்வு வறுமைத் தாக்கங்களையும் மிக உயர்ந்த 74 சதவீத நகர மயமாக்கலையும் கொண்டுள்ளது. குருநாகல், இரத்தினபுரி, அநுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உயர்ந்த வறுமை மாவட்டங்களாகவும் மிகக் குறைந்த நகர மயமாக்கலையும் கொண்டிருந்தன. மிக வறிய மாவட்டங்களாக மொனராகலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் காணப்பட்டன.
வறுமைக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1997 இல் வேலை வாய்ப்பற்றோரில் 71 சதவீதத்தினர் இளைஞர்களாகியிருந்தனர். க.பொ.த. உயர்தர வகுப்புத் தகைமையாகவுள்ள 24 சதவீதத்தினர் வேலை வாய்ப்பின்றி இருந்தனர். 1990 இல் வேலை வாய்ப்பின்றி ஆண்களை விட பெண்களே அதிகம் காணப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் ஆண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 7 சதவீதத்திற்குக் குறைவாகவும் பெண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 12 சதவீதமாகவும் காணப்பட்டன. தொழிலாளர்களில் பலர் விவசாயிகளாக இருந்தபோதும் இவர்களில் பலர் மிக உயர்ந்த வறுமைத் தாக்கத்திற்கு (52 சதவீதம்) உள்ளாயினர். மிக வறியவர்கள் நெல் உற்பத்தியில் அல்லது பெருந்தோட்ட வேலைகளில் காணப்பட்டனர். உற்பத்தி தொழிலாளர்களுக்கிடையில் வறுமை மட்டம் 38 சதவீதமாக மிக உயர்வாக காணப்பட்டது. இன்று அரசு பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பளித்துள்ள போதும் க.பொ.த. உயர்தரத்திலுள்ள வேலையற்றோர் பலர் உள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வறுமையின் நடமாட்டம் அதிகரிக்கக் காரணம் 20 வருட போர்ச் சூழலாகும். மக்கள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, போசாக்கு ரீதியாகப் பலத்த பாதிப்புக்குள்ளாயினர். போர் காரணமாக ஏறக்குறைய 600,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 1,72,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். வீடுகள் பல சேதமாக்கப்பட்டன. 60,000 உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 48 சதவீதமாக பெண்கள் ஊட்டச்சத்து இன்றி காணப்பட்டனர். இந்தப் போர்ச் சூழ் நிலை கட்டுப்பாடுள்ள, கட்டுபாடற்ற பிரதேசங்களை வடக்கு, கிழக்கில் உருவாக்கியது. கட்டுபாடற்ற பிரதேசங்களென அரசு பல பொருளாதாரத் தடைகளை விதித்து வறுமை மட்டத்தை அங்கு கூட்டியுள்ள நிலை இருந்தது. இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தடைகள் பல நீக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் விவசாயம் தொழிலடிப்படையில் 40 சதவீதமாகவும் மொத்த உள்ளூர் உற்பத்தியில் 18 சதவீதமாகவும் உள்ளது. எனவே, இதனை நவீன தொழில்நுட்ப உதவியுடன் குறைந்த செலவில் உற்பத்தித் திறனைக் கூட்ட முயல வேண்டும். உயர் வேலைவாய்ப்பு வீதமானது உயர் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். உயர்ந்த வருமானங்களுடனான உயர் உற்பத்தித்திறன் மிகு தொழில்களில் நாம் நாட்டம் கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்தை எமது நாட்டின் செழிப்பான இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் பயன்படுத்தி முன்னேற்ற முடியும். 20 வருடமாக நிகழ்ந்த போர்ச் சூழ்நிலையில் வளங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. எனினும், முன்னேற்றத்தை நாடி வளங்களைப் பயன்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி வீதங்கள் எமது நாட்டின் 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரையே காணப்படுகிறது. இதை மாற்றி 10 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையும் இலக்காக நாம் கடைப்பிடிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருமானங்களை உயர்த்த வேண்டும்.
அரசாங்கமானது இன்று உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் நோக்குடன் நிலக்கண்ணிகளை அகற்றியும் அத்தியாவசிய சமூக சேவைகள் உட்கட்டமைப்புகளான நீர் விநியோகம், தெருக்கள் நிர்மாணம் என்பனவற்றை சீர்திருத்துகின்றது. தனியார்துறை பங்குபற்றுதலும் இன்று ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும் ஒன்றிணைவுடன் நவீன தொழில்நுட்ப ரீதியான முறையில் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். சிறிய நடுத்தரமான தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் கிராமிய நகர்ப்புற குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கலாம். வறுமையை இது ஓரளவு குறைக்கமுற்படும்.
மேலும், நாம் கைத்தொழில் மயப்படுத்தலில் நாட்டம் கொள்ள வேண்டும். வளங்களை அடிப்படையாகக் கொண்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இதனால் வேலையற்றோருக்கு தொழில் வாய்ப்பளிக்க முடியும். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற முடியும். நகர அபிவிருத்தியை ஏற்படுத்த காணிகளை வழங்கி அரசு உதவ வேண்டும். நகர நீர் வழங்கல் திட்டங்களில் தனியார்துறையினரை ஈடுபடுத்த வேண்டும். நகர உட்கட்டமைப்பை ஏற்படுத்த நகராட்சி மன்றங்கள், பிரதேச சபைகளுக்கு உரிய வருவாயைத் தோற்றுவிக்க வழிவகுக்க வேண்டும்.
உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் வாழ்கைத்திறன்களை உயர்வடையச் செய்யவும் தரமான கல்வி, சுகாதார, சமூக நல வசதிகளைப் பெறவும் முயல வேண்டும். கல்வி, சுகாதார நலனுக்காக நாம் தனியார் துறையினரை ஊக்குவிக்க வேண்டும். இலங்கையில் தனியார்துறையை பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிக்கும்போது பல எதிர்ப்புகள் ஏற்பட இடமுண்டு. மேலும், வறுமையைக் குறைக்க முயல வேண்டும். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகளின் உதவியுடன் வறுமையைக் குறைக்க முயல வேண்டும். எனவே, பொருளாதார வளர்ச்சியில் கூடிய நாட்டம் தேவை.
அரசாங்கம் இன்று பாரிய பற்றாக்குறைகளைச் சுமப்பதைக் காணலாம். பற்றாக்குறையின் இலக்கு மொத்த உள்ளூர் உற்பத்தியின் 8.5 சதவீதமாகும். இந்தப் பற்றாக்குறையானது பொது படுகடனில் மொத்தத் தொகையானது அதிகரிக்க வழிவகுக்கிறது. எமது பொது கடனைப் பார்ப்பின் 2002 ஆம் ஆண்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 83,200 கடன் பெற்றுள்ளதாகவே கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான பெரிய பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து செல்லுமாயின் பொதுக்கடனானது பொருளாதார வளர்ச்சியை விஞ்சுவதால் நாம் இதைத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அரசிறைப் பற்றாக்குறை காரணமாக ஏற்றுமதி, சேவை வருமானங்களின் மூலமாக பெறும் நிதியானது, கூடுதலான பொருட்கள் சேவைகள் இறக்குமதி செய்யும் நிலையினால் பாதிக்கப்படுகிறது. மேலும், நாணயமானது விரைவாக மதிப்பிறங்கியதுடன், சென்மதி நிலுவைகளின் பதிவும் மேலதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றன. கடன் சேவைச் செலவுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் படுகடனில் வட்டிச்செலவை ஓர் படிப்படியான அடிப்படையில் குறைக்க வேண்டும். உயர் வட்டி கொண்ட கடன்களை விடுத்து மிகவும் குறைந்த வீதம் வட்டி கொண்ட கடனை பரிமாற்றம் செய்ய வேண்டும்.
அரசானது அரசிறைப் பற்றாக்குறையை 2001 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திலிருந்து 2002 ஆம் ஆண்டில் 8.9 சதவீதமாக குறைக்க முனைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக அரசதுறைப் படுகடன் 2002 இல் 103 சதவீதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டில் 81 சதவீதமாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்பட்டது. இது அரசிறை திட்டத்தின் வளர்ச்சி, குறைந்த வட்டி வீதங்கள், செலவினக் கட்டுப்பாடுகள் என்பவற்றில் தங்கியுள்ளன.
இலங்கையில் சமாதான சூழ்நிலை ஏற்பட வேண்டும். 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி சமாதானத்தை ஏற்படுத்த ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் செய்தது. இந்த யுத்த நிறுத்தம் சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகும். சமாதான சூழ்நிலை இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சிக்குக் கூடுதலான நாட்டம் செலுத்த முடியும். எனவே, வறுமையைக் குறைப்பதாயின் சமாதான வாசலைத் திறந்துவிட வேண்டும். எமது 20 வருட யுத்த காலம் எமது வளங்களை பாதித்ததை நாம் அறிவோம். எனவே, சமாதானம் முன்னெடுக்கப்படுமாயின் முன்னேற வழியுண்டு. மோதும் நிலை மாறி நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்திற்கு முயல வேண்டும்.
உயர்ந்த உற்பத்தியாற்றல் கொண்ட கைத்தொழில் மற்றும் சேவைகள் துறை உற்பத்திக்கு கிராமிய குடித்தொகையைப் பயன்படுத்த வேண்டும். எனவே, கிராமிய அபிவிருத்திக்குப் புத்துயிரளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை நாடலாம். இலங்கையில் வறிய மக்களில் 90 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும், விவசாயத்தில் உற்பத்தி ஆக்கத்திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும். விவசாயமான பயிர் செய்தல், விலங்கு வளர்ப்பு, மீன்பிடி, காட்டுத்தொழில் என்பவற்றில் வளர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.
சிறிய, நடுத்தர அளவுக் கைத்தொழில்களுக்கு நீண்டகால கொடுகடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வங்கிகள் மூலம் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஏற்ற கொடு கடன்களை வழங்கி ஊக்குவிக்கலாம். மேலும், தனியார்துறைக்கு முதலீடு செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கைத்தொழில்துறையில் வறியவர்களை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். இதற்கு ஏற்ற மூலப் பொருட்களையும் மூலதனப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழில் முயற்சிகளுக்கும் விரிவாக்கத்திற்கும் இறை ஊக்குவிப்புகள் வழங்க வேண்டும். கைத்தொழில் பேட்டைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். கைத்தொழில் முயற்சிகளுக்கு நீண்டகால கடன் வழங்கமுற்பட வேண்டும். தொழில் முயற்சிகளில் செலவுகளைக் குறைக்கும் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், நகரங்களில் கைத்தொழில் வலயங்களை நிறுவ அரசு மாத்திரமல்ல தனியார்துறைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம். சூழல், சுற்றுலா வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும். சுற்றுலாக் கைத்தொழில் வளர்ச்சிக்கு சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும். சூழல், சுற்றுலா பாதுகாப்பு என்பன பேணப்பட வேண்டும். சுற்றுலா அபிவிருத்தியுடன் சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பான 6.6 மில்லியன் ஹெக்டயர் நிலத்தில் 28 சதவீதம் காடுகளாகும். 1.65 மில்லியன் ஹெக்டயர் பாதுகாக்கப்பட்ட காடுகளாகும். காடழிப்பும் வேகமான மண்ணரிப்பும் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனாலும் சுற்றாடல் சூழல் என்பவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அரசானது கவனத்தில் எடுத்து சூழலைப் பாதுகாக்க வேண்டும்.
Friday, October 24, 2008
திறைசேரியில் வெளிநாட்டவர்களும் முதலிடலாம்: மத்திய வங்கி
வெளிநாட்டு முதலீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திறைசேரி உண்டியல் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
திறைசேரி சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நுழையும்பட்சத்தில், மூன்று மாத காலப்பகுதியில் இச் திறைசேரி உண்டியலின் விளைதிறன் 18.51 வீதமாகவும், ஆறு மாத காலப்பகுதியில் 18.96 வீதமாகவும், ஒரு வருடத்தில் 19 வீதமாகவும் குறைவடையும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சந்தையில், தற்போது சில வர்த்தகர்கள் அதிகமான உண்டியல்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருபபினும், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் அவதானங்களின் அடிப்படையிலேயே இந்த முயற்சியின் வெற்றி தங்கியிருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.